ஜோதிடம் எனும் தெய்வீக சாஸ்திரம்


widgeo.net

திங்கள், 11 ஏப்ரல், 2016

கரிநாட்கள்

கரி என்றால் “நச்சு” அல்லது “விஷம்” என்று பொருள். ஆகவே, கரிநாட்களை எந்தவொரு சுபகாரியத்திற்கும் ஆகாத நாட்கள் என்று வரையறுத்து உள்ளனர் ரிஷிகள். இந்த நாட்கள் தமிழ் மாதங்களை ஒட்டி வருவதால் இவை என்றுமே மாறாததாகும். எந்த வருடத்திற்கும், எந்தக் காலத்திற்கும் இவை பொதுவானதாகும்.
இங்கு தமிழ் மாதத்திற்கு உரிய கரிநாட்களே கொடுக்கப்பட்டுள்ளன. அதற்குரிய சரியான ஆங்கிலத் தேதிகளைப் பார்த்து கரிநாட்களை முடிவு செய்து கொள்ள வேண்டும்.

தமிழ் மாதங்கள் தமிழ்த் தேதிகள்
------------------------ -------------------------
சித்திரை - 6, 15
வைகாசி - 7, 16, 17
ஆனி - 1, 6
ஆடி - 2, 10, 20
ஆவணி - 2, 9, 28
புரட்டாசி - 16, 29
ஐப்பசி - 6, 20
கார்த்திகை - 1, 7, 17
மார்கழி - 6, 9, 11
தை - 1, 2, 3, 11. 17
மாசி - 15, 16, 17
பங்குனி - 6, 15, 19

சனி, 9 ஏப்ரல், 2016

நாகபஞ்சமி

நாக தோஷம் உள்ளவர்கள், தங்களையும், தங்களின் சந்ததிகளையும் பாதிப்புகளில் இருந்து காத்துக் கொள்ள பரிகாரம் ஒன்றினை போகர் தனது ”போகர்12000” நூலில் கூறியிருக்கிறார். இந்த பரிகாரத்தை வருடத்தின் குறிப்பிட்ட ஒரு நாளில் மட்டுமே செய்திட வேண்டும் என கூறுகிறார். அவர் குறிப்பிடும் அந்த தினம் ”நாகபஞ்சமி திதி”


அதென்ன திதி?

பரிகாரத்தை பார்ப்பதற்கு முன்னர் திதி பற்றி ஒரு சிறிய விளக்கத்தை பார்ப்போம். பிறந்த ஒவ்வொருவருக்கும் நட்சத்திரம் எவ்வளவு முக்கியமோ, அது போல இறந்த முன்னோருக்கு திதி என்பது மிகவும் முக்கியமானது.

பெளர்ணமி முதல் அமாவாசை வரையான பதினைந்து நாட்களை ”தேய்பிறை திதி” என்றும், பின்னர் அமாவாசை முதல் பெளணமி வரையான பதினைந்து நாட்களை ”வளர்பிறை திதி” என்றும் குறிப்பிடுவர். இதனை சமஸ்கிருதத்தில் ”கிருஷ்ணபட்சம்”, ”சுக்கிலபட்சம்” என்பர்.

இவை முறையே...

1. பிரதமை.
2. துவி்தியை.
3. திருதியை.
4. சதுர்த்தி.
5. பஞ்சமி.
6. சஷ்டி.
7. சப்தமி.
8. அஷ்டமி.
9. நவமி.
10. தசமி.
11. ஏகாதசி.
12. துவாதசி.
13. திரயோதசி.
14. சதுர்தசி.
15. அமாவாசை அல்லது பெளர்ணமி.

சோதிடத்தில் இந்த திதிகளின் அடிப்படையில்தான் நல்ல நாட்கள் பார்க்கப் படுகின்றன. அஷ்டமி, நவமி திதிகளில் நல்ல காரியங்கள் எதையும் செய்வது நற்பலனைத் தராது என்றும் சொல்லப்பட்டுள்ளது.

இந்தத் திதிகளில் நாம் பார்க்கப்போவது அமாவாசை கழிந்து வரும் ஐந்தாவது நாளான வளர்பிறை பஞ்சமி திதி பற்றியே.. அதிலும் ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறைப் பஞ்சமி நாள்தான் ”நாகபஞ்சமி” என்று அழைக்கப்படுகிறது. இந்த நாக பஞ்சமி திதியில் தான் போகர் அருளிய நாக தோஷத்திற்கு பரிகாரத்தினை செய்திட வேண்டும்,அதுவே சிறப்பானது.

சித்தர்கள் எதனைச் செய்தாலும், தங்களின் ஆதி குருவான சிவனை வணங்கியே துவங்குகின்றனர். தங்களைப் போலவே நாகங்களும் ஆதி குருவான சிவனையே பூசிப்பதாக போகர் தனது நூலில் குறிப்பிடுகிறார்.

இனி நாகதோஷத்திற்கான பரிகாரத்தினைப் பார்ப்போம்...

ஆவனி மாதத்து வளர்பிறை பஞ்சமியான,அதாவது அம்மாவாசை கழித்து ஐந்தாவது நாளான ”நாக பஞ்சமி திதி” அன்று, அரச மரம் ஒன்றின் அடியில் நாக எந்திரம் ஒன்றினை பீடத்தில் அமைத்து அதன் மேல் சிவலிங்கத்தினை ஏந்திய வண்ணம் இருக்கும் நாகத்தின் கருங்கல் சிலையினை பிரதிஷ்டை செய்து வணங்கி வருவதன் மூலம் நாக தோஷத்தில் இருந்து நிரந்தரமாக விடுபட்டு நலமுடன் வாழலாம் என்கிறார் போகர்.

பிரதிஷ்டை செய்ய வேண்டிய நாக விக்கிரகத்தின் உருவ அமைப்பையும், நாக யந்திரம் தயாரிக்கும் முறையையும் தனது நூலில் தெளிவாகவும் விளக்கமாகவும் போகர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த நாக விக்கிரகத்தின் மாதிரி படம்..




நாகத்தின் சிலையானது இரண்டரை அடி (பீடத்துடன் சேர்த்து) உயரத்திற்க்கு குறைவாகவும், பாம்பின் உடல் மூன்று அல்லது ஐந்து சுற்றுக்களைக் கொண்டதாகவும் இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். பிரதிஷ்டை செய்யும் தினத்தன்று, பாலும், பழமும் மட்டுமே உணவாக எடுத்துக் கொண்டு விரதமிருந்து, பயபக்தியுடன் இந்த கடமையை செய்திடல் வேண்டும் என்கிறார்.

நாகதோஷம் உள்ளவர்கள், ஆவனி வளர்பிறைப் பஞ்சமி திதியன்று, நாகர் சிலையினை பிரதிஷ்டை செய்து வணங்கி, நாகதோஷத்தில் இருந்து நிரந்தரமாய் விடுபட்டு சீரும் சிறப்புடனும் வாழ்ந்திடுங்கள்....

