செவ்வாய், 24 அக்டோபர், 2017

சனிப்பெயர்ச்சி

2017 சனிப்பெயர்ச்சி பலன்கள் சுருக்கமாக...மேஷராசியினரிற்கு இதுவரை நடந்து வந்த அட்டமசனி விலக போகிறது. கடந்த 3 வருடங்களாக பட்ட துன்பங்கள், துயரங்கள் தீரும் காலமாக இந்த சனிப்பெயர்ச்சி அமையும். அதேபோல துலாராசிககாரர்களிற்கு கடந்த ஏழரை வருடங்களாக உங்களை பீடித்துவந்த ஏழரைசனி நீங்கபோகிறது. மேஷத்திற்கும் துலாத்திற்கும் உடனடி மாற்றத்தை விரும்புவோர் சனிப்பெயர்ச்சி அன்று கோவில்களில் நடைபெறும் யாகத்தில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள். இந்த சனிப்பெயர்ச்சியால் நன்மை அடைய போகும் ராசிகளாக கடகம், துலாம், கும்பம் அமையும். ரிஷபத்தாரிற்கு அட்டமசனி ஆரம்பிக்கின்றது, மிதுனத்திற்கு எட்டிற்கும் ஒன்பதற்குமுடைய சனி பாதக ஸ்தானத்தில் இருந்து கண்டசனி ஆரம்பிக்கிறது, மகரத்தாரிற்கு ஏழரை ஆரம்பிக்கின்றது... இக்காலத்தில் இந்த மூன்று ராசிக்காரர்களும் பைரவர் வழிபாடு அதிகம் செய்ய வேண்டும். மேலும் வாழ்க்கை பாதையில் நிதானமாக சிந்தித்து அடி எடுத்து வைக்க வேண்டும். யாரிற்கும் பணம் கொடுப்பது, ஜாமீன் கையெழுத்து போடுவது, பெரிய முதலீடுகள் ஆகாது. கடகம், துலாம், கும்பம் தவிர்ந்த ஏனைய ராசிகளிற்கு சனியால் எந்த லாபமும் இல்லை. கூறப்போனால் சிம்மம், கன்னி, தனுசு, மீனத்திற்கு சனியால் சிறு தோஷமே உண்டு. விருச்சிகம் இதுவரை அனுபவித்த கொடுமைகள் சிறிதுசிறிதாக விலகும். தனுசுக்கு புத்திவேலை செய்யாது, கன்னிக்கும் மீனத்திற்குமஊ உடல்நல பாதிப்பும் தொழில் நிலையில் தடுமாற்றமும் தரும். அந்தவகையில் வாக்கிய பிரகாரம் சனிப்பெயர்ச்சி அன்று நடைபெறும் சனிப்பெயர்ச்சி யாகத்தில் கலந்துகொள்வது அனைவருக்கும் நன்மையை பெற்றுத்தரும் என்பதில் ஐயமில்லை... நல்வாழ்த்துக்கள்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக