ஜோதிடம் எனும் தெய்வீக சாஸ்திரம்


widgeo.net

திங்கள், 30 அக்டோபர், 2017

மரணத்தின் பின்...

ஜாதகரின் முன்னைய பிறப்பினை 9ம் இடத்தினை வைத்தும்; அவரின் அடுத்த பிறப்பினை 5ம் இடத்தினை வைத்தும் அறிய வேண்டும். பின்வரும் புதிய தகவலை நீங்கள் இதுவரை அறிந்திருக்க மாட்டீர்கள் என்று எண்ணுகின்றேன்.
1. ராசிக்கட்டத்தில் 12இல் உள்ள கிரகம்.
2. நவாம்சத்தில் 12 இல் உள்ள கிரகம்.
3. 12ம் அதிபதியுடன் தொடர்புடைய கிரகத்தினை வைத்து பாரம்பரிய வேத ஜோதிடத்தில்; ஒருவர் இறந்த பின்னார் அவரது ஆன்மா அடையும் நிலை தீர்மானிக்கப்படுகிறது.
12இல் சூரியன் அல்லது சந்திரன் தொடர்புற குறித்த ஜாதகர் இறந்த பின்னர் அவரது ஆன்மா கைலாசத்தினை அடையும் என்றும்,
12இல் செவ்வாய் தொடர்புற குறித்த ஜாதகர் இறந்த பின்னர் அவரது ஆன்மா உடனடியாக மீண்டும் பிறப்பெடுக்கும் என்றும்,
12இல் புதன் தொடர்புற குறித்த ஜாதகர் இறந்த பின்னர் ஆன்மா வைகுண்டத்தினை அடையும் என்றும்,
12இல் வியாழன் (எ) குரு தொடர்புற குறித்த ஜாதகர் இறந்த பின்னர் அவரது ஆன்மா பிரம்மலோகத்தினை அடையும் என்றும்,
12இல் சுக்கிரன் தொடர்புற குறித்த ஜாதகர் இறந்த பின்னர் ஆன்மா சுவர்க்க லோகத்தினை அடையும் என்றும்,
12இல் சனி தொடர்புற குறித்த ஜாதகர் இறந்த பின்னர் அவரது ஆன்மா யமலோகத்தினை அடையும் என்றும்,
12இல் ராகு தொடர்புற குறித்த ஜாதகர் இறந்த பின்னர் அவரது ஆன்மா பூமியில் வேறு கண்டத்தில் பிறப்பு எடுக்கும் என்றும்,
12இல் கேது தொடர்புற குறித்த ஜாதகர் இறந்த பின்னர் அவரது ஆன்மா நரகத்தினை அடையும் என்றும் கூறப்படுகின்றது.
எனினும் 12இல் உச்ச கேது இருந்தால் மோட்சம் என்று ஒரு கருத்தும் நிலவுகிறது... ஆனால் இக்கூற்று கேது, ரவி, குரு 12இல்  உச்சமாக இருத்தால் மட்டுமே பொருந்தும்
இது தவிர சாதகபாரிச்சாதமானது ஒருவர் இறந்தபோது உள்ள லக்கினம் கொண்டும் அவரது ஆன்மா அடையும் நிலையை கணிக்க முடியும் என்றும் கூறுகிறது.
 சிலரிற்கு இதில் நம்பிக்கை வராது. பல யுகங்களிற்கு முன்னரே கோள்களையும் அவற்றை செயற்பாடுகளையும் தமது தவ வலிமையால் உணர்ந்து பலாபலன்களை அருளிய ஜோதிட பிதாமகர்கள் சொன்ன சாஸ்திரம் என்றும் பொய்ப்பதில்லை. எமது பாரம்பரிய கலைகளில் கூறப்பட்ட எத்தனையோ விடயங்களை நவீன விஞ்ஞானம் தற்போது ஒவ்வொன்றாக ஒத்துக்கொண்டு வருகிறது. எம் சாஸ்திர நுணுக்கங்கள் கண்டு வியக்கின்றது... ஜோதிட சாஸ்திரத்தில் ஒரு பகுதியில் நம்பிக்கை வைத்து மறுபகுதியில் நம்பிக்கையின்மை வைக்க முடியாது. இது விதியில் நம்பிக்கை வைத்து கடவுளில் நம்பிக்கை இல்லை என்பது போன்றது. இது ஒரு சாஸ்திரம். இதன் உள் அர்த்தம் வெளிப்பார்வைக்கு தெரியாது...

