ஜோதிடம் எனும் தெய்வீக சாஸ்திரம்


widgeo.net

வியாழன், 1 அக்டோபர், 2020

பாரம்பரிய ஜோதிட பதிவுகள் செய்வோரின் கவனத்திற்கு !!!

பாரம்பரிய ஜோதிட பதிவுகள் செய்வோர் உங்கள் பாரம்பரிய ஜோதிட பதிவுகளுக்கு மூலநூல் ஆதாரம் கொடுத்து பதிவு செய்யுங்கள். உதாரணமாக உங்கள் இந்த ஜோதிட கருத்து எந்த ஜோதிட மூலநூலின் தகவல் என்று... ஜோதிடத்தினை வகுத்தவர்களால் எமக்காக எழுதப்பட்ட ஜோதிட மூலநூல்களிற்கும் தற்போதைய 20ம் மற்றும் 21ம் நூற்றாண்டில் வியாபார நோக்கிலும் புகழ்பெறும் நோக்கிலும் எழுதப்பட்ட ஜோதிட நூல்களையும் வேறுபடுத்தி அறியுங்கள். ஜோதிட புத்தகங்கள் லட்சசக்கணக்கில் கடைகளில் இருக்கும். ஜோதிட மூலநூல்கள் வையகத்தில் சொற்பமே உள்ளன. மூல நூல்கள் என்பன காலத்திற்கு அப்பாற்பட்டு ஜோதிட ரிஷிகளால், முனிவர்களால் அருளப்பட்ட நூல்களாகும். உதாரணமாக பராசர ஹோரா, பிருகத் ஜாதகம், பலதீபிகை, புலிப்பாணி ஜோதிடம்,  ஜம்பு மகரிஷி வாக்கியம், சினேந்திரமாலை, ஜாதக பாரிசாதம், சாராவளி, உத்திரகாலாம்ருதம் போன்றவற்றை சில உதாரணமாக கூறலாம், இன்னும் ஜோதிட மூலநூல்கள் நிறைய உண்டு. இவைகளே ஜோதிட மூலநூல்கள் ஆகும். (பூர்வபராச்சர்யம் மற்றும் ஜாதக அலங்காரம் என்பன ஒரு தனியான ஜோதிட மூலநூல் அல்ல. இவை ஏற்கனவே இருந்த பல ஜோதிட மூலநூல்களில் இருந்து கருத்துக்களை எடுத்து அவற்றை ஒழுங்குபடுத்தி ஒரு நூலாக்கப்பட்டுள்ளது. அதாவது இது சில குறிப்பிட்ட மூலநூல்களில் இருந்து சில குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் எடுத்து தொகுக்கப்பட்ட நூலாகும். எனவே இதனைக்கூட நீங்கள் மூலநூல் ஆதாரமாக பயன்படுத்த முடியும்.) 

பாரம்பரிய ஜோதிட பதிவுகள் செய்யும் அனைவரும் உங்கள் பாரம்பரிய ஜோதிட பதிவின் அடியில் உங்கள் கருத்து இடம்பெற்ற ஜோதிட மூலநூலின் பெயரை கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்; இயலும் என்றால் அத்தியாயம் மற்றும் சுலோகங்களையும் குறிப்பிட்டால் ஜோதிட மாணவர்களிற்கும் ஜோதிட விரும்பிகளுக்கும் உதவிகரமாக இருக்கும். ஒருவேளை நீங்கள் பதிவிடும் பதிவானது  உங்கள் சொந்த அனுபவ கருத்து என்றால் குறைந்த பட்ச்சம் 100 ஜாதகத்திலேனும் பொருத்தி பார்த்து அது சரியாக வந்தால் மட்டுமே சபையில் பதிவிட்டு ஜோதிட அறிஞர்களின் கருத்துக்களையும் திருத்தங்களையும் ஏற்று, பின் செப்பமிட்ட பின்னரே அதனை ஜோதிட பதிவாக பதிய அனுமதி வழங்கப்படும். இது தொடர்பான மேலதிக விபரங்கள் விரைவில் தயாரித்து அமுல்படுத்தப்படும். தவறான ஜோதிட பதிவுகளை தடுக்கும் நோக்கத்திலேயே இந்த செயல்முறை நடைமுறைக்கு கொண்டுவரப்படுகிறது. ஜோதிட மூலநூல்கள் தவிர வேறு தற்போதைய ஜோதிட ஆசிரியர்கள் இயற்றிய விதிகளை மேற்கோள் காட்டி பாரம்பரிய பதிவுகள் பதிய முடியாது. ஜோதிட மாணவர்களும் தற்போது கடைகளில் கிடைக்கும் தேவையற்ற ஜோதிட நூல்களை எடுத்து படிக்காமல் 2-3 மூலநூல்களை எடுத்து படியுங்கள். அதில் எதாவது ஒன்றில் உங்களை செதுக்கிக்கொள்ளுங்கள்.  பராசர ஹோராவினை அடிப்படையாக வைத்துக்கொண்டு பலதீபிகை அல்லது பிருகத் ஜாதகம் இதில் எதாவது ஒன்றை உங்கள் ஆதாரமாக எடுத்து ஜோதிட அனுபவங்களை ஜாதகங்கள் வாயிலாக பெற்று உங்கள் ஜோதிட திறமையை வளர்த்துக்கொள்ளுங்கள். ஜோதிட மூலநூல்களில் இல்லாத விஷயங்களே இல்லை. ஜோதிடம் பற்றி ஏதும் அறியாதவன் கூட மிகப்பெரிய ஜோதிட கணிதனாக மாற்றும் அனைத்து நுட்பங்களையும், ஜோதிட விதிகளையும் கொண்டுள்ளன. அதிலும் குறிப்பாக கூறவேண்டும் என்றால் ஏற்கனவே நான் கூறிய பிருகத் பராசர ஹோரா, பிருகத் ஜாதகம், பலதீபிகை என்பவற்றை சொல்லலாம். மேலும் அடுத்தபடியாக உத்திரகாலாம்ருதம், பூர்வ பராச்சர்யம் மற்றும் ஜம்பு மகரிஷி வாக்கியம் என்பனவும் எப்படி ஒரு ஜாதகத்தினை அணுக வேண்டும் என்று அழகாக எடுத்து சொல்கின்றன. ஜாதக பாரிசாத ஜோதிட விதிகளை நாம் கண்ணை மூடிக்கொண்டு ஜாதகத்தில் பொருத்தி பார்த்து கூறும் பலன் அப்படியே பலிக்கும்! கூறப்போனால் இன்று தற்காலத்தில் ஜோதிட நூல்கள் எழுதுபவர்கள் அனைவரும் ஜோதிட மூலநூல்களில் இருந்தே கருத்துக்களை எடுத்து தமது மொழிநடையில் எழுதுவதோடு சற்று கூட்டி குறைத்து அனுபவங்களையும் சேர்த்து எழுதுகின்றனர். ஆனால் 95% விழுக்காடு புத்தகம் எழுதுபவர்கள் முழுமையற்றதாக எழுதுகின்றனர். பலர் ஜோதிட கருத்துக்களை தாம் தவறாக புரிந்துகொண்டு அதனை சரியாக புத்தகத்தில் எழுதி அதனை படிப்பவர்களை தவறான பாதைக்கு கொண்டு சென்றுவிடுகின்றனர். எனவே ஜோதிட மூலநூல்களை மட்டுமே நம்பி இருங்கள். அதுவே ஜோதிட ரிஷிகளின் ஆசி.

பாரம்பரிய ஜோதிடத்திற்கு வேத ஜோதிடம் என்றும் ஒரு பெயர் உள்ளது. அதாவது வேதங்களிற்கு இணையாக மெஞ்ஞானம் கொண்டு (விஞ்ஞானம் அல்ல!) ஆன்மீக அருளோடு அறியப்பட வேண்டிய சாஸ்திரம் இது. ஜோதிட ஆர்வலர்கள், ஜோதிட மாணவர்களே, இளநிலை ஜோதிடர்கள், ஜோதிட ஆசான்களே உங்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள், தேன்போன்ற சுவை தரும் நிஜ மாம்பழம் இருக்க இலவம் காய்களை நம்பிக்கொண்டு இருக்காதீர்கள். ஜோதிட மூலநூல்கள் இருக்கு வேறு எந்தவொரு நூல்களும் தேவையில்லை. ஜோதிட மூலநூல்கள் கொண்டு ஜோதிட புலமை பெற்றவன் மட்டுமே பாரம்பரிய ஜோதிடத்தில் முழுமையான வெற்றியாளனான ஜோதிடனாக திகழ முடியும் என்பது சான்றோரின் ஆணித்தரமான கருத்தாகும்.



வெள்ளி, 18 செப்டம்பர், 2020

நன்மைகள் தரும் நட்சத்திர வடிவங்கள்.

வெற்றி தரும் நட்சத்திர குறியீடுகள் என்பது நம் வணங்கும் தெய்வங்கள் கையில் மற்றும் உருவங்களுக்கு கொடுக்கப்பட்ட வடிவம் ஆகும். எனவே நம் நட்சத்திரத்திற்கு பலம் அளிக்கும் தெய்வ உருவங்களை வழிபாடு செய்வதன் மூலம் நமக்கு நல்ல வழி கிடைக்கும்.

தங்கள் பிறந்த நட்சத்திர வடிவம் மற்றும் அதற்கு பலம், வெற்றி,  சாதகம், தோச நிவர்த்தி, நட்பு அளிக்கும் மற்ற நட்சத்திர வடிவங்களை உபயோகித்து சின்னங்கள்(இலட்சணைகள்) அல்லது உருவங்கள் மூலமாக உபயோகித்து வருவதன் மூலம் மற்றும் அடிக்கடி பார்த்து வருதல் மூலமாக பாதுகாப்பு, காரிய சித்தி உட்பட பல்வேறு நன்மைகள் கிடைக்கும். அதாவது தனது ஜென்ம நட்சத்திரத்திற்கு 1, 2, 4, 6, 8, 9 ஆக வரும் நட்சத்திரங்கள் மற்றும் அவற்றின் அனு, திரிஜென்ம நட்சத்திரங்களை உபயோகிக்க வேண்டும். ஆனால் ஒருவர் தனது ஜென்ம நட்சத்திரத்திற்கு 3, 5, 7ஆக வரும் நட்சத்திரங்கள் மற்றும் அதன் அனு, திரி நட்சத்திரங்களின் வடிவங்களை தவிர்த்தல் அவசியம்.

நட்சத்திர  வடிவங்கள் கீழே,
                           
1. அஸ்வினி - குதிரைத்தலை.

2. பரணி - யோனி, அடுப்பு, முக்கோணம்.

3. கிருத்திகை (கார்த்திகை)  - கத்தி, கற்றை, வாள், தீஜ்வாலை.

4. ரோஹிணி - தேர், வண்டி, கோயில், ஆலமரம், ஊற்றால், சகடம்.

5. மிருகசீரிடம் - மான் தலை, தேங்காய்க்கண்.

6. திருவாதிரை - மனிதத்தலை, வைரம், கண்ணீர்துளி.

7. புனர்பூசம் - வில்.

8. பூசம் - புடலம்பூ, அம்புக்கூடு, பசுவின்மடி.

9. ஆயில்யம் - சர்ப்பம், அம்மி.

10. மகம் - வீடு, பல்லக்கு, நுகம்.

11. பூரம் - கட்டில்கால், கண்கள், அத்திமரம், சதுரம், மெத்தை.

12. உத்திரம் - கட்டில்கால், கம்பு, குச்சி, மெத்தை.

13. ஹஸ்தம் - கை.

14. சித்திரை - முத்து, புலிக்கண்.

15. ஸ்வாதி - பவளம், தீபம்.

16. விசாகம் - முறம், தோரணம், குயவன் சக்கரம்.

