ஜோதிடம் எனும் தெய்வீக சாஸ்திரம்


widgeo.net

ஞாயிறு, 21 ஜூன், 2020

ஈஸ்வர நாடி PDF

வணக்கம், 
12 லக்கினத்திற்கு பலன்தரும் ஈஸ்வர நாடி ஜோதிட PDFஇனை Download செய்துகொள்ளுங்கள். இந்நூலில் கிரகங்கள் பார்க்கும்போது அதன் பார்வையில் ஆதிபத்தியம் வெளிப்படுத்தப்படுகிறது எனும் கருத்தை உறுதியாக கூறுகின்றது. வழமைபோல ஒரு ஜோதிட சுலோகத்தினை இங்கு பார்ப்போம்..,
மிதுன லக்னம் லக்னத்தில் குரு 11-ஆம் இடத்தில் அதாவது மேஷத்தில் சூரியன் புதன் சனி பகவான்பாக்கியாதிபதி ஆகி லாபஸ்தானத்தில் நீசம் அடைகிறார் .
அவரோடு பிதுர்காரகன் சூரியன் சேர்ந்திருக்கிறார். பிதுர்ஸ்தானாதிபதி சனி பகவான் பதினொன்றில் நீசமாகி இருக்கிறார். அந்த ஒன்பதாமிடத்தை குரு பகவான் பார்க்கிறது மிதுன லக்கினத்தை பொறுத்தவரையில் இலக்கணத்தின் அதாவது லக்னாதிபதியின் கர்ம காரகன் குரு பகவான்.
ஜாதகரின் கர்ம தொழிலை குறிப்பிடுவது.  இங்கு குருபகவான ஐந்தாம் பார்வையாக துலாத்தையும் 9-ஆம் பார்வையாக கும்பத்தையும் இரு ஸ்தானத்தையும் பார்வையிடுகிறார் கர்ம காரகன் குரு பகவான்.
இப்போது தந்தை ஸ்தானத்தையும், 9மிடத்தையும் பிதுர்காரகன் சூரிய பகவானையும் ஒருங்கே அனைத்தையும் பார்க்கிறார். பிதுர் காரகனும் ஸ்தானாதிபதியும் கூடி மேஷத்தில் நீசம் அடைகிறார். ஆக சூரிய நாடியின் அடிப்படையில் கவனிக்கும் பொழுது பிதாவின் மரணத்திற்கு காரணமானவர் காரகன் குருபகவான்தான். ஈஸ்வர நாடியில் ஜாதகனின் பதினைந்தாவது வயதில் ஜாதகனின் தகப்பனார் மரணம் ஆவார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இது எப்படி நடக்கும் என்று ஆராய்ந்தோமேயானால் குரு பகவான் ஒரு சுற்று சுற்றிவரலக்கினத்தில் இருக்கிறார் இரண்டாம் சுற்று ஆரம்பிக்கும் பொழுது சூரியனின் வீட்டை தொட்டு ஸ்தானத்தையும் அது கும்பத்தையும் ஸ்தானாதிபதியும் சனி பகவானையும் காரகன் சூரியனையும் சிம்மத்தில் இருந்து பார்க்கும் பொழுது தகப்பனுக்கு மரணம் என்று சொல்லுகிறது.
மிதுனத்தில் உள்ள குரு ஒரு சுற்று சுற்றி முடிக்கும்போது ரிஷபத்துக்கு வரும்போது வயது ஜாதகருக்கு 12ம் .
இதன் அதிபதி 3 கடகத்தில் 14 சிம்மத்தில் வரும் பொழுது 15 வயதை தொடுகிறது. இதற்கான ஸ்தானாதிபதியும் பார்க்கும் பொழுது இந்த நிகழ்வு நடக்கிறது இந்த அமைப்பு ஈஸ்வர நாடி ஜோதிடத்தில் சூரிய நாடி 53வது சக்கரத்தில் மிக அழகாக விளக்கி உள்ளது.

வியாழன், 18 ஜூன், 2020

கர்மாவை கரைக்கும் கணக்கு !!!

உங்களது கர்மாக்களை கழிக்க பண்டைய சித்த நூல்களில் சொல்லப்பட்ட அபூர்வ வழிகள்.....

உங்களது கர்மாக்களை சதவிதகமாக கணக்கில் வையுங்கள். 100 % என எடுத்துக்கொள்வோம் அதை 0% ற்கு எப்படி குறைக்கலாம் என பார்ப்போம். இதை செய்யுங்கள்...

(1)பறவைகளுக்கு நீர் வைத்தால் = 2% (-)

தானியங்கள் வைத்தால் = 5 % (-)

(2)நாய்களுக்கு உணவளித்தல் = 32% (-)

(3)மீன்களுக்கு உணவளித்தால் = 20% (-)

(4)குரங்குகளுக்கு உணவளித்தால் = 36% (-)

(5)குதிரைகளுக்கு உணவளித்தால் = 64% (-)

(6)யானைகளுக்கு உணவு அளித்தால் = 68% (-)

(7)பசுக்களுக்கு உணவளித்தால் = 86% (-)

(8)ஆடுகளுக்கு உணவளித்தால் = 62% (-)

(9)தாய் தந்தையர் மற்றும் ஆதரவற்ற முதியோர்களுக்கு ஒரு வேளை உணவு கொடுத்தால் = 86% (-)

(10)சகோதர சகோதரிகள் அவர்கள் கஷ்டபடும் போது நாம் அவர்களுக்கு உணவளித்தாலும் = 70% (-)

(11)கர்பஸ்திரிகளுக்கு = 78% (-)

(12)ஒரு வேளை உணவுக்கே வழி இல்லாதர்வர்க்கும் = 70% (-)

(13)கணவன் / மனைவி ஒருவருக்கொருவர் = 48% (-)

(14)அனாதை / முதியோர் இல்லங்களுக்கு = 75% (-)

(15)நோயளிகளுக்கு = 93% (-)

(16)மரம், செடி, கொடிகளுக்கு நீர் ஊற்றுதல் = 90% (-)

(17)திருமணம் செய்து வைத்தல், ஏழை மாணவர்களுக்கு கல்வி போன்ற பல புண்ணிய காரியங்களுக்கு உதவுதல்.

இவைகளுக்கு துன்பம் விளைவித்தால் அப்படியே 3 மடங்கு கர்மா அதிகரிக்கும்.

சரி இனி ஆன்மிக ரீதியாக பார்ப்போம்:-

(1)கோயில் மயில்களுக்கு

(2)கோயில் காகத்திற்கு

(3)கோயில் சேவல்களுக்கு

(4)கோயில் யானைகளுக்கு

(5)கோயில் குளத்தில் உள்ள மீன்களுக்கு

(6)கோயில் பூசாரி

(7)பிராமனர்களுக்கு உணவு

(8)விசேஷ காலங்களில் அக்கம் பக்கத்தினருக்கு

(9)கோயில் அன்னபாலிப்பிற்கு உதவுதல்

(10)அன்னதானத்திற்கு உதவுதல்

(11)கோயில் கட்ட கட்டுமானங்களுக்கு உதவுதல்

(12)கோயில் விளக்கிற்கு எண்ணெய் கொடுத்தல்

(13)கோயில் வாசலில் யாசகம் எடுப்போர்க்கு உணவு

(14)இறைவனுக்கு பூ மாலை

(15)முன்னோர்கள் வழிபாடு

(16)மறைந்த தாய் தந்தையர்களுக்கு திதி

(17)ஏழை மாணவர்கள் படிக்க

(108)தெய்வங்களை பற்றி அறிதல், புராணங்களை அறிதல்,மற்றும் கோயில்களில் நடைபெறும் கும்பாபிஷேகத்துக்கு உதவுதல் அல்லது விழாவிற்கு சென்று இறையை உணர்தல் போன்ற எந்த ஒரு விசயத்தையும் உணர்ந்து செய்தாலும் 99% கர்மாவை கழிக்கலாம்.