இறந்தால் கையை (நாடியை) விட்டிடுவான் வைத்தியன்...
இறந்தாலும் காலை (பாதத்தை) விடமாட்டான் சோதிடன்...

நன்றி

செவ்வாய், 24 அக்டோபர், 2017

பழமையான வாக்கிய பஞ்சாங்கங்கள் PDF வடிவில்

அனைவருக்கும் வணக்கம்.
உங்கள் அனைவருக்கும் தெரியும் நான் வாக்கிய பஞ்சாங்கத்தினை ஆதரிப்பவன் என்று. இன்று கணினி/ தொலைபேசியில் நொடிப்பொழுதில் ஜாதகம் கணித்துவிடுகின்றோம். பலரிற்கு இதன் பலன்கள் மற்றும் பலன் நடைபெறும் காலம் பொருந்துவதாக காணமுடியவில்லை. வாக்கியம், திருக்கணிதம் இரு முறைகளிலும் தனித்தனியாக ஜாதகம் எடுத்து அதன் தசா, புக்தி, அந்தரம் தொடங்கும், முடியும் காலத்தை குறித்துவைத்து உங்களிற்கு எதன்படி துல்லியமாக பலன் நடக்கின்றது என பாருங்கள். அப்புறம் முடிவு வாக்கிய பஞ்சாங்க பிரகாரம் இருப்பது உங்களிற்கே தெரிய வரும். கம்ப்யூட்டர் ஜாதகம் நமது மேலான ஜோதிட சாஸ்திரங்களில் கூறப்பட்ட திருத்தங்களை அனுசரித்து ஜாதகம் கணிக்காது. உதாரணமாக லக்கினசந்தி, ராசிச்சந்தி, நட்சத்திர சந்தி. கம்ப்யூட்டர்/மொபைல் நாம் கொடுத்த நேரத்திற்கு இருப்பதை அப்படியே நேரடியாக தந்துவிடும். அவை ப்ரோகிராம் செயலிகள். அவற்றிற்கு அறிவு கிடையாது. சாஸ்திர நுட்பம் தெரியாது. இதனால்தான் வாக்கு சித்தி உடைய, பாரம்பரிய ஜோதிடசாஸ்திர நுணுக்கங்களை அறிந்த ஜோதிடர் மூலமாக கையால் ஜாதகம் எழுத வேண்டும். இந்த சாஸ்திர நுணுக்கங்கள் யாவும் பாரம்பரிய ஜோதிட மூலநூல்களில் விபரிக்கப்பட்டுள்ளது. எனவே அவற்றை பின்பற்றுவோர் பெரும்பாலும் வாக்கிய ஜோதிடர்களாகவே இருப்பர். எது எப்படி இருந்தாலும் கையால் எழுதி கணிக்கப்பட்ட ஜாதகமே உகந்தது. அது வாக்கிய பஞ்சாங்க பிரகாரம் இருப்பதே பலன் காண்பதில் சிறப்பையும் துல்லியத்தையும் தரும். வானவியல்படியும், ஜோதிடபடியும் கிரகண அளவுகள் மாறுகின்றன. அஸ்தங்க அளவுகள் மாறுகின்றன. இந்த மாற்றத்தை வானவியல் நூல்கொண்டும் ஜோதிடநூல்கொண்டும் அறிக. (நடந்து முடிந்த கிரகணமும், நாசாவானது சூரியனிற்கு பின்சென்ற