17. அனுசம் - குடை, முடப்பனை, தாமரை, வில்வளசல்.

18. கேட்டை - குடை, குண்டலம், ஈட்டி.

19. மூலம் - அங்குசம், சிங்கத்தின் வால், பொற்காளம், யானையின் துதிக்கை.

20. பூராடம் - கட்டில்கால்.

21. உத்திராடம் - கட்டில்கால்.

22. திருவோணம் - முழக்கோல், மூன்று பாதச்சுவடு, அம்பு.

23. அவிட்டம் - மிருதங்கம், உடுக்கை.

24. சதயம் - பூங்கொத்து, மூலிகைகொத்து, உருத்திராக்கம்.

25. பூரட்டாதி - கட்டில்கால்.

26. உத்திரட்டாதி - கட்டில்கால்.
 
27. ரேவதி - மீன், படகு.



ஒரு பதிவு போட்டால் 10 நபர்கள் ஆதரவு தெரிவிப்பார்கள் 2நபர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். இது ஜோதிடர்களுக்கு உள்ள நிலைமைதான். இந்த குறியீட்டை எப்படி பயன்படுத்துவது என்று பலர் கேட்டிருந்தனர். வில், அம்பு, வாள், தேர் எல்லாம் அந்த காலத்தில் பயன்படுத்தினார்கள் அதை எப்படி இப்பொழுது பயன்படுத்த முடியும் என்று கேட்டனர். பயன்படுத்த முடியாதுதான். ஆனால் அந்த வடிவங்களை பயன்படுத்த முடியும். நீங்கள் சொந்த தொழில் செய்தால் உங்களது logo வில் இந்த குறியீடுகளை பயன்படுத்தலாம்.
  • Key chain இல் பயன்படுத்தலாம்;
  • Photo ஆக வீட்டில் மாட்டி வைக்கலாம்;
  • Tatoo ஆக பதித்து கொள்ளலாம்;
  • Mobile, laptop இல் wallpaper ஆக வைத்து கொள்ளலாம்;
  • Bike இல் stiker ஆக ஒட்டிக்கொள்ளலாம்;
  • அல்லது உங்களது கண்பார்வை படும் இடத்தில் வைக்கலாம்.
நன்றி.


வெள்ளி, 17 ஜூலை, 2020

நட்சத்திர சிந்தாமணி PDF


நீங்கள் அனைவரும் கேட்ட  நட்சத்திர சிந்தாமணி PDF வடிவில் பதிவேற்றி உள்ளேன். அனைவரும் Download செய்து பயன்பெறுங்கள்.

ஞாயிறு, 21 ஜூன், 2020

ஈஸ்வர நாடி PDF

வணக்கம், 
12 லக்கினத்திற்கு பலன்தரும் ஈஸ்வர நாடி ஜோதிட PDFஇனை Download செய்துகொள்ளுங்கள். இந்நூலில் கிரகங்கள் பார்க்கும்போது அதன் பார்வையில் ஆதிபத்தியம் வெளிப்படுத்தப்படுகிறது எனும் கருத்தை உறுதியாக கூறுகின்றது. வழமைபோல ஒரு ஜோதிட சுலோகத்தினை இங்கு பார்ப்போம்..,
மிதுன லக்னம் லக்னத்தில் குரு 11-ஆம் இடத்தில் அதாவது மேஷத்தில் சூரியன் புதன் சனி பகவான்பாக்கியாதிபதி ஆகி லாபஸ்தானத்தில் நீசம் அடைகிறார் .
அவரோடு பிதுர்காரகன் சூரியன் சேர்ந்திருக்கிறார். பிதுர்ஸ்தானாதிபதி சனி பகவான் பதினொன்றில் நீசமாகி இருக்கிறார். அந்த ஒன்பதாமிடத்தை குரு பகவான் பார்க்கிறது மிதுன லக்கினத்தை பொறுத்தவரையில் இலக்கணத்தின் அதாவது லக்னாதிபதியின் கர்ம காரகன் குரு பகவான்.
ஜாதகரின் கர்ம தொழிலை குறிப்பிடுவது.  இங்கு குருபகவான ஐந்தாம் பார்வையாக துலாத்தையும் 9-ஆம் பார்வையாக கும்பத்தையும் இரு ஸ்தானத்தையும் பார்வையிடுகிறார் கர்ம காரகன் குரு பகவான்.
இப்போது தந்தை ஸ்தானத்தையும், 9மிடத்தையும் பிதுர்காரகன் சூரிய பகவானையும் ஒருங்கே அனைத்தையும் பார்க்கிறார். பிதுர் காரகனும் ஸ்தானாதிபதியும் கூடி மேஷத்தில் நீசம் அடைகிறார். ஆக சூரிய நாடியின் அடிப்படையில் கவனிக்கும் பொழுது பிதாவின் மரணத்திற்கு காரணமானவர் காரகன் குருபகவான்தான். ஈஸ்வர நாடியில் ஜாதகனின் பதினைந்தாவது வயதில் ஜாதகனின் தகப்பனார் மரணம் ஆவார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இது எப்படி நடக்கும் என்று ஆராய்ந்தோமேயானால் குரு பகவான் ஒரு சுற்று சுற்றிவரலக்கினத்தில் இருக்கிறார் இரண்டாம் சுற்று ஆரம்பிக்கும் பொழுது சூரியனின் வீட்டை தொட்டு ஸ்தானத்தையும் அது கும்பத்தையும் ஸ்தானாதிபதியும் சனி பகவானையும் காரகன் சூரியனையும் சிம்மத்தில் இருந்து பார்க்கும் பொழுது தகப்பனுக்கு மரணம் என்று சொல்லுகிறது.
மிதுனத்தில் உள்ள குரு ஒரு சுற்று சுற்றி முடிக்கும்போது ரிஷபத்துக்கு வரும்போது வயது ஜாதகருக்கு 12ம் .
இதன் அதிபதி 3 கடகத்தில் 14 சிம்மத்தில் வரும் பொழுது 15 வயதை தொடுகிறது. இதற்கான ஸ்தானாதிபதியும் பார்க்கும் பொழுது இந்த நிகழ்வு நடக்கிறது இந்த அமைப்பு ஈஸ்வர நாடி ஜோதிடத்தில் சூரிய நாடி 53வது சக்கரத்தில் மிக அழகாக விளக்கி உள்ளது.

வியாழன், 18 ஜூன், 2020

கர்மாவை கரைக்கும் கணக்கு !!!

உங்களது கர்மாக்களை கழிக்க பண்டைய சித்த நூல்களில் சொல்லப்பட்ட அபூர்வ வழிகள்.....

உங்களது கர்மாக்களை சதவிதகமாக கணக்கில் வையுங்கள். 100 % என எடுத்துக்கொள்வோம் அதை 0% ற்கு எப்படி குறைக்கலாம் என பார்ப்போம். இதை செய்யுங்கள்...

(1)பறவைகளுக்கு நீர் வைத்தால் = 2% (-)

தானியங்கள் வைத்தால் = 5 % (-)

(2)நாய்களுக்கு உணவளித்தல் = 32% (-)

(3)மீன்களுக்கு உணவளித்தால் = 20% (-)

(4)குரங்குகளுக்கு உணவளித்தால் = 36% (-)

(5)குதிரைகளுக்கு உணவளித்தால் = 64% (-)

(6)யானைகளுக்கு உணவு அளித்தால் = 68% (-)

(7)பசுக்களுக்கு உணவளித்தால் = 86% (-)

(8)ஆடுகளுக்கு உணவளித்தால் = 62% (-)

(9)தாய் தந்தையர் மற்றும் ஆதரவற்ற முதியோர்களுக்கு ஒரு வேளை உணவு கொடுத்தால் = 86% (-)

(10)சகோதர சகோதரிகள் அவர்கள் கஷ்டபடும் போது நாம் அவர்களுக்கு உணவளித்தாலும் = 70% (-)

(11)கர்பஸ்திரிகளுக்கு = 78% (-)

(12)ஒரு வேளை உணவுக்கே வழி இல்லாதர்வர்க்கும் = 70% (-)

(13)கணவன் / மனைவி ஒருவருக்கொருவர் = 48% (-)

(14)அனாதை / முதியோர் இல்லங்களுக்கு = 75% (-)

(15)நோயளிகளுக்கு = 93% (-)

(16)மரம், செடி, கொடிகளுக்கு நீர் ஊற்றுதல் = 90% (-)

(17)திருமணம் செய்து வைத்தல், ஏழை மாணவர்களுக்கு கல்வி போன்ற பல புண்ணிய காரியங்களுக்கு உதவுதல்.

இவைகளுக்கு துன்பம் விளைவித்தால் அப்படியே 3 மடங்கு கர்மா அதிகரிக்கும்.

சரி இனி ஆன்மிக ரீதியாக பார்ப்போம்:-

(1)கோயில் மயில்களுக்கு

(2)கோயில் காகத்திற்கு

(3)கோயில் சேவல்களுக்கு

(4)கோயில் யானைகளுக்கு

(5)கோயில் குளத்தில் உள்ள மீன்களுக்கு

(6)கோயில் பூசாரி

(7)பிராமனர்களுக்கு உணவு

(8)விசேஷ காலங்களில் அக்கம் பக்கத்தினருக்கு

(9)கோயில் அன்னபாலிப்பிற்கு உதவுதல்

(10)அன்னதானத்திற்கு உதவுதல்

(11)கோயில் கட்ட கட்டுமானங்களுக்கு உதவுதல்

(12)கோயில் விளக்கிற்கு எண்ணெய் கொடுத்தல்

(13)கோயில் வாசலில் யாசகம் எடுப்போர்க்கு உணவு

(14)இறைவனுக்கு பூ மாலை

(15)முன்னோர்கள் வழிபாடு

(16)மறைந்த தாய் தந்தையர்களுக்கு திதி

(17)ஏழை மாணவர்கள் படிக்க

(108)தெய்வங்களை பற்றி அறிதல், புராணங்களை அறிதல்,மற்றும் கோயில்களில் நடைபெறும் கும்பாபிஷேகத்துக்கு உதவுதல் அல்லது விழாவிற்கு சென்று இறையை உணர்தல் போன்ற எந்த ஒரு விசயத்தையும் உணர்ந்து செய்தாலும் 99% கர்மாவை கழிக்கலாம்.

இறைசக்தியால் இயங்கும் நம் மூளையை போதை வஸ்துக்களாலும், அதீத கோப படுத்தினாலும், துரோகம், கொலை, கொள்ள, அநீதி, ஏமாற்றுதல், ஏழை பாழைகளின் சொத்தை தமதாக்குதல், பழிக்கு பழி, பிறர் மனைவிகளை தவறாக நினைத்தாலோ, பெண் குழந்தைகளுக்கு துன்பம் விளைத்தாலோ, கர்பஸ்திரிகளுக்கு துன்பம் விளைவித்தாலோ, இறைச்சி போன்ற தவறான உணவு பழக்க வழக்கங்காலோ நமது மனம் எனும் மூளைக்கு அதீக துன்பம் விளைவித்தால் அது 6 மடங்கு கர்மாக்களை அனுபவித்தே தீர வேணும் இதற்கு கர்மா கழித்தல் இல்லை. மேலே குறிப்பிட்டவை அனைத்தும் நீங்கள் முன் ஜென்மத்தில் செய்த கர்மாவை கழிக்கவே. கலியுகத்தில் எந்த துன்பம் செய்தாலும் அது பல மடங்காக நீங்கள் வயோதகத்திலோ அல்லது நடுத்தர வயதிலோ அனுபவித்தல் தான் தண்டனை. அனுதினமும் இறைவனை நினைத்து தர்மகாரியங்களில் அவ்வபோது செய்து கிடைத்த நேரத்தில் இறைவனின் நாமங்கள் நினைத்து நமது முன்னோர்கள் சொன்ன வழியை பின் பற்றி உலகமே ஆனந்தமாக எந்த சண்டை சச்சரவும் இல்லாமல் வாழ்வாங்கு வாழ்தலே மேன்மை.

