ஜோதிடம் எனும் தெய்வீக சாஸ்திரம்


widgeo.net

வெள்ளி, 18 நவம்பர், 2016

அக்னிஹோத்ரமும் ஆத்மகாரகனும்...

எனது வாசகர்களிற்கும்; எனது blog இனை பின்தொடர்பவர்களிற்கும் எனது இந்நேர வணக்கம். இந்த பதிவானது ஜோதிடம் , ஆன்மிகம், மருத்துவம், பொதுவாழ்க்கை நெறிமுறை என்பவற்றை உள்ளடக்கியதாக அமைகிறது...

எனது வழமையான பதிவுகள் போல அல்லாது இது ஒரு கூறும் பதிவாக அமைகிறது... எழுதுவது பெரிதல்ல... அதனை படிப்பதும் பெரிதல்ல... அதன்படி வாழ்க்கையில் நடப்பதே பெரிய விடயம்.. எனவே இந்த பதிவு சிறிதென்றாலும் இதனை கருத்தூன்றி படியுங்கள்... பல கோணங்களில் சிந்தியுங்கள்... அதன்படி எமது இந்து சமய சாஸ்திரங்களை மதிக்கும் உத்தமசீலர்களாக வாழுங்கள். எமது சாஸ்திரங்களில் கூறப்பட்டவாறு நடவுங்கள்... அதுவே எனக்கு போதும்... அதுவே எனது வெற்றி என்று கூறிக்கொண்டு பதிவினுள் நகர்வோம்...

எமது இந்து சமய சாஸ்திரங்களில் சொல்லப்படாத விடயங்கள் என்று எதுவுமில்லை. சூரிய ஒளியும் காற்றும் நிறைந்த இடத்தில் லஷ்மிவாசம் செய்வாள் என்பது ஐதீகம். அதுவே உண்மையும் கூட. இங்கு நான் விஞ்ஞானத்தினை காரணம்காட்டி உண்மை என கூறவிரும்பவில்லை. அனுபவத்தினை காரணம் காட்டி உண்மை என கூறுகிறேன்.. இதுபற்றி மிக சுருக்கமான விளக்கத்தினை பார்ப்போம்...