சாமுத்ரிகா லட்சணம் - பெண்

பெண்களில் நான்கு வகையினர் இருப்பதாகவும், அவர்களை அத்தினி, சங்கினி, சித்தினி, பத்மினி என அழைக்கிறார் அகத்தியர்.இந்த வகை பெண்களை பின் வருமாறு இனம் காணலாம் என்கிறார்.

அத்தினி

பெண்களில் இவர்களை உயர்ந்த வகையினர் என்கிறார்.வெளிர்மையான நிறத்தை உடையவர்களாம். அழகியகண்களும், மென்மையான தலை முடியையும் கொண்டவர்களாக இருப்பார்களாம்.

சங்கினி

நடுத்தர உயரமும் , மஞ்சள் நிறமும் உடைய இந்த வகை பெண்களுக்கு சங்கு போன்ற கழுத்து அமைந்திருக்குமாம்.அழகான மற்றும் அளவான உடலமைப்பைக் கொண்டவர்களாக இருப்பார்களாம் சங்கினி வகைப் பெண்கள்.

சித்தினி

மெலிவும் இல்லாமல் அதிக பருமனும் இல்லாமல் நடுத்தர உடலமைப்பைக் கொண்ட இந்த வகைப் பெண்டிர் செழுமை நிறமாக இருப்பார்களாம். மேலும் இவர்கள் மேனி கதகதப்பாக இருக்குமாம்.

பத்மினி

இந்த வகைப் பெண்கள் தடித்து உயர்ந்த உதடுகளையும், செம்பட்டை நிற கூந்தலையும் கொண்டிருப்பார்களாம். இவர்கள் கரிய நிறம் உள்ளவர்களாக இருப்பார்கள் என்கிறார் அகத்தியர்.


ஆண்களைப் போலவே பெண்களுக்கும் தலைமுடி, நெற்றி, கண், புருவம், கண்கள், மூக்கு, வாய், உதடு, பற்கள், நாக்கு, காது, மோவாய், முகம், கழுத்து, அக்குள், காரை எலும்பு, மார்பகங்கள், தொப்புள், முதுகு, கைகள், விரல்கள், உள்ளங்கைகள், நகங்கள், இடுப்பும் வயிறும், தொடை, பெண்குறி ஆகியவைகளின் அமைப்பினை வைத்து சித்தர்கள் பலன் கூறியிருக்கின்றனர்.



உடல்

  • பெண்களின் உடலானது பூவினைப் போன்று மென்மையாக இருக்குமானால் அவள் ஆரோக்கியமானவர்களாக இருப்பார்களாம். எல்லா வளங்களுட்ம் நிறைந்திருக்குமாம்.இங்கே வளங்கள் என்பது உடல் நலமாக இருக்கக் கூடும்.
  • பெண்ணின் உடலில் அதிகமான பகுதிகள் சிவந்து காணப்பட்டால் அவள் உலக மக்கள் வணங்கும் அளவு சிறப்பையும் மேன்மையையும் அடைவாளாம்.
  • பெண்களின் உடம்பில் கற்பூர வாசனை, சந்தன வாசனை, எலுமிச்சை வாசனை, தாமரைப்பூ வாசனை உடம்பில் வருமானால் அவளுடன் மகாலட்சுமி உடன் வாசம் செய்வாராம்.
  • பெண்ணின் முகம் தங்கத்தைப் போல பொலிந்து சிவந்து முகத்தினை உடையவளிடம் எப்போதும் தர்ம சிந்தை மேலோங்கி இருக்குமாம்.
  • பூரண சந்திரனைப் போல் முகவசீகரமும், சூரியன் உதிக்கும் காலத்தில் உள்ளதைப் போல பிரகாசமான தேஜஸும், பெரிய கண்களையும் உடையவள் எப்போதும் மகிழ்வாக இருப்பதுடன் அவளை சூழ இருப்பவர்களையும் மகிழ்வுடன் வைத்திருப்பாளாம்.

புருவம்

  • புருவங்கள் குறுகலாகவும், ஒடுக்கமாயும், ஒரே சீராகவும் இருந்தால் அவர்கள் நன்னடைத்தை உடையவர்களாவும், நேர்மை மிக்கவர்களாவும், நல்லொழுக்கம் மிக்கவர்களாவும் இருப்பார்களாம்.
  • வளைந்த கண் புருவங்கள் மூக்கின் அடிப்பாகம் வரை நெருங்காமல் இருந்தால் அவள் சிறந்த திறமசாலியாகவும் நுண்ணிய அறிவுள்ளவளாகவும் இருப்பாளாம்.இவர்களின் கன்ன கதுப்பு மலர்களைப் போல பளபளப்புடன் இருக்குமாம்.

நெற்றி

  • ஒரு பெண்ணின் நெற்றியில் ஐந்து ரேகைகள் இருந்தால் அவள் நீண்ட ஆயுளைக் கொண்டிருப்பதுடன், சிறப்பான சிந்தனை வளமும் கொண்டவளாக இருப்பாளாம்.

உதடுகள்

  • பொதுவில் உதடுகள் சிவப்பு நிறமாக இருப்பது மிகவும் நன்மை பயக்குமாம்.என்ன மாதிரி நன்மைகள் என்பது பற்றி தகவல்கள் இல்லை.தேடிப் பார்க்க வேண்டும்.
  • உருண்டை வடிவமாகவம் சதைப்பிடிப்புடன் கூடிய உதடுகளைக் கொண்ட பெண்களின் வாழுவு சிறப்பாக அமையுமாம்.
  • ஒரு மங்கையின் மேல்உதடு பெரிதாயிருப்பின் அவர்கள் முன் கோபக்காரர்களாகவும், சண்டைக் கோழிகளாகவும் இருப்பார்களாம்.
  • உதடுகள் சிவந்து தாமரை இதழ் போல இருக்கும் பெண்கள் அவர்கள் சிறந்த அறிவாளியாகவும், பிறரை வழிநடத்துவதில் கைதேர்ந்தவர்களாகவும் இருப்பார்களாம்.

கண்கள்

  • கண்கள் பளிச்சென அளவாக உருண்டு திரண்டிருந்தால் அத்தகைய பெண்கள் எல்லா வளமும் பெற்று வாழ்வார்களாம்.

  • கலை மானின் கண்களைப் போல மருளக் கூடிய கண்களை உடையவர்கள், தங்கள் வாழ்க்கைத் துனைக்கு ஏற்ற குணவதியாகவும், நேர்மறையான சிந்தனை போக்கினை கொண்டவராகவும் இருப்பார்களாம்.இத்தகையவர்கள் கணவனை தங்கள் கட்டுப் பாட்டில் வைத்திருப்பார்களாம்.

  • மீனைப் போல கண்களை உடைய பெண்கள் சுதந்திரமான எண்ணப் போக்கினை கொண்டவர்களாக இருப்பார்களாம்.

வாய்

  • நாக்கு நுனி கூராக இருக்கும் பெண்கள் வாக்கு சாதுர்யத்துடன், பிறரை கவரும் வகையில் பேசுபவர்களாக இருப்பார்களாம்.

  • நாக்கும் வாயும் கறுத்திருந்தால் புகுந்த வீட்டில் தகராறு செய்பவளாயும், குடும்பத்தை பிரித்து வைப்பவராகவும் இருப்பாளாம்.