- அகத்தியர் கர்ம காண்டம் நூலில் இருந்து...... 

செவ்வாய், 16 ஜூன், 2020

சாதகப் பாரிச்சாதம் PDF

இன்று நான் உங்களிற்காக கொண்டுவந்துள்ள நூல், சாதக பாரிசாதம் எனும் ஒரு அற்புத ஜோதிட நூலாகும். இதிலிருந்து ஒரு ஜோதிட தகவலை இங்கு பார்ப்போம். ஜாதக பாரிஜாதம் கூறும் 9ம் பாவத்தை பார்க்கும் கிரகத்தின் பார்வை பலன்கள்.,

ஐயன்தா னத்து மிக்காய்
அந்தணன் பார்த்து நின்றால்
துய்யரா ஜாக்கல் யுத்தி
தோன்றிடும் கனவான் ஆவான்
பையவே செவ்வாய் பார்க்கில்
பலித்திடும் பூமி லாபம்
தையலே புந்தி பார்க்கில்
சார்ந்திடும் தனத்த னாமே...


பொருள்
========
9 ஆம் பாவத்தை குரு பார்வை
செய்தால் அந்த ஜாதகன் ராஜ தந்திரங்களில் வல்லவனாகவும்
பெரிய மனிதனாக வாழ்வான். 
9 ஆம் பாவத்தை செவ்வாய் பார்வை செய்தால் அந்த ஜாதகனுக்கு நிலபுலன்களால்
லாபம் உண்டாகும்.
9 ஆம் பாவத்தை புதன் பார்வை
செய்தால் அந்த ஜாதகன் செல்வ வசதி படைத்தவனாக வாழ்வான்.

நீங்கள் தற்போது PDF வடிவில் இந்நூலை download செய்ய முடியும். விரும்பியவர்கள் இந்த நூலை டவுன்லோட் செய்து முழுமையாக படித்து பயன்பெறுங்கள்.

வெள்ளி, 5 ஜூன், 2020

தசாம்சம் - 30 குறிப்புக்கள்


ராசிக்கட்டத்தில் தொழில் பற்றி மேம்போக்காக அறிந்தாலும் தொழில் தொடர்பான விரிவான பலனை அறிய தசாம்ச சக்கரம் (D-10) போட்டு பலனை நுணுக்கமாக அறியவேண்டியது அவசியமாகும். தசாம்சம் எனும் வர்க்க சக்கரம் ஊடாக ஜாதகரது தொழில் அமைப்புக்களை ஆராயலாம் என்று உங்களில் பலருக்கு தெரிந்திருக்கும். பிரிவுகள் என்பதன் சம்ஸ்கிருத சொல் அம்சம் ஆகும். தசம் என்றால் பத்து. எனவே ராசிச்சக்கரத்தினை (ராசிச்சரத்தின் ஒவ்வொரு வீடுகளையும்) பத்து பிரிவுகளாக முறையாக பிரித்து  எடுக்கும் வர்க்க சக்கரமே D 10 எனப்படும் தசாம்ச சக்கரம் ஆகும். இங்கு நாம் பாவகம் அல்லது பாவம் என்ற சொல்லினை பயன்படுத்த கூடாது, வீடு அல்லது ஸ்தானம் என்ற சொல்லினையே பயன்படுத்த வேண்டும்.. அதுவே சரியானது. அது ஏன் என்று ஒரு பதிவு விரைவில் பதிகிறேன். காத்திருங்கள். இப்போது தசாம்ச சக்கரம் பற்றிய இரத்தின சுருக்க குறிப்புக்களையும் தசாம்ச சக்கரம் கொண்டு பலன் சொல்வது எப்படி எனவும் பார்ப்போம்.,

1. தசாம்ச லக்னாதிபதி நல்ல நிலையில் பலமாக இருந்தால் தொழில் இலகுவாக கிடைக்கும் மேலும் தொழில்நிலை பொதுவாக நன்றாகவே இருக்கும்.

2. நமது ராசிக்கட்டத்தின் 10ம் அதிபதி தசாம்ச சக்கரத்தில் நல்லநிலையில் இருந்தால் தொழில் ஸ்திரமாக இருக்கும். மேலும் தசாம்ச சக்கரத்தில் சனிபகவானும் நல்ல நிலையில் வலுவாக இருக்கவேண்டியது அவசியமாகும்.

3. தசாம்ச சக்கரத்தின் 2 மற்றும் 11ம் வீட்டில் இருக்கும் கிரக காரகம் மூலம் ஜாதகருக்கு பணம் அல்லது ஆதாயம் கிடைக்கும். இவர்கள் ராசிக்கட்டத்தில் பலமாகவும் சுபமாகவும் இருக்கும் நிலைக்கேற்ப பலன் கூடிக்குறையும்.

4. தசாம்ச சக்கரத்தில் 6ம் வீடு வலுவாக இருந்தால் ஜாதகர் சம்பளம் பெறும்(பிறரிடம்) தொழில் செய்வதற்க்கு உரியவர் எனலாம். மாறாக 7ம் இடம் வலுவாக இருந்தால் ஜாதகர் சுயதொழிலுக்கு உரியவர்.

5. தசாம்சத்தில் 5ம் வீடு அசுப விளைவை தரக்கூடியது ஏனெனில் 5ம் வீடு தொழில் ஸ்தானமான 10க்கு 8ம் வீடாவதினால்.

6. தசாம்சத்தில் 9ம் வீடு & 9ம் அதிபனும், சூரியனும் மேலதிகாரியை குறிக்கும். இவை அசுபர்களால் பாழ்பட்டால் மேலதிகாரியின் தொந்தரவு இருக்கும்.

7. தசாம்ச லக்னாதிபதி 9ல் இருந்தால் ஜாதகர் சுய தொழிலின் அதிபதி ஆவார்.

8. ராகு தசாம்ச லக்னத்திலிருந்தால் ஜாதகர் தொழிலை மாற்றிக் கொண்டே இருப்பார் அல்லது தொழிலில் ஏற்றமும் இறக்கமும் இருந்து வரும் எனலாம்.

9. தசாம்ச லக்னம் வலுவானால் மிக நல்லது. அவ்வாறே தசாம்சத்தின் 10ம் வீடும் 10ம் அதிபனும் வலுவானால் தொழிலில் வெற்றி. மாறாக அசுபத்திலிருந்தால் தொழில் திணறி திணறி செல்லும். தசாம்ச லக்னாதிபதி நிலை முக்கியம்.

10. தசாம்சத்தில் சூரியன் வலுவாக இருந்தால் நிர்வாக திறனுடன் வருமானம் உண்டு. மாறாக சூரியன் கெட்டால் வருமானம் குறைவாகும் மற்றும் அரசு மூலம் தொந்தரவு இருக்கும்.

11. தசாம்சத்தில் சனி வலுவாக இருப்பின் ஜாதகரகளுடன் வேலை செய்பவர்களின் சப்போர்ட் இருக்கும். மாறாக சனி நல்ல நிலையில் இல்லாது போனால் சப்போர்ட்இருக்காது.

12. தசாம்சத்தின் 4ம் வீடு தொழில் மூலம் கிடைக்கும் சந்தோசத்தை குறிக்கும்.

13. 10ம் வீட்டின் அதிபதி, தசாம்ச லக்னாதிபதி மற்றும் தசாம்சத்தில் உச்சமடைந்த கிரகம் மற்றும் பலமான சூரியன் ஆகியன தொழிலில் புரமோசன் கிடைக்க உதவிடும்.

14. தசாம்ச லக்கினம், 2ம் வீடு, 6ம் வீடு, 10ம் வீட்டினை குருபகவான் பார்த்தால் ஜாதகர் தொழிலில் எதாவது தடை அல்லது பிரச்சினை வந்தாலும் இலகுவாக எதிலிருந்து வெளிவந்துவிடுவார். தொழில் போனாலும்கூட அடுத்தமுறை அதைவிட நல்ல தொழில் கிடைக்கும். (ஏற்கனவே கூறியபடி எவ்வளவு சீக்கிரம் கிடைக்கும் என்பது தசாம்ச லக்கினாதிபதி பொறுத்தது.) இவர்களுக்கு தொழில் தொடர்பாக இறை அனுக்கிரகம் இருக்கும், இவர்கள் தொழில் ஸ்தானத்தில் கடவுள் படங்களை வைத்து வழிபட வேண்டும்.

15. தசாம்ச லக்கினாதிபதி, 7ம் அதிபதி, 11ம் அதிபதி இணைந்து 1, 2, 7, 9, 10, 11ம் வீடுகளில் இருந்தால் ஜாதகன் business செய்வதில் ஆர்வம் கொண்டிருப்பார்.

16. தசாம்ச 10ம் அதிபதி அல்லது பத்தில் வக்கிர கிரகம் நின்றால் தொழில் ஸ்திரத்தன்மை இன்றி இருக்கும், மேலும் சனிபகவான் 10இல் இருந்தாலும் அல்லது பார்த்தாலும் அடிக்கடி தொழில் (இட)மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது. 2, 6, 10இல் ராகு, கேது இருந்தாலும் ஏதேதோ காரணங்களுக்காக உங்கள் தொழில் முன்னேற்றம் தடைபடும். அது பதவியுயர்வாக கூட இருக்கலாம்.

17. தசாம்ச சக்கரத்தில் 3, 8இல் இருக்கும் கிரககங்களின் தொழில்ரீதியாக திசைகள் நன்மை தராது. இருப்பினும் ஜாதகர் புரியும் தொழில், இடம், ஏனைய கிரக தொடர்புகள் பொறுத்து இதற்கு சில விதிவிலக்குகள் உண்டு என்பதை மறுக்க முடியாது. அதேபோல தசாம்ச சக்கரத்தில் 5, 6, 12 இல் இருக்கும் கிரகங்கல் பாவர்களால் பாதிக்கப்பட்டு ராசிச்சக்கரத்தில் குறைந்த கிரணங்களை பெற்றிருந்தால் அவற்றில் தசைபுக்திகளும் ஜாதகருக்கு தொழில் ரீதியாக பாதகமாக அமைந்துவிடும்.

18. தசாம்ச சக்கரத்தின், லக்கினம், அதனைப் பார்க்கும் சுப, அசுப கிரகங்கள் போன்றவற்றைக் கொண்டு, ஜாதகரது உத்தியோகத்தில் அவரின் அணுகுமுறை மற்றும் இயல்பு பற்றி அறிய முடியும். தசாம்ச சக்கரத்தின், லக்கின அதிபதி, எந்த இடத்தில் அமர்கிறாரோ அந்த இடத்தின் காரகத்துப்படி தொழில் அமையும். உதாரணமாக ஒருவரின் லக்கினாதிபதி 6 ஆம் இடத்தில் அமர்ந்திருந்தால், ஜாதகர் ஏதேனும் ஒரு  சேவை செய்யும் தொழிலைச் செய்வார் எனலாம். 

19. தசாம்ச சக்கரத்தின், லக்கினத்திற்கு 2ஆம் இடத்தைக் கொண்டு அவர் எந்த மாதிரியான மக்களுடன் வேலை செய்வார் என்பதைப் பற்றியும் அவரின் வேலையை முடிப்பதற்குத் தேவையான ஆதாரம் / வளங்கள் / உபகரணங்கள் போன்றவற்றைப் பற்றியும் கூறும். மேலும், ஜாதகரின் தொழில் சார்ந்த செல்வா நிலை, சமூக அந்தஸ்து மற்றும் பேச்சுத் திறன் போன்றவற்றைத் தெரிவிக்கும்.

