ஜோதிடம் எனும் தெய்வீக சாஸ்திரம்


widgeo.net

புதன், 22 ஜனவரி, 2020

தீயவழியில் சென்றவர்களை மீட்டெடுக்க...

தீய வழியில் சென்றவர்களை மீட்டெடுக்க உதவும் சிறப்பு மிக்க எளிய விரதம் தெரியுமா?

 வாழ்வில் சிலர் தவறான நெறிகளில் சென்று தன்னையும், தன்னை சார்ந்தவர்களையும் நிம்மதியின்றி செய்துவிடுகின்றனர். எப்படியும் வாழலாம் என்ற கோட்பாடு எத்தகைய பிரச்சனைகளை தரும் என்பது பலருக்கு புரிவதில்லை. இறை நெறியில் மன தூய்மையுடன் வாழ்பவர்கள் எந்த துன்பம் வந்தாலும் அதனை திறம்பட சமாளிக்கும் வல்லமை பெற்றிருப்பார்கள்.

நல்லது செய்தாலும், கெட்டது செய்தாலும் அவரவர் கர்ம வினைப்படி பலன்களை அனுபவித்து கொண்டு தான் இருப்பார்கள்

. அதில் தவறான பாதையில் சென்று வாழ்க்கையை தொலைப்பவர்கள் இருக்கிறார்கள். இந்த சிறப்பு மிக்க விரதம் மேற்கொள்வதால் நீங்கள் நினைக்கும் நபர் புதிய வாழ்வு பெறுவார்கள். இந்த விரதத்திற்கு என்ன பெயர்?

எப்படி விரதம் மேற்கொள்வது? என்னென்ன பலன்களை பெறலாம் என்பதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்

. இந்த விரதத்திற்கு ஜெய பார்வதி விரதம் என்று பெயர். அன்னையை நினைத்து வேண்டி விரதமிருந்து வழிபடும் ஒரு எளிய விரதமாகும். இந்த விரதம் மேற்கொள்வதற்கு சுமங்கலிப்பெண்கள் ஐவர் வேண்டும். சுமங்கலிப் பெண்கள் அனைவரும் கூடி விரதமிருக்கும் முந்தையநாள் ஆலயத்திற்கு சென்று அன்னை துர்க்கையும், லக்ஷ்மி தேவியையும் வணங்கி விட்டு இந்த விரதத்தில் பலன்கள் முழுவதையும் அவர்களுக்கு சமர்ப்பிப்பதாக உறுதி ஏற்க வேண்டும்.

ஒவ்வொருவரும் ஒரு தேங்காயை எடுத்துக் கொண்டு அதற்கு மஞ்சள், சந்தனம் இட்டு, வலக்கை மோதிர விரலால் குங்குமமிட்டு அன்னையின் பாதங்களில் வைத்து வணங்கி அந்தத் தேங்காயை வீட்டிற்கு எடுத்து வைத்துக் கொண்டு வந்து பூஜை அறையில் வைக்க வேண்டும். பின்னர் மறுநாள் காலையில் குளித்து விட்டு நல்ல பருத்தி உடையை உடுத்தி உணவேதும் அருந்தாமல் பூஜை அறையில் உள்ள தேங்காயை தொட்டு வணங்கி விளக்கேற்றி தூப தீபம் காட்டி விட்டு விரதத்தை துவங்கவேண்டும். விரதம் முடியும் வரை மௌன விரதம் மேற்கொண்டால் கூடுதல் சிறப்பு. -

  ஓம் ஜெய் துர்கா பத்ம நிவாஸினி! ஓம் ஜெய் லக்ஷ்மி பத்ம நிவாஸினி! இந்த மந்திரத்தை அன்றைய நாள் முழுவதும் உச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும். பின்னர் அவரவர் இல்லத்தில் தங்களுடைய அன்றாட பணிகளை மேற்கொள்ளலாம். சூரிய பகவான் மறையும் நேரத்தில் இந்த ஐந்து பெண்களும் கோவிலுக்கு சென்றோ அல்லது யாராவது ஒருவர் வீட்டிலோ பூஜை அறையில் சுற்றி உட்கார்ந்து அந்தத் தேங்காயை சேலையில் முடிந்து கொண்டு மடியில் கட்டிக் கொள்ள வேண்டும்.

நடுவில் ஐந்து முக விளக்கை வைத்து அதில் விளக்கெண்ணை ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். பின்னர் மும்முறை ஓம்! ஓம்! ஓம்! என்று கூறி மௌன விரதத்தை முடித்து விடலாம்.

 பின்னர் அனைவரும் தங்களுடைய தேங்காய்களை மற்றவர்களுக்கு கொடுத்து மாற்றிக்கொள்ள வேண்டும். இப்படி ஒவ்வொரு முறை மாற்றும் பொழுதும் மேற்கூறிய மந்திரத்தை 5 முறை உச்சரிக்க வேண்டும். ஒவ்வொருவரும் தலா ஐந்து முறைக்கு 25 முறை இந்த மந்திரத்தை உச்சரித்து முடித்தவுடன் தம்முடைய தேங்காயை மீண்டும் பெற்றுக்கொள்ளலாம். பின்னர் தேங்காய்களை உடைத்து தேங்காயை துருவி சர்க்கரை சேர்த்து பிரசாதமாக தானம் அளித்திட வேண்டும்.

 தாங்களும் அந்த பிரசாதத்தை சிறிது உட்கொண்டு உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும். அந்த தேங்காய் மூடிகளை துவரம் பருப்பினால் நிரப்பி ஏழை சுமங்கலி பெண்களுக்கு தானம் கொடுத்திட வேண்டும். பின்னர் துர்கா தேவி மற்றும் லக்ஷ்மி தேவியிடம் பிரார்த்தனை மேற்கொண்டு விரத பலன்களை சமர்ப்பிக்கிறோம் என்று கூறிவிட்டு மீண்டும் இந்த மந்திரத்தை ஒரு முறை உச்சரிக்க வேண்டும். இந்த மந்திரத்தின் சக்தி காற்றோடு காற்றாக கலந்து உருபெற்று நம் வேண்டுதல்களை நிறைவேற்றி வைப்பதாக ஐதீகம் உள்ளது. இதன் மூலம் கணவனை பிரிந்தவர்கள், குடும்பத்தைப் பிரிந்தவர்கள், தீய வழியில் சென்றவர்கள் மீண்டும் ஒன்று சேர்வதற்குரிய வரம் கிட்டும்.

சமஸ்கிருதமா தமிழா? வலதுகண்ணா இடதுகண்ணா?


முதலில் சைவ சமயம் என்று பேசுபவர்கள் வேதத்தை ஏற்க வேண்டும்.காரணம் சைவ நால்வர்கள் இதை வேதசைவம் என்கிறார்கள்.

