ஜோதிடம் எனும் தெய்வீக சாஸ்திரம்


widgeo.net

ஞாயிறு, 31 மே, 2020

வாஸ்து வித்யை PDF

வாஸ்து என்பது ஒரு துண்டு நிலத்தை அறுபத்திநான்கு பகுதிகளாக பிரித்து எந்தெந்த பகுதியில் என்னென்ன அறைகள் வர வேண்டும் என்பதை சொல்வதாகும். இது சம்பந்தப்பட்ட மனையடி சாஸ்திரம் என்று ஒன்று உண்டு. அது ஒரு கட்டிடத்தின் நீள அகலத்தையும்   வைத்து அடிப்படையாக வைத்து  பதினாறு பொருத்தங்கள் வழியாக பல விஷயங்களை சொல்கிறது. அது மட்டுமல்லாமல் மண்ணுக்குள் மறைந்து மக்கி போகாமல் இருக்கும் மனிதன் மற்றும் விலங்குகளின் எலும்பு துண்டுகளின் தன்மைகளையும் ஆராய்ந்து பேசுகிறது.

இன்றைய காலத்தில்  நிறைய மனைகள் விற்பனைக்கு வருகிறது சிலர் அதை பெற்று வீடு எழுப்புகிறார்கள் சிலர் அதை சில  காலம் கழித்து விற்பனை செய்கிறார்கள், சிலர் விற்பனை செய்ய முடியாமலும் சிலர் வீடு எழுப்ப முடியாமலும் அரைகுறையாக விட்டு விடுகின்றனர். மனையை வாங்கும் பொழுது நன்றாக கவனித்து வாங்காமல் நம்முடைய பொருளையும், பணத்தையும் இழந்து நாம் சிரமப்பட கூடாது என்று சில தகவல்களை நூல்களில் பதித்து உள்ளார்கள் முன்னோர்கள். முதலில் அடிப்படை தகவல் தெரிந்து கொள்ள வேண்டும். மத்ஸ்ய புராணம் வாஸ்துவை பற்றி விவரிக்கிறது, வாஸ்து என்பது  ஒரு ஆண் தெய்வத்தின் பெயர் ஆகும்.
 
புராண கதை 
சிவபெருமான் அந்தகாசுரனுடன் போர் புரிந்து வெற்றி அடைந்தார். அப்போது சிவனின் நெற்றியில் உள்ள வியர்வைகள் ஒன்று  சேர்ந்து பூமியில் விழுந்தன. அதில் இருந்து ஒரு பூதம் பயங்கர தோற்றத்துடன் வெளி வந்தது. அந்த பூதத்துக்கு மிகவும் பசியாக  இருந்ததால் அங்கே போரில் கீழே விழுந்த அனைத்தையும் உண்டது. அப்போதும் அந்த பூதத்துக்கு பசி தீரவில்லை. அதனால்,  அந்த பூதம் சிவனை நோக்கி தவம் செய்ய ஆரம்பித்தது. தவத்தை மெச்சிய சிவபெருமான் உனக்கு என்ன வேண்டும் என்றார்  வழக்கம்போல். அதற்கு இந்த பூமி முழுவதையும் நான் எனது கண்காணிப்பின் வைத்து இருக்கவேண்டும் என்று கேட்டது. அழிக்கும் சக்தியும் எனக்கு வேண்டும் என்று கேட்டு பெற்றது.
 
இதை கவனித்த பிரம்மா மற்றும் தேவர்கள் அனைவரும் சேர்ந்து அந்த பூதத்தை குப்புற தள்ளிவிட்டனர். குப்புற விழுந்தவுடன், அனைவரும் அந்த பூதத்தின் மேலே உட்கார்ந்துகொண்டு அதை எழுந்திருக்கவிடாமல் செய்தனர். அந்த பூதம் எனக்கு பசிக்கிறது என்றது. அதற்க்கு பிரம்மா சொன்னார். பூமியில் பிராமணர்கள் செய்யும் வைவஸ்வத ஹோமத்தில் கொடுக்கும் பொருட்களை நீ உண்டுகொள். மேலும், பூமியில் வீடு கட்டுபவர்கள், உனக்கு ஹோமம் செய்வார்கள், வாஸ்து பூஜை செய்வார்கள். அதை நீ சாப்பிட்டுக்கொள் என்றனர். பிரம்மாவும் மற்றவர்களும் அவனுக்கு வாஸ்து புருஷன் என பெயரிட்டனர். இதை போல மனிதனின் கால் அடியை வைத்து  தான் அன்று மனை கணிதம் சொல்லப்பட்டது. அப்படிப்பட்ட வாஸ்து சாஸ்திர புத்தகத்தினை PDF  வடிவில் கொடுத்துள்ளேன், அனைவரும் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.


