ஜோதிடம் எனும் தெய்வீக சாஸ்திரம்


widgeo.net

சனி, 31 மார்ச், 2018

செல்வவளம் பெருகி நிலைக்க


1. இலவங்கப்பட்டையை பொடி செய்து சிறிது எடுத்து ஒரு பச்சை நிற துணியில் மடித்து பச்சை நூலால் கட்டி மணிபர்சிலோ அல்லது சட்டைப்பையிலோ எப்பொழுதும் வைத்துக்கொள்ளவும்.
2. பசுமையான வெற்றிலை ஒன்றை எந்த நல்ல காரியங்கள், பணசம்பந்தமான காரியங்கள் போன்றவற்றிக்கு செல்லும் போதும் உடன் வைத்துக்கொள்ளவும்.
3. நிலக்கரி தனாகர்ஷண ஷக்தி உடையது அதனை ஒரு சிறு துண்டு எப்போதும் உடன் வைத்துக்கொள்ளவும்.
4. ரூபாய்த்தாளை எப்பொழுதும் சுருளாக கட்டியே பணப்பெட்டியில் வைத்துக்கொள்ள வேண்டும். ( சுழற்சி சக்தி உண்டாகி செல்வமானது பெருகி தங்கும் ).
5. தினமும் ஏதேனும் ஒரு நாணயத்தை இரண்டு கைகளிலும் பிடித்தபடி உங்கள் தேவையினை மனமார வேண்டி - அந்த காசுகளை சேமித்து வந்து மாதக்கடைசியில் சேமித்த பணத்தில் வாழைப்பழம் வாங்கி பாசுமாட்டிற்கு தானமாக வழங்கவும்.
6. எந்த விசயத்திற்காக பணத்தினை செலவிட்டாலும், செலவிடும் பணத்தினை கையில் வைத்து நெஞ்சிற்கு நேராக பிடித்து பிறர் அறியாதவாறு "ஓம் ஸ்ரீம் நமஹ இலட்சமாக திரும்பிவா வசி வசி" என்று ஐந்து முறை கூறி செலவிடவும்.
7. முக்கியமான காரியங்கள், பணசம்பந்தமான விஷயங்களுக்கு செல்லும்போது எலுமிச்சம் பழம் ஒன்றை "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் சக்தியே அருள்வாய் போற்றி ஓம்" என ஆறு முறை உச்சரித்து உடன் வைத்துக்கொள்ளவும்.
8. மாதச்சம்பளமாகட்டும், சுயத்தொழில், வியாபாரம் செய்பவர்கள் யாராகினும் வருவாயில் முதல் செலவாக உப்பு, மல்லிகைபூ இரண்டையும் வாங்குவதே முதல் செலவாக இருக்க வேண்டும்.
( பணவருவாய் பலவகையிலும் பெருகும் ).
9.பணப்பெட்டி தென்மேற்கு மூலையில் இருக்கவேண்டும், அதில் எப்போதும் மல்லிகைபூ போட்டு வைக்கவேண்டும்.
10. பணப்பெட்டியில் பெரிய தொகைகளை வைக்கும்போது ஆறு வெற்றிலைகள், முன்று பாக்குகள் சேர்த்து வைக்கவும்.
11. மகாலக்ஷ்மி படத்திற்கு தினமும் காலை, மாலை நெய், தேங்காய் எண்ணை, நல்லெண்ணெய் ஏதாவதொன்றில் இரண்டு திரி போட்டு விளக்கு ஏற்றி வீடு, கடை முழுவதும் சாம்பிராணி புகை காட்டிவருவது பண விஷயத்தில் மிகசிறந்த வசியமாகும்.
12. குழந்தைகள் வளரும்போது விழும் முதல் பல்லை பால் பற்கள் என்கிறோம், அவ்வாறான பால் பற்களில் ஏதேனும் ஒன்று பையிலோ பணப்பெட்டியிலோ வைத்தால் செல்வம் பெருகும்.
13. வடகிழக்கு மூலையில் குடிக்கும் நீரைவைத்து அதில் எலுமிச்சை ஒன்றை போட்டு வைக்கவும், தொடர்ந்து இரண்டு மாதங்கள் செய்து வந்தால் பற்றாக்குறை நீங்கி செல்வம் கொழிக்கும்.
14. கல் உப்பை வீட்டில் வியாபார ஸ்தலங்களில் எல்லா மூலைகளிலும் சிறிது போட்டு வைத்தால் தீய சக்திகள் ஓடும், பணம் பெருகும்.
15. பணப்பெட்டி சந்தனப்பெட்டியாக இருந்தால் அதிர்ஷ்டம் பெருகும். வசதி இல்லையேல் பச்சை நிற பட்டுத்துணியில் பணப்பை செய்து அதனுள் சிறிய சந்தனக்கட்டை ஒன்றை அதனுள் போட்டு வைக்கவும், சந்தனம் இருப்பதை வளர்க்கும் சக்தி உடையது.
16. வருமானத்தில் ஐந்து சதவீதத்தை தானதிற்கென போட்டு வையுங்கள், மாதம் ஒருநாள் அதை தானமாக கொடுங்கள், கொடுப்பது பெருகும்.
17. முக்கியகாரியமாக தொழில் விஷயமாக வெளியே செல்லும்போது அருகம்புல் நுனி ஒன்றையோ, திருநீற்றுப்பச்சிலை ஒன்றையோ பறித்து பையில் வைத்துச்செல்ல சென்ற காரியம் நிச்சயம் வெற்றியே.
18. சாம்பிராணியும், மருதாணி விதையும், வெண்கடுகும் கலந்து வீட்டில், வியாபார ஸ்தலத்தில் தூபமிட தீய சக்திகள், கண்திருஷ்டி, தோஷங்கள் நீங்கி தொழில் முன்னேற்றம் அடையும், மகாலக்ஷ்மி நம்மிடத்தில் நடமாடுவாள்