பிரபஞ்ச சக்தியினை பெற சிறிது நேரம் செய்ய வேண்டிய சிறிய இலகுவான வேள்வியே 'அக்னிஹோத்ரம்' எனும் சாஸ்திர சொல்லினால் குறிகாட்டப்படுகின்றது. அக்னிஹோத்ரா சூழ்நிலை என்பது நமது வீட்டில் நம்மை சுற்றி உள்ள வெற்று வெளியில் உள்ள அதிர்வலைகளைக் கட்டுப்படுத்தி தூய்மை ஆக்கும். அது நம்முடைய நரம்பு மண்டலங்களை ஒழுங்குபடுத்தும். நம் வீட்டில் வைத்துள்ள செடிகொடிகளும் கூட அக்னிஹோத்ரா சூழ்நிலையில் நன்கு வளரும். நமது வீட்டில் அமைதி நிலைக்கும். மனம் மகிழ்ச்சியாக இருக்கும். தினமும் நான் செய்து முடித்த அக்னிஹோத்ரா சாம்பல் மிகவும் புனிதமானது. தெய்வீகத்தன்மை நிறைந்தது. நெற்றியில் நீறு போல் இட்டுக் கொள்ள அஷ்டஐஸ்வர்யமும் கிட்டும். வெற்றி நமைத் தொடர்ந்து வரும். கேட்டது கிடைக்கும். நினைத்தது நடக்கும். ஆன்மீக எழுச்சி உண்டாகும். அதன் சாம்பலை செடிகளுக்கு உரமாக இட்டால் செடிகளில் அபரித வளர்ச்சியைக் காணலாம். இது கண்கூடு. இது ஒரு புனித சுய அனுபவமும் கூட. சொன்னாலும் படித்தாலும் கேட்டாலும் கூடப் புரியாதது. செய்து அனுபவித்துப் பார்த்தால் மட்டுமே உள்ளம் உயர்நிலை அடையும். இது நிச்சயம். அக்னிஹோத்ரா புதிதல்ல. இது பற்றி நான்கு வேதங்களிலும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே கூறப்பட்டு உள்ளது. இந்த சொல்லினை இன்றைய மனிதர்களிடம் கேட்டால் "அப்படினா என்ன?" என்றுதான் கேட்பார்கள். ஒரு உதாரணம் வேண்டும் என்றால் எமது பாட்டன், பூட்டன் காலத்தில் அவர்கள் செய்த சமையல் முறையே ஒரு மிகச்சிறப்பான அக்னிஹோத்ரம் ஆக இருந்தது. எமது முன்னோர்கள் சமையலையில் நேரடி சூரிய ஒளி விழுமாறு அமைத்திருந்தனர். சூரிய ஒளி என்பதைவிட; ஆத்தமாகாரகனின் கதிர்கள் நாம் உண்ணும் உணவில் விழுவதால்; எமது உடலிற்கு ஏற்கக்கூடிய எளிய ஆனால் சக்திவாய்ந்த உணவாக அவை அமைந்திருந்தன. அத்துடன் அவை நுண்ணங்கி தொற்றற்ற உணவுவகைகளாகவும் இயற்கையான பாரம்பரிய உணவுகளாகவும் அமைந்திருந்தன... மண் சட்டிகளில் உணவு சமைத்தனர். செப்பு பாத்திரங்களில் நீர் அருந்தினர். ஜோதிடப்படி புதனின் கெடுபலன்கள் குறைக்கவும் மருத்துவப்படி சீரான இரத்த ஓட்டம், தாது பொருட்களை இலகுவாகவும் பெற்றனர். அந்த நீரும் தூய்மையானதாக இருந்தது. உணவு ஆரோக்கியமானதாக இருந்தது. அவர்கள் உணவு சமைத்த பின் முதலாவதாக அடுப்பிற்கும் பின்னர் கோமாதாவிற்கும் படைப்பர். பிறகே ஏனையவர்கள் உண்ணுவர். சாஸ்திரங்களை மதித்தனர். அதன்படி நடந்தனர். அவர்களின் இந்த தவவாழ்வே அவர்களையும் அவர்கள் சந்ததியினையும் தழைக்க செய்தது. அனால் இந்தக்காலத்தில் "அறிவியல், விஞ்ஞானம், நாவிற்கு சுவை, fast food எனும் துரித உணவுகள், நேரமின்மை, இறைவழிபாடு அற்றநிலை, அலுமினிய/ஈய பாத்திரத்தில் உணவு சமைத்தல், முறையற்ற/ சமையலறை என ஏராளமான விடயங்கள்" எம்மை நரகத்தை நோக்கி தள்ளுகின்றன என்றால் அது மிகையாகாது... ஆகவே பொதுநலமாக சிந்தியுங்கள்... செயற்படுங்கள்... ஓம் நமசிவாய... வாழ்க வளமுடன்...

ஆதங்கத்தோடும் அறிவுரைகளோடும் இவன்; பாரம்பரிய தெய்வீக ஜோதிடர் ஹரிராம்தேஜஸ்.. hariram1by9@gmail.com

சனி, 12 நவம்பர், 2016

மருத்துவ ஜோதிடம்

மனிதர்களின் உடல்நலம் சித்தமருத்துவப்படி வாதம், பித்தம், கபம் என்ற மூன்றின் நிலையைப் பொறுத்தே அமைகிறது. இதில் ஒன்று தன் அளவிற்கு அதிகமானாலும், குறைந்தாலும் நோய் வந்துவிடும். இதனை ஜோதிட ரீதியில் அணுகுவது இந்த பதிவின் நோக்கமாகும்...
கப நாடி:- உடல் கூற்றில் உறுப்பு மூலத்தையும், அதாவது டிஷ்யூவைக் குறிக்கும். அவற்றில் இருக்கும் திரவத்தை சரிசமமாக இருக்கும் நிலையை கட்டுப்படுத்தும். பொதுவாக அனைத்து டிஷ்யூக்களையும் குறிக்கும்.
கபம் அதிகமானால் கப தோஷம் ஏற்படும். தடித்த குட்டையான உருவமைப்புடையவராகவும் இருப்பார்கள். சுரப்பிகள் அதிகமான சுரக்கும் நிலையும், சளித் தொல்லையும் ஏற்படும். நீர் அதிகமாக வெளியேறும் நிலையும் வீக்கமும் ஏற்படும்.
வாத நாடி:- தொண்டையின் செயல்பாடு; நுரையீரல்; இரத்த ஓட்டத்தின் நிலை, மூட்டுகளின் செயல்பாடு, நரம்புகளின் தன்மை, இயக்கம் ; செரிமானம் இவற்றிற்கும் பொறுப்பாகும்.
வாதம் அதிகமானால் வாத தோஷம் ஏற்பட்டால் டிஷ்யூ மெதுவாக பாதிக்கப்படும். எந்தவியாதியானாலும் அவை நீடித்து நிலைத்திருக்கும் நிலை ஏற்படும். உடலின் பகுதிக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தில் குறைபாடும் ஏற்படும். இதனால் உடலின் பகுதி இயங்காத நிலையும் படிப்படியாக உருவாகும். உடல் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படும்
பித்த நாடி:- உணவில் ஏற்படும் மாறுதலுக்கு அதாவது ஜீரணமாகும் நிலைக்கு காரணமாகும். உடலுக்கு சக்தியை கிரகித்துக்கொடுக்கும் செயலை செய்து வரும். பித்தம் அதிகமானால் பித்த தோஷம் ஏற்படும். செயல்பாட்டில் கட்டுப்பாடில்லாத நிலையை ஏற்படுத்தும். உடலில் வீக்கமும், இரத்த கசிவும் ஏற்படும்.