  • குவிந்த அழகிய வாயை உடைய பெண்கள் மிகவும் மென்மையாக பேசுபவர்களாகவும் , அதிகம் கோபப்படாதவர்களாகவும் இருப்பார்களாம்.

காதுகள்

  • அளவில் சமமான, மிருதுவான காதுகளை உடைய பெண்கள் அதிக புகழை அடைவார்களாம்.

  • சரியான அளவில் மேடு பள்ளங்களுடன் நேர்த்தியான காதுகளை கொண்ட பெண்கள் பிறரின் வணக்கத்துக்கு உரியவர்களாகவும், தான தர்மங்களில் ஈடுபாடுள்ளவர்களாகவும் இருப்பார்களாம்.

  • விசாலமானதாகவும், முகத்திற்கு பொருத்தமில்லாத பெரிய காதுகளைக் கொண்ட பெண்கள் சோம்பேறித் தனம் மிகுந்தவர்களாக இருப்பார்களாம்.

  • முகத்துக்கு பொருத்தமான காதுகளை உடைய பெண்கள் அனைவரையும் கவாந்திழுக்கும் தன்மை உடையவர்களாக இருப்பார்களாம்.

  • கரடு முரடான காதுகளை கொண்ட பெண்கள் துன்பத்தினையே அனுபவிப்பார்களாம்.

கூந்தல்

  • சுருள் சுருளான அழகிய நீளமான கூந்தலை கொண்ட பெண்கள் இருக்கும் இடத்தில் செல்வம் தங்குமாம்.

  • மிருதுவான கருத்த நிற கூந்தலைக் கொண்ட பெண்கள் சிறப்பானவர்களாக இருப்பார்களாம்.


  • கரடுமுரடான கூந்தலையும், வட்டவடிவமான கண்களையும் உடையவள் எவளோ அவள் விரைவில் கணவனை இழப்பாளாம்.

  • கட்டையான தலைமுடிகளை கொண்ட பெண்கள் அதிக ஆடம்பரப் பிரியர்களாக இருப்பார்களாம்.

பற்கள்

  • எண்ணெய் பசையுள்ள பற்களையுடையவள் சாப்பாட்டுப் பிரியையாக இருப்பாளாம்.

கழுத்து

  • குட்டையான கழுத்தடையுடைய பெண்கள் துன்பத்தையே அனுபவிப்பார்களாம்.
நவீன அறிவியலில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிந்து கொள்வது எளிதான காரியம்.ஆனால் பல நூறு வருடங்களுக்கு முன்னர் ந்மது முன்னோர்கள் கருவுற்ற பெண்ணின் தேக லக்‌ஷணங்களை வைத்தே கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை எளிதாக கண்டறிந்திருக்கின்றனர்.

கருவில் இருப்பது ஆண் குழந்தையாக இருந்தால்...

  • கருத்தரித்த பெண்ணுக்கு வலப்பக்க மார்பகமானது இடதுபக்க மார்பகத்தை விட பெரியதாகவும் சற்று பாரமானது போலவும் தோன்றுமாம்.
  • வலது பக்க மார்பகத்தை கசக்கினால் அதிலிருந்து வெண்மையான திரவம் வெளியேறுமாம்.
  • வயிற்றினுள் குழந்தையானது வலதுபக்கமாகச் சாய்ந்திருப்பது போல தோன்றுமாம்.
  • ஒவ்வொரு தவவையும் சிறுநீர் கழிக்கும் போது சிறுநீரானது ஒருவித மாற்றத்துடன் இருக்குமாம்.
  • இத்தகைய பெண்கல் உட்கார்ந்து எழுந்திருக்கும் எழுந்திருக்கும் போதும் வலதுகையையே உன்றிக் கொள்வார்களாம்

இத்தகைய அறிகுறிகள் இருந்தால் கருவில் இருப்பது ஆண் குழந்தை என்று அறியலாமாம்.


கருவில் இருப்பது பெண் குழந்தையாக இருந்தால்...

  • கருத்தரித்த பெண்ணுக்கு இடதுபக்க மார்பகமானது வலப்பக்க மார்பகத்தை விட பெரியதாகவும் சற்று பாரமானது போலவும் தோன்றுமாம்.
  • உட்கார்ந்து எழுந்திருக்கும் போது இடதுகையை உன்றிக் கொள்வார்களாம்.
  • முகத்தின் நிறத்தில் சிறிய மாற்றம் தென்படுமாம்.
  • அதிக சோம்பல் ஏற்படுவதுடன், சிற்றுண்டிகளில் அதிகம் பிரியம் ஏற்படுமாம்.

இவ்வாறான அறிகுறிகள் இருந்தால் கருவில் இருப்பது பெண் குழந்தை என்று அறியலாமாம்.


பெண்கள் கருவுறுதலில் இரண்டு வகையிருப்பதாக சித்தர் பெருமக்கள் கூறுகின்றனர். அவை மெய்கர்பம் மற்றும் பொய்கர்பம் ஆகும். மெய்கர்ப்பம் பற்றி விளக்க தேவையில்லை என்பதால், பொய்கர்பம் என்னவென பார்ப்போம்.

சில பெண்களுகு மாதாமாதம் வெளியேற வேண்டிய சூதமானது அதிகமான வாய்வு மற்றும் பல்வேறு காரணிகளால் வெளியேறாமல் கருவரையின் உட்புற சுவர்களில் படிந்து இறுகி கட்டி போலாகிவிடுமாம். இவ்வாறு தொடர்ந்து சூதனம் வெளியேறாது போனால் அவை மேலும் படிந்து பெரியதாகி விடுமாம்.இந்த கட்டியானது கருவறைக்குள் அசைந்து இடம் மாறுமாம். சில காலம் கழித்து பிரசவ வேதனை போல வலியேற்பட்டு வெளியேறிடுமாம். இதனை ஆரம்பத்தில் கண்டறிந்து உரிய மருந்துகளை உட் கொண்டால், இந்த கட்டிகள் சிதைந்து வெளியேறும் என்கின்றனர். அவ்வாறு கவனிக்கத் தவறினால் நாளடைவில் பல கோளாறுகளுக்கு வழிவகுக்கும் என்கின்றனர்.

இந்த இரண்டு கர்பங்களுக்கு இடையேயான வித்தியாசஙக்ளை கண்டறியும் முறைகளை சித்தர்கள் பின் வருமாறு வரையறுத்துக் கூறுகின்றனர்.
  • மெய்யான கர்ப்பம் தரித்த பெண்ணின் வயிற்றில் இரண்டு மண்டல காலம்(மூன்று மாதம்) எவ்வித அசைவோ, சலனமோ இருக்காதாம்.
  • பொய் கர்ப்பம் உள்ள பெண்களுக்கு ஆரம்பம் முதலே அசைவுகளும், சலனங்களும் இருக்குமாம்.
  • மெய்யான கர்ப்பத்தில் பெண்ணின் வயிறு படிப்படியா பெரிதாகுமாம்.
  • பொய்யான கர்ப்பம் உள்ள பெண்களுக்கு 25 முதல் 40 நாள்களுக்குள் வயிறு பெரியதாகி விடுமாம்.
  • மெய்யான கர்ப்பம் தரித்த பெண்ணின் வயிற்றில் விரலை வைத்து அழுத்தி எடுத்தால் ஏற்படும் பள்ளம் மெது மெதுவாக மறையுமாம்.
  • பொய்யான கர்ப்பம் உள்ள பெண்ணின் வயிற்றில் விரலால் அழுத்தி எடுத்தால் ஏற்படும் பள்ளமானது சடுதியில் மறையுமாம்.
  • மெய்யான கர்ப்பமானது பதினொரு மாதங்களுக்கு மேல் நீடிக்காதாம்.
  • பொய்யான கர்ப்பம் பல வருடங்கள் கூட நீடிக்குமாம்.