இறைசக்தியால் இயங்கும் நம் மூளையை போதை வஸ்துக்களாலும், அதீத கோப படுத்தினாலும், துரோகம், கொலை, கொள்ள, அநீதி, ஏமாற்றுதல், ஏழை பாழைகளின் சொத்தை தமதாக்குதல், பழிக்கு பழி, பிறர் மனைவிகளை தவறாக நினைத்தாலோ, பெண் குழந்தைகளுக்கு துன்பம் விளைத்தாலோ, கர்பஸ்திரிகளுக்கு துன்பம் விளைவித்தாலோ, இறைச்சி போன்ற தவறான உணவு பழக்க வழக்கங்காலோ நமது மனம் எனும் மூளைக்கு அதீக துன்பம் விளைவித்தால் அது 6 மடங்கு கர்மாக்களை அனுபவித்தே தீர வேணும் இதற்கு கர்மா கழித்தல் இல்லை. மேலே குறிப்பிட்டவை அனைத்தும் நீங்கள் முன் ஜென்மத்தில் செய்த கர்மாவை கழிக்கவே. கலியுகத்தில் எந்த துன்பம் செய்தாலும் அது பல மடங்காக நீங்கள் வயோதகத்திலோ அல்லது நடுத்தர வயதிலோ அனுபவித்தல் தான் தண்டனை. அனுதினமும் இறைவனை நினைத்து தர்மகாரியங்களில் அவ்வபோது செய்து கிடைத்த நேரத்தில் இறைவனின் நாமங்கள் நினைத்து நமது முன்னோர்கள் சொன்ன வழியை பின் பற்றி உலகமே ஆனந்தமாக எந்த சண்டை சச்சரவும் இல்லாமல் வாழ்வாங்கு வாழ்தலே மேன்மை.

- அகத்தியர் கர்ம காண்டம் நூலில் இருந்து...... 

செவ்வாய், 16 ஜூன், 2020

சாதகப் பாரிச்சாதம் PDF

இன்று நான் உங்களிற்காக கொண்டுவந்துள்ள நூல், சாதக பாரிசாதம் எனும் ஒரு அற்புத ஜோதிட நூலாகும். இதிலிருந்து ஒரு ஜோதிட தகவலை இங்கு பார்ப்போம். ஜாதக பாரிஜாதம் கூறும் 9ம் பாவத்தை பார்க்கும் கிரகத்தின் பார்வை பலன்கள்.,

ஐயன்தா னத்து மிக்காய்
அந்தணன் பார்த்து நின்றால்
துய்யரா ஜாக்கல் யுத்தி
தோன்றிடும் கனவான் ஆவான்
பையவே செவ்வாய் பார்க்கில்
பலித்திடும் பூமி லாபம்
தையலே புந்தி பார்க்கில்
சார்ந்திடும் தனத்த னாமே...


பொருள்
========
9 ஆம் பாவத்தை குரு பார்வை
செய்தால் அந்த ஜாதகன் ராஜ தந்திரங்களில் வல்லவனாகவும்
பெரிய மனிதனாக வாழ்வான். 
9 ஆம் பாவத்தை செவ்வாய் பார்வை செய்தால் அந்த ஜாதகனுக்கு நிலபுலன்களால்
லாபம் உண்டாகும்.
9 ஆம் பாவத்தை புதன் பார்வை
செய்தால் அந்த ஜாதகன் செல்வ வசதி படைத்தவனாக வாழ்வான்.

நீங்கள் தற்போது PDF வடிவில் இந்நூலை download செய்ய முடியும். விரும்பியவர்கள் இந்த நூலை டவுன்லோட் செய்து முழுமையாக படித்து பயன்பெறுங்கள்.