20. தசாம்ச சக்கரத்தின், லக்கினத்திற்கு 3ஆம் இடத்தைக் கொண்டு ஒருவர், தமது முயற்சி, படைப்பாற்றல், தகவல் தொடர்பு திறமைகள், ஒப்பந்தங்கள் மற்றும் சிறுசிறு தடைகள் போன்றவற்றைக் கூறும். மேலும் இதன் அதிபதி மூலம், சிறு தூரப் பயணம் பற்றியும் கூறும். 

21. தசாம்ச சக்கரத்தின், லக்கினத்திற்கு 4ஆம் இடத்தைக் கொண்டு ஒருவர், அவரது உத்தியோகத்தில் / தொழிலில் அவர் பெறும் மகிழ்ச்சி, சூழல் / சுற்றுப்புறம் போன்றவற்றைப் பற்றி அறியலாம். மேலும் இதன் மூலம் ஜாதகரின் பிறந்த நேரத்தைச் சரிப்படுத்த உதவும். 

22. தசாம்ச சக்கரத்தின், லக்கினத்திற்கு 5ஆம் இடத்தைக் கொண்டு ஒருவர், வியாபாரத்தில்/ தொழிலில் அவரிடம் வேலை செய்யும் ஊழியர்கள், அவரின் புகழ் மற்றும் அவர் இடும் கட்டளைகளை அவரின் கீழ் பணி புரியும் மற்றவர்கள் பின்பற்றுவது பற்றியும் கூறும்.

23. தசாம்ச சக்கரத்தின், லக்கினத்திற்கு 6ஆம் இடத்தைக் கொண்டு ஒருவர், செய்யும் சேவையைப் பற்றியோ அல்லது அந்த சேவைக்குத் துணை புரிபவர்கள் பற்றியோ அறிய உதவும். பொதுவாக , ஒருவருடைய ஜாதகத்தில் 2, 6, 10ஆம் இடங்கள் அவருடைய இயல்பான வேலை என்னவென குறிகாட்டும். ஆனால், திரைப்படத்துறை மற்றும் அது சார்ந்த துறைகளுக்கு 3, 7, 11ஆம் இடங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. 

24. தசாம்ச சக்கரத்தின், லக்கினத்திற்கு 7ஆம் இடத்தைக் கொண்டு ஒருவர், அவருடன் பணிபுரிபவர்களுடன் ஆன தொடர்பு / பழக்க வழக்கங்கள் பற்றி அறிய முடியும். இதில், சுபக் கிரகம் இடம் பெற்றால், மிகவும் சுலபமான / சந்தோஷமான வாழ்க்கை அமையப்பெறுவார். உதாரணமாக, இங்கு சுக்கிரன் / சந்திரன் போன்ற கிரக அமர்வு, ஜாதகரை நிறைய பெண்கள் கூட்டத்திற்குள் வேலை செய்ய வேண்டி வரும். உதாரணம் ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் இடம் போன்றவை. 

25. தசாம்ச சக்கரத்தின், லக்கினத்திற்கு 8ஆம் இடத்தைக் கொண்டு ஒருவர், அவர் தொழிலில் / வேலையில் ஏற்படும் கஷ்டங்களைப் பற்றி அறிய உதவும். இந்த இடம் நீண்ட நாள் வேலை இழப்பைப் பற்றியும் தெரியப்படுத்தும். 

26. தசாம்ச சக்கரத்தின், லக்கினத்திற்கு 9ஆம் இடத்தைக் கொண்டு ஒருவர், அவரின் மேல் அதிகாரி உடனான உறவை / தொடர்பை வெளிப்படுத்தும். ஒருவரின் ஜாதகத்தில் 9 ஆம் அதிபதியே மேலதிகாரி . ஒரு ஜாதகத்தில் லக்கின அதிபதி 9ஆம் இடத்தில் அமர்ந்தால், அந்த ஜாதகருக்கு அவரே மேல் அதிகாரி, அதாவது அவரை யாரும் தட்டி கேட்க முடியாது, ஏன் எனில் அவரே மேலதிகாரி ஆவதால், அவர் தனித்து இயங்க முடியும். இங்கு, 7ஆம் அதிபதியின் பலம் மற்றும் பலவீனத்தை அறிந்து கொள்ளுதல் அவசியம்.

27. தசாம்ச சக்கரத்தின், லக்கினத்திற்கு 10ஆம் இடத்தைக் கொண்டு ஒருவரின் கர்ம வினையைப் பற்றிக் கூறும். அதாவது இந்த ஜாதகர் போன பிறவியில் செய்த கர்மாவைப் பற்றியும் இந்த பிறவியில் அவர் படும் பாட்டைப் பற்றியும் தெரியப்படுத்தும். அதோடு அவரின் தொழில் / வேலை எந்த வகையில் அமையும் என்பதனை தெளிவுபடுத்தும். 

28. தசாம்ச சக்கரத்தின், லக்கினத்திற்கு 11ஆம் இடத்தைக் கொண்டு ஒருவரின் தொழிலுக்கு, நண்பர்களைப்போல் மற்றவர்கள் எந்த அளவுக்கு உதவுவார்கள் என்பதனை எடுத்துரைக்கும்.

29. தசாம்ச சக்கரத்தின், லக்கினத்திற்கு 12ஆம் இடத்தைக் கொண்டு ஒருவரின் வேலை நிமித்தமாக வெளியூர் / வெளிதேச வாடிக்கையாளர் / விற்பனை போன்றவற்றை அறியலாம். 

30. அனைத்திற்கும் முக்கியமாக ராசிச்சக்கரத்தில் உள்ள யோகி மற்றும் சுபத்தன்மை அதிகம் கொண்ட கிரகம் வர்கச்சக்கரத்தில் நல்லநிலையில் இருக்க வேண்டும். இதில் எந்த கிரகமும் 3/ 6/ 8/ 12ல் மறையகூடாது மற்றும் கெடகூடாது. காரக கிரகம் அது தொடர்பான வர்க்க லக்னத்தில் நிற்ககூடாது என்றதொரு விதி உள்ளது. அதாவது தசாம்சத்தினை பொறுத்தவரை லக்கினத்தில் சனி நிற்க கூடாது.

இந்த வர்க்க சக்கரங்களைப் பயன்படுத்தி ஜோதிட மூலநூல்களின் வழி மென்மேலும் பல ஜாதகங்களை ஆய்வு செய்து மேலும் புதிய தகவல்களை அறிந்து இந்த மானிட சமுதாயம் நல் வாழ்வு வாழ வழி செய்ய தற்போதுள்ள இளைய ஜோதிடர்களைக் கேட்டு வேண்டுகிறேன்.


தசாம்சம் போடுவதற்கென தனியான கணித்தல் முறைகள் உள்ளன. எனினும் ஜோதிட ஆர்வலர்கள் இலகுவாக தசாம்சம் போட்டுக்கொள்ள இந்த அட்டவணை உபயோகமாக இருக்கும்... இதனை பயன்படுத்தி இலகுவாக தசாம்ச சக்கரத்தில் கிரகங்களை வரைந்துவிடலாம்...

[Ari - மேஷம், Tau - ரிஷபம், Gem - மிதுனம் _______ Pis - மீனம்.. என எடுத்துக்கொள்க.]

ஞாயிறு, 31 மே, 2020

வாஸ்து வித்யை PDF

வாஸ்து என்பது ஒரு துண்டு நிலத்தை அறுபத்திநான்கு பகுதிகளாக பிரித்து எந்தெந்த பகுதியில் என்னென்ன அறைகள் வர வேண்டும் என்பதை சொல்வதாகும். இது சம்பந்தப்பட்ட மனையடி சாஸ்திரம் என்று ஒன்று உண்டு. அது ஒரு கட்டிடத்தின் நீள அகலத்தையும்   வைத்து அடிப்படையாக வைத்து  பதினாறு பொருத்தங்கள் வழியாக பல விஷயங்களை சொல்கிறது. அது மட்டுமல்லாமல் மண்ணுக்குள் மறைந்து மக்கி போகாமல் இருக்கும் மனிதன் மற்றும் விலங்குகளின் எலும்பு துண்டுகளின் தன்மைகளையும் ஆராய்ந்து பேசுகிறது.

இன்றைய காலத்தில்  நிறைய மனைகள் விற்பனைக்கு வருகிறது சிலர் அதை பெற்று வீடு எழுப்புகிறார்கள் சிலர் அதை சில  காலம் கழித்து விற்பனை செய்கிறார்கள், சிலர் விற்பனை செய்ய முடியாமலும் சிலர் வீடு எழுப்ப முடியாமலும் அரைகுறையாக விட்டு விடுகின்றனர். மனையை வாங்கும் பொழுது நன்றாக கவனித்து வாங்காமல் நம்முடைய பொருளையும், பணத்தையும் இழந்து நாம் சிரமப்பட கூடாது என்று சில தகவல்களை நூல்களில் பதித்து உள்ளார்கள் முன்னோர்கள். முதலில் அடிப்படை தகவல் தெரிந்து கொள்ள வேண்டும். மத்ஸ்ய புராணம் வாஸ்துவை பற்றி விவரிக்கிறது, வாஸ்து என்பது  ஒரு ஆண் தெய்வத்தின் பெயர் ஆகும்.
 
புராண கதை 
சிவபெருமான் அந்தகாசுரனுடன் போர் புரிந்து வெற்றி அடைந்தார். அப்போது சிவனின் நெற்றியில் உள்ள வியர்வைகள் ஒன்று  சேர்ந்து பூமியில் விழுந்தன. அதில் இருந்து ஒரு பூதம் பயங்கர தோற்றத்துடன் வெளி வந்தது. அந்த பூதத்துக்கு மிகவும் பசியாக  இருந்ததால் அங்கே போரில் கீழே விழுந்த அனைத்தையும் உண்டது. அப்போதும் அந்த பூதத்துக்கு பசி தீரவில்லை. அதனால்,  அந்த பூதம் சிவனை நோக்கி தவம் செய்ய ஆரம்பித்தது. தவத்தை மெச்சிய சிவபெருமான் உனக்கு என்ன வேண்டும் என்றார்  வழக்கம்போல். அதற்கு இந்த பூமி முழுவதையும் நான் எனது கண்காணிப்பின் வைத்து இருக்கவேண்டும் என்று கேட்டது. அழிக்கும் சக்தியும் எனக்கு வேண்டும் என்று கேட்டு பெற்றது.
 
இதை கவனித்த பிரம்மா மற்றும் தேவர்கள் அனைவரும் சேர்ந்து அந்த பூதத்தை குப்புற தள்ளிவிட்டனர். குப்புற விழுந்தவுடன், அனைவரும் அந்த பூதத்தின் மேலே உட்கார்ந்துகொண்டு அதை எழுந்திருக்கவிடாமல் செய்தனர். அந்த பூதம் எனக்கு பசிக்கிறது என்றது. அதற்க்கு பிரம்மா சொன்னார். பூமியில் பிராமணர்கள் செய்யும் வைவஸ்வத ஹோமத்தில் கொடுக்கும் பொருட்களை நீ உண்டுகொள். மேலும், பூமியில் வீடு கட்டுபவர்கள், உனக்கு ஹோமம் செய்வார்கள், வாஸ்து பூஜை செய்வார்கள். அதை நீ சாப்பிட்டுக்கொள் என்றனர். பிரம்மாவும் மற்றவர்களும் அவனுக்கு வாஸ்து புருஷன் என பெயரிட்டனர். இதை போல மனிதனின் கால் அடியை வைத்து  தான் அன்று மனை கணிதம் சொல்லப்பட்டது. அப்படிப்பட்ட வாஸ்து சாஸ்திர புத்தகத்தினை PDF  வடிவில் கொடுத்துள்ளேன், அனைவரும் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.