'வேத வேள்வியை நிந்தனை செய்து உழல்' என்று சமண,பெளத்தரை சம்பந்தர் விமர்சிக்கிறார்.'வைதிகத்தின் வழி ஒழுகாத' 'மறை வழக்கம் இலாத மாபாவிகள்' என்றும் அவர்களை சொல்கிறார்.

சிவபெருமானை 'ஆரியன்' 'சாமவேதர்' 'வேதகீதர்' 'வேத வேதாந்தன்' 'வேதியன்' என்றெல்லாம் அப்பரும்,சம்பந்தரும் புகழ்கிறார்கள்.

வேதத்தை மறுப்பவன் முதலில் சைவனே அல்ல அவன் புறச்சமயத்தை சேர்ந்தவன்.வேத சம்பந்தம் உள்ளவன் சைவன் எப்படி ஆவான்? வேதியனாக,வேதமாக இருக்கும் சிவனை வணங்குபவனும்,வேதம் நான்கில் மெய்பொருளாகும் நமச்சிவாயத்தை சொல்வதாலும் அந்த சம்பந்தம் கிடைக்கிறது என்ற தத்துவத்தை சொல்கிறார்கள்.

வேதம் பசு,ஆகமம் பசுவின் பால்,நால்வர் தமிழ் அதில் பெருகும் நெய்,அந்த நெய்யின் சுவை மெய்கண்டார் செய்த சிவஞானபோதம் என்பதுதான் மரபு.சைவ சித்தாந்தத்தின் ஆதிப்பசு வேதம்தான்.எனவே வேத நிந்தனையும் சம்ஸ்கிருத வெறுப்பு என்பதும் சைவத்திற்கே எதிரானது.

மூவேந்தர்கள் சங்க காலத்திலேயே வேதநெறி தழைத்தோங்க ஆட்சி செய்தவர்கள்.'அருமறை' 'ஆறங்கம்' 'எழுதாக் கற்பு' 'அந்தணர் வேதம்' என்றெல்லாம் சங்க காலத்திலேயே தெளிவாக சொல்கிறார்கள்.பல்யாகசாலை முதுகுடுமி பெருவழுதி,கரிகாலசோழன் வைதீக வழி நடந்தவர்கள்.சோழன் பெருநற்கிள்ளி இராஜசூய வேள்வி நடத்தியவன்.ஐங்குறுநூறு படித்துப் பார்த்தால் சேரர்கள் எப்பேற்பட்ட வைதீக நெறி வழுவாத மன்னர்கள் என்பது புரியும்..

பரிபாடல் 'விரிநூல் அந்தணர்' 'புரிநூல் அந்தணர்' என்ற இரண்டு வகையான பிராமணர்களை குறிக்கிறது.இதில் விரிநூல் அந்தணர் ஆகமங்களை உணர்ந்த பூசகர்.வேதப்பொருளை விரித்து சொன்னது 'ஆகமம்'எனவே சிவாச்சாரியார் விரிநூல் அந்தணர் என்று பரிமேழலகர் உரை எழுதியுள்ளார் அதற்கு.

வைதீக சைவத்தை போற்றி பரப்பி சமண,பௌத்தத்தை வீழ்த்திய நால்வர் சோழர்களால் போற்றி புகழ்ந்து சிலை எடுப்பிக்கப்பட்டவர்கள்.எந்த இடத்திலும் தன் பாடல்களை வேதமென்றோ,மந்திரமென்றோ, அவற்றிற்குச் சமமென்றோ நால்வர் புகழவில்லை. ‘மந்திர வேதங்கள்’, ‘மந்திரத்தமறை’, ‘மந்திரமறை’, ‘மந்திர நான் மறை’, ‘மந்திர மாமறை’, என்று புகழ்ந்தது எல்லாமே வேதத்தைதான்.வேதங்களே மூலம்.அந்த மறைகள் நான்கும் ஆனவன் இறைவன் என்றே சொன்னார்கள்.

எனவே இதை மீறி தமிழில் அர்ச்சனை,குடமுழுக்கு என்பதெல்லாம் அபத்தமான ஆகம விரோதமான ஒன்று.தேவாரம் ஓதுவதற்கு எப்படி பிடாரர்களை நியமித்தார்களோ? அதே போல வேதம்,அஷ்டாத்தியாயம் சொல்லிக் கொடுக்கும் பள்ளிகளும்,வேத மீமாம்சக பள்ளிகளும் சோழ நாடெங்கும் அமைத்துக் கொடுத்தார்கள்.ஆரியம் பாட,தமிழ் பாட என இரண்டிற்கும் ஆட்களை நியமித்தார்கள்.

சம்ஸ்கிருதமும்,தமிழும் இரு கண்கள் என்பதுதான் பாரதத்தின் எல்லா மன்னர்களின் ஆட்சியும்.அதில் சோழர்கள் அதனை உச்சத்திற்கு எடுத்து சென்றவர்கள்.தங்கள் செப்பேடுகளை முதலில் சம்ஸ்கிருதத்திலும்,அடுத்து தமிழிலும் பொறித்தார்கள்.காரணம் இந்தியா முழுக்க பொது ஞானமொழி சம்ஸ்கிருதம் என்பதை நம் மன்னர்கள் ஏற்றார்கள்.அதை பிராமணர் மொழி என்று ஒதுக்குவது போல ஒரு அறிவீனம் வேறொன்று இல்லை.

தஞ்சை பெரியகோவிலில் ஒரு கல்வெட்டில் கூட தமிழில் குடமுழுக்கு செய்தார் ராஜராஜன் என்றெல்லாம் ஆதாரம் இல்லை.அப்படி ஒரு அபத்தத்தை சோழர்கள் செய்யவும் மாட்டார்கள்.அவர்கள் தீக்ஷை பெற்ற சைவ மாமணிகள்.ராஜராஜனின் குரு ஈசான சிவபண்டிதர் காஷ்மீரத்தை சேர்ந்த சைவர்.சோழர் குல குருக்கள் எல்லாமே காஷ்மீர்,ஆரியவர்த்தத்தை சேர்ந்தவர்கள்தான்.

தஞ்சை பெரிய கோவிலில் அதிக அதிகாரத்தை பெற்றவர்களாக அரச குடும்பத்தை தவிர்த்து கல்வெட்டு காட்டுவது..ராஜ குரு ஈசான சிவ பண்டிதர்.கோயிலின் தலைமைக்குருக்களாக இருந்த சைவ ஆச்சாரியார் பவனப்பிடாரன்.திருச்சுற்று மாளிகையைக் கட்டிய ராஜராஜனின் சேனாபதி,'கிருஷ்ணன் ராமன்' எனப்படும் மும்முடிச்சோழ பிரம்மராயன்.கோவிலை கட்டியெழுப்பிய தலைமை சிற்பி 'குஞ்சரமல்லன் ராஜராஜ பெருந்தச்சன்'.