மருத்துவ அறிவியல் வளர்ந்து விட்ட இன்றைய சூழலில் இவையெல்லாம் பெரிதான தகவல்கள் இல்லைதான், ஆனால் எவ்வித அறிவியல் முன்னேற்றமோ, வசதியோ இல்லாத ஒரு காலகட்டத்தில் நமது மூதாதை ஒருவர் இதையெல்லாம் தன் நூல்களில் விரிவாக பாடி வைத்து விட்டு சென்றிருப்பது அன்றைக்கே மருத்துவ துறையில் நாம் எந்த அளவிற்கு உச்சத்தில் இருந்திருக்கிறோம் என்ப்தை பறை சாற்றுகிறதல்லவா...

இம்மாதிரி இன்னமும் எத்தனையோ பல அரிய தகவல்கள் ஆவணப் படுத்தப் படாமல் அழிந்து கொண்டிருக்கின்றன. அவற்றை நம்மால் இயன்ற வரையில் தேடியெடுத்து பாதுகாத்து,மேம்படுத்தி இனி வரும் தலைமுறைகளுக்கு கொடுத்திட வேண்டும்.

மேலும் சில தனித் தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன்.

  • ஒரு கயிறு அல்லது நூலை எடுத்து ஒரு பெண்ணின் ஐந்து விரல்களின் நீளத்தினை அளந்து, அந்தக் கயிற்றை முழங்கையில் இருந்து நடுவிரல் வரை அளந்து பார்க்க வேண்டும். அந்த கயிறு/நூல் துல்லியமாய் அந்த பெண்ணின் நடுவிரல் நுனியில் வந்து முடிவடைந்தால், அவள் கணவனுடன் பல வருடங்களுக்கு மேல் இணைந்து மகிழ்வுடன் வாழ்வாளாம். அவளது கணவன் உயர் பதவி வகிப்பானாக இருப்பான் என்கின்றனர்.
  • ஒரு வேளை அந்த நூலானது நடுவிரலில் நுனியை விட ஒரு கோடு தாழ்ந்து நிற்குமாயின்,அத்தகைய பெண் அறிவிற் சிறந்த, நீண்ட ஆயுளுடன் கூடிய பிள்ளைகளை ஈன்றெடுப்பாளாம்.
  • பெண்ணின் கைவிரல்கள் கூர்மையாக இருந்தால் அவள் ஓவியம் , நாட்டியம், இசை போன்ற கலைகள் ஏதேனும் ஒன்றில் சிறப்பான தேர்ச்சி உள்ளவளாக இருப்பாளாம்.
  • பெண்ணின் விரல்கள் பார்த்த மாத்திரத்தில் தாமரை மோட்டுக்கள் போல் இருந்தால் அத்தகைய பெண் மிகுந்த புத்திசாலியாகவும், தன் கணவனுக்கு சிறந்த ஆலோசனைகள் வழங்குவதில் மந்திரி போலவும் இருப்பாளாம்.
  • பெண்ணின் கையில் இருக்கின்ற ரேகைகள் சிவப்பு நிறமாக இருந்தால் உடல் நலம் மிக்கவர்களாகவும், அதே நேரத்தில் ரேகைகள் கருமையாக இருந்தால் நோய்க்கான அறிகுறி என்றும் அறிந்து கொள்ளவேண்டுமாம்.
  • பெண்ணின் மணிக்கட்டுகள் செம்மையாய் அமையப் பெற்றிருந்தால் அத்தகைய பெண்ணால் கணவனுக்கு செல்வம் பெருகுமாம்.
  • பெண்ணின் கைகள் தாமரை மலரைப் போலிருந்தால் மிகவும் நல்ல குணங்களைக் கொண்டவளாக இருப்பாளாம்.
  • பெண்ணின் உள்ளங்கைகள் அதிகக் குழியில்லாமலும் அதிக உன்னதமில்லாமலும் இருப்பது நன்மை அளிக்காதாம்.
  • உள்ளங்கை வரிகள் அல்லது உள்ளங்கையில் அதிக ரேகைகளையுடைய பெண்கள் விதவையாகாமல் நலத்துடன் வாழ்வார்களாம்.

  • இயல்பைக் காட்டிலும் குட்டையாகவோ,அல்லது அளவுக்கு அதிகமான உயரமாகவோ இருக்கும் பெண்கள் நீதிக்குப் புறம்பான காரியங்களை செய்யத் தயங்காதவர்களாக இருப்பார்களாம்.
  • உருண்டையான வடிவமும்,செழுமையான முடிகள் இல்லாத இடுப்பையுடைய பெண்கள் மிகுந்த அழகிகளாக இருப்பார்களாம்.
  • முடியில்லாத சன்னான கூர்மையுள்ள மார்பகங்களை உடைய பெண் எல்லாப் பாக்கியங்களும் பெற்றவளாக இருப்பாளாம்.
  • சாய்வாய் வக்கிரமாய் பார்க்கும் தன்மை கொண்ட பெண் விபச்சாரியாக இருப்பாளாம்.
  • யானையின் துதிக்கை போன்ற அமைப்புடைய தொடையும், அத்தகைய தொடைகள் சமனாகவும் இருந்தால் அவள் செல்வச்சீமாட்டியாக இருப்பாளாம்.
  • நேர்த்தியான உடல் அங்கங்களையும்,தாமரை மொட்டுப்போல குவிந்த மார்பகங்களாஇயும்,பூரணமான தொடைகளைக் கொண்டு பெண்யானைப் போல நடையும் கொண்ட பெண் அழகிய கண்களுடன் சிறந்த அதிர்ஷ்டசாலியாக இருப்பார்களாம். எந்த ஆடவரும் இவர்கள் அழகில் மயங்கிவிடுவார்களாம்.
  • மார்பகங்கள் வற்றி இருந்தாலும், ஒன்றுக்கொன்று பொருத்தமில்லாமல் இருந்தால் அத்தகைய பெண் வறுமையால் வாடுவாளாம்.
  • ஒரு பெண்னின் வயிறானது புள்ளிமானுடைய வயிறு போலிருந்தால் அவள் புமியை ஆளும் சக்தி கொண்ட பிள்ளையைப் ஈன்றெடுப்பாளாம்.
  • குயிலின் ஓசையை ஒத்த குரலில் பேசிச் சிரிப்பவர்கள் அதிக அதிர்ஷ்டம் உடையவர்களாம்.
  • பளபளக்கும் எண்ணெய்ப் பசையையுடைய பாதங்களையுடைய பெண்களிடம் நில புல்கன்கள், வாகனங்கள் போன்ற சொத்துக்கள் எப்போதும் நிறைந்திருக்குமாம்.
  • பாதங்களை திடும் திடும் என்று வைத்து நடந்தாலும், காலடிகள் நீண்டிருந்தாலும் கெடுதல் என்கின்றனர்.
  • பாதத்தின் விரல் நகங்கள் சிவந்து கண்ணாடி போன்றிருந்தால் நன்மை என்றும்,நகம் பிளந்து வெளிறிப் போயிருந்தால் துக்கம்தான் விளையுமாம்.
  • குளிர்ச்சியாகவும் சமமாகவும் உள்ள உள்ளங்கால்களையும், குவிந்த உள்ளங்கைகளைக் கொண்ட பெண் அரசியாவாளாம்.அவலை திருமணம் செய்கிறவன் பாக்கியவான் என்கின்றனர்.
  • தாமரை மொட்டை ஒத்த கணுக் கால்களும்,மிருதுவாகவும் வியர்வையில்லாத உள்ளங்கைகளும் அமையப்பெற்றிருந்தல் அவள் கல்வியறிவிலும், செல்வத்திலும் சிறந்து விளங்குவாளாம்.