வெள்ளி, 29 மே, 2020

பூர்வபராசர்யம் PDF

நீங்கள் பாரம்பரிய வேத ஜோதிடம் மூலமாக பலன் கூறுகிறீர்கள் என்றால் எந்த மூலநூல் அடிப்படையில் பலன் கணிக்கிறீர்கள் என்பதை உங்களுக்கு நீங்களே சொல்லிகொள்ளுங்கள். ஏனெனில் பாரம்பரிய ஜோதிடத்தில் ஜோதிடரொருவர் ஏதாவது ஒரு / சில மூலநூல்களை அடிப்படையாக கொண்டே பலன் கணிக்க வேண்டும். அனைத்து மூலநூல்களையும் மாசற கற்றிருத்தல் அவசியம் . அதிலொன்றை உங்கள் பலனிற்கான ஆதாரமாக கொள்ளுங்கள். இதனை உங்கள் குரு உங்களிற்கு வழிகாட்டுவார். ஒருவேளை நீங்கள் சுயமாக கற்றீர்கள் என்றால் பலதீபிகை அல்லது பிருகத்ஜாதகம் அல்லது பூர்வபராச்சர்யம் அல்லது பாவார்த்த ரத்னாகரம் என்பவற்றில் ஒன்றை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள். புலிப்பானி ஜோதிடம், ஜம்பு மகரிஷி வாக்கியம் போன்றவற்றை போல அல்லாது மேலுள்ள மூலநூல்கள் முழுமையான ஜோதிட சாஸ்திர விதிகளை கொண்டுள்ளன. உத்திர காலாம்ருதம் ராகு கேது தொடர்பான பலனை கணிக்க மிகச்சிறந்த நூல், ஆயினும் இதில் காணப்படும் விபரீதராஜயோகம் தென்னாட்டவர்க்கு பொருந்துவதாக இல்லை. (உத்திரம் என்றால் வடக்கு என்று பொருள்படும்.) பராசரஹோரா அது எந்தமூல நூலை பயன்படுத்தும் பாரம்பரிய ஜோதிடர்க்கும் அடிப்படையானது. இவ்வளவும் ஏன் கூறுகிறேன் என்றால் நீங்கள் கூறிய விதத்தினை பார்க்கும்போது அடிப்படை இல்லாமல் பலன் கூறுவது போல உள்ளது. இதனால்தானோ கடினம் என்று பாரம்பரிய ஜோதிடத்தினை தவிர்த்து இலகுவான ஜோதிட முறைகளினுள் மக்கள் செல்கின்றனர்! பாரம்பரிய வேத ஜோதிடம் கடினமானதுதான் ஆனால் தேர்ச்சி பெற்று விட்டால் வேறு எந்தஜோதிட முறையாலும் கூறமுடியாத பலனை பாரம்பரிய ஜோதிடத்தில் கூறலாம்... கஷ்டப்படாது பலன் கிடைக்காது நண்பர்களே... அந்தவகையில் இன்று நான் உங்களுக்காக பூர்வபராச்சர்யம் நூலினை மின்னூல் வடிவில் (PDF) தந்துள்ளேன். அனைவரும் Download செய்து மாசற கற்று பயன்பெற வேண்டுகிறேன். அனைத்து ஜோதிட முறைகளிற்கும் தாய்போன்றமைந்த பாரம்பரிய ஜோதிடத்திற்கென ஒரு மரியாதை உள்ளது. அதனை நீங்கள் காத்திட வேண்டும்.