பெரிய கோயிலின் நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்த ஸ்ரீகாரியம் 'பொய்கைநாடு கிழவன் ஆதித்தன் சூரியனான தென்னவன் மூவேந்த வேளாண்'.கற்களில் எழுத்து வெட்டுவித்த சாத்தன்குடி வெள்ளாளன் இரவி பாருளுடையான்.

இவர்களை தவிர்த்து சித்தர் கருவூரார் பெயரெல்லாம் ராஜராஜனின் குரு என்று எதிலும் குறிப்பிடப்படவில்லை சமகாலத்தில்.திருவிசைப்பாவில் கருவூரார் பாடியிருக்கிறார் அதைதாண்டி எந்த அடிப்படை தரவும் இல்லை.அந்த சந்நிதியும் மிக மிக பிற்பாடு எழுந்தது.

எனவே ஆகம சைவத்தை கடைபிடித்த சோழர்களை இழிவுபடுத்தும் விதமாக சைவசமய புறசமயிகள் எல்லாம் தமிழில் செய்,தெலுங்கில் செய் என்பதெல்லாம் சிவத்துரோகத்தையே சேரும்.

இன்று சோழர் ஆட்சி என்றால் இதற்கு மிகப்பெரிய தண்டனைதான் பரிசாக கிடைக்கும்.தான் வாழும் காலத்தில் திருவிசநல்லூரில் 'ஹிரண்யகர்ப்பம்' கொடுத்தவர் ராஜராஜன்.அஸ்வமேத யாகம் செய்தவன் இராதிராஜன் இவர்கள் சம்ஸ்கிருத வெறுப்பாளர் என்ற பொய்யை பரப்புவதெல்லாம் ஏற்கவே முடியாத பொய்.

நாத்திகத்தை நேரடியாக பரப்ப முடியாமல் சைவநிந்தனை செய்யும் புறசமயிகளை வைத்து ஆகமத்தை மீறி குடமுழுக்கு செய்யச்சொல்வது இந்த தேசத்தை அழிவில் தள்ள சொல்லும் யோசனை ஆகும்.

"பழைய வைதீகசைவம் பரக்கவே"

#வேதசைவம் #சோழர்

செவ்வாய், 31 டிசம்பர், 2019

சுத்தவாக்கிய கணினி சாப்ட்வேர்

நீங்கள் அனைவரும் எதிர்பார்த்த சுத்தவாக்கிய கணினி சாப்ட்வேர் தமிழில் தயாராகி விட்டது. வாழ்நாள் லைசென்ஸ் கீ உடன் இந்த சாப்ட்வேர் 4,500/= இற்கு பெற்றுக்கொள்ளலாம். மேலும் இது 2020ம் வருட பதிப்பு என்பது சிறப்பம்சம்.. வாக்கிய பஞ்சாங்க முறைப்படி ஜாதகம் கணிக்கவும் பலன்அறியவும், வாக்கிய முறையில் திருமண பொருத்தம் அறிந்துகொள்ளவும் இயலும். உங்கள் பிரத்தியேக சாப்ட்வேர் தயாரிப்பிற்கு சாப்ட்வேரில் இருக்க வேண்டிய உங்கள் பெயர், (ஜோதிட நிலைய பெயர் இருப்பின்), முகவரி, தொலைபேசி எண் என்பவற்றை எனது முகநூல் இன்பொக்ஸ் இற்கோ அல்லது எனது மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொண்டு இந்த சாப்ட்வேரினை பெற்றுக்கொள்ள முடியும்.

சாப்ட்வேர் பற்றிய மேலதிக விபரம் பெறவும், பணம் செலுத்த வேண்டிய வங்கி விபரம் பெறவும் தொடர்பு கொள்ளுங்கள். நீங்கள் பணம் செலுத்தியத்திலிருந்து ஒரு மணிநேரத்தில் சாப்ட்வேர் மற்றும் கீ உங்கல் கைகளிற்கு வந்து சேர்ந்துவிடும். நமது வாசகர்களில் 30 பேர் ஏற்கனவே என்னிடம் இந்த சாப்ட்வேருக்காக பதிவு செய்திருந்தீர்கள். அந்த நண்பர்கள் 30 பேருக்கும் 30 லைசென்ஸ் ஒதுக்கியது போக மேலும் 20 லைசென்ஸ் மட்டுமே உள்ளது, அதாவது ஏற்கனவே இந்த சாப்ட்வேரிற்காக பதிவு செய்தவர்கள் போக புதியவர்கள் 20 நபர்களிற்கு மட்டுமே சாப்ட்வேர் உள்ளது. எனவே உங்கள் பிரதிக்கு முந்துங்கள். தொழில்முறை ஜோதிடர்கள் முதல் ஆரம்பநிலை ஜோதிட ஆர்வலர்கள் வரை இலகுவாக பயன்படுத்தக்கூடிய வண்ணம் கவர்ச்சிகரமாக உருவாக்கப்பட்டுள்ளது.
சாப்ட்வேர் பெற்றுக்கொள்ள தொடர்புகொள்ள வேண்டிய;
எனது மின்னஞ்சல் :  hariram1by9@gmail.com
Facebook:  https://www.facebook.com/astrologerhariram

புதன், 4 டிசம்பர், 2019

Year - End Software Sale!

கட்டண ஜோதிட மென்பொருள் வாங்க வேண்டிய அவசியம்.

இலவச ஜோதிட சாப்ட்வேர்களில் மிக குறைந்தளவான அம்சங்களே உள்ளன. அவைகளில் உங்கள் பலன், உங்களுக்கு வேண்டியவர்களின் பலன் அறிய முடியாது. வெறுமனே கட்டங்களை காண்பிக்கும். அதிலும் அனைத்தையும் காண்பிக்குமோ என்றால் இல்லவே இல்லை. சோடச சக்கரங்கள், அஷ்டகவர்க்கம் என பல அம்சங்களுடன் திருக்கணிதத்தின்படி ஜாதகம் கணிக்கும் கணினிக்கு உரிய தமிழ் ஜோதிட சாப்ட்வேர் 12,000 முதல் 25,000 வரை  பல்வேறு நிறுவனங்கள் விற்பனை செய்கிறது என்பது நீங்கள் அறிந்ததே... ஆனால் வெறும் ஜாதகம் மற்றும் பலன் தருவதோடு மட்டுமல்லாது 16 வகையான ஜோதிடம் பார்க்கும் 6,200 பெறுமதியான சாப்ட்வேரினை திருக்கணித சாப்ட்வேரினை Year-End Sale ல் வெறும் 4,000ற்கு பெற்றுக்கொள்ள முடியும். ஆயிரக்கணக்கில் ஜோதிடரிடம் பலன் பார்க்கும் நீங்களும், திருமண பொருத்தம், குழந்தைகளிற்கான பெயர் தெரிவுகள் என செலவழிக்கும் நீங்கள் ஒவ்வொருவரும்  இந்த சாப்ட்வேரினை உங்கள் கணினியில் வாங்கி வைத்திருத்தல் மிகவும் அவசியமானது. மிகவும் அடிப்படையான சாதாரண ஜோதிட அறிவு இருந்தாலே உங்களால் இந்த சாப்ட்வேரினை உபயோகிக்க முடியும். இந்த மென்பொருளானது தமிழ் மொழியில், அனைத்து மக்களும் பயன்படுத்துவதற்கு மிகவும் இலகுவாக தயாரிக்கப்பட்டுள்ளது.

