ஜோதிடம் எனும் தெய்வீக சாஸ்திரம்


widgeo.net

திங்கள், 2 ஜனவரி, 2023

இந்திய தற்காப்பு கலைகள்

இந்திய தற்காப்பு கலைகளில் சிலம்பம் மற்றும் களரி ( வீச்சுக்களரி ) முறைகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. பகவான் பரசுராமர் மற்றும் மாமுனிவர் அகத்தியரால் அருளப்பட்ட இந்த சிவகலைகள் தற்போது உலகம் முழுவதும் பிரசித்தி பெற்று மக்களிடம் பரவியுள்ளன.



1. சிலம்பம் உருவான வரலாறு :

மக்கள் தம்மை சிங்கம், புலி போன்ற விலங்குகளிடம் இருந்து காத்துக்கொள்ள சிவமுனிவரான அகத்தியரால் உருவாக்கப்பட்ட முறையே சிலம்பம் எனப்படும் கலையாக வளர்ந்துள்ளது.

தமது கைகளில் எப்போதும் இருக்கக் கூடிய சிறிய ஆயுதங்களான கம்பு (தடி), சிறு கத்தி, கோடரி போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி விலங்குகளிடம் இருந்து தற்காத்துக்கொள்ள இந்தக் கலையைப் பயன்படுதினர்.

தமிழர்கள் ஆயுதம் ஏந்திப் போராட ஆரம்பித்த காலத்தில் முதலில் எடுத்தது கம்பு எனப்படும் ஆயுதமே ஆகும். இதுவே பின்னர் சிலம்புக் கலையாக வளர்ச்சி பெற்றது.

மனிதர்கள் சண்டை செய்ய ஈட்டி, கத்தி, வேல், வாள், கம்பு போன்ற பலவிதமான ஆயுதங்களைப் பயன்படுத்தினர். அவற்றுள் மிகவும் பழமை வாய்ந்த ஆயுதம் கம்பு எனப்படும் 'சிலம்பு' ஆகும்.

சிலம்பச் சுவடிகளில் குறிப்பிடப்படும் தொன்மையான சிலம்பச் சுவடு மற்றும் அடி வரிசைகள், தமிழக மூவேந்தர்களின் ஆட்சி முடிவுற்று, தமிழகம் அன்னியர்களுக்கு அடிமைப்பட்ட பின் கால மாற்றத்தால் அதன் பெயர்களும் ஆடும் முறைகளும் சிறு மாற்றமடைந்தன.


சிலம்பாட்ட வகைகள் :


· துடுக்காண்டம்

· குறவஞ்சி

· மறக்காணம்

· அலங்காரச் சிலம்பம்

· போர்ச் சிலம்பம்

· பனையேறி மல்லு

· நாகதாளி,

· நாகசீறல்,

· கள்ளன்கம்பு


2. களரி வரலாறு :

களரிப்பயட்டு எனப்படும் சொல்லானது பழந்தமிழ் வார்த்தைகளான களரி + பயிற்று ஆகிய இரு சொற்களின் சேர்க்கையாகும்.

களரி என்பது களத்தைக்(field) குறிக்கும், பயிற்று என்பது பயிற்சி(practice)யைக் குறிக்கும். பிற்காலத்தில் இது திரிந்து களரிப்பயட்டு என மாற்றம் கண்டது.

களரி எனும் கலையானது அப்போதைய சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்களின் ஆட்சிப்பிரதேசங்கள் அதாவது தற்போதைய தமிழ்நாடு, கேரளா ஆகிய இடங்களில் மிகவும் சரளமாக பழக்கப்பட்டது.

சங்கப்பாடல்களான அகநானுறு மற்றும் புறநானூறு பாடல்களில் களரி குறித்து பாடப்பட்டுள்ளதுவே இதற்கான சான்றாகும்.

சங்ககால மன்னர்களின் படைவீரர்களுக்கு களரி பயிற்சி தரப்பட்டுள்ளது. கி.பி முதலாம் நூற்றாண்டு தொடக்கமாக மூவேந்தர்களிடையே ஏற்பட்ட பல போர்களின் நிமித்தமாக களரியின் தேவை அதிகரித்து களரி பயிற்சியில் பல நுணுக்கமான விடயங்கள் உட்சேர்க்கப்பட்டன.

பண்டைக்காலத்தில் களரிக்கான போதனைக்கூடமாக விளங்கியவை சாலைகள். இச் சாலைகளுக்கு தலைமை ஏற்றவர்கள் பட்டதிரி எனப்பட்டனர். மாணவர்கள் சட்டர்கள் எனப்பட்டனர்.

இந்த சாலைகளுக்கு அரசர்கள் நிலங்களை தானமாக வழங்கினர். அதற்கு பிரதிபலனாக சாலைகள் திறமையான சட்டர்களை பயிற்றுவித்து மன்னருக்கு வழங்கவேண்டும்.