கிரகங்களின் கதிர்கள் புவிக்கு வெளிப்படாமைக்கு கூறிய பாகையும் ஜோதிடத்தில் இதே கருத்தை அஸ்தங்கம் என்று கூறும் கிரக பாகையும் வேறுவேறு. அனைத்திற்கும் விஞ்ஞானம், தொழிநுட்பம் என கத்துபவர்களே! நீங்கள் நாசாகூறும் மேற்சொன்ன அளவுகளையே எடுத்து ஜோதிடம் கூறுங்கள். ஜோதிட சாஸ்திரத்தில் கூறியுள்ள தகவல்களை எடுக்காதீர்கள்!!!) இதுமட்டமல்ல; வானவியல்பிரகாரம் உள்ள தகவல்களை முறைப்படுத்தியே ஜோதிடத்தில் பயன்படுத்த முடியும். வானவெளியில் கிரகங்கள் உள்ள மிகசரியான அளவுகளை தருகிறோம் எனும் திருக்கணித பஞ்சாங்கம் அதாவது வானவியலை அப்படியே தரும் திருக்கணித பஞ்சாங்கம் ஜோதிடத்திற்கு நேரடியாக சரிவராது. அனைத்தையும் அறிந்து தொகுத்துதந்த முன்னோர்களிற்கு இது தெரியாதா? வாக்கிய பிரகாரம் வானவியலை; கிரகதாக்கம் மனிதனில் விளைவை ஏற்படுத்தும் காலத்தில் கணித்து எடுக்கப்பட்ட வாக்கிய பஞ்சாங்க பிரகாரம் பலன் அறிவதே அறிவு. எத்தனையோ நபர்கள் வாக்கிய பஞ்சாங்க பிரகாரம் கணித்த ஜாதக பிரகாரம் வரும் தசாபுக்தி பலன்கள் அந்தந்த காலத்தில் அப்படியே நடப்பதை உணர்ந்து; மோகத்தால் திருக்கணித பஞ்சாங்கத்திற்கு திரும்பியவர்கள் மீண்டும் வாக்கிய பஞ்சாங்கத்திற்கு திரும்பியுள்ளனர்... பல ஜோதிடர்கள் திருக்கணித முறைக்கு மாறியதற்கு ஒரு காரணம் உண்டு. ஜாதகத்தினை ஒரு நொடியில் கணினி/கைபேசியில் போட்டு கொள்ளலாம். தசா புக்தி அந்தரம் எல்லாம் உடனடியாகவே வந்துவிடும். பேனை எடுத்து கணிக்கவேண்டிய அவசியம் இல்லை. இந்த சோம்பேறித்தனத்தாலும் பலர் திருக்கணித பஞ்சாங்க முறைக்கு மாறியுள்ளனர்... இதுவரை சரியான முறையில் வாக்கிய ஜாதகம் கணிக்கும் சாப்ட்வேர் வரவில்லை. (பல வாக்கிய சாப்ட்வேர்கள் திருக்கணித கிரகநிலைகளை வாக்கியம் என்ற பேரில் போட்டு மக்களை ஏமாற்றுகின்றது.) ஆகவே உங்களிற்காக நான் 1952 இலிருந்து 60 வருட வாக்கிய பஞ்சாங்கம் தருகிறேன். இதனை சரியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்பதே எனது வேண்டுகோள்.