மைத்ர முகூர்த்தம்

கடன் தீர்க்க உகந்த ரகசிய நாட்கள் "மைத்ர முகூர்த்தம்"
எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் ,
எளிமையாக தீர்த்து வைக்கும் கால நேரமாகும்...!!
மிகவும் விசேஷமான இந்த முகூர்த்தம்,
மைத்ர முகூர்த்த நாட்களில்,
நீங்கள் பெருந்தொகையாக தரவேண்டிய கடன் தொகையில் ,
கொஞ்சம் இந்த குறிப்பிட்ட நேரத்தில் சம்பந்தப்பட்டவருக்கு
திருப்பி தரவேண்டும்....!!
அவ்வளவு தான்.
எவ்வளவு பெரும் தொகையானாலும் ,
சிறுக சிறுக அடைபட்டுவிடும்....!!
கடன் விரைவில் தீர்க்கும் மைத்ர முகூர்த்தம் 2018
4.4.18 புதன் இரவு 8.40 முதல் 10.40
15.4.2018 ஞாயிறு காலை 6.06 முதல் 8.06 வரை;
1.5.2018 செவ்வாய்க்கிழமை மாலை 6.58 முதல் இரவு 8.58 வரை
14.5.2018 திங்கட்கிழமை அதிகாலை 3.54 முதல் 5.54 வரை
29.5.2018 செவ்வாய்க்கிழமை மாலை 6.50 முதல் இரவு 8.50 வரை
10.6.2018 ஞாயிறு அதிகாலை 4.10 முதல் 6.10 வரை
25.6.2018 திங்கட்கிழமை மாலை 3.51 முதல் 5.51 வரை
7.7.2018 சனி நள்ளிரவு 1.57 முதல் 3.57 வரை
22.7.2018 ஞாயிறு மாலை 3.13 முதல் 4 வரை
23.7.2018 திங்கட்கிழமை மதியம் 2 முதல் மாலை 4 வரை
3.8.2018 வெள்ளி இரவு 10.56 முதல் 12.56 வரை
19.8.2018 ஞாயிறு மதியம் 12.08 முதல் 2.08 வரை
30.8.2018 வியாழன் இரவு 8.56 முதல் 10.56 வரை
15.9.2018 சனி காலை 10.08 முதல் 12.08 வரை
22.9.2018 சனி காலை 8.20 முதல் 10.20 வரை;
மதியம் 2.20 முதல் மாலை 4.20 வரை;
இரவு 8.20 முதல் 10.20 வரை;
நள்ளிரவு 2.20 முதல் 4.20 வரை;
27.9.2018 வியாழன் இரவு 8.40 முதல் 10.40 வரை;
6.10.2018 சனி காலை 6.55 முதல் 8.55 வரை;
மதியம் 12.55 முதல் 2.55 வரை;
மாலை 6.55 முதல் 8.55 வரை;
இரவு 12.55 முதல் நள்ளிரவு 2.55 வரை;
13.10.2018 சனி காலை 8.20 முதல் 10.20 வரை;
24.10.2018 புதன் மாலை 6.28 முதல் 8.28 வரை;
9.11.2018 வெள்ளி காலை 6.36 முதல் 8.36 வரை;
20.11.2018 செவ்வாய் மாலை 5.10 முதல் 6.19 வரை;
21.11.2018 சனி மாலை 4.23 முதல் 6.23 வரை;
6.12.2018 வியாழன் காலை 6.40 முதல் 8.40 வரை;
18.12.2018 செவ்வாய் மதியம் 2.30 முதல் மால 4.30 வரை;
இந்த மைத்ரமுகூர்த்த நேரத்தில் வாங்கிய கடனில் சிறு தொகையை கட்ட தொடங்கினாலே..போதும்...!!
விரைவில் கடனை தீர்க்கும் வளம் பெற்று விடுவீர்கள்...!!
இந்த பதிவை சேமித்து வையுங்கள்...!!
உங்க உறவினர், நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க...!!
பணம் கொடுத்து உதவ முடியலைன்னாலும்,
நல்ல விசயத்தை சொல்லிக்கொடுப்போம்...!!

 

Copyright @ 2018 வேத ஜோதிடம்.