கி.பி 7 ம் நூற்றாண்டில் இருந்து 9 ம் நூற்றாண்டு வரையில் பாண்டியர்களின் தாக்குதல்களால் சேர மன்னர்களான சேரமான் பெருமாள்களின் ஆதிக்கம் கேரளாவில் குறைந்த வண்ணம் வந்தது. இத்தருணத்தில் கேரளாவில் சிற்றரசர்களாக இருந்த நாடுவாழிகள் தனிப்படைகளை பணிக்கு அமர்த்திக்கொண்டனர்.

இந்த தனிப்படைகளுக்கான போர்ப்பயிற்சியாக களரிப்பயட்டு போதிக்கப்பட்டது. சிற்றரசர்கள் மிகுதியாக இருந்தபடியால் சாலைகளுக்கு கிடைத்த சாலாபோகங்கள் அதிகரித்து வந்தன.

ஒரு சாலை இன்னொரு சாலையை விட சிறப்பாக செயலாற்றவேண்டி பல புதிய தாக்குதல் முறைகளை கண்டறிந்தனர். இதுவே களரிப்பயட்டின் பொற்காலம் என நோக்கப்படுகிறது.

களரிப்பயட்டு நான்கு பகுதிகளாக பிரிக்கப்படும். அவற்றில் முதல் பயிற்சி முறை மெய்ப்பயட்டு எனப்படும். இதுவும் ஒரு வகை தயாராகும் (warm up) பயிற்சி தான். ஒரு சந்தத்தில் அமைந்த பல சிறிய உடலசைவு முறைகளை ஒன்றாக்கி மெய்ப்பயட்டு உருவாக்கப்பட்டுள்ளது. தினசரி பயிற்சிகளுக்கு முன்பாக இந்த மெய்ப்பயட்டு பயிற்சி கட்டாயம் மேற்கொள்ளப்படும். இது உடலின் தசைகளுக்கு இளக்கத்தை தருவதால் நீண்ட நேரம் பயிற்சியில் ஈடுபட முடியும்.

இரண்டாவது நிலை கோல்தாரி பயட்டு எனப்படும். இங்கு மரத்தால் ஆன ஆயுதங்கள் மட்டுமே பயன்படுத்தப்படும். சரீரவடி எனப்படும் ஆளுயர மூங்கில் கம்பும், செறுவடி எனப்படும் சிறிய தடியும் முக்கியமான கருவிகளாக இருக்கும். பண்டைய தமிழ் கலையான சிலம்பாட்டதிற்கு இணையாக இதனை வரையறுக்கலாம். மேலும் இந்நிலையில் வாய்ப்பயட்டு எனப்படும் சொற்கட்டளை பயிற்சியும் வழங்கப்படும். இதில் கெட்டுகாரி எனப்படும் கட்டளை தொகுப்புகள் எவ்வாறு கூறப்படும் என்பது கற்பிக்கப்படும்.

மூன்றாவது நிலை அங்கத்தாரி பயட்டு/ஆயுத்தப்பயட்டு எனப்படும். வெட்டும் முனைகளை கொண்ட கூரிய உலோக ஆயுதங்களை பயன்படுத்தும் பயிற்சிகள் இதன்போது வழங்கப்படும். ஈட்டி, வாலும் கேடயமும், வேல், சுருள் கத்தியான உறுமி, கதை, கட்டாரி, கொம்பு வடிவிலான ஓட்டம், உலோக பூமரேங்கான வளரி மற்றும் குந்தம் என ஆபத்தான பல ஆயுதங்களை பயன்படுத்தி பயிற்சிகள் வழங்கப்படும்.

இறுதியாக வெறுங்கை எனும் ஆயுதம் அல்லாத சண்டைப்பயிற்சி வழங்கப்படும். வர்ம தாக்குதல் முதலிய விசேட தாக்குதல் முறைகள் இதில் பயிற்றுவிக்கப்படும். தாக்குதல் முறைகளின் போது ஒருவர் நிற்கும் நிலை (posture) வடிவு எனப்படும். இந்த வடிவு முறைகள், இயற்கையில் விலங்குகள் நிற்கும் முறையைக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளன.

சிம்ஹ(சிங்க) வடிவு, கஜ(யானை) வடிவு, அசுவ(குதிரை) வடிவு, சர்ப்ப(பாம்பு) வடிவு, மயூர(மயில்) வடிவு என பல நிற்றல் நிலைகள் உண்டு.


வடக்கன் - தெற்கன் : களரி கலையைப் பொறுத்தமட்டில் அவற்றின் பிரத்யோக முறைகளைக் கொண்டு இரு வகையாகப் பிரிக்கலாம். அவை,

    1. வடக்கத்திய முறை களரி

    2. தெற்கத்திய முறை களரி


வடக்கத்திய முறை களரி :

வடக்கத்தியமுறை களரி எல்லாம் வல்ல அந்த பரமசிவனின் சீடனான பரசுராமர் அருளிய களரி முறை. ஆயுதப்பயட்டு இம்முறையில் முதன்மை பெறுகிறது.