சாமுத்ரிகா லட்சணம் - ஆண்

சாமுத்ரிகா லக்‌ஷனம் அல்லது அங்க லக்‌ஷணம் பற்றி இந்து மரபியலில் சமஸ்கிருதம்,தெலுங்கு,தமிழ் மொழிகளில் பழமையான நூல்கள் நமக்கு கிடைத்திருக்கின்றன. இவற்றுள் தமிழில் சித்தர் பெருமக்கள் தங்கள் பாடல்களில் தெரிவித்திருக்கும் கருத்துக்களை மட்டுமே இந்த தொடரில் தொகுத்தளிக்க இருக்கிறேன்.

மனிதர்களின் குணாதிசயங்களை அவர்களின் ஜீன்கள் நிர்ணயிப்பதாக நவீன அறிவியல் கூறுகிறது.ஒருவரின் தோற்றம், இயல்பு,குணாதிசயங்கள் போன்றவைகளில் பரம்பரையின் பாதிப்புகள் தொடர்கிறது எனவும் பல்வேறு ஆய்வுகளின் மூலம் நிறுவப் பட்டிருக்கிறது.நமது முன்னோர்கள் இதை இன்னமும் எளிமையாக் “அகத்தின் அழகு முகத்தில் தெரியும்” என்றார்கள்.

சாமுத்ரிகா லக்‌ஷணத்தை சோதிட இயலோடு தொடர்புடைய ஒரு கலையாகவே பலரும் கருதுகின்றனர். பழந் தமிழர்களைப் பொறுத்தவரையில் இது ஒரு வாழ்வியல் நடைமுறையாகவே இருந்திருக்கிறது. பிறப்பில் இருந்து இறப்பு வரையான அத்தனை அம்சங்களின் ஊடாக இந்த கலையின் பயன் பாட்டில் இருந்திருக்கிறது. மனித வளர்ச்சியில் ஊடாக உடலில் ஏற்படும் வளர்ச்சி, மாற்றங்கள் என இவை ஏற்படுத்தும் தாக்கங்களை மிக விரிவாகவே சித்தர்கள் தங்களின் பாடல்களில் பதிந்து வைத்திருக்கின்றனர்.

அகத்தியர், தேரையர்,போகர் போன்றவர்களின் பாடல்களில் இந்த அங்க லக்‌ஷணம் பற்றிய விவரிப்புகள் நிறைய காணக் கிடைக்கின்றன. ஆண், பெண் என இரு பாலாருக்கும் தனித்தனியே கூறியிருக்கின்றனர். ஒருவரின் அங்க அமைப்பு அவரின் இயல்புகளையும், அவர்களுக்கான பலன்களையும் தீர்மானிப்பதாக கூறுகின்றனர். தாங்கள் சந்தித்த பல் வேறு மனிதர்களை அவர்களின் இயல்புகளை ஆய்ந்தறிந்தே இதனை எழுதியிருக்க வேண்டுமென நம்புகிறேன்.


ஆண்களின் உடல் அமைப்பினை வைத்து அவர்களை நான்கு வகையாக அகத்தியர் அருளியிருப்பதை நேற்றைய பதிவில் பார்த்தோம். இவர்களை இனம் காண்பதைப் பற்றியும் அகத்தியர் தனது பாடல்களில் கூறியிருக்கின்றார். பதிவின் நீளத்தை கருத்தில் கொண்டு பாடல்களை தவிர்த்து பாடலின் கருத்துக்களை மட்டும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

விதவஸ்தசுபசாதி

இந்த வகை ஆண்கள் தங்களின் உயரத்திற்கு ஏற்ற சரியான உடல் வாகுடன் நேர்த்தியான அங்கங்களை கொண்டு, அழகிய உடற்கட்டினை கொண்டிருப்பார்கள் என்றும்,எப்பொழுதும் சூடான உணவையே விரும்பி உண்பவர்களாக இருப்பர் என்கிறார். பொதுவில் தூய்மையான நல்லொழுக்கமும் எப்போதும் உண்மையையே பேசும் இயல்பினராக இருப்பர் என்கிறார் அகத்தியர்.

பயிரபதி சாதி

இந்த வகை ஆண்களின் தலையானது உயர்ந்தும்,அகன்ற தடித்த நெற்றியினை கொண்டிருப்பர் என்கிறார்.மேலும் இவர்களின் காதுகள் வழக்கத்தை விட பெரியதாக இருக்குமாம். இத்தகையவர்கள் சூடான உணவை வெறுப்பவர்களாக இருப்பர். பொதுவில் இரக்க குணம் கொண்டவர்களாக இருப்பார்கள் என்கிறார் அகத்தியர்.

சாமசாதி

இந்த வகையான ஆண்கள் தோற்றத்தில் முரட்டுத் தனமாக தென் பட்டாலும் மனதளவில் மென்மையானவர்களாகவும், நல்ல இயல்பினராகவும், அன்புள்ளம் கொண்டவர்களாகவும் இருப்பர் என்கிறார். மேலும் சூடான உணவினை சிறிது சிறிதாய் ரசித்து உண்ணும் தன்மையுடைவர்கள் என்கிறார்.

பிரகாசாதி 

இந்த வகையான ஆண்கள் செம்மையான முகமும் நீண்ட வெண்மையான பற்களும் கொண்டவர்களாக இருப்பார்கள் என்றும். பொதுவில் இத்தகையவர்கள் கபடத்தனம் நிறைந்தவர்களாக, பொய் பேசும் இயல்பினராகவும் இருப்பர் என்கிறார்.

இது தவிர சித்தர்கள் மனிதர்களின் அவயங்களின் அமைப்பினை வைத்து அவர்தம் இயல்பினை கணித்தும் கூறியிருக்கின்றனர்.