வெள்ளி, 29 மே, 2020

பூர்வபராசர்யம் PDF

நீங்கள் பாரம்பரிய வேத ஜோதிடம் மூலமாக பலன் கூறுகிறீர்கள் என்றால் எந்த மூலநூல் அடிப்படையில் பலன் கணிக்கிறீர்கள் என்பதை உங்களுக்கு நீங்களே சொல்லிகொள்ளுங்கள். ஏனெனில் பாரம்பரிய ஜோதிடத்தில் ஜோதிடரொருவர் ஏதாவது ஒரு / சில மூலநூல்களை அடிப்படையாக கொண்டே பலன் கணிக்க வேண்டும். அனைத்து மூலநூல்களையும் மாசற கற்றிருத்தல் அவசியம் . அதிலொன்றை உங்கள் பலனிற்கான ஆதாரமாக கொள்ளுங்கள். இதனை உங்கள் குரு உங்களிற்கு வழிகாட்டுவார். ஒருவேளை நீங்கள் சுயமாக கற்றீர்கள் என்றால் பலதீபிகை அல்லது பிருகத்ஜாதகம் அல்லது பூர்வபராச்சர்யம் அல்லது பாவார்த்த ரத்னாகரம் என்பவற்றில் ஒன்றை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள். புலிப்பானி ஜோதிடம், ஜம்பு மகரிஷி வாக்கியம் போன்றவற்றை போல அல்லாது மேலுள்ள மூலநூல்கள் முழுமையான ஜோதிட சாஸ்திர விதிகளை கொண்டுள்ளன. உத்திர காலாம்ருதம் ராகு கேது தொடர்பான பலனை கணிக்க மிகச்சிறந்த நூல், ஆயினும் இதில் காணப்படும் விபரீதராஜயோகம் தென்னாட்டவர்க்கு பொருந்துவதாக இல்லை. (உத்திரம் என்றால் வடக்கு என்று பொருள்படும்.) பராசரஹோரா அது எந்தமூல நூலை பயன்படுத்தும் பாரம்பரிய ஜோதிடர்க்கும் அடிப்படையானது. இவ்வளவும் ஏன் கூறுகிறேன் என்றால் நீங்கள் கூறிய விதத்தினை பார்க்கும்போது அடிப்படை இல்லாமல் பலன் கூறுவது போல உள்ளது. இதனால்தானோ கடினம் என்று பாரம்பரிய ஜோதிடத்தினை தவிர்த்து இலகுவான ஜோதிட முறைகளினுள் மக்கள் செல்கின்றனர்! பாரம்பரிய வேத ஜோதிடம் கடினமானதுதான் ஆனால் தேர்ச்சி பெற்று விட்டால் வேறு எந்தஜோதிட முறையாலும் கூறமுடியாத பலனை பாரம்பரிய ஜோதிடத்தில் கூறலாம்... கஷ்டப்படாது பலன் கிடைக்காது நண்பர்களே... அந்தவகையில் இன்று நான் உங்களுக்காக பூர்வபராச்சர்யம் நூலினை மின்னூல் வடிவில் (PDF) தந்துள்ளேன். அனைவரும் Download செய்து மாசற கற்று பயன்பெற வேண்டுகிறேன். அனைத்து ஜோதிட முறைகளிற்கும் தாய்போன்றமைந்த பாரம்பரிய ஜோதிடத்திற்கென ஒரு மரியாதை உள்ளது. அதனை நீங்கள் காத்திட வேண்டும்.

திங்கள், 25 மே, 2020

சினேந்திரமாலை PDF

குருவடி சரணம்!

வணக்கம் நண்பர்களே,
1989ம் ஆண்டு வெளிவந்த சினேந்திரமாலை (ஜினேந்திரமாலை) எனும் இவ் நூலானது தற்போது பதிப்பகம் வாயிலாக வெளிவருவதில்லை. கடினமான தேடலிற்கு பிறகு இன்று இந்நூல் என் கைகளில் புத்தகமாக தவழ்கின்றது. இது ஜாமக்கோள் ஆரூட பலாபலன்களை கொண்டிருக்கும் சாஸ்திர நூலாகும். இதனை அடிப்படையாக வைத்தே தற்போது ஜாமக்கோள் விற்பன்னர்கள் ஆரூடம் பார்க்கின்றனர். இதிலிருந்த கருத்துக்களையே தங்களின் பெயரில் பதிந்துகொள்கின்றனர். இதிலுள்ள கருத்துக்கள் ஒவ்வொன்றும் மிகவும் அருமையாக உள்ளது. இந்த சாஸ்திர நூலானது ஜாமக்கோள் பயின்ற அல்லது ஜாமக்கோள் ஆரூடத்தில் ஈடுபாடு கொண்ட ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டிய பொக்கிஷமாகும். எனினும் பலரால் இதனை புத்தகமாக தற்போது பெற முடியாது, எனவே pdf வடிவில் லிங்க் கீழே கொடுத்துள்ளேன். அனைவரும் சென்று Download செய்து கொள்ளுங்கள். 


ஞாயிறு, 17 மே, 2020

தண்டனையை அனுபவித்த ஆமை!


#தெரியாமல்_கூட_இனி_இப்படிப்பட்ட_தவறை_யாரும்_செய்யாதீங்க!
[பதிவை முழுமையாக மனதார படியுங்கள், அடியில் நல்லதொரு தரிசனம் காத்திருக்கின்றது.]

நாம் அறியாமல் செய்யும், சின்னச் சின்னத் தவறுகள் கூட, பிற உயிரினங்களுக்கு எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை இந்த சம்பவத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம். யாரோ ஒருவர் அறியாமல் செய்த பாவச் செயலுக்கான தண்டனையை, இந்த ஆமை 19 வருடங்களாக அனுபவத்து வருகிறது. இந்த சம்பவத்தைப் பற்றிய விரிவான செய்தியை பின்வருமாறு காணலாம்.

மனிதர்களைப் பொறுத்தவரை தனக்கு தேவையில்லாத பொருட்களை, வேண்டாம் என்று வெளியில் தூக்கி வீசி விடுகின்றோம். ஆனால் நாம் வீசக்கூடிய அந்த பொருளினால் என்ன பாதிப்பு வரும் என்பதை நாம் என்றுமே சிந்தித்துப் பார்ப்பதில்லை. நான்கு வருடங்களுக்கு முன்பாக கடலிலிருந்து ஒரு வித்தியாசமான ஆமை ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த ஆமையானது, கண்டுபிடிக்கப்பட்ட போது அந்த ஆமைக்கு வயது 19. பார்ப்பதற்கு அந்த ஆமை மிகவும் வித்தியாசமாக இருந்துள்ளது. காரணம், அந்த ஆமையானது ஒரு பிளாஸ்டிக் வளையத்தினுள் சிக்கி இருந்துள்ளது. அதன் பின்பு ஆராய்ச்சியாளர்கள் அந்த பிளாஸ்டிக் வளையத்தை, அந்த ஆமையின் உடம்பிலிருந்து துண்டித்து எடுத்து விட்டனர்.

ஆனால் இதில் வருத்தப்படக்கூடிய விஷயம் என்னவென்றால், அந்த ஆமை சிறுவயதில் இருந்த போதே அந்த வளையம் அதனுடைய உடம்பில் மாட்டியுள்ளது. தனது உடம்பில் அந்த வளையமானது மாட்டிக்கொண்டது தெரிந்ததும், அதிலிருந்து வெளியே வர முயற்சியும் செய்துள்ளது. ஆனால் முடியவில்லை. காலப்போக்கில் ஆமை வளர வளர அந்த வளையம் ஆமையின் உடலில் இறுக்கம் கொடுத்துள்ளது. உயிர் வாழ்வதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கும் அந்த ஆமை, என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள்! 19 வருடங்களாக எவ்வளவு இடர்பாடுகளை கடந்து அது தன் வாழ்வை வாழ்ந்ததோ?

யாரோ ஒருவர் கடலில் அந்த மோதிரத்தை வீசியதால் தான் இப்படிப்பட்ட சம்பவம் நடந்திருக்க வேண்டும் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து. இந்த சம்பவமானது நீண்ட நாட்களுக்கு முன்பு நடந்திருந்தாலும், இதில் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம், மிகப் பெரியது என்பதை எல்லோரும் உணரவேண்டும் என்பதற்காக தான் இந்த பதிவு. வாயில்லா ஜீவன்களுக்கு நம்மால் எந்த ஒரு நல்லதையும் செய்ய முடியாமல் போனாலும் பரவாயில்லை. கெடுதலாவது செய்யாமல் இருப்போமே. நீர்நிலைகளில் அல்லது நிலத்தில் பிளாஸ்டிக் பொருட்களை போடுவது அவற்றின் உயிர்களிற்கு பாரிய அச்சுறுத்தலாக அமைகிறது. நன்றாக வேதனைப்பட்டு துடிதுடித்து இறுதியில் இறக்கின்றன.. நாம் தெரியாமல் செய்தாலும் இந்த பெரும் பாவம் செய்தவரையே சேரும்.

இன்று வளர்ந்து வரும் பல தொழில்நுட்பங்கள், இயற்கையை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகிறது என்று சொன்னால் நிச்சயம் அது பொய்யாகாது. எந்த ஒரு முன்னேற்றமாக இருந்தாலும், நாம் செய்யும் எந்த ஒரு செயல்பாடாக இருந்தாலும், இயற்கையையும், மற்ற உயிரினத்தையும் பாதிக்காத அளவில் இருந்தால்தான், அது ஆரோக்கியமான முன்னேற்றமாக இருக்கும். ஆனால், இந்த உலகமானது முன்னேறிச் செல்ல செல்ல, இயற்கை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டே வருகிறது.

இயற்கைக்கு எதிராக நாம் செய்யும் ஒவ்வொரு செயல்பாடும், திரும்பவும் நம்மை தான் பாதிக்கப் போகின்றது என்ற உண்மையை நாம் என்று தான் புரிந்து கொள்ளப் போகின்றோம். யாரோ ஒருவர், செய்த தவறில் இந்த ஆமை சிக்கியுள்ளது என்பது, இன்று நாம் எல்லோருக்கும் தெரிந்திருக்கலாம். ஆனால், நாம் தினந்தோறும் இயற்கைக்கு எதிராக செய்யும் எத்தனையோ தவறுகளில், எத்தனையோ உயிரினங்கள் அழிகின்றது என்பதை நினைத்து பார்க்கும் போது தான் வருத்தமே அதிகமாகிறது.இந்த பூமி மீது மனிதர்களாகிய எமக்கு எவ்வளவு உரிமை இருக்கின்றதோ ஏனைய சகல உயிர்களுக்கும் அதே உரிமை இருக்கின்றது. உண்மையை கூற வேண்டுமென்றால் பூமியை நாசமாகும் எம்மைவிட அவைகளிற்கே  அதிக உரிமை உள்ளது. நாம் தெரியாமல் அல்லது கவனகுறைவாக செய்யும் மிகச்சசிறு சிறு தவறுகள் கூட ஏனைய சிறிய  உயிரினங்களுக்கு பாரிய தீமையை\ நரகமாக அமைந்து விடுகின்றது. கண்மூடி ஒருநிமிடம் சிந்தித்து பாருங்கள் அந்த ஆமை 19  வருடங்களாக பட்ட வேதனைகளை... அன்பே சிவம், சிவமே ஜெயம் ஜெயம்.

செவ்வாய், 12 மே, 2020

தீர்க்கமுடியாத பிரச்சினைகளை தீர்க்க 2 ஏலக்காய் போதும்!

தீர்க்கமுடியாத பிரச்சினையையும் தீர்த்து வைக்க 2 ஏலக்காய் போதும்! தினம்தோறும் பூஜை அறையில் இப்படி செய்துபாருங்கள்!