வடக்கத்திய முறையில் பயிற்சி பெறுபவர்கள் வாள்பயட்டிலும், உறுமி எனப்படும் சுருள்வாள் வீசுதலிலும் அதிகம் திறன் பெறுவார்கள்.

போர்வீரர்களாக பயிற்சி பெறுவோருக்கு வடக்கன் முறையே போதிக்கப்பட்டது. மலபார் உள்ளிட்ட வட கேரளாவில் இது பிரசித்தமானது.


தெற்கத்திய முறை களரி :

தெற்கத்திய முறையானது எல்லாம் வல்ல அந்த பரமசிவனின் அன்பு பெற்ற முனிவரான அகத்தியரால் உருவாக்கப்பட்டது.

இவரே சிலம்பத்தையும், வர்மத்தையும் உலகிற்கு தந்தார்.

தெற்கத்திய முறையில் வெறுங்கை அல்லது அங்கைப்பயட்டு எனப்படும் ஆயுதமில்லாத தாக்குதல்கள் இங்கு முதன்மையானது.

படுவர்மம், தொடுவர்மம், நோக்குவர்மம், தட்டுவர்மம், நுனிவர்மம் மெய்தீண்டா வர்மம் முதலிய வர்மதாக்குதல்கள் தெற்கத்திய முறையின் சிறப்பு.

தெற்கத்தியமுறை போர்க்குரியதாக இல்லாது ஒரு தற்காப்பு கலையாக காணப்படுகிறது. மேலும் வர்மம் தாக்குதல் முறையாக மட்டுமில்லாது சிகிச்சை முறையாகவும் உள்ளது.


சிலம்பம் மற்றும் களரி முறைகளில் தேர்ச்சிபெற்ற தென்னிந்தியாவைச் சேர்ந்த சைவ மன்னனான போதிதர்மன் சீனாவுக்குச் சென்று Shaolin Kungfu அடித்தளத்தை அமைத்தார். சீனாவில் புத்தமதம் நிலவியதால் தம்மையும் அவர்களுடன் இணைத்து புத்த மதத்தினை ஏற்றார்க்கொண்டார்
எனக்கூறப்படுகிறது. பிரசித்தமான குங்பூ முறைகளாக Animal Styles: Dragon, the Snake, the Tiger, the Leopard and the Crane, Wing Chun, Tai Chi என்பன அடங்குகின்றன. சிவசிவ


திங்கள், 5 ஏப்ரல், 2021

எந்த கடை.. நல்ல கடை..?

 


ஜாலியா படிங்க... சிந்தியுங்க (பதிப்பு எண் 2.1)

அவர் புதிதாக குடிவந்த பக்கத்து வீட்டுக்காரர். காலையில் வாக்கிங் போய்விட்டு வந்தவனை வழி மறித்து..

"சார், குட் மார்னிங்..வீடு காலி பண்ணிட்டு வந்தபோதே பழைய மளிகை சாமான்களையும் காலி பண்ணிட்டு வந்துட்டோம். இந்த ஏரியா புதுசு.. பக்கத்துல கடை எங்கே இருக்குனு தெரியலை.."

"சொல்றேன்.. இந்த தெரு இருக்கில்லே.. இது முனையிலே ஒரு கடை இருக்கு..பேரே தெரு முனை கடை தான்.. நாங்க சுருக்கமாக தெமுகன்னு சொல்லுவோம்.."

"நல்ல கடையா சார்... நம்பி வாங்கலாமா..?"

"சரக்கெல்லாம் பழசா இருக்கும்..ஏகப்பட்ட கலப்படமும் இருக்கும்..ஆனா கவர்ச்சிகரமா விளம்பரங்கள் இருக்கும்..இப்போ புதுசா ஒரு பீகாரி பையனை கூட வாசல்ல உக்கார வெச்சு போற வர்றவங்களை உள்ளே இழுக்க பாக்கறாங்களாம் .. இதுபோக பக்கத்துல இருக்கிற சாமி சிலையை திருடி வீட்டுக்குள்ள வைச்சு இவங்க குடும்பம் மட்டும் கும்பிட்டுகிறங்கலாம், அடுத்தவங்க என்க சாமிசிலைனு கேட்பாங்கனு சாமின்னு ஒன்னும் இல்லை பகுத்தறிவு, பன்னாடை அறிவுனு பேசிட்டு திரிவாங்க, அடிமட்ட கடைப்பசங்க ஓசியில ஊரூரா ஏதும் கிடைக்குதான்னு அலைவாங்க, யாரும் தரமாட்டேன்னு சொல்லிட்டா அடிக்கவும் தயங்கமாட்டாங்க, காட்டுமிராண்டி பயலுக "

"கடை முதலாளிட்ட சொல்லலாமே?"

"அவங்க இவனுங்களை மிஞ்சின திருட்டு பசங்க, குடும்பமா சேர்ந்து ஊர் சொத்தை ஆட்டைய போட்டு தின்னுட்டு இருக்காங்க"

"ஐயையோ.. என்ன இப்படி சொல்றீங்க.. வேற கடை எதுவும் இல்லையா?"