திங்கள், 25 மே, 2020

சினேந்திரமாலை PDF

குருவடி சரணம்!

வணக்கம் நண்பர்களே,
1989ம் ஆண்டு வெளிவந்த சினேந்திரமாலை (ஜினேந்திரமாலை) எனும் இவ் நூலானது தற்போது பதிப்பகம் வாயிலாக வெளிவருவதில்லை. கடினமான தேடலிற்கு பிறகு இன்று இந்நூல் என் கைகளில் புத்தகமாக தவழ்கின்றது. இது ஜாமக்கோள் ஆரூட பலாபலன்களை கொண்டிருக்கும் சாஸ்திர நூலாகும். இதனை அடிப்படையாக வைத்தே தற்போது ஜாமக்கோள் விற்பன்னர்கள் ஆரூடம் பார்க்கின்றனர். இதிலிருந்த கருத்துக்களையே தங்களின் பெயரில் பதிந்துகொள்கின்றனர். இதிலுள்ள கருத்துக்கள் ஒவ்வொன்றும் மிகவும் அருமையாக உள்ளது. இந்த சாஸ்திர நூலானது ஜாமக்கோள் பயின்ற அல்லது ஜாமக்கோள் ஆரூடத்தில் ஈடுபாடு கொண்ட ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டிய பொக்கிஷமாகும். எனினும் பலரால் இதனை புத்தகமாக தற்போது பெற முடியாது, எனவே pdf வடிவில் லிங்க் கீழே கொடுத்துள்ளேன். அனைவரும் சென்று Download செய்து கொள்ளுங்கள். 


ஞாயிறு, 17 மே, 2020

தண்டனையை அனுபவித்த ஆமை!


#தெரியாமல்_கூட_இனி_இப்படிப்பட்ட_தவறை_யாரும்_செய்யாதீங்க!
[பதிவை முழுமையாக மனதார படியுங்கள், அடியில் நல்லதொரு தரிசனம் காத்திருக்கின்றது.]

நாம் அறியாமல் செய்யும், சின்னச் சின்னத் தவறுகள் கூட, பிற உயிரினங்களுக்கு எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை இந்த சம்பவத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம். யாரோ ஒருவர் அறியாமல் செய்த பாவச் செயலுக்கான தண்டனையை, இந்த ஆமை 19 வருடங்களாக அனுபவத்து வருகிறது. இந்த சம்பவத்தைப் பற்றிய விரிவான செய்தியை பின்வருமாறு காணலாம்.

மனிதர்களைப் பொறுத்தவரை தனக்கு தேவையில்லாத பொருட்களை, வேண்டாம் என்று வெளியில் தூக்கி வீசி விடுகின்றோம். ஆனால் நாம் வீசக்கூடிய அந்த பொருளினால் என்ன பாதிப்பு வரும் என்பதை நாம் என்றுமே சிந்தித்துப் பார்ப்பதில்லை. நான்கு வருடங்களுக்கு முன்பாக கடலிலிருந்து ஒரு வித்தியாசமான ஆமை ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த ஆமையானது, கண்டுபிடிக்கப்பட்ட போது அந்த ஆமைக்கு வயது 19. பார்ப்பதற்கு அந்த ஆமை மிகவும் வித்தியாசமாக இருந்துள்ளது. காரணம், அந்த ஆமையானது ஒரு பிளாஸ்டிக் வளையத்தினுள் சிக்கி இருந்துள்ளது. அதன் பின்பு ஆராய்ச்சியாளர்கள் அந்த பிளாஸ்டிக் வளையத்தை, அந்த ஆமையின் உடம்பிலிருந்து துண்டித்து எடுத்து விட்டனர்.

ஆனால் இதில் வருத்தப்படக்கூடிய விஷயம் என்னவென்றால், அந்த ஆமை சிறுவயதில் இருந்த போதே அந்த வளையம் அதனுடைய உடம்பில் மாட்டியுள்ளது. தனது உடம்பில் அந்த வளையமானது மாட்டிக்கொண்டது தெரிந்ததும், அதிலிருந்து வெளியே வர முயற்சியும் செய்துள்ளது. ஆனால் முடியவில்லை. காலப்போக்கில் ஆமை வளர வளர அந்த வளையம் ஆமையின் உடலில் இறுக்கம் கொடுத்துள்ளது. உயிர் வாழ்வதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கும் அந்த ஆமை, என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள்! 19 வருடங்களாக எவ்வளவு இடர்பாடுகளை கடந்து அது தன் வாழ்வை வாழ்ந்ததோ?