1952ம் ஆண்டில் இருந்து 2011ம் ஆண்டு வரையிலான வாக்கிய பஞ்சாங்கம் என்னிடம் pdf வடிவாக உள்ளது. இது 1952-1961, 1962-1971, 1972-1981, 1982-1991, 1992-2001, 2002-2011 ஆகிய பத்து வருட பஞ்சாங்க தொகுதியாக 6 உள்ளது. ஒவ்வொரு பஞ்சாங்க தொகுதியும் 32Mb  இலிருந்து 38 Mb வரை இருக்கும். ஆறு பஞ்சாங்க தொகுதியும் (60 வருட பஞ்சாங்கம்) 200Mb வரும். இதனை நீங்கள் அனைவரும் பயன்படுத்தும் வண்ணம் எனது கணினியில் இருந்து இவற்றை எனது இந்த இணைய தளத்தில் பதிவேற்றி உள்ளேன். நீங்கள் உங்களுக்கு தேவையான பஞ்சாங்கத்தினை download செய்யும் link கீழே தந்துள்ளேன். அதில் கிளிக் செய்து உங்களிற்கு தேவையான பஞ்சாங்க தொகுதியினை அல்லது முழு தொகுதியையும் நீங்கள் download செய்து கொள்ளலாம்.

1952 இலிருந்து 1961 வரையிலான பஞ்சாங்கம் -  Download

1962 இலிருந்து 1971 வரையிலான பஞ்சாங்கம் -  Download

1972 இலிருந்து 1981 வரையிலான பஞ்சாங்கம் -  Download

1982 இலிருந்து 1991 வரையிலான பஞ்சாங்கம் -  Download

1992 இலிருந்து 2001 வரையிலான பஞ்சாங்கம் -  Download

2002 இலிருந்து 2011 வரையிலான பஞ்சாங்கம் -  Download

இது தவிர என்னிடம் 1951ம் ஆண்டு வாக்கிய பஞ்சாங்கமும் உள்ளது. அது பிடிஎ வடிவில் இல்லை. (என்னிடம் புத்தகமாக உள்ளது.) உங்கள் யாரிற்கேனும் 1951ம் ஆண்டு வாக்கிய பஞ்சாங்கம் தேவை என்றால் கமெண்ட் செய்யுங்கள். நான் அதனை ஸ்கேன் எடுத்து அல்லது போட்டோ எடுத்து உங்களிற்கு அனுப்பி வைக்கின்றேன்.

ஜாதகம் எழுத, பலன் பார்க்க, திருமண பொருத்தம் பார்க்க மற்றும் சகலவிதமான ஜோதிட ஆலோசனைகளும் தொடர்பு கொள்க;
பாரம்பரிய தெய்வீக ஜோதிடர் ஹரிராம் தேஜஸ்.
hariram1by9@gmail.com

ஜோதிடர்கள் மறந்த புஷ்கர நவாம்சம்

பாரம்பரிய ஜோதிடம் மிகப்பெரிய ஜோதிட பரப்பை கொண்டது. பலரிற்கு பல விடயங்கள் பாரம்பரிய ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளதா என்றுகூட தெரியாத அளவிற்கு பாரம்பரிய வேத ஜோதிடம் விஸ்தீரணமானது. இதனை முழுமையாக உணர முடியாதவர்களுக்கும், எளிமை விரும்பிகளிற்கும் இது சிம்ம சொப்பனம்... அந்தவகையில் பாரம்பரிய ஜோதிடர்களே அறியாத/மறந்த ஒரு பகுதியே புஷ்கராம்சம். இது பற்றிய குறிப்புகள் அரிதாகவே உள்ளது. அவற்றை தொகுத்து உங்களுக்கு தந்துள்ளேன்.
“புஷ்கர” என்றால் தாமரை பூ, மத்தளத்தின் தோல், இருபுறம் சுனையுள்ள கத்தி, குட்டை போன்ற பொருள் தரும்...
நம் அனைவருக்கும் தெரியும்; ஒருராசி என்பது 9 பாதங்களை கொண்டது. இதில் குறிப்பிட்ட பாதங்களில் உள்ள பாதமானது புஷ்கராம்ச பாதம் ஆகும்...
ஜாதகத்தில் என்னதான் கிரகங்கள் பலவீனமாக இருந்தாலும் சில இடங்களில் இருக்கும் போது நல்ல பலன்களை தந்துவிடுகின்றன. அந்தவகையில் ஒன்றுதான் இந்த புஷ்கராம்சம். இதில் கிரகங்கள் இருந்தால் பொருளாதார ரீதியாக நல்ல நிலை ஏற்படும்...
இனி ஒவ்வொரு ராசிகளிற்கும் எத்தனையாம் நட்சத்திர பாதம் புஷ்கராம்சமாக அமைகிறது என்று பார்ப்போம். இதனை உங்களது வாக்கிய ஜாதகத்தின் அடிப்படையில் பார்த்து கொள்க. அப்போதுதான் சரியாக வரும்...
• மேஷம் மற்றும் அதன் திரிகோண ராசிகளிற்கு 7 மற்றும் 9 வது நவாம்ச பாதம் புஷ்கராம்சம் ஆகும். அதேபோல;
• ரிஷபம் மற்றும் அதன் திரிகோண ராசிகளிற்கு 3 மற்றும் 5 வது நவாம்ச பாதம் புஷ்கராம்சம். அதேபோல;
• மிதுனம் மற்றும் அதன் திரிகோண ராசிகளிற்கு 6 மற்றும் 8 வது நவாம்ச பாதம் புஷ்கராம்சம். அதேபோல;
• கடகம் மற்றும் அதன் திரிகோண ராசிகளிற்கு 1 மற்றும் 3வது நவாம்ச பாதம் புஷ்கராம்சம் ஆகும்.