"ஏன் இல்லாம.. அதுக்கு பக்கத்துலேயே இன்னொரு கடை இருக்கு..அதுக்கு பேரு அடுத்த தெரு முனை கடை.. அடுத்த தெருவோட முக்குல இருக்கிறதால இந்த பேரு.. நாங்க அதெமுகன்னு சொல்லுவோம்.."

"இங்கே எப்படி சார், சரக்கெல்லாம் சுத்தமா இருக்குமா..?"

"சரக்கெல்லாம் இதுலேயும் ஏறக்குறைய தெமுக மாதிரி தான் இருக்கும்.. அங்கிருந்து பிரிஞ்சு வந்து நடத்தற கடை தானே..? ஆனா தெமுக விட இங்க எவ்வளவோ பரவாயில்ல.. "

"ஏன் சார் பிரிஞ்சு வந்தாங்க..?"

"அது பெரிய கதை சார்.. அண்ணாசாமின்னு ஒரு பெரியவர் ஆரம்பிச்ச கடை அது.. அவர் போய் சேர்ந்ததும் காளிங்கர்ன்னு கடைல வேலை செஞ்சவர் கடையை பிடிச்சுக்கிட்டார்.. இப்ப அவர் பிள்ளை ஸ்லோவின் தான் பார்த்துக்கறார்.. இலங்கையில் பிறந்த ஒரு தங்க மனிதர் M.G.ராமநாதன்னு ஒரு நண்பர் உதவியோட தான் கடை காளிங்கர் கைக்கு வந்தது.. கணக்கு வழக்குல காளிங்கர்ன்னு கள்ளத்தனம் பண்றதால அவங்களுக்குள்ள சண்டை.. அதனால ராமநாதன் பிரிஞ்சு வந்து அதெமுக கடை ஆரம்பிச்சுட்டார்.."

"ஸ்லோவின்னா..? மெதுவா ஜெயிக்கிறவர் போலிருக்கு.. அதிருக்கட்டும் இதை தவிர வேற கடை எதுவும் இல்லையா..?"

"இருக்கு..காளிங்கர் கடையிலே எடுபிடியா இருந்த தம்பு சாமி கடையை ஆட்டையை போட பார்த்தான்.. கல்லால கை வெச்சுட்டான்னு காளிங்கர் விரட்டி அடிச்சுட்டார்.. தசான்னு பேரை சுருக்கிட்டு ராமநாதன் மாதிரி தனியா கடை போடறேன்னு போனாரு.. நாக்கு தள்ளி போயி இப்போ காளிங்கர் கடை சரக்கை வாங்கி..ரோட்டோரமா கூறு போட்டு சின்ன அளவுல வியாபாரம்.."

"வேற..?"

"சைமன் பாண்டின்னு ஒரு பய ரோட்டுல கிடைக்கிற 'புளி'யம்பழத்தை மட்டும் ஒரு பெட்டிக்கடைல அப்பத்தாவை உக்கார வெச்சு வித்துக்கிட்டிருக்கான். அவன் கடைப்பக்கம் வந்துட்டு வாங்கலேன்னா கெட்ட வார்த்தையிலேயே ஏசுவான்.. "

"ஐயோ...."

"இப்போ புதுசா மேக்கப் முனுசாமி ஒரு கடையை திறந்திருக்கார். அதுல என்ன சரக்கு இருக்குன்னு யாருக்கும் தெரியாது.. ஏதானும் கேட்டா நரை தளர்ந்து வழக்கொழிந்து வெற்றுபதேசம் ஊருக்கு மொழிந்து வழி மறந்து மாய சூழலில் கானல் நெருப்பில் கவிப்பெரும் காப்பியம் அதுவே தாளிக்க பெருங்காயம்னு ஆரம்பிச்சார்னா சிண்டை பிச்சுக்கிட்டு ஓடி வந்துடுவோம்.."

"சைமனே தேவலாம் போலிருக்கே.. ஏசுறதோட விட்டுடுவான்.. வேற ஏதாவது..?"

"வடக்கு தெருவில அப்பா பிள்ளை தாஸ் & சன்ஸ்ன்னு ஒரு கடை வெச்சிருக்காங்க.. அவங்களும் இந்த ரெண்டு கடை சரக்கை தான் மாத்தி மாத்தி வாங்கி விப்பாங்க..தனி கடை போட்டு பார்த்தாங்க எடுபடலை.. வடக்குல நாலஞ்சு வீட்டுல மட்டும் வாங்குவாங்க.. மத்த யாரும் அவங்க கடைக்கு வர்றதில்லை.."

"சுத்தமான பொருள் எங்கேயும் கிடைக்காதா?"