Astro Hari-2019 மென்பொருளின் சிறப்பியல்புகள்.

1. 100% தமிழில் உள்ளது. நவீன கோடிங் கட்டமைப்பு.
2. கவர்ச்சிகரமான முகப்பு தோற்றம், துல்லியமான கிரகநிலைகள், விரைவான இயக்கம்.
3. 160 பக்கங்கள் வரை உள்ள மிகத்தெளிவான ஜாதக அறிக்கையினை பெற்றுக்கொள்ளலாம்.
4. பாகை-முறையில் ஜோதிடம் பார்க்க முடியும். மற்றும் லைவ் ரிலே அம்சம்.
5. உலகெங்கிலும் உள்ள 5621 நகரங்களில் அட்ச்சரேகை தீர்க்கரேகை விபரங்கள்.
6. பரிகாரங்கள் இணைக்கப்பட்டுள்ளது.
7. ஜோதிட பலன்களுக்கு காரணம் கூறப்பட்டுள்ளது.
8. வெறுமனே ஜாதகம் மட்டுமில்லாது 16 வகை ஜோதிடம் பார்க்க முடியும்.
9. இதுவரை சாப்ட்வேர் வாங்கிய எவரிடமிருந்தும் எந்த bug எனக்கூறப்படும் பிழைகளும் வரவில்லை.
10. நீங்கள் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் உங்களுக்காக நாமே உங்கள் கணினியில் சாப்ட்வேரினை நிறுவித்தருவோம்.
11. நீங்கள் சாப்ட்வேரிற்கு பதிவு செய்த 2 மணிநேரத்தினுள் உங்கள் சாப்ட்வேர் உங்கள் கைகளில் கிடைக்கும்.
12. நீங்கள் புதிதாக கணினி மாற்றுவதாயின் உங்கள் புதிய கணினிக்கு இலவசமாக புதிய லைசென்ஸ் கீ தரப்படும்.
13. வாழ்நாள் பூராக சாப்ட்வேரினை பாவிக்கும் வசதி.
14. அனைத்து கணினிகளில் இயங்கும்.(Desktop, Laptop, 32-bit, 64-bit, Windows XP, Vista, 7, 8, 8.1 ,10)
15. இலவச அப்டேட்கள் மற்றும் ஹொட்பிக்ஸ்கள்.
16. C.I (Calculation Integration) வசதி. (வின்-சப்ரெஸ்ஸட் கூறு இணைக்கப்பட்டுள்ளது.)
17. இது இயங்க குறைந்தளவு RAM போதுமானது.
18. மற்றைய அனைத்து ஜோதிட சாப்ட்வேரிலும் பார்க்க அதிக அம்சங்கள், குறைந்த விலை.
19. உங்களுக்கான தனித்துவமான லைசென்ஸ் கீ உங்கள் பெயரில் பதிவு செய்து தரப்படும்.
20. சாப்ட்வேரின் முகப்பிலும் அதனூடு பெறப்படும் அனைத்து பிரிண்ட்களிலும் உங்கள் பெயர் மற்றும் உங்கள் விபரம் தோன்றும்.
21. கலர் பிரிண்ட் எடுக்கும் வசதி மற்றும் PDF ஆக சேமிக்கும் வசதி.
22. ஜாதகங்களை உங்களின் குறிப்புக்களோடு சாப்ட்வேரிலேயே சேமித்து வைத்துக்கொள்ள முடியும்.

இதுதவிர ஒவ்வொரு ஜோதிடப்பலனுக்குமான காரணம் அதிலேயே சொல்லப்படுவதால் இதன்மூலம் ஜோதிட ஆர்வலர்கள் உங்கள் ஜோதிட அறிவையும் நீங்கள் மேம்படுத்திகொள்ளலாம். இந்த சாப்ட்வேரில்  ஜாதகம், ஜாமக்கோள் ஆருடம், டார்ட், பஞ்ச பட்சி, சோழி பிரசன்னம், கர்மா பரிகாரம், எண்கணிதம் எனும் Numerology பரிந்துரை, பெயர் பட்டியல், பிருகு நாடி, திருமணப்பொருத்தம், சந்திர நாடி, கேபி ஜோதிட முறை, தாம்பூல பிரசன்னம், மருத்துவ ஜோதிடம், தேவ பிரசன்னம், ராசிக்கல் எனும் Gems பரிந்துரை எனும் 16 வித ஜோதிடம் ஒரே சாப்ட்வேரில் பார்த்துக்கொள்ள முடியும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. விலைக்கு கிடைக்கும் சகல ஜோதிட சாப்ட்வேரிலும் பார்க்க குறைந்த விலையில் நிறைந்த வசதிகளில் வந்துள்ளது இந்த சாப்ட்வேர். ஆம் இது ஜோதிட அபிமானிகளுக்கும் தொழில்முறை ஜோதிடர்களிற்கும் ஜோதிட ஆராச்சியாளர்களுக்குமான ஒரு அற்புதமான தமிழ் ஜோதிட சாப்ட்வேர். வழமையான பழைய GUI (முகப்பு தோற்றம்) போன்று இல்லாமல் modern GUI-ல் மென்பொருள் உள்ளதால் உங்கள் கணினியில் உபயோகிக்கும்போது மிகவும் கவர்ச்சிகரமாக தோன்றும். கீழே உள்ள படங்களை அவதானித்தால் உங்களுக்கே தெரியும் அதில் Your Name மற்றும் Your Details காணப்படும் இடங்களில் உங்கள் சொந்த விபரங்கள் தோன்றும். மற்றும் இதனூடு Print செய்யப்படும் சகல பிரிண்ட்களிலும் உங்கள் விபரம் இருப்பதால் உங்கள் தனித்துவம் உறுதிப்படுத்தப்படும். இதனை விட துல்லியமாகவும் இவ்வளவு சலுகைக்கு மற்றும் வசதிகளுடனும் பயன்படுத்தும் வண்ணம் வேறு எந்த ஜோதிட சாப்ட்வேரும் இல்லை. இது தொடர்பாக இணையத்தில் தேடினால் உங்களுக்கே தெரியும். இதுபோல குறைந்த விலையில் PAID-VERSION தமிழ் ஜோதிட சாப்ட்வேர் நீங்கள் எங்கும் வாங்க முடியாது. இந்த அரிய சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி உங்கள் சாப்ட்வேர் பிரதியினையும் லைசென்ஸ் கீ இனையும் பெற்றுக்கொள்ளுங்கள். 6200 பெறுமதியான சாப்ட்வேர் தற்போது 35வீத விலைக்கழிவுடன் வெறும் 4000 இற்கு நீங்கள் வாங்கிக்கொள்ள முடியும். இந்த 35 வீத விலைக்குறைப்பு தள்ளுபடி சலுகை 2019ம் ஆண்டு தமிழ் மாதப்படி  மார்கழி மாதம் மட்டுமே செல்லுபடியாகும். (அதாவது டிசம்பர் 30-ற்குள் வாங்குபவர்களுக்கு மட்டும்!)