ஒரு மனிதனுக்கு சாதாரணமான பிரச்சனைகள் இருந்தாலே வாழ்க்கையில் நிம்மதி இருக்காது. அதிலும் தீர்க்க முடியாத நிரந்தரமான பிரச்சனைகள் இருந்துக் கொண்டே இருந்தால், சொல்லவே வேண்டாம்! வீட்டில் சதாகாலமும் சண்டை சச்சரவுக்கும், பிரச்சினைக்கும், குறைவே இருக்காது. குறிப்பாக ஆண்களுக்கு கடன் தொல்லை இருந்தால், அந்த வீட்டில் சந்தோஷம் கட்டாயம் இருக்காது என்பது தான் உண்மை. இப்படி இருக்க, இதற்கு என்னதான் தீர்வு? எப்படியாவது கஷ்டப்பட்டு நமக்கு இருக்கும் பிரச்சினைகளை எல்லாம் தீர்த்து விட்டு, கடன் இல்லாமல் நிம்மதியாக வாழ்ந்தாலே போதும். கடன் வாங்கி ஆடம்பர வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை, என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

‘இந்தப் பிரச்சனைக்கு தீரவே தீராது!’ என்று உதறி விட்ட, பிரச்சனைகளை கூட சுலபமான முறையில் தீர்த்துக் கொள்ள, ஆன்மிகத்தில் பல பரிகாரங்கள் உள்ளன. சில பேரு சொல்லி நாம் கேள்விப்பட்டிருப்போம். ‘நீண்ட நாட்களாக எனக்கு இந்த பிரச்சனை இருந்தது. ஆனால், இந்த கோவிலுக்கு சென்று வந்த பிறகு பிரச்சினைகள் எல்லாம் எப்படி காணாமல் போனது என்று தெரியவில்லை?’ மன நிம்மதி அடைந்து விட்டதாக கூறுவார்கள். அந்த வரிசையில் இன்று, இந்த பதிவின் மூலம் ஒரு சுலபமான பரிகாரத்தை பற்றி தான் பார்க்கப் போகின்றோம்.


உங்களுக்கும் வாழ்க்கையில் தீராத கஷ்டம் இருக்கிறதா? தினம் தோறும் விநாயகர் வழிபாடு மிகவும் சிறந்தது. ஏனென்றால், விக்னங்களை தீர்ப்பவர் தான் ‘விக்ன விநாயகர்’. உங்கள் வீட்டில் தினந்தோறும் இரண்டு ஏலக்காய்களை, விநாயகப் பெருமானுக்கு நைவேத்தியமாக வைத்து, தீபம் ஏற்றி மனதார வழிபட்டு வந்தால், எப்படிப்பட்ட பிரச்சினையும், வந்த வழி தெரியாமல் சென்றுவிடும். இது மிக மிக சுலபமான பரிகாரம். ‘இது செஞ்சா பிரச்சினை எல்லாம் போய் விடுமா!’ என்ற சந்தேகத்தோடு மட்டும் வழிபாடு செய்யாதீர்கள். நம்பிக்கையோடு செய்து பாருங்கள்! உங்களை விட்டு அந்தப் பிரச்சனை எப்படித்தான் சென்றது என்றே தெரியாது. ஆனால் பிரச்சனையிலிருந்து நீங்கள் விடுபட்டு விடுவீர்கள் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

தீர்க்க முடியாத கடன் பிரச்சனை இருந்தால், செவ்வாய்க்கிழமை அன்று பின்வரும் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். இதுவும் விநாயகரை நினைத்து செய்ய வேண்டிய பரிகாரம் தான். திங்கட்கிழமையே உங்களது வீட்டையும், பூஜை அறையையும் சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். கட்டாயம் அசைவம் சாப்பிடக்கூடாது. உங்கள் வீட்டில் தோரண கணபதி படம் இருந்தால் இன்னும் சிறப்பு. செலவோடு செலவாக சின்ன தோரண கணபதி படத்தையும் வாங்கி பூஜை அறையில் வைத்து விடுங்கள்.

தோரண கணபதியின் முன்பாக ஒரு தீபம் ஏற்றி வைத்துவிட்டு, அந்த விநாயகருக்கு ஒரு கைப்பிடி அளவு பச்சரிசியும் நாட்டு சர்க்கரையை கலந்து, இரண்டு ஏலக்காய்களை நசுக்கி போட்டு, கலந்த கலவையை நிவேதனமாகப் படைக்க வேண்டும். வாரத்தில் ஒரு முறை செவ்வாய்க்கிழமை அன்று மட்டும் இந்த முறையில் வழிபாடு நடத்தினால் போதும். தொடர்ந்து 11 வாரங்கள் செய்து வர, உங்கள் கடன் பிரச்சனைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். விநாயகருக்கு நெய்வேதியமாக வைத்த அந்த கலவையை பசுமாட்டிற்கோ அல்லது எறும்புகளுக்கோ, அல்லது காக்கை குருவிகளுக்கோ உணவாக அளித்து விடலாம்.

இதுமட்டுமல்லாமல் தினம் தோறும் வீட்டில் இறைவனுக்கு ஏதாவது ஒரு பொருளை நைவேத்தியமாக படைத்து, அதன் பின்பு தீபம் ஏற்றும் பழக்கம் உள்ளவர்கள், குறிப்பாக பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, முந்திரிப் பருப்பு, உலர் திராட்சை, டைமண்ட் கற்கண்டு, பேரிச்சம்பழம் இந்த பொருட்களை பயன்படுத்துவது மிகவும் நல்லது. இந்த பொருட்களை எல்லாம் இறைவனுக்கு நைவேத்தியமாகப் படைத்தால், நமக்கு வாழ்க்கையின் நிறைவான செல்வவளம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

நமக்கு இருக்கும் கஷ்டத்தில், விலை உயர்ந்த பொருட்களை இறைவனுக்கு நைவேத்தியமாகப் படைக்க வேண்டுமா? என்றெல்லாம் சிந்திக்காதீர்கள்! இவை அனைத்தையும் ஒட்டு மொத்தமாக சேர்த்து ஒரே நாளில் இறைவனுக்கு நைவேதியமாக வைக்கப் போவது இல்லை. எந்த நைவேத்தியமாக இருந்தாலும், அதில் இரண்டு மட்டும் வைத்தாலே போதும். பாதம் பருப்பாக இருந்தால், அதில் இரண்டு மட்டும் நைவேத்தியமாக இறைவனுக்கு படையுங்கள். இறைவனுக்கு படைத்து விட்டு அதை உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு சாப்பிட கொடுத்து விடலாம்.


வீட்டில் இருக்கும் இறைவனை பட்டினி போடக்கூடாது. வெறும் சாதத்தில் ஒரு சொட்டு நெய் விட்டு, அந்த இறைவனுக்காக நெய்வேதியமாக படைத்தாலும், அது தேவாமிருதம் தான். இருப்பினும் உங்களால் முடிந்தால், மேற்குறிப்பிட்டுள்ள பொருட்களை இறைவனுக்கு நைவேத்தியமாகப் படைக்கலாம் என்றுதான் சொல்லப்பட்டுள்ளது. அதற்காக இப்படிப் பட்ட விலை உயர்ந்த பொருட்களை நெய்வேதியமாக படைப்பதால் மட்டும் தான், அந்த இறைவனின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்றெல்லாம் அர்த்தம் கிடையாது. இறைவனுக்காக நம்மால் எதுவுமே செய்ய முடியாத சூழ்நிலையில், நல்ல மனதோடு, உண்மையான பக்தியோடு வேண்டிக் கொள்ளப்படும் எந்த வேண்டுதலும்  நிராகரிக்க படாது, என்பதை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். உலகத்தில் உள்ள ஜீவராசிகள் அனைத்துமே, இறைவனின் பார்வைக்கு ஒன்றுதான் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

ஞாயிறு, 5 ஏப்ரல், 2020

அங்கிசம் அறியும் வழி (அங்கிசநாதன்)


அங்கிசம் என்பதன் அர்த்தம்; தோள் கொடுத்தல், கூறு, பங்கு, வாழையடி வாழையாய் வளர வேண்டிய வம்சம் என்று அர்த்தம் கொள்ளலாம்.
ஒரு நட்சத்திரத்துக்கு ஒருவர் அதிபதியாக இருக்கும் போது, இன்னொருவர் அந்த நட்சத்திரத்தை தோள்கொடுத்து தூக்கி நிறுத்த முடியும் என்பதைக் காட்டுவதே அங்கிசம் என்பதாக நினைக்கிறேன்.
இப்போது குருவின் நட்சத்திரம் விசாகத்திற்கு சுக்கிரன் அங்கிசைநாதனாக வருகிறார். குரு எனும் கிரகம் சாரம் தருவதின் மூலம் இயக்கு சக்தியாக இருக்க, சுக்கிரன் அங்கிச நாதனாகி இயங்கு சக்தியாக இருப்பார். விசாகம் சாரம் பெறும் எந்தகிரகத்திற்கும் சாரநாதனும், அங்கிசைநாதனும் பலம்பெற்று இருந்தால்தான் முழுமையான பலன்கள் கிட்டும்.
தமிழ்மொழியில் இயற்றப்பட்ட மூத்த பழமையான ஜோதிட நூலான, “ஜாதக அலங்காரம்” என்கிற நூலில் அங்கிசப் பலனறியும் முறையினை தந்துள்ளார்கள். இது மிகவும் நுட்பமான விடயம்தான். ஆனால், அதிகம் பயன்படுத்தாத, விரிவுபடுத்தாத ஒரு விடயமாகவே உள்ளது. இதை “ஜோதிட ஆசான்கள்” விரிவாக ஆய்வு செய்து மக்களுக்குப் பயன்படும் விதமாக கொண்டு சேர்ப்பது நமது கடமையாகும்.
அங்கிசநாதன் அறிதல்.
அசுவினி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திரங்களும், ஒன்பது கிரகங்களான, சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, இராகு, கேது ஆகிய ஒன்பது கிரகங்களுக்குப் பிரித்துக் கொடுக்கப் பட்டுள்ளது. இவர்களை, “அங்கிசநாதன்” என்று அழைக்கப்படுகின்றன.
ஒவ்வொரு கிரகங்களுக்கும் மூன்று நட்சத்திரங்களாக பிரித்துத்தரும்போது, அந்த ஒவ்வொரு நட்சத்திரங்களுக்கும் நான்கு, நான்கு பாதங்களாக, பன்னிரண்டு பாதங்களாக, பன்னிரண்டு இராசிகளுக்கும், (மேடம் முதல் மீனம் வரையிலான) தரப்படும்.
இப்போது ஒவ்வொருவருக்கும் ஒரு ஜென்ம நட்சத்திரம் இருக்கும் அல்லவா? அந்த ஜென்ம நட்சத்திரம், பன்னிரு பாகங்களில் ஒன்றில் அமையும். அது எத்தனையாவது பாகம் என்பதைக் கண்டுபிடித்து, அந்த எண்ணிக்கையை, மேடம் முதல் எண்ணிவர, பன்னிடண்டு இராசிகளில், ஏதாவது ஒன்றில் அமையும். அந்த இராசியின் அதிபர், “அங்கிசவான்” அல்லது “அங்கிசை” என்றும் அழைக்கப்படுகிறார்.
உதாரணமாக. ஒருவர் விசாகம் நான்காம் பாதத்தில் பிறந்துள்ளதாக வைத்துக் கொள்வோம். இவர் பிறந்த நட்சத்திரம் சுக்கிரனின் அங்கிசையில் வருகிறது. அதனால், குருவின் நட்சத்திரமாகவே இருந்தாலும், அந்த நட்சத்திரத்துக்கு தோள்கொடுத்து தூக்கி நிறுத்துபவன் சுக்கிரனாகவே இருப்பான். அதனால்தான் குருவின் நட்சத்திரம் விசாகத்திற்கு, சுக்கிரன் அங்கிசைநாதனாக வருகிறார்.