"ஒரு கடை இருக்கு.. தாமரை ஸ்டோர்ஸ்னு வடநாட்டு கடை பிரான்ச் ஒண்ணு ஆரம்பிச்சாங்க.. நல்ல தரமான பொருள் இருக்கும்.. ஆனா அங்கே பொருள் வாங்கினா பைத்தியம் பிடிச்சுடும்னு புரளி கிளப்பி அந்த கடை பக்கம் யாரும் போகாம பார்த்துகிறாங்க.. இப்போ அவங்களும் அதெமுக கடை கூட பார்ட்னர்ஷிப்ல ஓடிக்கிட்டிருக்காங்க.."

"சரி..இப்போ அவசரத்துக்கு சாமான் வேணும்.. தெரு முனை கடை தானே பக்கமா இருக்கு..பொண்ணை அனுப்பி வாங்கிக்கறேன்..."

"முக்கியமான விஷயத்தை சொல்லலியே.. அதெமுக கடை சரக்கு தான் மட்டம்..ஆனா போனா பத்திரமா வீடு திரும்பிடலாம்.. தெமுக கடைக்கு போனா வளையலோ வாட்ச்சோ சமயத்துல பொண்ணே காணாம போக வாய்ப்புண்டு.. அப்புறம் உங்க இஷ்டம்"

என் பணி முடிந்தது..

நீங்க எந்த கடைக்கு போகணும்ன்னு முடிவு பண்ணிட்டீங்களா?.. இன்னிக்கு ஆறாம் தேதி நாம் அனைவரும் கண்டிப்பாக நமக்கான கடையினை தெரிவு செய்யும் நாள். நம் இன உணர்ச்சினை தவறாக தூண்டி, பித்தலாட்டம் பண்ணும் கடையினை தவிர்ப்போம்!

வியாழன், 1 அக்டோபர், 2020

பாரம்பரிய ஜோதிட பதிவுகள் செய்வோரின் கவனத்திற்கு !!!

பாரம்பரிய ஜோதிட பதிவுகள் செய்வோர் உங்கள் பாரம்பரிய ஜோதிட பதிவுகளுக்கு மூலநூல் ஆதாரம் கொடுத்து பதிவு செய்யுங்கள். உதாரணமாக உங்கள் இந்த ஜோதிட கருத்து எந்த ஜோதிட மூலநூலின் தகவல் என்று... ஜோதிடத்தினை வகுத்தவர்களால் எமக்காக எழுதப்பட்ட ஜோதிட மூலநூல்களிற்கும் தற்போதைய 20ம் மற்றும் 21ம் நூற்றாண்டில் வியாபார நோக்கிலும் புகழ்பெறும் நோக்கிலும் எழுதப்பட்ட ஜோதிட நூல்களையும் வேறுபடுத்தி அறியுங்கள். ஜோதிட புத்தகங்கள் லட்சசக்கணக்கில் கடைகளில் இருக்கும். ஜோதிட மூலநூல்கள் வையகத்தில் சொற்பமே உள்ளன. மூல நூல்கள் என்பன காலத்திற்கு அப்பாற்பட்டு ஜோதிட ரிஷிகளால், முனிவர்களால் அருளப்பட்ட நூல்களாகும். உதாரணமாக பராசர ஹோரா, பிருகத் ஜாதகம், பலதீபிகை, புலிப்பாணி ஜோதிடம்,  ஜம்பு மகரிஷி வாக்கியம், சினேந்திரமாலை, ஜாதக பாரிசாதம், சாராவளி, உத்திரகாலாம்ருதம் போன்றவற்றை சில உதாரணமாக கூறலாம், இன்னும் ஜோதிட மூலநூல்கள் நிறைய உண்டு. இவைகளே ஜோதிட மூலநூல்கள் ஆகும். (பூர்வபராச்சர்யம் மற்றும் ஜாதக அலங்காரம் என்பன ஒரு தனியான ஜோதிட மூலநூல் அல்ல. இவை ஏற்கனவே இருந்த பல ஜோதிட மூலநூல்களில் இருந்து கருத்துக்களை எடுத்து அவற்றை ஒழுங்குபடுத்தி ஒரு நூலாக்கப்பட்டுள்ளது. அதாவது இது சில குறிப்பிட்ட மூலநூல்களில் இருந்து சில குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் எடுத்து தொகுக்கப்பட்ட நூலாகும். எனவே இதனைக்கூட நீங்கள் மூலநூல் ஆதாரமாக பயன்படுத்த முடியும்.) 