ஆண்களைப் பொறுத்தவரையில் தலைமுடி, நெற்றி, கண், புருவம், கண்கள், மூக்கு, வாய், உதடு, பற்கள், நாக்கு, காது, மீசை, தாடிகள், மோவாய், முகம், கழுத்து, அக்குள், காரை எலும்பு, மார்பு, தொப்புள், முதுகு, கைகள், விரல்கள், உள்ளங்கைகள், நகங்கள், இடுப்பும் வயிறும், விந்து, பீஜங்கள், ஆண்குறி ஆகியவைகளின் அமைப்பினை வைத்து பலன் கூறியிருக்கின்றனர்.

அந்த வகையில் சில அவயங்களைப் பற்றிய குறிப்புகளை இனி பார்ப்போம்.



தலை முடி

  • தொடுவதற்கு மிருதுவாகவும்,அதே நேரத்தில் உறுதியான முடியையுடையவர்கள் மிகுந்த ஆண்மையுடையவர்களாம், இத்தகையவர்கள் குளிர்ச்சியுள்ள சரீரத்தையுடையவர்களாக இருப்பார்களாம்.
  • தொடுவதற்கு மிருதுவாகவும்,கீழே தொங்கிக் கொண்டிருக்கும் முடியுள்ளவர்கள் இரத்த பிடிப்புயுடையவர்களாயும்,உஷ்ண உடம்பை உடையவர்களாகவும் இருப்பார்களாம்.
  • அதிக அளவில் அடர்த்தியுடன், விரைந்து வளரும் இயல்புடைய முடியுடையவர்கள் எளிதில் உணர்ச்சிவயப்படுவார்களாக இருப்பார்களாம்.
  • அடர் கருப்பு நிறமாகவும், அதே நேரத்தில் சுருள் சுருளாயுமிருக்கிற முடி உடையவர்கள் அதிக உஷ்ணமுடையவர்களாக இருப்பார்களாம்.
  • நேராகவும், முடிவில் முள்ளம்பன்றியின் சிறு முள்ளைப் போலும் உள்ள முடியையுடையவர்கள் பயந்த சுபாவம் உடையவர்களாக இருப்பார்களாம்.
  • வழவழப்பானதும், வளைந்த முடி உள்ளவர்கள், நேர்மையானவர்களாயும், விஷய விவகாரங்களை எளிதில் புரிந்து கொள்ளும் தன்மையுடைவர்களாக இருப்பார்களாம்.
  • பளிச்சென பஞ்சு போல மிருதுவான முடி உடையவர்கள் பலவீனமானவர்களாகவும், நோயாளிகளாயுமிருப்பார்களாம்.

நெற்றி

  • அகலமான பரந்த நெற்றியை கொண்டர்கள் மன்னர்களும் பணிந்து வணங்கிடக் கூடிய திறமைபெற்றவர்களாக இருப்பார்களாம்.
  • அரைச் சந்திரனைப் போல நெற்றி யிருந்தால் செல்வந்தனாகவும், உயரமாகவும், சங்கு போன்ற கரடு முரடான நெற்றியுடைவர்கள் தரித்திரர்களாகவும், தசைப்பிடிப்பான நெற்றியுடையவர்கள் பாவிகளாவும் இருப்பார்களாம்.
  • உயர்ந்த, முக்கோண வடிவமுள்ள நெற்றியுடையவர்களிடத்தில் செல்வம் எப்போதும் குடிகொண்டிருக்குமாம். மேலும் உருண்டை வடிவமான நெற்றி உடையவர்கள் பிறக்கு ஈயாதவர்களாக இருப்பார்களாம்.
  • வியர்வை இல்லாமலும், உலர்ந்துள்ள நெற்றி உடையவர்கள் மிகுந்த துர்பாக்கிய சாலிகள் எனவும், போதுமான வியர்வையுடன், கொஞ்சம் மேடு பள்ளமும் உள்ள நெற்றியுடையவர்கள் வாழ்க்கையில் சந்தோஷத்தை அனுபவிப்பார்களாம்.
  • கீழ்நோக்கிய நெற்றியுடையவர்கள் அரக்க குணம் கொண்டவர்களாக இருப்பார்களாம். சதுரமான நெற்றியை உடையவர்கள் வீரதீரச் செயல் செய்யக்கூடியவர்களாக திகழ்வார்களாம்.
  • சுருக்கம் நிறைந்த நெற்றியை உடையவர்கள் கவனக் குறைவுடன் கீழ்த்தர எண்ணமும் உடையவர்களாகவும், ரேகை ஓடிய நெற்றிக்குச் சொந்தக்காரர்கள் அற்ப ஆயுளைக் கொண்டவர்கள் என்பதையும் பார்த்தவுடன் அறிந்துகொள்ள வேண்டுமாம்.
  • நெற்றியில் இரு ரேகைகள் மட்டும் இருப்பின் அவனது ஆயுட்காலம் அறுபதிலிருந்து எழுபது வரை மதிப்பிடலாமாம். அத்துடன் நெற்றியில் நான்கு ரெகைகள் மட்டும் ஓடுமாயின் அவன் அரசனாவானாம்.
  • நெற்றியில் ஐந்து ரெகைகள் மட்டும் ஓடுமாயின் மிகக்குறைந்த வயதே(45 முதல் 55 வருடம் வரை) உயிர்வாழ்வான் என்றும் அறிந்துகொள்ளலாமாம். மெலும் பல ரேகைகள் நெற்றியில் ஒடிக்கொண்டிருந்தால் அவன் மிகுந்த செல்வத்தொடும், 60 வயதுக்குமேல் சுகமாக வாழ்வானாம்.

புருவங்கள்

  • கண் புருவத்தின் முடிகளானது நீண்டதாக இருப்பின் சாதாரண மனிதர்களாகவும், தீமை பயக்கும் எண்ணத்தை உடையவர்களாகவும் இருப்பார்களாம்..
  • புருவங்கள் குறுகலாகவும், ஒடுக்கமாயும், ஒரே சீராகவும் இருந்தால் அவர்கள் நன்னடைத்தை உடையவர்களாவும், நேர்மை மிக்கவர்களாவும், நல்லொழுக்கம் மிக்கவர்களாவும் இருப்பார்களாம்..
  • புருவங்களில் இயற்கையாகவே மடிப்புகள் விழுந்திருந்தால் அவன் மரியாதையில்லாதவனாகவும், பொறாமை உடையவனாகவும் இருப்பானாம்.
  • எவனொருவன் கண்களின் மேல் முடிகள் குட்டையாகவும்,சிறியதாகவும் அமையப் பெற்றிருக்கிறானோ, அவன் சிறந்த அறிவாளியாகவும், இரகசியம் காப்பவனாகவும் இருப்பானாம்.
  • கண்களின் இமைகளில் நீளமாக இருந்தால் அவன் சட்ட வல்லுநராக இருப்பானாம். இமைகளில் அதிக ரோமம் இருப்பின் புத்தி மந்தமாக இருக்குமாம்.
  • விசாலமாகவும், விரிவாகவும் உள்ள புருவங்களை உடையவன் ஏழையாக இருப்பானாம்.
  • இமைகள்நீளமாகவும், ஒன்றோடொன்று பொருந்தாமலும் இருப்பவன் செல்வந்தனாக இருப்பானாம்.அரைச் சந்திரனைப் போன்ற புருவங்களையுடையவர்களும் செல்வர்கள் போல் வாழ்வார்களாம். இரண்டு புருவங்களுக்கும் மத்தியில் வெட்டுடையவர்கள் வறியவர்களாக இருப்பார்களாம்.
  • புருவங்கள் கீழ் நோக்கிச் சரிந்திருந்தாலும், அமுக்கப்பட்ட புருவங்களை உடையவர்களும் பெண் சுகத்தை அனுபவிக்கத் தகுதியில்லாதவர்களாக இருப்பார்கள். அவர்களால் பெண்ணைத் திருப்தி செய்ய இயலாதென்றும், ஆண்மை குன்றியிருக்கும் தன்மை படைத்தவர்களாக இருப்பார்களாம்.