உங்கள் நேரவிரையத்தினையும் வேலைப்பளுவினையும் குறைப்பதோடு ஜோதிட தகவல்களை நாளாந்தம் அறிந்து கொள்ளும்வகையில் உள்ள இந்த மென்பொருளினை ஜோதிட ஆர்வலர்கள், வளரும் ஜோதிடர்கள் மற்றும் தொழில்முறை ஜோதிடர்கள், ஜோதிட ஆராச்சியாளர்கள் என அனைவருக்கும் இலகுவாக பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. தினமும் காலை பஞ்சாங்கத்தினை இனி புரட்ட தேவையில்லை! சாப்ட்வேரினை Open செய்தாலே அன்றைய தினத்திற்கான பஞ்சாங்க விபரமும் மேலும் அன்றைய தேதியின் கிரகநிலைகளும் பாகை வாரியாக மிக துல்லியமாக திரையில் அழகாக தோன்றும்.

இந்த சாப்ட்வேர் வாங்க விரும்புவோர்கள் hariram1by9@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளுங்கள் அல்லது கீழே உங்கள் கருத்துப்பெட்டியில் உங்கள் வாட்ஸாப் இலக்கத்தினை பதிவு செய்யுங்கள்.

ஏற்கனவே கூறியபடி இந்த நவீன தமிழ் ஜோதிட மென்பொருளில் 16 வகை ஜோதிடம் பார்க்கமுடியும்: அந்த 16 வகைகளில் திருமணம் பொருத்தம், மட்டும் ஜாதகம் எனும் இரு வகைகளில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சிறப்பம்சங்கள் மற்றும் அதன் மாதிரி PDF அறிக்கை ஒன்றினை உங்களுடன் பகிர விரும்புகிறேன். விபரங்கள் படங்களில் உள்ளன. இதன் திரையில் பொருத்தம் பார்க்கும் ஆண், பெண் ஜாதகங்களை அலசி நட்சத்திர பொருத்தங்கள், தோஷங்கள், தசா சந்திப்பு, பொருத்த வீதம், பரிந்துரைகள் அத்துடன் திருமணம் செய்யலாமா வேண்டாமா என்ற இறுதி முடிவு ஆகியவற்றுடன் போலும் பல அம்சங்களை காட்டும். அத்துடன் திருமணம் பார்க்கும் இந்த மாதிரி அறிக்கையினை திரையிலும் பார்க்க முடியும். பரிகாரங்களுடன் பிரிண்ட் செய்யக்கூடிய வகையில் 16 பக்க வடிவிலும் பெற்றுக்கொள்ள முடியும். தவிர 2 மொடேல்களில் பார்க்கலாம். வீட்டில் இருந்தபடியே பொருத்தம் உள்ளதா? திருமணம் செய்யலாமா? என அறிந்து கொள்ளலாம். பரிகாரங்களுடன் 16 பக்க ஒரு மாதிரி அறிக்கையினை பார்க்க இந்த link இனை சொடுக்குங்கள்.


ஒரு sample அறிக்கை பார்க்க - இந்த Software இல் உள்ள 16 ஜோதிட பகுதிகளில் ஒன்றான ஜாதகம் கணிக்கும் பகுதியில் உள்ள ஆயுட்கால பலன்கள் அடங்கிய விரிவான ஒரு PDF REPORT மாதிரி அறிக்கை ஒன்றினைமட்டும்  கொடுத்துள்ளேன். விரும்பினோர் சென்று பாருங்கள்.


#################################################################################





[உங்களுக்கு தேவை என்றால் உங்களின் படமோ அல்லது உங்களுக்கு விருப்பமான படமோ மென்பொருளின் முகப்பு திரையில் (மேலே உள்ளதுபோல) தோன்றும்படி தயாரித்து தரப்படும்.]

சனி, 9 நவம்பர், 2019

மும்மூர்த்திகளின் மகா அஸ்திரங்கள்

மும்மூர்த்திகளும் தர்மத்தை நிலைநாட்ட தங்களின் குறிப்பிட்ட சக்தியை கொண்டு ஒரு அஸ்திரமும் (அஸ்திர வகை)

தங்களின் அதிகப்படியான சக்தியை கொண்டு ஒரு பெரும் அஸ்திரமும் உருவாக்கினர் (பிரம்மசிரஸ் வகை)


அவ்வாறே பிரம்மதேவருக்கு
#பிரம்மாஸ்திரம்
மற்றும்
#பிரம்மசிரஸ்
(பிரம்மாண்ட அஸ்திரம் என்று ஒன்று உள்ளதாக விக்கிபீடியா முதலிய பல இடங்களில் இருந்தாலும் அவைக்கான ஆதாரம் எங்கும் இல்லை

சப்தரிஷிகளால் உருவாக்கப்பட்ட பிரம்மதண்டத்தை அவர்கள் தவறாக ஊகித்து இருக்ககூடும்)

மகாவிஷ்ணுக்கு

#வைஷ்ணவாஸ்திரம்
மற்றும்
#நாராயணாஸ்திரம்

ஈசனுக்கு

#மஹேஸ்வராஸ்திரம் (நெற்றிக்கண் சக்தி)
மற்றும்
#பாசுபதாஸ்திரம்

இவ்வாறாக அஸ்திர வகையில் ஒன்றும் பிரம்மசிரஸ் வகையில் ஒன்றும் அவர்கள் கொண்டுள்ளனர்

😉அஸ்திர வகை

இதில் அஸ்திர வகையை சேர்ந்த பிரம்மாஸ்திரம் தடுக்க முடியாதது இலக்கை முழுவதுமாக அழிக்க கூடியது
திவ்யாஸ்திரம் எதையும் தடுக்கும் திறன்கொண்டது இராமாயணத்திலும் மஹாபாரதத்திலும் இதை பலர்கொண்டு இருந்தனர்