இதில் உள்ள சூட்சுமம் என்னவெனில் மேஷ, ரிஷப, மிதுன கோணத்திற்கு குரு, சுக்கிரன் வீடுகளும், கடக கோணத்திற்கு சந்திரன் மற்றும் புதன் வீடுகளே புஷ்கராம்சமாக அமையும்.

ஜாதகம் எழுத, பலன் பார்க்க, திருமண பொருத்தம் பார்க்க மற்றும் சகலவிதமான ஜோதிட ஆலோசனைகளும் தொடர்பு கொள்க;
பாரம்பரிய தெய்வீக ஜோதிடர் ஹரிராம் தேஜஸ்.
hariram1by9@gmail.com

திக்(கு) பலம்.


திக்பலம் பற்றி இரண்டு வரியில் பதிவிட்ட எனது பதிவில் வந்த உறுப்பினர்களின் கேள்விகளிற்கு பதிலளிக்கும் வகையிலும் உங்களுக்கு திக்பலம் பற்றி ஒரு தெளிவான அறிமுகத்தை வழங்கும் வகையிலும் எனது இப்பதிவு இருக்கும் என்று நினைக்கிறேன்...
கிரகங்களின் பலத்தை ஷட்பலம் எனும் ஆறு நிலைகளில் வைத்து அளவிட வேண்டும். கிரகங்களின் பலத்தை வைத்தே ஜாதகபலன் தீர்மானிக்கப்படுகிறது. ஷட் பலத்தில் உள்ள 6 விதமான பலங்களில் ஒன்றுதான் இன்று நாம் பார்க்க போகும் திக் பலம்.
திக் பலம் என்றால் நிழல் கிரகங்களான ராகுகேது தவிர ஏனைய ஒளிகிரகங்களும் தூமாதி ஐவரும் ஒவ்வொரு திக்கில் (திசையில்) அடையும் பலம் என்று பொருள். அதாவது ஒவ்வொரு கிரகங்களும் ஒவ்வொரு திசையில் பலம் பெறும். உதாரணமாக உதயகிரகங்களான குருவும், புதனும் எமக்கு உதயநேரமாகிய கிழக்கு எனும் லக்கினத்தில் இருந்தால் பலம் பெறும். சந்திரனும் சுக்கிரனும் நீர்க்கிரகங்கள். குளிர்ச்சி எனும் தண்மையை குறிக்கும் இவை (நள்)இரவில் பலம் பெறுவர் அதாவது இவை தெற்கு எனும் நான்கில் இருக்கும் போது பலம் பெறும். இருள் கிரகமான சனிபகவான் பகல்பொழுது மறைந்து இருள் கவ்வ தொடங்கும் சூரியஅஸ்தமனத்தின்போது பலம் பெறுவார். அதாவது மேற்கு திசையை குறிக்கும் ஏழில். சூரியனும் செவ்வாயும் நாம் மேலே பார்க்கும்போதுள்ள வடக்கு திக்கில் பலம் பெறுவர். அதாவது நடு உச்சிப்பொழுதில் நெருப்பு கிரகங்கள் அதீத பலம் பெறுவர்.
இந்த 7 கிரகங்களும் திக்பலம் பெறும் 4 ராசிகளும் லக்கின கேந்திரமாக அமையும். அதாவது கேந்திரஸ்தானங்கள் என்பன லக்கினத்தின் பலமான தூண் போன்றவை. லக்கினத்தை மையமாக கொண்டு பார்க்கும் போது கேந்திரங்கள் எம் ஜனன நேரத்தில் இக்கிரகங்களால் வலிமை பெறும்போது அது லக்கினத்தில் அந்த கிரக காரகத்துவம் சார்பாக நமக்கு பலத்தை தருகிறது.
திக்பலம் பெற்ற கிரகங்கள் தமது காரத்துவ ரீதியில் நல்ல பலன்களை தரும். அதுவே நிஷ்ட பலம் (பலவீனம்) பெற்றால் அந்த கிரகம் திக்பல ரீதியாக பலவீனம் அடையும். நிஷ்ட பலம் என்பது கிரகங்கள் தாம் திக்(கு) பலம் பெறும் ராசிக்கு நேர்எதிரே இருப்பதாகும். உதாரணமாக லக்கினத்தில் குரு இருக்கும் போது திக்பலம் பெற்றும் 7ல் குரு இருந்தால் திக்பல ரீதியாக நிஷ்டபலம் (பலவீனம்) அடையும்.
சனி லக்கினத்திலும்;
சூரியன், செவ்வாய் 4 இலும்;
குரு, புதன் ஏழிலும்;
சந்திரன் மற்றும் சுக்கிரன் பத்திலும் நிஷ்டபலம் பெறுவர். இவை விரும்பத்தக்க நிலை அல்ல...
இதனை துல்லியமாக லக்கினபுள்ளியை மையமாக எடுத்து கேந்திரங்களில் திக்பலம் பெறும் கிரகங்கள் அமர்ந்த புள்ளியை கொண்டு சதவீதத்தில் குறிப்பிடலாம். இதுபற்றி மேலும் விரிவாக எழுதலாம். அதனை நாம் ஒரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்.
நன்றி!