வெள்ளி, 5 ஜூன், 2020

தசாம்சம் - 30 குறிப்புக்கள்


ராசிக்கட்டத்தில் தொழில் பற்றி மேம்போக்காக அறிந்தாலும் தொழில் தொடர்பான விரிவான பலனை அறிய தசாம்ச சக்கரம் (D-10) போட்டு பலனை நுணுக்கமாக அறியவேண்டியது அவசியமாகும். தசாம்சம் எனும் வர்க்க சக்கரம் ஊடாக ஜாதகரது தொழில் அமைப்புக்களை ஆராயலாம் என்று உங்களில் பலருக்கு தெரிந்திருக்கும். பிரிவுகள் என்பதன் சம்ஸ்கிருத சொல் அம்சம் ஆகும். தசம் என்றால் பத்து. எனவே ராசிச்சக்கரத்தினை (ராசிச்சரத்தின் ஒவ்வொரு வீடுகளையும்) பத்து பிரிவுகளாக முறையாக பிரித்து  எடுக்கும் வர்க்க சக்கரமே D 10 எனப்படும் தசாம்ச சக்கரம் ஆகும். இங்கு நாம் பாவகம் அல்லது பாவம் என்ற சொல்லினை பயன்படுத்த கூடாது, வீடு அல்லது ஸ்தானம் என்ற சொல்லினையே பயன்படுத்த வேண்டும்.. அதுவே சரியானது. அது ஏன் என்று ஒரு பதிவு விரைவில் பதிகிறேன். காத்திருங்கள். இப்போது தசாம்ச சக்கரம் பற்றிய இரத்தின சுருக்க குறிப்புக்களையும் தசாம்ச சக்கரம் கொண்டு பலன் சொல்வது எப்படி எனவும் பார்ப்போம்.,

1. தசாம்ச லக்னாதிபதி நல்ல நிலையில் பலமாக இருந்தால் தொழில் இலகுவாக கிடைக்கும் மேலும் தொழில்நிலை பொதுவாக நன்றாகவே இருக்கும்.

2. நமது ராசிக்கட்டத்தின் 10ம் அதிபதி தசாம்ச சக்கரத்தில் நல்லநிலையில் இருந்தால் தொழில் ஸ்திரமாக இருக்கும். மேலும் தசாம்ச சக்கரத்தில் சனிபகவானும் நல்ல நிலையில் வலுவாக இருக்கவேண்டியது அவசியமாகும்.

3. தசாம்ச சக்கரத்தின் 2 மற்றும் 11ம் வீட்டில் இருக்கும் கிரக காரகம் மூலம் ஜாதகருக்கு பணம் அல்லது ஆதாயம் கிடைக்கும். இவர்கள் ராசிக்கட்டத்தில் பலமாகவும் சுபமாகவும் இருக்கும் நிலைக்கேற்ப பலன் கூடிக்குறையும்.

4. தசாம்ச சக்கரத்தில் 6ம் வீடு வலுவாக இருந்தால் ஜாதகர் சம்பளம் பெறும்(பிறரிடம்) தொழில் செய்வதற்க்கு உரியவர் எனலாம். மாறாக 7ம் இடம் வலுவாக இருந்தால் ஜாதகர் சுயதொழிலுக்கு உரியவர்.

5. தசாம்சத்தில் 5ம் வீடு அசுப விளைவை தரக்கூடியது ஏனெனில் 5ம் வீடு தொழில் ஸ்தானமான 10க்கு 8ம் வீடாவதினால்.

6. தசாம்சத்தில் 9ம் வீடு & 9ம் அதிபனும், சூரியனும் மேலதிகாரியை குறிக்கும். இவை அசுபர்களால் பாழ்பட்டால் மேலதிகாரியின் தொந்தரவு இருக்கும்.

7. தசாம்ச லக்னாதிபதி 9ல் இருந்தால் ஜாதகர் சுய தொழிலின் அதிபதி ஆவார்.

8. ராகு தசாம்ச லக்னத்திலிருந்தால் ஜாதகர் தொழிலை மாற்றிக் கொண்டே இருப்பார் அல்லது தொழிலில் ஏற்றமும் இறக்கமும் இருந்து வரும் எனலாம்.

9. தசாம்ச லக்னம் வலுவானால் மிக நல்லது. அவ்வாறே தசாம்சத்தின் 10ம் வீடும் 10ம் அதிபனும் வலுவானால் தொழிலில் வெற்றி. மாறாக அசுபத்திலிருந்தால் தொழில் திணறி திணறி செல்லும். தசாம்ச லக்னாதிபதி நிலை முக்கியம்.

10. தசாம்சத்தில் சூரியன் வலுவாக இருந்தால் நிர்வாக திறனுடன் வருமானம் உண்டு. மாறாக சூரியன் கெட்டால் வருமானம் குறைவாகும் மற்றும் அரசு மூலம் தொந்தரவு இருக்கும்.