வைஷ்ணவாஸ்திரம் மற்றும்
மஹேஸ்வராஸ்திரம் இரண்டும் அடுத்தநிலையாகும் இது மும்மூர்த்திகள் தவிர வேறு எவராலும் தடுக்க முடியாது

இராவணன் மகன் மேகநாதனின் யமாஸ்திரம் முதலிய திக் பாலகர்களின் தடுக்க முடியாத அஸ்திரங்களை லட்சுமணன் மஹேஸ்வராஸ்திரம் கொண்டே தடுப்பார் மஹாபாரதத்தில் இதை எவரும் கொண்டதற்கான ஆதாரங்கள் இல்லை

வைஷ்ணவாஸ்திரத்தை பொறுத்த வரை இராமாயணத்தில் இராமலட்சுமணர்கள் மற்றும் மஹாபாரதத்தில் கிருஷ்ணன், அர்ஜுனன் மற்றும் பகதத்தன் ஆகியோர் அறிவார்கள் இந்த அஸ்திரம் பகதத்தன் விட்டபோது கிருஷ்ணனின் மார்பில் மாலையாகும்

இராமாயணத்தில் மேகநாதன் பிரம்மாஸ்திரத்தின் சக்திகொண்டு தேருக்கு சக்தியூட்டினான் அதே போல பகதத்தன் வைஷ்ணவாஸ்திரத்தின் சக்திகொண்டு சாதாரண யானையை பத்தாயிரம் யானை பலம்கொண்ட பீமனால்கூட வீழ்த்தமுடியாத சுப்ரதீகமாக மாற்றினான்

😉பிரம்மசிரஸ் வகை

பிரம்மதேவரின் பிரம்மசிரஸ் அஸ்திரம் இது மொத்த உலகத்தையும் எரிக்கும் வல்லமை கொண்டது இராமாயணத்தில் இராமலட்சுமணர்கள் கொண்டிருந்தாலும் உபயோகிக்கவில்லை

மஹாபாரதத்தில் அஸ்வதாமன் பாண்டவர்கள் மீது இதை ஏவ கிருஷ்ணனின் சொல்படி அர்ஜுனன் அதை தணிக்க தனது பிரம்மசிரஸ் அஸ்திரத்தை விட உலகமே நடுங்குகிறது வியாசரும் நாரதரும் தோன்றி இருவரையும் பின்வாங்க சொல்கிறார் அர்ஜுனன் கடைப்பிடித்த விரதத்தினால் பின்வாங்குகிறான் அஸ்வதாமன் அதை பின்வாங்க முடியாததால் உத்தரையின் கர்ப்பத்தில் போடுவான்

😉பாசுபதாஸ்திரமும் நாராயணாஸ்திரமும்

😍பாசுபத அஸ்திரம்😍

சிவபுராணம் பிரம்மன் முதல் தாவரம் வரை அனைவருமே பசுக்கள் என்று கூறுகிறது இவர்களுக்கெல்லாம் தேவனாய் இருப்பதால் பசுபதி என்ற பெயர் ஈசனுக்கு உண்டு

பசுபதிநாதரின் அஸ்திரம் பாசுபதம் இது ஈசன் மற்றும் காளிக்கு தனிப்பட்ட அஸ்திரமாகும் இவ்வஸ்திரத்தை ஈசனிடம் இருந்து நேரடியாக மட்டுமே பெற முடியும் முருகப்பெருமான், சூரனின் குடும்பத்தினர், ராமபிரான் மற்றும் அர்ஜுனன் பெற்று இருந்ததற்கான சான்றுகளே உள்ளன இந்த அஸ்திரத்தை இந்திரன், எமன் கூட அறியமாட்டார்கள் என ஈசனே அர்ஜுனனிடம் கூறியுள்ளார்

(மூல மஹாபாரதத்தில் குருசேத்திர போரில் துரோணர், திருதராஷ்டிரனின் மைந்தர்கள் முதலியோர் பாசுபதம் என்ற பெயர்கொண்ட அஸ்திரத்தை பிரயோகித்து உள்ளதாக கூறப்பட்டு உள்ளது
துரோண பர்வம் 188
கர்ண பர்வம் 60

உண்மையில் அது ஈசனின் பாசுபதம் அல்ல அவ்வாறு இருந்திருப்பின் ஈசனின் சொல்படி அன்றே சிருஷ்டிக்கு நாசம் விளைந்திருக்கும் ஆனால் அந்த இடத்தில் அது எளிதாக தணிவடைந்ததையே அறிய முடிகிறது

திவ்யாஸ்திரங்கள் மொத்தம் 3000க்கும் மேற்பட்டவை இதில் இங்கு குறிப்பிட்ட அஸ்திரம் ஒன்றாக இருக்ககூடும் )

இதை தனியாக ஒருவர் மீது விடும்போது அவரின் திறன் மிக முக்கியம் காரணம் இவ்வஸ்திரத்தை சக்தி குறைந்தவர் மீது பிரயோகித்தோமானால் சிருஷ்டியையே நாசம் செய்துவிடும். அர்ஜுனன் ஜெயத்ரதன் மீது பாசுபதத்தை விட்டார் என பலர் சொன்னாலும் உண்மை அதுவல்ல ஒரு வேளை அவ்வாறு விட்டு இருந்தால் சிருஷ்டியையே பாதித்து இருக்கும்

கந்தபுராணத்தில் சூரனின் மகன் பானுகோபன் மற்றும் வீரபாகு ஒருவர் மீது ஒருவர் ஏவிக்கொள்கிறார்கள்

--- இதனால் முருகப்பெருமான் மற்றும் சூரனும் கூட இவர்கள் சண்டையினால் சிருஷ்டிக்கு பாதிப்பு வருமோ என்று ஐயமுறுகிறார்கள்

--- கடைசியில் சிருஷ்டியின் நலனுக்காக இருவரும் பின்வாங்குகின்றனர்

இதுவே பாசுபதம் ஒரு படையின் மீது ஏவப்படுமேயானால் படையில் ஒவ்வொருவரின் சக்திக்கேற்ப பலதரப்பட்ட நச்சுகொண்ட சக்தி வாய்ந்த பற்பல தலைகள் கொண்ட உயிரினங்கள் முதல் மலைகள், கடல்கள், தேவர்கள், கந்தவர்கள், முனிவர்கள், அசுரர்கள், யட்சர்கள், ஆவிகள், பூதங்கள் வரை அனைத்தும் தோன்றி படையினரை அழித்து ஒழிப்பார்கள்