யாரோ ஒருவர் கடலில் அந்த மோதிரத்தை வீசியதால் தான் இப்படிப்பட்ட சம்பவம் நடந்திருக்க வேண்டும் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து. இந்த சம்பவமானது நீண்ட நாட்களுக்கு முன்பு நடந்திருந்தாலும், இதில் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம், மிகப் பெரியது என்பதை எல்லோரும் உணரவேண்டும் என்பதற்காக தான் இந்த பதிவு. வாயில்லா ஜீவன்களுக்கு நம்மால் எந்த ஒரு நல்லதையும் செய்ய முடியாமல் போனாலும் பரவாயில்லை. கெடுதலாவது செய்யாமல் இருப்போமே. நீர்நிலைகளில் அல்லது நிலத்தில் பிளாஸ்டிக் பொருட்களை போடுவது அவற்றின் உயிர்களிற்கு பாரிய அச்சுறுத்தலாக அமைகிறது. நன்றாக வேதனைப்பட்டு துடிதுடித்து இறுதியில் இறக்கின்றன.. நாம் தெரியாமல் செய்தாலும் இந்த பெரும் பாவம் செய்தவரையே சேரும்.

இன்று வளர்ந்து வரும் பல தொழில்நுட்பங்கள், இயற்கையை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகிறது என்று சொன்னால் நிச்சயம் அது பொய்யாகாது. எந்த ஒரு முன்னேற்றமாக இருந்தாலும், நாம் செய்யும் எந்த ஒரு செயல்பாடாக இருந்தாலும், இயற்கையையும், மற்ற உயிரினத்தையும் பாதிக்காத அளவில் இருந்தால்தான், அது ஆரோக்கியமான முன்னேற்றமாக இருக்கும். ஆனால், இந்த உலகமானது முன்னேறிச் செல்ல செல்ல, இயற்கை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டே வருகிறது.

இயற்கைக்கு எதிராக நாம் செய்யும் ஒவ்வொரு செயல்பாடும், திரும்பவும் நம்மை தான் பாதிக்கப் போகின்றது என்ற உண்மையை நாம் என்று தான் புரிந்து கொள்ளப் போகின்றோம். யாரோ ஒருவர், செய்த தவறில் இந்த ஆமை சிக்கியுள்ளது என்பது, இன்று நாம் எல்லோருக்கும் தெரிந்திருக்கலாம். ஆனால், நாம் தினந்தோறும் இயற்கைக்கு எதிராக செய்யும் எத்தனையோ தவறுகளில், எத்தனையோ உயிரினங்கள் அழிகின்றது என்பதை நினைத்து பார்க்கும் போது தான் வருத்தமே அதிகமாகிறது.இந்த பூமி மீது மனிதர்களாகிய எமக்கு எவ்வளவு உரிமை இருக்கின்றதோ ஏனைய சகல உயிர்களுக்கும் அதே உரிமை இருக்கின்றது. உண்மையை கூற வேண்டுமென்றால் பூமியை நாசமாகும் எம்மைவிட அவைகளிற்கே  அதிக உரிமை உள்ளது. நாம் தெரியாமல் அல்லது கவனகுறைவாக செய்யும் மிகச்சசிறு சிறு தவறுகள் கூட ஏனைய சிறிய  உயிரினங்களுக்கு பாரிய தீமையை\ நரகமாக அமைந்து விடுகின்றது. கண்மூடி ஒருநிமிடம் சிந்தித்து பாருங்கள் அந்த ஆமை 19  வருடங்களாக பட்ட வேதனைகளை... அன்பே சிவம், சிவமே ஜெயம் ஜெயம்.

செவ்வாய், 12 மே, 2020

தீர்க்கமுடியாத பிரச்சினைகளை தீர்க்க 2 ஏலக்காய் போதும்!