வெள்ளி, 31 ஜனவரி, 2020

மகாலக்ஷ்மி சித்தர் மந்திரம்

ஸ்ரீ மஹாலக்ஷ்மி மந்திரத்தை தினமும் இரு முறை சொல்லி வழிபடுபவரின் இல்லத்தில் தனமும் தான்யமும் குறைவின்றி நிறைவாக விளங்கும்.

#மந்திரம்

நமஸ்தே செல்வ ரூபிண்யை
நமஸ்தே கமலவாசினி
தேஹிமே தனப்பிராப்தி நித்யம்
சித்திர் பவதுமே சதா

தினமும் மாலை வீட்டில் விளக்கேற்றிவிட்டு இந்த மந்திரத்தை சொல்வதன் பயனாக வீட்டில் மகாலட்சுமி குடிகொள்வாள். அவள் அருளால் வீட்டில் சகல செல்வங்களும் பெருகும்.

தினமும் இந்த மந்திரத்தை கூற இயலாதவர்கள் வெள்ளிக்கிழமைகளில் இதை ஜெபிக்கவும்.

இந்து நடுநிலைகள் !!!

நேற்று நான் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தேன்,  ஒரு பிச்சைக்காரன் என்னிடம் வந்து சொன்னான்….

 "அல்லாஹ்வின் பெயரால் ஏதாவது கொடுங்கள், " 

 நான் அவரைப் பார்த்து சொன்னேன்….

  "நான் அல்லாஹ்வை நம்பவில்லை" எனவே நான் ஏன் அதை கொடுக்க வேண்டும் ??? 
 அவர் என்னை முறைத்துப் பார்த்தார்...
ஆனால்....
நான் சொன்னேன் "சிவாயநம" என்ற பெயரில் நீங்கள் கேட்டால், நான் உங்களுக்கு 1,000 ரூபாய் தருகிறேன்.

 அவர் என்னை முறைத்துப் பார்த்தார், ரயிலைச் சுற்றியுள்ளவர்களும் எங்களை ஆர்வமாகப் பார்க்கத் தொடங்கினர்.  பின்னர், நான் எனது திட்டத்தை மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்றினேன்... அவர் சிவனின் பெயரைக் கொண்டு கேட்டால், நான் அவருக்கு "2,000 ரூபாய்" தருவேன் என்றேன்... 

ஆனால், அந்த பிச்சைக்காரன் இதற்குத் தயாராக இல்லை மேலும், நானும் அவரின் கடவுள் பால் அவருக்கான நம்பிக்கையை உணர்ந்தவாறு ஜன்னல் வழியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன்.

ஆனால், இந்த சம்பவம் என்னை யோசிக்க வைத்தது.. சாப்பிட ஒன்றும் இல்லாத பிச்சைக்காரன்  "பணத்தின் காரணமாக தனது மதத்தை சமரசம் செய்யமாட்டான்." 

நடுநிலை இந்துக்கள் ஒரு பிச்சைக்காரனை விட அதிகமாகச் கேவலமாக இருக்கின்றனர் தன் மதத்தை காட்டிக்கொடுப்பதற்கும், தனது தனிப்பட்ட சுயலாபத்திற்காக (செல்வம் அல்லது பதவிக்காக) பேராசையில் மதச்சார்பற்றவனாக இருப்பதற்கும் எப்போதும் ஒரு காலில் நிற்கிறான்?

ஒவ்வொரு முஸ்லிமும் எந்த வயதிலும் தினமும் தொழுகை மேற்கொள்கிறான். ஒவ்வொரு கிறிஸ்தவரும் ஞாயிறு சர்ச் செல்கிறான். பெளத்தர்கள் எந்த உயர்ந்த நிலையில் இருந்தாலும் புத்தரை பிரிந்து இருப்பதில்லை... இவர்கள் தமது குழந்தைகளிற்கு சிறுவயதில் இருந்தே தத்தமது மத கோட்பாடுகளை கூறி தம் மதத்தின் பாதுகாவலராக வளர்க்கின்றனர். ஒவ்வொருவரும் அவரது பெற்றோர்களால் சிறுவயதில் இருந்தே அவர்கள் மதத்துடன் நெருக்கமாக இணைக்கப்படுகின்றனர்...

ஆனால்...

இந்துக்களே! உங்களுக்கு ஏன் இந்த “ஏனோதானோ” மனநிலை? உங்கள் குழந்தைகளிற்கு எப்படி பிழைக்க வேண்டும் என்று கற்றுக்கொடுக்கும் நீங்கள் அவர்கள் எப்படி வாழ வேண்டும் என்று கற்றுக்கொடுப்பதில்லை. தேவாரம் பாட வெட்கம். சமய சின்னங்கள் அணிய வெட்கமா உங்களிற்கு? உங்களை நினைத்து நாம்தான் வெட்கி தலைகுனிய வேண்டும். மேலைநாட்டு மோகத்தில் உங்களும் உங்கள் சந்ததிகளையும் நீங்களே அழித்துக்கொண்டுள்ளீர்கள். அழகிய தமிழ் பெயர் வையுங்கள். தமிழ் பெயர் என்பதே இந்துப்பெயர்தான். அதில் சந்தேகம் வேண்டாம்! எமது மேலான இந்த சமயத்தை உங்கள் குழந்தைகளிற்கு கற்றுகொடுங்கள். இதிகாசங்களையும் புராணங்களையும் வெறும் கதைகளாக கூறாதீர்கள். அவற்றில் உள்ள மேலான நற்கருத்துக்களை பக்தியுடன் சேர்த்து ஊட்டுங்கள். தினமும் சூரிய வழிபாடு செய்யுங்கள். 6 மாதத்திற்கு ஒருமுறையாவது குடும்பத்தார் அனைவருடனும் குலதெய்வ கோவில் சென்று பொங்கல் வைத்து வழிபடுங்கள். எமது மேலான சமயத்தில் ஒன்றுமே தெரியாதவர்கள்தான் பணத்திற்காகவும், தமது சுயலாபத்திற்காகவும் மதம் மாறுகின்றனர். உங்களை தந்த இந்த தொன்மையான இந்து கலாச்சாரத்தை பேணி காப்பது உங்கள் ஒவ்வொருவரின் கடமையாகும். கடவுளை நம்புங்கள்; அவரை மனதாரவும் உடல் அளவிலும் வழிபடுங்கள், அவர் புகழ் பாடுங்கள், இறை சேவை செய்யுங்கள். வியாபார நோக்கமாக மாறிவரும் சில ஸ்தாபனங்களையும், சில கோவில்களையும் நினைத்து வருந்தாதீர்கள். அங்குள்ள இறைவனை மட்டும் நினையுங்கள். நாம் அனைவரும் ஈற்றில் இணைய விரும்புவது இறைவனுடனே தவிர பிறருடன் அல்ல. பதி மட்டுமே உண்மை. பசு பாசத்தால் கட்டப்படுகிறது. அந்தவகையில் என்ன நடந்தாலும் யார் என்ன சொன்னாலும் எமது சிந்தனை இறைவனை நோக்கியே இருக்க வேண்டுமே தவிர சில குறைகளை நோக்கி இருத்தலாகாது. நீங்கள் இறைவனை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால் இறைவன் உங்களை நோக்கி நூறு அடி எடுத்து வைப்பார். உங்கள் இஷ்ட தெய்வத்தை உளமார உணருங்கள்; பேசுங்கள், நன்றாக வழிபடுங்கள்... இந்து சமயம் வாழ வேண்டும். இந்துக்கள் ஓங்க வேண்டும். அடுத்தடுத்த தலைமுறையினரிற்கு இந்து சமயத்தை அதே புனிதத்தன்மையுடன் கொண்டு சேர்க்க வேண்டும்... அதற்காக இறைவன் மீது உறுதி எடுப்போமாக...

ௐ பிரம்மதேவாய நமஹ
ௐ நமோ நாராயணாய
ௐ நமசிவய
ௐ சக்தி

புதன், 22 ஜனவரி, 2020

தீயவழியில் சென்றவர்களை மீட்டெடுக்க...

தீய வழியில் சென்றவர்களை மீட்டெடுக்க உதவும் சிறப்பு மிக்க எளிய விரதம் தெரியுமா?

 வாழ்வில் சிலர் தவறான நெறிகளில் சென்று தன்னையும், தன்னை சார்ந்தவர்களையும் நிம்மதியின்றி செய்துவிடுகின்றனர். எப்படியும் வாழலாம் என்ற கோட்பாடு எத்தகைய பிரச்சனைகளை தரும் என்பது பலருக்கு புரிவதில்லை. இறை நெறியில் மன தூய்மையுடன் வாழ்பவர்கள் எந்த துன்பம் வந்தாலும் அதனை திறம்பட சமாளிக்கும் வல்லமை பெற்றிருப்பார்கள்.

நல்லது செய்தாலும், கெட்டது செய்தாலும் அவரவர் கர்ம வினைப்படி பலன்களை அனுபவித்து கொண்டு தான் இருப்பார்கள்

. அதில் தவறான பாதையில் சென்று வாழ்க்கையை தொலைப்பவர்கள் இருக்கிறார்கள். இந்த சிறப்பு மிக்க விரதம் மேற்கொள்வதால் நீங்கள் நினைக்கும் நபர் புதிய வாழ்வு பெறுவார்கள். இந்த விரதத்திற்கு என்ன பெயர்?

எப்படி விரதம் மேற்கொள்வது? என்னென்ன பலன்களை பெறலாம் என்பதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்

. இந்த விரதத்திற்கு ஜெய பார்வதி விரதம் என்று பெயர். அன்னையை நினைத்து வேண்டி விரதமிருந்து வழிபடும் ஒரு எளிய விரதமாகும். இந்த விரதம் மேற்கொள்வதற்கு சுமங்கலிப்பெண்கள் ஐவர் வேண்டும். சுமங்கலிப் பெண்கள் அனைவரும் கூடி விரதமிருக்கும் முந்தையநாள் ஆலயத்திற்கு சென்று அன்னை துர்க்கையும், லக்ஷ்மி தேவியையும் வணங்கி விட்டு இந்த விரதத்தில் பலன்கள் முழுவதையும் அவர்களுக்கு சமர்ப்பிப்பதாக உறுதி ஏற்க வேண்டும்.

ஒவ்வொருவரும் ஒரு தேங்காயை எடுத்துக் கொண்டு அதற்கு மஞ்சள், சந்தனம் இட்டு, வலக்கை மோதிர விரலால் குங்குமமிட்டு அன்னையின் பாதங்களில் வைத்து வணங்கி அந்தத் தேங்காயை வீட்டிற்கு எடுத்து வைத்துக் கொண்டு வந்து பூஜை அறையில் வைக்க வேண்டும். பின்னர் மறுநாள் காலையில் குளித்து விட்டு நல்ல பருத்தி உடையை உடுத்தி உணவேதும் அருந்தாமல் பூஜை அறையில் உள்ள தேங்காயை தொட்டு வணங்கி விளக்கேற்றி தூப தீபம் காட்டி விட்டு விரதத்தை துவங்கவேண்டும். விரதம் முடியும் வரை மௌன விரதம் மேற்கொண்டால் கூடுதல் சிறப்பு. -

  ஓம் ஜெய் துர்கா பத்ம நிவாஸினி! ஓம் ஜெய் லக்ஷ்மி பத்ம நிவாஸினி! இந்த மந்திரத்தை அன்றைய நாள் முழுவதும் உச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும். பின்னர் அவரவர் இல்லத்தில் தங்களுடைய அன்றாட பணிகளை மேற்கொள்ளலாம். சூரிய பகவான் மறையும் நேரத்தில் இந்த ஐந்து பெண்களும் கோவிலுக்கு சென்றோ அல்லது யாராவது ஒருவர் வீட்டிலோ பூஜை அறையில் சுற்றி உட்கார்ந்து அந்தத் தேங்காயை சேலையில் முடிந்து கொண்டு மடியில் கட்டிக் கொள்ள வேண்டும்.