உதாரணத்திற்கு தேவர்படையினர்மீது ஏவப்படுமேயானால் ஒவ்வொரு தேவர்களையும் அழிக்கும் திறன்கொண்ட தேவர்கள் தோன்றுவார்கள்

லட்சம் யானைபலம் கொண்டவனை அழிக்க பத்து லட்சம் யானைபலம் கொண்ட ஒருவன் தோன்றுவான்

--- கந்த புராணத்தில் சூரன் முருகப்பெருமான் படையின் மீது பாசுபதத்தை ஏவ ஈசனின் கனங்களையே வீழ்த்தும் நச்சு கொண்ட உயிரினங்கள் தோன்ற முருகப்பெருமான் அதை தனது பாசுபதம் வைத்து தடுக்கிறார்

--- பாரதத்தில் மிதக்கும் நகரமான அசுரர்களின் ஹிரண்யபுரத்தின் மீது அர்ஜுனன் பாசுபதத்தை விடுகிறார்

--- இங்கு வாழும் அசுரர்கள் மொத்தம் 60,000 பேர்கள் அனைவருமே பெரும் வீரர்கள் பாசுபதத்தில் இருந்து தோன்றிய ஜீவன்கள் அவர்களை அழித்தொழித்தது

கந்தபுராணத்தின்படி ஒருவர் ஈசனை மனதார பூஜித்து இருக்கும் வேளையில் அவரின் மேல் பாசுபதத்தை விட்டால் அது ஈசனிடமே சென்றுவிடும்

😍நாராயணாஸ்திரம்😍

நாராயணரின் அஸ்திரம் நாராயணாஸ்திரம் இதையும் விஷ்ணு பகவானிடம் இருந்து நேரடியாக பெற வேண்டும்

பாசுபதம் போலவே இந்த அஸ்திரமும் தனியாக ஒருவர் மீது பிரயோகிக்க அவரின் சக்தி முக்கியம் இல்லையேல் சர்வ நாசம் நிச்சயம்

அதே போல் படையின் மீது ஏவப்பட்டால் படையில் உள்ள ஒவ்வொருவரின் சக்தியை பொறுத்து அவர்களை அழிக்கும் அளவிற்கு சக்திகொண்ட அஸ்திரங்கள் தோன்றும்

-- அதாவது ஏவப்பட்டவுடன் படையில் எத்தனை பேர் உள்ளனரோ அத்தனை அஸ்திரமாக பிரியும்

-- பிறகு ஒவ்வொருவரின் சக்திக்கேற்ப அவர்களை அழிக்கும் அஸ்திரமாக மாறும் சாமான்யர்கள் என்றால் சாமான்ய அம்புகளாகவும் அதே அவரை அழிக்க ஆக்நேயம் தான் வேண்டுமென்றால் ஆக்நேயமாக மாறும்

முழு சமர்ப்பணம் செய்தால் அன்றி வேறு வழியில்லை உடலால் சமர்ப்பணம் செய்து மனதால் துளி எதிர்த்தால் கூட பதினான்கு லோகங்களில் எங்கு சென்றாலும் இந்த அஸ்திரம் விடாது

பாரதத்தில் அஸ்வதாமன் இதை பிரயோகித்த போது கதாயுதங்கள், சக்கரங்கள், கத்திகள், முதல் தெய்வீக சக்திகொண்ட அஸ்திரங்கள் வரை தோன்றியது கிருஷ்ணரின் அறிவுரையால் அனைவரும் சமர்ப்பணம் செய்ததால் தப்பி பிழைப்பர்

👑 பாசுபதம் மற்றும் நாராயணம் இவை இரண்டுமே ஒத்த சக்தியுடையவை. ஒன்றில் எதிரியின் சக்திகொப்ப ஜீவன்களும் மற்றொன்றில் எதிரியின் சக்திகொப்ப அஸ்திரங்களும் தோன்றும் மேலும் பக்தியினால் இவை இரண்டையும் தடுத்துள்ளனர்

அதே போல் இரண்டையும் அம்புகளால் மட்டும் இல்லை மனம் மற்றும் கண்ணால் கூட செலுத்த முடியும் (மற்ற அஸ்திரங்களை மனத்தாலோ இல்லை கண்ணாலோ ஏவ இயலாது)

இவ்விரு அஸ்திரங்களில் ஒன்றை ஒருவர் பெற்றாலும் அவர் தேவருக்கும் மேலானவராக கருதப்படுகிறார் காரணம் இந்த அஸ்திரங்களையும் பெறுவது சாமான்யம் இல்லை சிவன் அல்லது விஷ்ணுவை மகிழ்வித்து பெற வேண்டும்

😉தனிப்பட்ட ஆயுதங்கள்

பிரம்மதேவருக்கு என தனிப்பட்ட ஆயுதங்கள் இல்லை அவர் தெய்வீக விற்கள் மற்றும் ஆயுதங்களுக்கு எல்லாம் முதன்மையான பிரம்ம கத்தி முதலியவை செய்தாலும் அவர் அதை தர்ம நோக்கத்திற்காக விஷ்ணு மற்றும் ஈசனிடம் அளித்துவிடுவார்

ஈசனுக்கு திரிசூலமும் மகாவிஷ்ணுவிற்கு சுதர்சன சக்கரமும் தனிப்பட்ட ஆயுதங்களாகும் இவைகள் இரண்டும் எப்போதும் ஈசன் மற்றும் விஷ்ணுவின் கையில் ஏந்தப்பட்டு இருக்கும் இவை இரண்டையும் வெல்லும் ஆயுதம் எங்கும் இல்லை

பாசுபதம் நாராயணம் போல இவையும் சமசக்தியுடையவை இவை இரண்டையும் இவ்விருவர்களாலோ இல்லை இவர்களின் அம்சங்களாலோ மட்டுமே ஏந்த முடியும் மற்றபடி வரத்தின் காரணமாக இவைகள் வரமளிக்கப்பட்டவருக்கு பாதுகாப்பாக இருக்கும்

பாகவத புராணத்தின் படி அஸ்வதாமனின் பிரம்மசிரஸ் அஸ்திரத்தைகூட கிருஷ்ணனின் சுதர்சனம் தடுத்து நிறுத்தியது

ஞாயிறு, 1 செப்டம்பர், 2019

Update வெளிவந்துள்ளது!