ஜாதகம் எழுத, பலன் பார்க்க, திருமண பொருத்தம் பார்க்க மற்றும் சகலவிதமான ஜோதிட ஆலோசனைகளும் தொடர்பு கொள்க
பாரம்பரிய தெய்வீக ஜோதிடர் ஹரிராம் தேஜஸ்.
hariram1by9@gmail.com

சனிப்பெயர்ச்சி

2017 சனிப்பெயர்ச்சி பலன்கள் சுருக்கமாக...மேஷராசியினரிற்கு இதுவரை நடந்து வந்த அட்டமசனி விலக போகிறது. கடந்த 3 வருடங்களாக பட்ட துன்பங்கள், துயரங்கள் தீரும் காலமாக இந்த சனிப்பெயர்ச்சி அமையும். அதேபோல துலாராசிககாரர்களிற்கு கடந்த ஏழரை வருடங்களாக உங்களை பீடித்துவந்த ஏழரைசனி நீங்கபோகிறது. மேஷத்திற்கும் துலாத்திற்கும் உடனடி மாற்றத்தை விரும்புவோர் சனிப்பெயர்ச்சி அன்று கோவில்களில் நடைபெறும் யாகத்தில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள். இந்த சனிப்பெயர்ச்சியால் நன்மை அடைய போகும் ராசிகளாக கடகம், துலாம், கும்பம் அமையும். ரிஷபத்தாரிற்கு அட்டமசனி ஆரம்பிக்கின்றது, மிதுனத்திற்கு எட்டிற்கும் ஒன்பதற்குமுடைய சனி பாதக ஸ்தானத்தில் இருந்து கண்டசனி ஆரம்பிக்கிறது, மகரத்தாரிற்கு ஏழரை ஆரம்பிக்கின்றது... இக்காலத்தில் இந்த மூன்று ராசிக்காரர்களும் பைரவர் வழிபாடு அதிகம் செய்ய வேண்டும். மேலும் வாழ்க்கை பாதையில் நிதானமாக சிந்தித்து அடி எடுத்து வைக்க வேண்டும். யாரிற்கும் பணம் கொடுப்பது, ஜாமீன் கையெழுத்து போடுவது, பெரிய முதலீடுகள் ஆகாது. கடகம், துலாம், கும்பம் தவிர்ந்த ஏனைய ராசிகளிற்கு சனியால் எந்த லாபமும் இல்லை. கூறப்போனால் சிம்மம், கன்னி, தனுசு, மீனத்திற்கு சனியால் சிறு தோஷமே உண்டு. விருச்சிகம் இதுவரை அனுபவித்த கொடுமைகள் சிறிதுசிறிதாக விலகும். தனுசுக்கு புத்திவேலை செய்யாது, கன்னிக்கும் மீனத்திற்குமஊ உடல்நல பாதிப்பும் தொழில் நிலையில் தடுமாற்றமும் தரும். அந்தவகையில் வாக்கிய பிரகாரம் சனிப்பெயர்ச்சி அன்று நடைபெறும் சனிப்பெயர்ச்சி யாகத்தில் கலந்துகொள்வது அனைவருக்கும் நன்மையை பெற்றுத்தரும் என்பதில் ஐயமில்லை... நல்வாழ்த்துக்கள்...

 

Copyright @ 2018 வேத ஜோதிடம்.