நடுவில் ஐந்து முக விளக்கை வைத்து அதில் விளக்கெண்ணை ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். பின்னர் மும்முறை ஓம்! ஓம்! ஓம்! என்று கூறி மௌன விரதத்தை முடித்து விடலாம்.

 பின்னர் அனைவரும் தங்களுடைய தேங்காய்களை மற்றவர்களுக்கு கொடுத்து மாற்றிக்கொள்ள வேண்டும். இப்படி ஒவ்வொரு முறை மாற்றும் பொழுதும் மேற்கூறிய மந்திரத்தை 5 முறை உச்சரிக்க வேண்டும். ஒவ்வொருவரும் தலா ஐந்து முறைக்கு 25 முறை இந்த மந்திரத்தை உச்சரித்து முடித்தவுடன் தம்முடைய தேங்காயை மீண்டும் பெற்றுக்கொள்ளலாம். பின்னர் தேங்காய்களை உடைத்து தேங்காயை துருவி சர்க்கரை சேர்த்து பிரசாதமாக தானம் அளித்திட வேண்டும்.

 தாங்களும் அந்த பிரசாதத்தை சிறிது உட்கொண்டு உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும். அந்த தேங்காய் மூடிகளை துவரம் பருப்பினால் நிரப்பி ஏழை சுமங்கலி பெண்களுக்கு தானம் கொடுத்திட வேண்டும். பின்னர் துர்கா தேவி மற்றும் லக்ஷ்மி தேவியிடம் பிரார்த்தனை மேற்கொண்டு விரத பலன்களை சமர்ப்பிக்கிறோம் என்று கூறிவிட்டு மீண்டும் இந்த மந்திரத்தை ஒரு முறை உச்சரிக்க வேண்டும். இந்த மந்திரத்தின் சக்தி காற்றோடு காற்றாக கலந்து உருபெற்று நம் வேண்டுதல்களை நிறைவேற்றி வைப்பதாக ஐதீகம் உள்ளது. இதன் மூலம் கணவனை பிரிந்தவர்கள், குடும்பத்தைப் பிரிந்தவர்கள், தீய வழியில் சென்றவர்கள் மீண்டும் ஒன்று சேர்வதற்குரிய வரம் கிட்டும்.

சமஸ்கிருதமா தமிழா? வலதுகண்ணா இடதுகண்ணா?


முதலில் சைவ சமயம் என்று பேசுபவர்கள் வேதத்தை ஏற்க வேண்டும்.காரணம் சைவ நால்வர்கள் இதை வேதசைவம் என்கிறார்கள்.

'வேத வேள்வியை நிந்தனை செய்து உழல்' என்று சமண,பெளத்தரை சம்பந்தர் விமர்சிக்கிறார்.'வைதிகத்தின் வழி ஒழுகாத' 'மறை வழக்கம் இலாத மாபாவிகள்' என்றும் அவர்களை சொல்கிறார்.

சிவபெருமானை 'ஆரியன்' 'சாமவேதர்' 'வேதகீதர்' 'வேத வேதாந்தன்' 'வேதியன்' என்றெல்லாம் அப்பரும்,சம்பந்தரும் புகழ்கிறார்கள்.

வேதத்தை மறுப்பவன் முதலில் சைவனே அல்ல அவன் புறச்சமயத்தை சேர்ந்தவன்.வேத சம்பந்தம் உள்ளவன் சைவன் எப்படி ஆவான்? வேதியனாக,வேதமாக இருக்கும் சிவனை வணங்குபவனும்,வேதம் நான்கில் மெய்பொருளாகும் நமச்சிவாயத்தை சொல்வதாலும் அந்த சம்பந்தம் கிடைக்கிறது என்ற தத்துவத்தை சொல்கிறார்கள்.

வேதம் பசு,ஆகமம் பசுவின் பால்,நால்வர் தமிழ் அதில் பெருகும் நெய்,அந்த நெய்யின் சுவை மெய்கண்டார் செய்த சிவஞானபோதம் என்பதுதான் மரபு.சைவ சித்தாந்தத்தின் ஆதிப்பசு வேதம்தான்.எனவே வேத நிந்தனையும் சம்ஸ்கிருத வெறுப்பு என்பதும் சைவத்திற்கே எதிரானது.

மூவேந்தர்கள் சங்க காலத்திலேயே வேதநெறி தழைத்தோங்க ஆட்சி செய்தவர்கள்.'அருமறை' 'ஆறங்கம்' 'எழுதாக் கற்பு' 'அந்தணர் வேதம்' என்றெல்லாம் சங்க காலத்திலேயே தெளிவாக சொல்கிறார்கள்.பல்யாகசாலை முதுகுடுமி பெருவழுதி,கரிகாலசோழன் வைதீக வழி நடந்தவர்கள்.சோழன் பெருநற்கிள்ளி இராஜசூய வேள்வி நடத்தியவன்.ஐங்குறுநூறு படித்துப் பார்த்தால் சேரர்கள் எப்பேற்பட்ட வைதீக நெறி வழுவாத மன்னர்கள் என்பது புரியும்..

பரிபாடல் 'விரிநூல் அந்தணர்' 'புரிநூல் அந்தணர்' என்ற இரண்டு வகையான பிராமணர்களை குறிக்கிறது.இதில் விரிநூல் அந்தணர் ஆகமங்களை உணர்ந்த பூசகர்.வேதப்பொருளை விரித்து சொன்னது 'ஆகமம்'எனவே சிவாச்சாரியார் விரிநூல் அந்தணர் என்று பரிமேழலகர் உரை எழுதியுள்ளார் அதற்கு.

வைதீக சைவத்தை போற்றி பரப்பி சமண,பௌத்தத்தை வீழ்த்திய நால்வர் சோழர்களால் போற்றி புகழ்ந்து சிலை எடுப்பிக்கப்பட்டவர்கள்.எந்த இடத்திலும் தன் பாடல்களை வேதமென்றோ,மந்திரமென்றோ, அவற்றிற்குச் சமமென்றோ நால்வர் புகழவில்லை. ‘மந்திர வேதங்கள்’, ‘மந்திரத்தமறை’, ‘மந்திரமறை’, ‘மந்திர நான் மறை’, ‘மந்திர மாமறை’, என்று புகழ்ந்தது எல்லாமே வேதத்தைதான்.வேதங்களே மூலம்.அந்த மறைகள் நான்கும் ஆனவன் இறைவன் என்றே சொன்னார்கள்.

எனவே இதை மீறி தமிழில் அர்ச்சனை,குடமுழுக்கு என்பதெல்லாம் அபத்தமான ஆகம விரோதமான ஒன்று.தேவாரம் ஓதுவதற்கு எப்படி பிடாரர்களை நியமித்தார்களோ? அதே போல வேதம்,அஷ்டாத்தியாயம் சொல்லிக் கொடுக்கும் பள்ளிகளும்,வேத மீமாம்சக பள்ளிகளும் சோழ நாடெங்கும் அமைத்துக் கொடுத்தார்கள்.ஆரியம் பாட,தமிழ் பாட என இரண்டிற்கும் ஆட்களை நியமித்தார்கள்.

சம்ஸ்கிருதமும்,தமிழும் இரு கண்கள் என்பதுதான் பாரதத்தின் எல்லா மன்னர்களின் ஆட்சியும்.அதில் சோழர்கள் அதனை உச்சத்திற்கு எடுத்து சென்றவர்கள்.தங்கள் செப்பேடுகளை முதலில் சம்ஸ்கிருதத்திலும்,அடுத்து தமிழிலும் பொறித்தார்கள்.காரணம் இந்தியா முழுக்க பொது ஞானமொழி சம்ஸ்கிருதம் என்பதை நம் மன்னர்கள் ஏற்றார்கள்.அதை பிராமணர் மொழி என்று ஒதுக்குவது போல ஒரு அறிவீனம் வேறொன்று இல்லை.

தஞ்சை பெரியகோவிலில் ஒரு கல்வெட்டில் கூட தமிழில் குடமுழுக்கு செய்தார் ராஜராஜன் என்றெல்லாம் ஆதாரம் இல்லை.அப்படி ஒரு அபத்தத்தை சோழர்கள் செய்யவும் மாட்டார்கள்.அவர்கள் தீக்ஷை பெற்ற சைவ மாமணிகள்.ராஜராஜனின் குரு ஈசான சிவபண்டிதர் காஷ்மீரத்தை சேர்ந்த சைவர்.சோழர் குல குருக்கள் எல்லாமே காஷ்மீர்,ஆரியவர்த்தத்தை சேர்ந்தவர்கள்தான்.

தஞ்சை பெரிய கோவிலில் அதிக அதிகாரத்தை பெற்றவர்களாக அரச குடும்பத்தை தவிர்த்து கல்வெட்டு காட்டுவது..ராஜ குரு ஈசான சிவ பண்டிதர்.கோயிலின் தலைமைக்குருக்களாக இருந்த சைவ ஆச்சாரியார் பவனப்பிடாரன்.திருச்சுற்று மாளிகையைக் கட்டிய ராஜராஜனின் சேனாபதி,'கிருஷ்ணன் ராமன்' எனப்படும் மும்முடிச்சோழ பிரம்மராயன்.கோவிலை கட்டியெழுப்பிய தலைமை சிற்பி 'குஞ்சரமல்லன் ராஜராஜ பெருந்தச்சன்'.

பெரிய கோயிலின் நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்த ஸ்ரீகாரியம் 'பொய்கைநாடு கிழவன் ஆதித்தன் சூரியனான தென்னவன் மூவேந்த வேளாண்'.கற்களில் எழுத்து வெட்டுவித்த சாத்தன்குடி வெள்ளாளன் இரவி பாருளுடையான்.

இவர்களை தவிர்த்து சித்தர் கருவூரார் பெயரெல்லாம் ராஜராஜனின் குரு என்று எதிலும் குறிப்பிடப்படவில்லை சமகாலத்தில்.திருவிசைப்பாவில் கருவூரார் பாடியிருக்கிறார் அதைதாண்டி எந்த அடிப்படை தரவும் இல்லை.அந்த சந்நிதியும் மிக மிக பிற்பாடு எழுந்தது.

எனவே ஆகம சைவத்தை கடைபிடித்த சோழர்களை இழிவுபடுத்தும் விதமாக சைவசமய புறசமயிகள் எல்லாம் தமிழில் செய்,தெலுங்கில் செய் என்பதெல்லாம் சிவத்துரோகத்தையே சேரும்.

இன்று சோழர் ஆட்சி என்றால் இதற்கு மிகப்பெரிய தண்டனைதான் பரிசாக கிடைக்கும்.தான் வாழும் காலத்தில் திருவிசநல்லூரில் 'ஹிரண்யகர்ப்பம்' கொடுத்தவர் ராஜராஜன்.அஸ்வமேத யாகம் செய்தவன் இராதிராஜன் இவர்கள் சம்ஸ்கிருத வெறுப்பாளர் என்ற பொய்யை பரப்புவதெல்லாம் ஏற்கவே முடியாத பொய்.

நாத்திகத்தை நேரடியாக பரப்ப முடியாமல் சைவநிந்தனை செய்யும் புறசமயிகளை வைத்து ஆகமத்தை மீறி குடமுழுக்கு செய்யச்சொல்வது இந்த தேசத்தை அழிவில் தள்ள சொல்லும் யோசனை ஆகும்.

"பழைய வைதீகசைவம் பரக்கவே"

#வேதசைவம் #சோழர்

 

Copyright @ 2018 வேத ஜோதிடம்.