கிரகதத்துவ நாடி
---------------------------
சூரியன் நெருப்பு பித்தம்
சந்திரன் நீர் வாதம், கபம்
செவ்வாய் நெருப்பு பித்தம்
புதன் நிலம் வாதம், பித்தம், கபம்
வியாழன் ஆகாயம் கபம்
சுக்கிரன் நீர் வாதம், கபம்
சனி காற்று வாதம்
இராகு காற்று வாதம்
கேது நெருப்பு பித்தம்

இராசிகள் குறிப்பிடும் உடலின் பாகங்கள்.
----------------------------------------------------------------
1 மேஷம் .. தலை மற்றும் மூளையைக் குறிக்கும்.
2. ரிஷபம் .. முகம், பேச்சு, உள்நாக்கு, தொண்டைப் பகுதியைக் குறிக்கும்.
3. மிதுனம் .. கழுத்து, தோள் பட்டை, கைகள்.
4 கடகம் .. மார்புப் பகுதி, பெண்களுக்கு மார்பகம்.
5 சிம்மம் .. இருதயம், நாபி மலை நரம்புகளின் தொகுப்பு.
6 கன்னி .. வயிற்றின் மேல் பகுதி முதல் தொப்புள் வரை.
7. துலாம்... அடிவயிற்றுப் பகுதி முதல் இடுப்பு வரை.
8 விருச்சிகம் .. வெளிப்புற பிறப்புறுப்புக்கள்.
9 தனுசு .. தொடைப் பகுதி.
10 மகரம் .. முழங்கால் மூட்டுப் பகுதி.
11 கும்பம் .. கால் பகுதி, அதன் தொடர்புடைய பகுதி
12 மீனம் .. பாதம் அதன் தொடர்புடைய பகுதி.


நெருப்பு இராசிகளான மேஷம், சிம்மம், தனுசு இவை மூன்றும் பித்தத்தைக் குறிக்கும். நில ராசிகளான ரிஷபம், கன்னி, மகரம் இம்முன்றும் வாதத்தை குறிக்கும். காற்று ராசிகளான மிதுனம், துலாம், கும்பம் இவை மூன்றும் கலந்த நாடி குறிக்கும். நீர் ராசிகளான கடகம், விருச்சிகம், மீனம் இவை மூன்றும் கபத்தைக் குறிக்கும்.
நெருப்பு இராசி .. மேஷம் சிம்மம் தனுசு; கிரகம்: சூரியன் செவ்வாய், கேது
நில ராசி .. ரிஷபம், கன்னி, மகரம்; கிரகம்: சனி, ராகு, சந்திரன், சுக்கிரன்
காற்று இராசி .. மிதுனம், துலாம், கும்பம் ; கிரகம்: புதன்
நீர் ராசி .. கடகம், விருச்சிகம், மீனம்; கிரகம்: சந்திரன், சுக்கிரன், குரு
மேலே குறிப்பிட்ட இராசிகளில் மேற்குறிப்பிட்ட கிரஹங்கள் இருந்தாலும், பார்த்தாலும் லக்கனத்திற்கு 6, 8, 12ஆம் பாவ அதிபதிகள் சம்பந்தப்பட்டாலும் அப்பகுதிகளைக் குறிப்பிடும் உறுப்புகளில் உடலின் பாகத்தில் வியாதிகள் ஏற்படும். உதாரணமாக, மேஷ ராசி தலைப்பகுதியைக் குறிக்கும். இதில் செவ்வாய், சூரியன் இருந்தாலும் பார்த்தாலும் பித்தத்தினால் பாதிப்பிற்க்கு உள்ளாவர்.