11. தசாம்சத்தில் சனி வலுவாக இருப்பின் ஜாதகரகளுடன் வேலை செய்பவர்களின் சப்போர்ட் இருக்கும். மாறாக சனி நல்ல நிலையில் இல்லாது போனால் சப்போர்ட்இருக்காது.

12. தசாம்சத்தின் 4ம் வீடு தொழில் மூலம் கிடைக்கும் சந்தோசத்தை குறிக்கும்.

13. 10ம் வீட்டின் அதிபதி, தசாம்ச லக்னாதிபதி மற்றும் தசாம்சத்தில் உச்சமடைந்த கிரகம் மற்றும் பலமான சூரியன் ஆகியன தொழிலில் புரமோசன் கிடைக்க உதவிடும்.

14. தசாம்ச லக்கினம், 2ம் வீடு, 6ம் வீடு, 10ம் வீட்டினை குருபகவான் பார்த்தால் ஜாதகர் தொழிலில் எதாவது தடை அல்லது பிரச்சினை வந்தாலும் இலகுவாக எதிலிருந்து வெளிவந்துவிடுவார். தொழில் போனாலும்கூட அடுத்தமுறை அதைவிட நல்ல தொழில் கிடைக்கும். (ஏற்கனவே கூறியபடி எவ்வளவு சீக்கிரம் கிடைக்கும் என்பது தசாம்ச லக்கினாதிபதி பொறுத்தது.) இவர்களுக்கு தொழில் தொடர்பாக இறை அனுக்கிரகம் இருக்கும், இவர்கள் தொழில் ஸ்தானத்தில் கடவுள் படங்களை வைத்து வழிபட வேண்டும்.

15. தசாம்ச லக்கினாதிபதி, 7ம் அதிபதி, 11ம் அதிபதி இணைந்து 1, 2, 7, 9, 10, 11ம் வீடுகளில் இருந்தால் ஜாதகன் business செய்வதில் ஆர்வம் கொண்டிருப்பார்.

16. தசாம்ச 10ம் அதிபதி அல்லது பத்தில் வக்கிர கிரகம் நின்றால் தொழில் ஸ்திரத்தன்மை இன்றி இருக்கும், மேலும் சனிபகவான் 10இல் இருந்தாலும் அல்லது பார்த்தாலும் அடிக்கடி தொழில் (இட)மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது. 2, 6, 10இல் ராகு, கேது இருந்தாலும் ஏதேதோ காரணங்களுக்காக உங்கள் தொழில் முன்னேற்றம் தடைபடும். அது பதவியுயர்வாக கூட இருக்கலாம்.

17. தசாம்ச சக்கரத்தில் 3, 8இல் இருக்கும் கிரககங்களின் தொழில்ரீதியாக திசைகள் நன்மை தராது. இருப்பினும் ஜாதகர் புரியும் தொழில், இடம், ஏனைய கிரக தொடர்புகள் பொறுத்து இதற்கு சில விதிவிலக்குகள் உண்டு என்பதை மறுக்க முடியாது. அதேபோல தசாம்ச சக்கரத்தில் 5, 6, 12 இல் இருக்கும் கிரகங்கல் பாவர்களால் பாதிக்கப்பட்டு ராசிச்சக்கரத்தில் குறைந்த கிரணங்களை பெற்றிருந்தால் அவற்றில் தசைபுக்திகளும் ஜாதகருக்கு தொழில் ரீதியாக பாதகமாக அமைந்துவிடும்.

18. தசாம்ச சக்கரத்தின், லக்கினம், அதனைப் பார்க்கும் சுப, அசுப கிரகங்கள் போன்றவற்றைக் கொண்டு, ஜாதகரது உத்தியோகத்தில் அவரின் அணுகுமுறை மற்றும் இயல்பு பற்றி அறிய முடியும். தசாம்ச சக்கரத்தின், லக்கின அதிபதி, எந்த இடத்தில் அமர்கிறாரோ அந்த இடத்தின் காரகத்துப்படி தொழில் அமையும். உதாரணமாக ஒருவரின் லக்கினாதிபதி 6 ஆம் இடத்தில் அமர்ந்திருந்தால், ஜாதகர் ஏதேனும் ஒரு  சேவை செய்யும் தொழிலைச் செய்வார் எனலாம். 