தீர்க்கமுடியாத பிரச்சினையையும் தீர்த்து வைக்க 2 ஏலக்காய் போதும்! தினம்தோறும் பூஜை அறையில் இப்படி செய்துபாருங்கள்!

ஒரு மனிதனுக்கு சாதாரணமான பிரச்சனைகள் இருந்தாலே வாழ்க்கையில் நிம்மதி இருக்காது. அதிலும் தீர்க்க முடியாத நிரந்தரமான பிரச்சனைகள் இருந்துக் கொண்டே இருந்தால், சொல்லவே வேண்டாம்! வீட்டில் சதாகாலமும் சண்டை சச்சரவுக்கும், பிரச்சினைக்கும், குறைவே இருக்காது. குறிப்பாக ஆண்களுக்கு கடன் தொல்லை இருந்தால், அந்த வீட்டில் சந்தோஷம் கட்டாயம் இருக்காது என்பது தான் உண்மை. இப்படி இருக்க, இதற்கு என்னதான் தீர்வு? எப்படியாவது கஷ்டப்பட்டு நமக்கு இருக்கும் பிரச்சினைகளை எல்லாம் தீர்த்து விட்டு, கடன் இல்லாமல் நிம்மதியாக வாழ்ந்தாலே போதும். கடன் வாங்கி ஆடம்பர வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை, என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

‘இந்தப் பிரச்சனைக்கு தீரவே தீராது!’ என்று உதறி விட்ட, பிரச்சனைகளை கூட சுலபமான முறையில் தீர்த்துக் கொள்ள, ஆன்மிகத்தில் பல பரிகாரங்கள் உள்ளன. சில பேரு சொல்லி நாம் கேள்விப்பட்டிருப்போம். ‘நீண்ட நாட்களாக எனக்கு இந்த பிரச்சனை இருந்தது. ஆனால், இந்த கோவிலுக்கு சென்று வந்த பிறகு பிரச்சினைகள் எல்லாம் எப்படி காணாமல் போனது என்று தெரியவில்லை?’ மன நிம்மதி அடைந்து விட்டதாக கூறுவார்கள். அந்த வரிசையில் இன்று, இந்த பதிவின் மூலம் ஒரு சுலபமான பரிகாரத்தை பற்றி தான் பார்க்கப் போகின்றோம்.


உங்களுக்கும் வாழ்க்கையில் தீராத கஷ்டம் இருக்கிறதா? தினம் தோறும் விநாயகர் வழிபாடு மிகவும் சிறந்தது. ஏனென்றால், விக்னங்களை தீர்ப்பவர் தான் ‘விக்ன விநாயகர்’. உங்கள் வீட்டில் தினந்தோறும் இரண்டு ஏலக்காய்களை, விநாயகப் பெருமானுக்கு நைவேத்தியமாக வைத்து, தீபம் ஏற்றி மனதார வழிபட்டு வந்தால், எப்படிப்பட்ட பிரச்சினையும், வந்த வழி தெரியாமல் சென்றுவிடும். இது மிக மிக சுலபமான பரிகாரம். ‘இது செஞ்சா பிரச்சினை எல்லாம் போய் விடுமா!’ என்ற சந்தேகத்தோடு மட்டும் வழிபாடு செய்யாதீர்கள். நம்பிக்கையோடு செய்து பாருங்கள்! உங்களை விட்டு அந்தப் பிரச்சனை எப்படித்தான் சென்றது என்றே தெரியாது. ஆனால் பிரச்சனையிலிருந்து நீங்கள் விடுபட்டு விடுவீர்கள் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

தீர்க்க முடியாத கடன் பிரச்சனை இருந்தால், செவ்வாய்க்கிழமை அன்று பின்வரும் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். இதுவும் விநாயகரை நினைத்து செய்ய வேண்டிய பரிகாரம் தான். திங்கட்கிழமையே உங்களது வீட்டையும், பூஜை அறையையும் சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். கட்டாயம் அசைவம் சாப்பிடக்கூடாது. உங்கள் வீட்டில் தோரண கணபதி படம் இருந்தால் இன்னும் சிறப்பு. செலவோடு செலவாக சின்ன தோரண கணபதி படத்தையும் வாங்கி பூஜை அறையில் வைத்து விடுங்கள்.