பாரம்பரிய ஜோதிட பதிவுகள் செய்யும் அனைவரும் உங்கள் பாரம்பரிய ஜோதிட பதிவின் அடியில் உங்கள் கருத்து இடம்பெற்ற ஜோதிட மூலநூலின் பெயரை கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்; இயலும் என்றால் அத்தியாயம் மற்றும் சுலோகங்களையும் குறிப்பிட்டால் ஜோதிட மாணவர்களிற்கும் ஜோதிட விரும்பிகளுக்கும் உதவிகரமாக இருக்கும். ஒருவேளை நீங்கள் பதிவிடும் பதிவானது  உங்கள் சொந்த அனுபவ கருத்து என்றால் குறைந்த பட்ச்சம் 100 ஜாதகத்திலேனும் பொருத்தி பார்த்து அது சரியாக வந்தால் மட்டுமே சபையில் பதிவிட்டு ஜோதிட அறிஞர்களின் கருத்துக்களையும் திருத்தங்களையும் ஏற்று, பின் செப்பமிட்ட பின்னரே அதனை ஜோதிட பதிவாக பதிய அனுமதி வழங்கப்படும். இது தொடர்பான மேலதிக விபரங்கள் விரைவில் தயாரித்து அமுல்படுத்தப்படும். தவறான ஜோதிட பதிவுகளை தடுக்கும் நோக்கத்திலேயே இந்த செயல்முறை நடைமுறைக்கு கொண்டுவரப்படுகிறது. ஜோதிட மூலநூல்கள் தவிர வேறு தற்போதைய ஜோதிட ஆசிரியர்கள் இயற்றிய விதிகளை மேற்கோள் காட்டி பாரம்பரிய பதிவுகள் பதிய முடியாது. ஜோதிட மாணவர்களும் தற்போது கடைகளில் கிடைக்கும் தேவையற்ற ஜோதிட நூல்களை எடுத்து படிக்காமல் 2-3 மூலநூல்களை எடுத்து படியுங்கள். அதில் எதாவது ஒன்றில் உங்களை செதுக்கிக்கொள்ளுங்கள்.  பராசர ஹோராவினை அடிப்படையாக வைத்துக்கொண்டு பலதீபிகை அல்லது பிருகத் ஜாதகம் இதில் எதாவது ஒன்றை உங்கள் ஆதாரமாக எடுத்து ஜோதிட அனுபவங்களை ஜாதகங்கள் வாயிலாக பெற்று உங்கள் ஜோதிட திறமையை வளர்த்துக்கொள்ளுங்கள். ஜோதிட மூலநூல்களில் இல்லாத விஷயங்களே இல்லை. ஜோதிடம் பற்றி ஏதும் அறியாதவன் கூட மிகப்பெரிய ஜோதிட கணிதனாக மாற்றும் அனைத்து நுட்பங்களையும், ஜோதிட விதிகளையும் கொண்டுள்ளன. அதிலும் குறிப்பாக கூறவேண்டும் என்றால் ஏற்கனவே நான் கூறிய பிருகத் பராசர ஹோரா, பிருகத் ஜாதகம், பலதீபிகை என்பவற்றை சொல்லலாம். மேலும் அடுத்தபடியாக உத்திரகாலாம்ருதம், பூர்வ பராச்சர்யம் மற்றும் ஜம்பு மகரிஷி வாக்கியம் என்பனவும் எப்படி ஒரு ஜாதகத்தினை அணுக வேண்டும் என்று அழகாக எடுத்து சொல்கின்றன. ஜாதக பாரிசாத ஜோதிட விதிகளை நாம் கண்ணை மூடிக்கொண்டு ஜாதகத்தில் பொருத்தி பார்த்து கூறும் பலன் அப்படியே பலிக்கும்! கூறப்போனால் இன்று தற்காலத்தில் ஜோதிட நூல்கள் எழுதுபவர்கள் அனைவரும் ஜோதிட மூலநூல்களில் இருந்தே கருத்துக்களை எடுத்து தமது மொழிநடையில் எழுதுவதோடு சற்று கூட்டி குறைத்து அனுபவங்களையும் சேர்த்து எழுதுகின்றனர். ஆனால் 95% விழுக்காடு புத்தகம் எழுதுபவர்கள் முழுமையற்றதாக எழுதுகின்றனர். பலர் ஜோதிட கருத்துக்களை தாம் தவறாக புரிந்துகொண்டு அதனை சரியாக புத்தகத்தில் எழுதி அதனை படிப்பவர்களை தவறான பாதைக்கு கொண்டு சென்றுவிடுகின்றனர். எனவே ஜோதிட மூலநூல்களை மட்டுமே நம்பி இருங்கள். அதுவே ஜோதிட ரிஷிகளின் ஆசி.

பாரம்பரிய ஜோதிடத்திற்கு வேத ஜோதிடம் என்றும் ஒரு பெயர் உள்ளது. அதாவது வேதங்களிற்கு இணையாக மெஞ்ஞானம் கொண்டு (விஞ்ஞானம் அல்ல!) ஆன்மீக அருளோடு அறியப்பட வேண்டிய சாஸ்திரம் இது. ஜோதிட ஆர்வலர்கள், ஜோதிட மாணவர்களே, இளநிலை ஜோதிடர்கள், ஜோதிட ஆசான்களே உங்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள், தேன்போன்ற சுவை தரும் நிஜ மாம்பழம் இருக்க இலவம் காய்களை நம்பிக்கொண்டு இருக்காதீர்கள். ஜோதிட மூலநூல்கள் இருக்கு வேறு எந்தவொரு நூல்களும் தேவையில்லை. ஜோதிட மூலநூல்கள் கொண்டு ஜோதிட புலமை பெற்றவன் மட்டுமே பாரம்பரிய ஜோதிடத்தில் முழுமையான வெற்றியாளனான ஜோதிடனாக திகழ முடியும் என்பது சான்றோரின் ஆணித்தரமான கருத்தாகும்.