19. தசாம்ச சக்கரத்தின், லக்கினத்திற்கு 2ஆம் இடத்தைக் கொண்டு அவர் எந்த மாதிரியான மக்களுடன் வேலை செய்வார் என்பதைப் பற்றியும் அவரின் வேலையை முடிப்பதற்குத் தேவையான ஆதாரம் / வளங்கள் / உபகரணங்கள் போன்றவற்றைப் பற்றியும் கூறும். மேலும், ஜாதகரின் தொழில் சார்ந்த செல்வா நிலை, சமூக அந்தஸ்து மற்றும் பேச்சுத் திறன் போன்றவற்றைத் தெரிவிக்கும்.

20. தசாம்ச சக்கரத்தின், லக்கினத்திற்கு 3ஆம் இடத்தைக் கொண்டு ஒருவர், தமது முயற்சி, படைப்பாற்றல், தகவல் தொடர்பு திறமைகள், ஒப்பந்தங்கள் மற்றும் சிறுசிறு தடைகள் போன்றவற்றைக் கூறும். மேலும் இதன் அதிபதி மூலம், சிறு தூரப் பயணம் பற்றியும் கூறும். 

21. தசாம்ச சக்கரத்தின், லக்கினத்திற்கு 4ஆம் இடத்தைக் கொண்டு ஒருவர், அவரது உத்தியோகத்தில் / தொழிலில் அவர் பெறும் மகிழ்ச்சி, சூழல் / சுற்றுப்புறம் போன்றவற்றைப் பற்றி அறியலாம். மேலும் இதன் மூலம் ஜாதகரின் பிறந்த நேரத்தைச் சரிப்படுத்த உதவும். 

22. தசாம்ச சக்கரத்தின், லக்கினத்திற்கு 5ஆம் இடத்தைக் கொண்டு ஒருவர், வியாபாரத்தில்/ தொழிலில் அவரிடம் வேலை செய்யும் ஊழியர்கள், அவரின் புகழ் மற்றும் அவர் இடும் கட்டளைகளை அவரின் கீழ் பணி புரியும் மற்றவர்கள் பின்பற்றுவது பற்றியும் கூறும்.

23. தசாம்ச சக்கரத்தின், லக்கினத்திற்கு 6ஆம் இடத்தைக் கொண்டு ஒருவர், செய்யும் சேவையைப் பற்றியோ அல்லது அந்த சேவைக்குத் துணை புரிபவர்கள் பற்றியோ அறிய உதவும். பொதுவாக , ஒருவருடைய ஜாதகத்தில் 2, 6, 10ஆம் இடங்கள் அவருடைய இயல்பான வேலை என்னவென குறிகாட்டும். ஆனால், திரைப்படத்துறை மற்றும் அது சார்ந்த துறைகளுக்கு 3, 7, 11ஆம் இடங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. 

24. தசாம்ச சக்கரத்தின், லக்கினத்திற்கு 7ஆம் இடத்தைக் கொண்டு ஒருவர், அவருடன் பணிபுரிபவர்களுடன் ஆன தொடர்பு / பழக்க வழக்கங்கள் பற்றி அறிய முடியும். இதில், சுபக் கிரகம் இடம் பெற்றால், மிகவும் சுலபமான / சந்தோஷமான வாழ்க்கை அமையப்பெறுவார். உதாரணமாக, இங்கு சுக்கிரன் / சந்திரன் போன்ற கிரக அமர்வு, ஜாதகரை நிறைய பெண்கள் கூட்டத்திற்குள் வேலை செய்ய வேண்டி வரும். உதாரணம் ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் இடம் போன்றவை. 

25. தசாம்ச சக்கரத்தின், லக்கினத்திற்கு 8ஆம் இடத்தைக் கொண்டு ஒருவர், அவர் தொழிலில் / வேலையில் ஏற்படும் கஷ்டங்களைப் பற்றி அறிய உதவும். இந்த இடம் நீண்ட நாள் வேலை இழப்பைப் பற்றியும் தெரியப்படுத்தும். 