தோரண கணபதியின் முன்பாக ஒரு தீபம் ஏற்றி வைத்துவிட்டு, அந்த விநாயகருக்கு ஒரு கைப்பிடி அளவு பச்சரிசியும் நாட்டு சர்க்கரையை கலந்து, இரண்டு ஏலக்காய்களை நசுக்கி போட்டு, கலந்த கலவையை நிவேதனமாகப் படைக்க வேண்டும். வாரத்தில் ஒரு முறை செவ்வாய்க்கிழமை அன்று மட்டும் இந்த முறையில் வழிபாடு நடத்தினால் போதும். தொடர்ந்து 11 வாரங்கள் செய்து வர, உங்கள் கடன் பிரச்சனைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். விநாயகருக்கு நெய்வேதியமாக வைத்த அந்த கலவையை பசுமாட்டிற்கோ அல்லது எறும்புகளுக்கோ, அல்லது காக்கை குருவிகளுக்கோ உணவாக அளித்து விடலாம்.

இதுமட்டுமல்லாமல் தினம் தோறும் வீட்டில் இறைவனுக்கு ஏதாவது ஒரு பொருளை நைவேத்தியமாக படைத்து, அதன் பின்பு தீபம் ஏற்றும் பழக்கம் உள்ளவர்கள், குறிப்பாக பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, முந்திரிப் பருப்பு, உலர் திராட்சை, டைமண்ட் கற்கண்டு, பேரிச்சம்பழம் இந்த பொருட்களை பயன்படுத்துவது மிகவும் நல்லது. இந்த பொருட்களை எல்லாம் இறைவனுக்கு நைவேத்தியமாகப் படைத்தால், நமக்கு வாழ்க்கையின் நிறைவான செல்வவளம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

நமக்கு இருக்கும் கஷ்டத்தில், விலை உயர்ந்த பொருட்களை இறைவனுக்கு நைவேத்தியமாகப் படைக்க வேண்டுமா? என்றெல்லாம் சிந்திக்காதீர்கள்! இவை அனைத்தையும் ஒட்டு மொத்தமாக சேர்த்து ஒரே நாளில் இறைவனுக்கு நைவேதியமாக வைக்கப் போவது இல்லை. எந்த நைவேத்தியமாக இருந்தாலும், அதில் இரண்டு மட்டும் வைத்தாலே போதும். பாதம் பருப்பாக இருந்தால், அதில் இரண்டு மட்டும் நைவேத்தியமாக இறைவனுக்கு படையுங்கள். இறைவனுக்கு படைத்து விட்டு அதை உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு சாப்பிட கொடுத்து விடலாம்.


வீட்டில் இருக்கும் இறைவனை பட்டினி போடக்கூடாது. வெறும் சாதத்தில் ஒரு சொட்டு நெய் விட்டு, அந்த இறைவனுக்காக நெய்வேதியமாக படைத்தாலும், அது தேவாமிருதம் தான். இருப்பினும் உங்களால் முடிந்தால், மேற்குறிப்பிட்டுள்ள பொருட்களை இறைவனுக்கு நைவேத்தியமாகப் படைக்கலாம் என்றுதான் சொல்லப்பட்டுள்ளது. அதற்காக இப்படிப் பட்ட விலை உயர்ந்த பொருட்களை நெய்வேதியமாக படைப்பதால் மட்டும் தான், அந்த இறைவனின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்றெல்லாம் அர்த்தம் கிடையாது. இறைவனுக்காக நம்மால் எதுவுமே செய்ய முடியாத சூழ்நிலையில், நல்ல மனதோடு, உண்மையான பக்தியோடு வேண்டிக் கொள்ளப்படும் எந்த வேண்டுதலும்  நிராகரிக்க படாது, என்பதை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். உலகத்தில் உள்ள ஜீவராசிகள் அனைத்துமே, இறைவனின் பார்வைக்கு ஒன்றுதான் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

 

Copyright @ 2018 வேத ஜோதிடம்.