கண்கள்

  • பெரிய கண்களை உடையவர்கள் இயல்பில் சோம்பேறிகளாகவும், சிறந்த மதியுகம் உடையவர்களாகவும், செயல்வீரர்களாகவும், தீரர்களாகவும், நடத்தை கெட்டவர்களாகவும், கடவுள் பக்தி இல்லாதவர்களாகவும் இருப்பார்களாம்.
  • ஆழமான கண்களை உடையவர்கள் பெரிய மனதை உடையவர்களாகவும், சந்தேக எண்ணங் கொண்டவர்களாகவும் இருப்பார்களாம்.
  • கூர்மையும், தீர்மான கண்களையும், சாய்வான கண் இமைகளையுடையவர்கள் போக்கிரிகளாகவும், அநியாயம் செய்யும் எண்ணமுடையவர்களாகவும் இருப்பார்களாம்.
  • கோவெறு கழுமையைப் போன்ற சிறிய கண்களை உடையவர்கள் மந்தப் புத்தி உடையவர்களாகவும், பிறர் சொல்வதை உடனே நம்பிவிடக் கூடிய மனநிலையை கொண்டவர்களாக இருப்பார்களாம்.
  • தாமரை இதழ் பொன்ற கண்களையுடையவர்கள் அறிவு ஜீவிகளாக, ஆற்றல் மிக்கவர்களாகவும் இருப்பார்களாம். சிறிய கண்களை உடையவர்கள் யானையைப் போன்ற பலசாலியாகவும் போர் வீரனாகவும் இருப்பார்களாம். பூனையின் கண்களைப் போன்று உடையவர்கள் பாவம் உடையவராவார்களாம்.
  • வெண்மை கலந்த கண்களையுடையவர்கள் கலை, இலக்கிய ஈடுபாடும், சமூக மாற்றத்திற்குப் போராடும் குணங்களைக் கொண்டவர்கள் என்பதை அவர்களைப் பார்த்த மாத்திரத்தில் அறிந்து கொள்ள வேண்டுமாம்.சித்திரத்தை நினைவூட்டும் கண்களை உடையவர்கள் அரசராகத் தகுதிப்பெற்றவர்களாக இருப்பார்களாம்.
  • உருண்டை வடிவமான கண்களையுடையவர்கள் பாவச்செயல்களைச் செய்வதில் தேர்ச்சி பெற்றிருப்பார்களாம். இவர்களிடம் பழகுதல் கூடாதாம்.
  • செங்கழுநீர்ப் பூ போன்ற கண்களை உடையவர்கள் கல்வி, கேள்விகளில் சிறந்தவராகவும், நீதிக்கம் நேர்மைக்கு எடுத்துக்காட்டாகவும் விளங்குவார்களாம்.
  • கலைமானின் கண்களைப் போன்ற கண்களையுடையவர்கள் ஆடம்பரப் பிரியர்களாகவும், தந்திரம் உடையவர்களாகவும் இருப்பார்களாம்.

மூக்கு
  • பெரிய மூக்கை உடையவர்கள் பொய்மையுடையவர்களாகவும், கலகக் காரர்களாகவும், பெண்பித்தர்களாகவும் இருப்பார்களாம்.
  • பெரியதாகவும்,தொங்கிக் கொண்டிருப்பதைப் போலவும் காணப்படும் மூக்கை உடையவர்கள் பேராசை கொண்டவர்களாகவும், தாங்கள் செய்யும் செயல்களை இரகசியமாகப் பேணுபவர்களாகவும் இருப்பார்களாம்.
  • முகத்திற்க்குப் பொருத்தமாவும்,அளவில் பெரியதான மூக்கை உடையவர்கள் உற்சாகமும் அமைதியும் கொண்டவர்களாகவும், பல விஷயங்களை தெரிந்து கொள்ளும் ஆர்வம் அதிகமுள்ளவர்களாகவும் இருப்பார்களாம்..
  • புள்ளிகள் அதிகம் உள்ளமூக்கை உடையவர்கள் அதிகம் கர்வம் கொண்டவர்களாகவும் வீணர்களாகவும் இருப்பார்களாம்.மூக்கின் நுனிப்பகுதியில் உரோமம் கொண்டவர்கள் வாழ்வில் எந்தசிறப்பும் அடைய முடியாதவர்களாக இருப்பார்களாம்.
  • மூக்கு நீண்டு நுனி கிளியின் மூக்குப் போல வளைந்தும் இருந்தால் அதி புத்தி சாலிகளாகவும், அத்துடன் உலக அனுபவங்களில் சிறந்தவர்களாகவும் இருப்பார்களாம்.
  • தடிப்பு குறைந்த மூக்கை உடையவர்கள் ஆயுள் அதிகம் கொண்டவர்களாக இருப்பார்களாம்.நீண்ட மூக்கை உடையவர்கள் நல்ல அதிஷ்டம் உள்ளவர்களாகவும் வளமான வாழ்வு வாழ்பவர்களாகவும் இருப்பார்களாம். தட்டையான மூக்கை உடையவர்கள திருடர்களாக இருப்பார்களாம்.
  • சதைப்பாங்குடன் அழுத்தமான மூக்கை உடையவர்கள் உயர் பதவிகள் வகிப்பார்களாம்.மூக்கின் நுனிப்பகுதி சப்பையாக இருந்தால் அவர்களுக்கு காம உணர்ச்சிக் குறைவும் ஆண்மைத் தன்மையும் இல்லாதிருக்குமாம்.


வாய்

  • வாய் பெரிதாகவும் அகலமாகவும் இருப்பவர்கள சாப்பாட்டுப் பிரியர்களாக இருப்பார்களாம்.சிறியவாயை உடையவர்கள பயந்த சுபாவமும், நிதானமானவர்களாகவும் இருப்பார்களாம்..
  • குவிந்த அழகிய வாயை உடையவர்கள் பொய்பேசுபவர்களாகவும், வாயாடியாகவும் இருப்பார்களாம்.சிவந்த வாயை உடையவர்கள் சுக போகங்களை அனுபவிப்பார்களாம்.