வெள்ளி, 18 செப்டம்பர், 2020

நன்மைகள் தரும் நட்சத்திர வடிவங்கள்.

வெற்றி தரும் நட்சத்திர குறியீடுகள் என்பது நம் வணங்கும் தெய்வங்கள் கையில் மற்றும் உருவங்களுக்கு கொடுக்கப்பட்ட வடிவம் ஆகும். எனவே நம் நட்சத்திரத்திற்கு பலம் அளிக்கும் தெய்வ உருவங்களை வழிபாடு செய்வதன் மூலம் நமக்கு நல்ல வழி கிடைக்கும்.

தங்கள் பிறந்த நட்சத்திர வடிவம் மற்றும் அதற்கு பலம், வெற்றி,  சாதகம், தோச நிவர்த்தி, நட்பு அளிக்கும் மற்ற நட்சத்திர வடிவங்களை உபயோகித்து சின்னங்கள்(இலட்சணைகள்) அல்லது உருவங்கள் மூலமாக உபயோகித்து வருவதன் மூலம் மற்றும் அடிக்கடி பார்த்து வருதல் மூலமாக பாதுகாப்பு, காரிய சித்தி உட்பட பல்வேறு நன்மைகள் கிடைக்கும். அதாவது தனது ஜென்ம நட்சத்திரத்திற்கு 1, 2, 4, 6, 8, 9 ஆக வரும் நட்சத்திரங்கள் மற்றும் அவற்றின் அனு, திரிஜென்ம நட்சத்திரங்களை உபயோகிக்க வேண்டும். ஆனால் ஒருவர் தனது ஜென்ம நட்சத்திரத்திற்கு 3, 5, 7ஆக வரும் நட்சத்திரங்கள் மற்றும் அதன் அனு, திரி நட்சத்திரங்களின் வடிவங்களை தவிர்த்தல் அவசியம்.

நட்சத்திர  வடிவங்கள் கீழே,
                           
1. அஸ்வினி - குதிரைத்தலை.

2. பரணி - யோனி, அடுப்பு, முக்கோணம்.

3. கிருத்திகை (கார்த்திகை)  - கத்தி, கற்றை, வாள், தீஜ்வாலை.

4. ரோஹிணி - தேர், வண்டி, கோயில், ஆலமரம், ஊற்றால், சகடம்.

5. மிருகசீரிடம் - மான் தலை, தேங்காய்க்கண்.

6. திருவாதிரை - மனிதத்தலை, வைரம், கண்ணீர்துளி.

7. புனர்பூசம் - வில்.

8. பூசம் - புடலம்பூ, அம்புக்கூடு, பசுவின்மடி.

9. ஆயில்யம் - சர்ப்பம், அம்மி.

10. மகம் - வீடு, பல்லக்கு, நுகம்.

11. பூரம் - கட்டில்கால், கண்கள், அத்திமரம், சதுரம், மெத்தை.

12. உத்திரம் - கட்டில்கால், கம்பு, குச்சி, மெத்தை.

13. ஹஸ்தம் - கை.

14. சித்திரை - முத்து, புலிக்கண்.

15. ஸ்வாதி - பவளம், தீபம்.

16. விசாகம் - முறம், தோரணம், குயவன் சக்கரம்.

17. அனுசம் - குடை, முடப்பனை, தாமரை, வில்வளசல்.

18. கேட்டை - குடை, குண்டலம், ஈட்டி.

19. மூலம் - அங்குசம், சிங்கத்தின் வால், பொற்காளம், யானையின் துதிக்கை.

20. பூராடம் - கட்டில்கால்.

21. உத்திராடம் - கட்டில்கால்.

22. திருவோணம் - முழக்கோல், மூன்று பாதச்சுவடு, அம்பு.

23. அவிட்டம் - மிருதங்கம், உடுக்கை.

24. சதயம் - பூங்கொத்து, மூலிகைகொத்து, உருத்திராக்கம்.

25. பூரட்டாதி - கட்டில்கால்.

26. உத்திரட்டாதி - கட்டில்கால்.
 
27. ரேவதி - மீன், படகு.