நவகிரகங்களும் உடல் தொடர்பும்..
------------------------------------------------------
சூரியன் - இதயம், எலும்பு, கண், பல், முதுகுதண்டு.
சந்திரன் - உடல் சக்தி, மனது, இரத்த ஓட்டம். 
செய்வாய் - இரத்த வீரியம், தசைகள், எலும்பு மஜ்ஜைகள், எலும்பு மூட்டுகள், பல், தைராய்டு.
புதன் - நரம்பு மண்டலம், புத்தி, தோல், தசைநார்கள்.
குரு - மூளை, மண்ணீரல், உயிரணுக்கள், உயிர்வாயு செயற்திறன், கொழுப்பு.
சுக்கிரன் - கர்ப்பபை, கணையம், சிறுநீரகம், இனவிருத்தி ஹார்மோன்கள். 
சனி - தோல், நரம்பு, கழிவு பொருட்கள், கால் சம்பந்தப்பட்டவை, மலட்டுத்தன்மை.
ராகு - நுரையீரல், மலட்டுத்தன்மை, நோயை விகாரபடுத்துவது.
கேது - இரைப்பையில் உள்ள அமிலம், மலட்டுத்தன்மை, நோயை மறைப்பது.


பிற்கால நூலான பலதீபிகையில் கிரகங்களுக்கான நோய்களைக் கீழ்க்கண்டவாறு காண முடிகிறது.

சூரியன்  - பித்தம், உஷ்ணம், சுரம், தேக எரிச்சல், சயம், இருதய ரோகம், கண்ணோய், தோல் எலும்புகளில் வரும் நோய்கள், அக்னி, ஆயுதம், விஷம் முதலியவற்றால் ஆபத்து
சந்திரன் - தூக்கமின்மை, சளி, குளிர்காய்ச்சல், இரத்தத்தில் ஏற்படும் வியாதிகள், மனநோய்
செவ்வாய் - தாகம், ரத்தரோகம், கோபம், பித்தம், குஷ்டம், தலைவலி
புதன் - காரணம் தெரியாத பயம், கண்வலி, கழுத்து, மூக்கில் வரும் நோய்கள், தோல் நோய்கள்
குரு - மயக்கம், கபம், காது நோய்
சுக்கிரன் - வாதம், சிறுநீரக நோய்கள், பால்வினை நோய்கள்

சனி - வாதம், கால், வயிறு இவைகளில் நோய், மாரடைப்பு, மயக்கம்

சூரியன் வலுவாக அமைந்த ஜாதகத்தினர் கட்டுமஸ்தான உடலமைப்பையும் நல்ல நோய் எதிர்ப்பு சக்தியையும் கொண்டிருப்பர். உடலின் கட்டமைப்புக்கு காரணகர்த்தா எனில் அது சூரியனுக்கும் லக்னத்திற்கும் உள்ள தொடர்புர்தான்.
ஜாதகத்தில் ஆறாமிடம் வியாதியை குறிப்பிடுகிறது. நோயின் வேதனையை எட்டாம் பாவமும் மருத்துவமனை செல்வதை பனிரெண்டாம் பாவமும் நோயிலிருந்து விடுபடுவதை ஐந்தாம் பாவமும் குறிப்பிடுகிறது.
கிரகங்களில் செவ்வாய் அறுவை சிகிச்சையை குறிப்பிடுகிறது. ஆனால் சனியே பிணி காரகன் என அழைக்கப்படுகிறது. 
நோய் பற்றிய ஜாதகரின் கேள்விக்கு பிரசன்னம் போடும்போது செவ்வாய், சூரியன், குரு மூவரும் பலமாய் இருந்தால் சாதகமான பலன் உண்டு.

 

Copyright @ 2018 வேத ஜோதிடம்.