என்னிடம் இருந்து தமிழ் ஜோதிட சாப்ட்வேர் வாங்கி பயன்படுத்தி வருவோரிற்கு நல்ல செய்தி.
உங்கள் தமிழ் ஜோதிட சாப்ட்வேர் இற்கு update வெளிவந்துள்ளது. இதனை இலவசமாக download செய்து உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள். இனிவரும் காலங்களிலும் எனது ஜோதிட சாப்ட்வேர் இற்கு Updates மற்றும் Hotfix வழங்குவேன். இதன்மூலம் உங்கள் சாப்ட்வேரினை எப்போதும் புதிதாக வைத்திருப்பதுடன் புதிய அம்சங்களையும் பாவிக்க முடியும்...
இந்த சாப்ட்வேர் ஜோதிட அபிமானிகள் (ஜோதிட ஆர்வலர்கள், இளநிலை ஜோதிடர்கள்) மற்றும் தொழில்முறை ஜோதிடர்கள் பயன்படுத்தும்வண்ணம் வெளிவருகின்றது. இது கடந்த 100 வருட பஞ்சாங்கத்தினையும் இனி எதிர்வரும் 200 வருட பஞ்சாங்கத்தினையும் தன்னுள் கொண்டுள்ளது. ஜோதிடர்கள் மற்றும் ஜோதிட ஆராச்சியாளர்கள், ஜெராக்ஸ் கடை வைத்திருப்பவர்கள் பயன்படுத்தும்வண்ணம் வடிவமைக்கப்பட்ட சாப்ட்வேரின் முகப்பில் மற்றும் அதனூடு பெற்றுக்கொள்ளக்கூடிய சகல ப்ரிண்களிலும் உங்கள் விருப்பப்படி உங்கள் பெயர், உங்கள் ஜோதிடநிலைய பெயர், உங்கள் முகவரி, உங்கள் தொலைபேசி இலக்கம் மற்றும் மின்னஞ்சல் விபரம் பதித்து தரப்படும். இதனால் உங்கள் பெயரிலேயே இந்த சாப்ட்வேர் சகல பணிகளையும் செய்யும். இது தொழில்முறை ஜோதிடர்களிற்கு மிகவும் பயன்மிக்கதாக இருக்கும். 3 வருட பூர்த்தியினை முன்னிட்டு தற்போது சலுகையில் இதன்விலை 3500/= ஆகும்
புதிதாக சாப்ட்வேர் வாங்குபவர்கள் கவலைப்பட தேவையில்லை, அவர்களிற்கு இந்த update உடன் சாப்ட்வேர் வழங்குவேன். இனி சாப்ட்வேர் இந்த விலை 4500 ரூபா ஆக மாற்றப்படுகிறது. ஏற்கனவே Pre-Booking செய்தவர்களுக்கும் தள்ளுபடி விலையில் சாப்ட்வேர் தருகிறேன் என்று நான் வாக்குறுதி அளித்தவர்களுக்கும் மட்டுமே சாப்ட்வேரின் விலை 3500 ரூபாயாக இருக்கும். உங்களுக்கு தெரியாதது இல்லை. ஜாதகம் மட்டும் பார்க்கும் வசதி கொண்ட தமிழ் Astro-Vision சாப்ட்வேரே குதிரை விலை போகிறது. Statics இன் படி Astro-Vision சாப்ட்வேர் சாப்ட்வேர் வாங்குவோர் தற்போது மிக மிக குறைந்து விட்டனர். அது MNC கம்பெனி, ஊழியர்களுக்கு வேறு சம்பளம் வழங்க வேண்டும். அந்த இந்த செலவுகள் அனைத்தையும் சாப்ட்வேர் விற்று எடுக்கவேண்டிய நிலையில் அவர்கள் இருப்பதால் குதிரை விலையில் சாப்ட்வேர் கொடுக்கின்றனர்.
அனைவரிடமும் தமிழ் ஜோதிட சாப்ட்வேர் இருக்க வேண்டும் அதே சமயம் ஜாதகம் முதல் ஜாமக்கோள் ஆருடம், டார்ட், பஞ்ச பட்சி, சோழி பிரசன்னம், கர்மா பரிகாரம், எண்கணிதம் எனும் numerology, பெயர் பட்டியல், பிருகு நாடி, திருமணப்பொருத்தம், சந்திர நாடி, கேபி ஜோதிட முறை, தாம்பூல பிரசன்னம், மருத்துவ ஜோதிடம், தேவ பிரசன்னம், ராசிக்கல் எனும் Gems எனும் 16 வித ஜோதிடம் பார்க்கும் சாப்ட்வேரும் மக்களிடம் இருக்க வேண்டும் என்று மிகக்குறைந்த விலையில் வெறும் 4500 இற்கு சாப்ட்வேர் வழங்குகிறேன். மிகவும் இயலாதவர்கள் மட்டும் 3500 ரூபாயிற்கு என்னிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும். இதுபோல குறைந்த விலையில் PAID-VERSION தமிழ் ஜோதிட சாப்ட்வேர் நீங்கள் எங்கும் வாங்க முடியாது. இந்த அரிய சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி உங்கள் சாப்ட்வேர் பிரதியினையும் லைசென்ஸ் கீ இனையும் பெற்றுக்கொள்ளுங்கள். சாப்ட்வேர் விலை எதிர்காலத்தில் இன்னும் கூட வாய்ப்புள்ளது.
இந்த அப்டேட் இல் என்ன உள்ளது?
  •  நமது சாப்ட்வேரில் உலகம் பூராகவும் உள்ள 5621 நகரங்களின் அட்சரேகை தீர்க்கரேகை(Latitude Longitude) விபரங்கள் இதில் ஏற்கனவே உள்ளது. தற்போது இந்த அப்டேட் இல் மேலும்  மேலும் 120 நகரங்களின் அட்சரேகை தீர்க்கரேகை(Latitude Longitude) விபரங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
  •  C.I (Calculation Integration) மேம்படுத்தப்பட்டுள்ளது.
  •  கவர்ச்சிகரமான GUI சேர்க்கப்பட்டுள்ளது.
  •  சாப்ட்வேரின் அளவு சற்று குறைக்கப்பட்டு உள்ளது
  •  பயன்படுத்தும் ராம் இந்த அளவு குறைக்கப்பட்டுள்ளது.
  •  Multi-Threading வசதி சேர்க்கப்பட்டு உள்ளது.
  •  பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்தப்பட்டு உள்ளது.
  •  மைக்ரோசாப்ட் வின்-சப்ரெஸ்ஸட் கூறு இணைக்கப்பட்டு உள்ளது.

நான் வழங்கிய சாப்ட்வேரின் ஏதாவது அம்சங்கள் மேம்படுத்த வேண்டும் என்று நீங்கள் கருதினால் கூறுங்கள், அவற்றை மேம்படுத்தி அடுத்த அப்டேட் இல் உங்களுக்கு தருகிறேன்.
இந்த update இனை எனது Facebook Inbox மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ பெற்றுக்கொள்ள முடியும்.


 

Copyright @ 2018 வேத ஜோதிடம்.