ஒரு பதிவு போட்டால் 10 நபர்கள் ஆதரவு தெரிவிப்பார்கள் 2நபர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். இது ஜோதிடர்களுக்கு உள்ள நிலைமைதான். இந்த குறியீட்டை எப்படி பயன்படுத்துவது என்று பலர் கேட்டிருந்தனர். வில், அம்பு, வாள், தேர் எல்லாம் அந்த காலத்தில் பயன்படுத்தினார்கள் அதை எப்படி இப்பொழுது பயன்படுத்த முடியும் என்று கேட்டனர். பயன்படுத்த முடியாதுதான். ஆனால் அந்த வடிவங்களை பயன்படுத்த முடியும். நீங்கள் சொந்த தொழில் செய்தால் உங்களது logo வில் இந்த குறியீடுகளை பயன்படுத்தலாம்.
  • Key chain இல் பயன்படுத்தலாம்;
  • Photo ஆக வீட்டில் மாட்டி வைக்கலாம்;
  • Tatoo ஆக பதித்து கொள்ளலாம்;
  • Mobile, laptop இல் wallpaper ஆக வைத்து கொள்ளலாம்;
  • Bike இல் stiker ஆக ஒட்டிக்கொள்ளலாம்;
  • அல்லது உங்களது கண்பார்வை படும் இடத்தில் வைக்கலாம்.
நன்றி.


வெள்ளி, 17 ஜூலை, 2020

நட்சத்திர சிந்தாமணி PDF


நீங்கள் அனைவரும் கேட்ட  நட்சத்திர சிந்தாமணி PDF வடிவில் பதிவேற்றி உள்ளேன். அனைவரும் Download செய்து பயன்பெறுங்கள்.

ஞாயிறு, 21 ஜூன், 2020

ஈஸ்வர நாடி PDF

வணக்கம், 
12 லக்கினத்திற்கு பலன்தரும் ஈஸ்வர நாடி ஜோதிட PDFஇனை Download செய்துகொள்ளுங்கள். இந்நூலில் கிரகங்கள் பார்க்கும்போது அதன் பார்வையில் ஆதிபத்தியம் வெளிப்படுத்தப்படுகிறது எனும் கருத்தை உறுதியாக கூறுகின்றது. வழமைபோல ஒரு ஜோதிட சுலோகத்தினை இங்கு பார்ப்போம்..,
மிதுன லக்னம் லக்னத்தில் குரு 11-ஆம் இடத்தில் அதாவது மேஷத்தில் சூரியன் புதன் சனி பகவான்பாக்கியாதிபதி ஆகி லாபஸ்தானத்தில் நீசம் அடைகிறார் .
அவரோடு பிதுர்காரகன் சூரியன் சேர்ந்திருக்கிறார். பிதுர்ஸ்தானாதிபதி சனி பகவான் பதினொன்றில் நீசமாகி இருக்கிறார். அந்த ஒன்பதாமிடத்தை குரு பகவான் பார்க்கிறது மிதுன லக்கினத்தை பொறுத்தவரையில் இலக்கணத்தின் அதாவது லக்னாதிபதியின் கர்ம காரகன் குரு பகவான்.
ஜாதகரின் கர்ம தொழிலை குறிப்பிடுவது.  இங்கு குருபகவான ஐந்தாம் பார்வையாக துலாத்தையும் 9-ஆம் பார்வையாக கும்பத்தையும் இரு ஸ்தானத்தையும் பார்வையிடுகிறார் கர்ம காரகன் குரு பகவான்.
இப்போது தந்தை ஸ்தானத்தையும், 9மிடத்தையும் பிதுர்காரகன் சூரிய பகவானையும் ஒருங்கே அனைத்தையும் பார்க்கிறார். பிதுர் காரகனும் ஸ்தானாதிபதியும் கூடி மேஷத்தில் நீசம் அடைகிறார். ஆக சூரிய நாடியின் அடிப்படையில் கவனிக்கும் பொழுது பிதாவின் மரணத்திற்கு காரணமானவர் காரகன் குருபகவான்தான். ஈஸ்வர நாடியில் ஜாதகனின் பதினைந்தாவது வயதில் ஜாதகனின் தகப்பனார் மரணம் ஆவார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இது எப்படி நடக்கும் என்று ஆராய்ந்தோமேயானால் குரு பகவான் ஒரு சுற்று சுற்றிவரலக்கினத்தில் இருக்கிறார் இரண்டாம் சுற்று ஆரம்பிக்கும் பொழுது சூரியனின் வீட்டை தொட்டு ஸ்தானத்தையும் அது கும்பத்தையும் ஸ்தானாதிபதியும் சனி பகவானையும் காரகன் சூரியனையும் சிம்மத்தில் இருந்து பார்க்கும் பொழுது தகப்பனுக்கு மரணம் என்று சொல்லுகிறது.
மிதுனத்தில் உள்ள குரு ஒரு சுற்று சுற்றி முடிக்கும்போது ரிஷபத்துக்கு வரும்போது வயது ஜாதகருக்கு 12ம் .
இதன் அதிபதி 3 கடகத்தில் 14 சிம்மத்தில் வரும் பொழுது 15 வயதை தொடுகிறது. இதற்கான ஸ்தானாதிபதியும் பார்க்கும் பொழுது இந்த நிகழ்வு நடக்கிறது இந்த அமைப்பு ஈஸ்வர நாடி ஜோதிடத்தில் சூரிய நாடி 53வது சக்கரத்தில் மிக அழகாக விளக்கி உள்ளது.

 

Copyright @ 2018 வேத ஜோதிடம்.