26. தசாம்ச சக்கரத்தின், லக்கினத்திற்கு 9ஆம் இடத்தைக் கொண்டு ஒருவர், அவரின் மேல் அதிகாரி உடனான உறவை / தொடர்பை வெளிப்படுத்தும். ஒருவரின் ஜாதகத்தில் 9 ஆம் அதிபதியே மேலதிகாரி . ஒரு ஜாதகத்தில் லக்கின அதிபதி 9ஆம் இடத்தில் அமர்ந்தால், அந்த ஜாதகருக்கு அவரே மேல் அதிகாரி, அதாவது அவரை யாரும் தட்டி கேட்க முடியாது, ஏன் எனில் அவரே மேலதிகாரி ஆவதால், அவர் தனித்து இயங்க முடியும். இங்கு, 7ஆம் அதிபதியின் பலம் மற்றும் பலவீனத்தை அறிந்து கொள்ளுதல் அவசியம்.

27. தசாம்ச சக்கரத்தின், லக்கினத்திற்கு 10ஆம் இடத்தைக் கொண்டு ஒருவரின் கர்ம வினையைப் பற்றிக் கூறும். அதாவது இந்த ஜாதகர் போன பிறவியில் செய்த கர்மாவைப் பற்றியும் இந்த பிறவியில் அவர் படும் பாட்டைப் பற்றியும் தெரியப்படுத்தும். அதோடு அவரின் தொழில் / வேலை எந்த வகையில் அமையும் என்பதனை தெளிவுபடுத்தும். 

28. தசாம்ச சக்கரத்தின், லக்கினத்திற்கு 11ஆம் இடத்தைக் கொண்டு ஒருவரின் தொழிலுக்கு, நண்பர்களைப்போல் மற்றவர்கள் எந்த அளவுக்கு உதவுவார்கள் என்பதனை எடுத்துரைக்கும்.

29. தசாம்ச சக்கரத்தின், லக்கினத்திற்கு 12ஆம் இடத்தைக் கொண்டு ஒருவரின் வேலை நிமித்தமாக வெளியூர் / வெளிதேச வாடிக்கையாளர் / விற்பனை போன்றவற்றை அறியலாம். 

30. அனைத்திற்கும் முக்கியமாக ராசிச்சக்கரத்தில் உள்ள யோகி மற்றும் சுபத்தன்மை அதிகம் கொண்ட கிரகம் வர்கச்சக்கரத்தில் நல்லநிலையில் இருக்க வேண்டும். இதில் எந்த கிரகமும் 3/ 6/ 8/ 12ல் மறையகூடாது மற்றும் கெடகூடாது. காரக கிரகம் அது தொடர்பான வர்க்க லக்னத்தில் நிற்ககூடாது என்றதொரு விதி உள்ளது. அதாவது தசாம்சத்தினை பொறுத்தவரை லக்கினத்தில் சனி நிற்க கூடாது.

இந்த வர்க்க சக்கரங்களைப் பயன்படுத்தி ஜோதிட மூலநூல்களின் வழி மென்மேலும் பல ஜாதகங்களை ஆய்வு செய்து மேலும் புதிய தகவல்களை அறிந்து இந்த மானிட சமுதாயம் நல் வாழ்வு வாழ வழி செய்ய தற்போதுள்ள இளைய ஜோதிடர்களைக் கேட்டு வேண்டுகிறேன்.


தசாம்சம் போடுவதற்கென தனியான கணித்தல் முறைகள் உள்ளன. எனினும் ஜோதிட ஆர்வலர்கள் இலகுவாக தசாம்சம் போட்டுக்கொள்ள இந்த அட்டவணை உபயோகமாக இருக்கும்... இதனை பயன்படுத்தி இலகுவாக தசாம்ச சக்கரத்தில் கிரகங்களை வரைந்துவிடலாம்...

[Ari - மேஷம், Tau - ரிஷபம், Gem - மிதுனம் _______ Pis - மீனம்.. என எடுத்துக்கொள்க.]

 

Copyright @ 2018 வேத ஜோதிடம்.