உதடு

  • உதடு சிவப்பு நிறமாகவும், தாமரை இழழ்போன்றுமிருந்தால் அரசன் போல் வாழ்வார்களாம்.மேடு பள்ளமான உதடுகள் இருந்தால் தரித்திர வாழ்வு இருக்குமாம்.
  • கீழ் உதடு கோவைப் பழத்தைப்போல இயற்கையாகவே செம்மையாக அமையப்பெற்றவர்கள் பொன், பொருள், வீடு, நிலம் தனமுடையவர்களாகவும், நல்ல மரபினைச் நெர்ந்தவர்களாகவும் இருப்பார்களாம்.
  • கீழ் உதடு அதிகப் பருமனாக அமைந்திருப்பவர்கள் அளவுக்கு மீறிய கற்பனை சக்தியுடையவர்களாகவும், இனிமையாகப் பெசும் ஆற்றல் படைத்தவர்களாகவும் இருப்பார்களாம்.
  • பிளவுப்பட்டிருக்கும் உதடுகளையுடைவர்கள் குற்றமனம் உடையவர்களாகவும், வலுச்சண்டையிடும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்களாம்.
  • லேசாகவும், மிருதுவாகவும், சிறியனவாகவும், உதடு அமைந்திருந்தால் அவர்கள் வாயாடிகளாகவும் பேச்சுத்திறன் பெற்றவர்களாகவும் இருப்பார்களாம்.

பற்கள்

  • சிறியனவாகவும், கெட்டியாகவும் பற்கள் இருந்தால் சிறப்பு.கூர்மையாகவும் சமனாகவும் பற்கள் அமைந்திருந்தாலும் சிறப்புத்தான்.
  • சங்கைப்பொல அதிக வெண்மையாகவும், நுனி கூர்மை பெற்றும் இருந்தால் அவர்கள் சுகவாசிகளாகவும், சத்தியம் தவறாதவர்களாகவும் இருப்பார்கள்.
  • நீளமாகவும் ஒரு பக்கம் குட்டையாகவும், மறுபக்கம் நீண்டும் பற்கள் அமைந்திருந்தால் அவர்கள் எதற்க்கும் கவலை கொள்ளாதவர்களாக இருப்பார்களாம்.
  • அகலமான, நெருக்கமில்லாமல் பற்கள் அமைந்திருப்பின் இவர்கள் நிதானமில்லாதவர்களாகவும், அவசரப்புத்திக்காரர்களாக இருப்பார்களாம்.

காது 
  • விசாலமானதாகவும், முகத்துக்கு பொறுத்தமில்லாத பெரிய காதுகளை உடையவர்கள் சக்தியற்றவர்களாகவும் சோம்பேறிகளாகவும் இருப்பார்களாம்.
  • சிறிய காதுகளை உடையவர்கள் எதிலும் பொறுமை காட்டி, சாதுர்யமான காரியங்களை முடிக்கும் ஆற்றல் படைத்தவர்களாக இருப்பார்களாம். ஆனால் மிகவும் சிறிய காதுகளை உடையவர்கள் பொறுப்பற்றவர்களாக இருப்பார்களாம்.
  • சிவந்த காதுகளைக் கொண்டவர்கள் நீதிக்கும் நேர்மைக்கும் எடுத்துக்காட்டாக திகழ்வார்களாம்..
  • சிறப்பாகவும் முகத்துக்கு மிகவும் பொருத்தமான காதுகளையுடையவர்கள் புத்திசாலிகளாகவும் எதையும் செம்மையாகச் செய்யக்கூடிய விழிப்புடனும் இருப்பார்களாம்.அத்துடன் அவர்கள் சிறந்த தைரியசாலியாகவும் இருப்பார்களாம்.
  • கொஞ்சம் நீளமான காதையுடையவர்கள் அதிக பலமுள்ளவர்களாகவும் நாணமில்லாதவர்களாகவும் இருப்பதுடன்,அதிக சுவையான உணவை விரும்பி
  • உண்பவர்களாகவும், போஜனப் பிரியர்களாகவும் இருப்பார்களாம்.
  • காதின் கீழ்பகுதி விசாலமாக காணப்படுபவர்கள் பணம் படைத்தவர்களாக இருப்பார்களாம்.இவர்களிடம் செல்வம் தொடர்ந்து சேர்ந்து கொண்டே இருக்குமாம் .
  • காதுகள் மேடு பள்ளங்களோடும் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் அமையப் பெற்றவர்களுக்கு புகழ் தானாக வந்து சேருமாம். த்துடன் அவர்கள் ஞானிகளாகவும் விளங்குவார்களாம்.

நாக்கு
  • நாக்கு நீளமாய் இருப்பது மேன்மையைத் தருமாம். மேலும் நீல வர்ணமாக இருந்தால் அதுவும் அதிக மேன்மையைத் தருமாம்.
  • நாக்கு வெண்மையான தகடுபோன்றிருந்தால் நல்லதல்ல. எத்தனை செல்வமிருந்தாலும் அழிந்துவிடுமாம்.
  • நாக்கின் நுனி கூர்மையுடையதாகவும் நுண்ணியதாகவும் அமையப்பெற்றிருந்தால் சிறந்த மதியூயாகியாகவும், ஞானியாகவும் இருப்பார்களாம்.
  • வறண்டு, வெளுத்துப்போன நாக்கையுடையவர்கள் சொத்துக்கள் விரயம் செய்பவர்களாக இருப்பார்களாம். இவர்களுக்கும் உழைப்பில் ஆர்வமில்லாது இருப்பதுடன் சோம்பேறித்தனமும் வந்துவிடுமாம்.
  • சிவந்த நாக்கினையுடையவர்கள் சிறப்புக்குரியவர்களாக இருப்பார்களாம் இவர்களுக்குச் சிறந்த வாக்குச்சாதுரியமும், பிறரை ஈர்க்கும் தன்மையுடைய பேச்சும் இருப்பதுடன் கவர்ச்சிகரமான பேச்சுக்கு சொந்தக்காரர்களாகவும் இருப்பார்களாம்.
  • சொரசொரப்பான நாக்கை உடையவர்கள் நல்ல சுவையை விரும்புவார்களாம் அதாவது போஜனப் பிரியர்களாக இருப்பார்களாம்.

மீசை, தாடிகள்
  • மெல்லியதாகவும், மென்மையாகவுமுள்ள மீசை தாடியுடையவர்கள் மெலிந்த தோற்றத்தோடும் பயந்த சுபாபம் உள்ளவர்களாகவும் இருப்பார்களாம.
  • தேவையான அளவு அடர்த்தியுடனும்,நேர்த்தி மிக்கதுமான மீசை தாடியை உடையவர்கள், நல்ல குணமுள்ளவர்களாகவும், நியாயமிக்கவர்களாகவும், தாங்கள் சொல்வதைச் சிறப்பாக செய்து முடிக்கும் ஆற்றல் மிக்கவர்களாகவும் இருப்பார்களாம்..
  • மீசை தாடியின் ரோமங்கள் கருத்தும் மிகுந்த அடர்த்தியுடன் சிங்கத்தின் பிடரியைப் போன்று அமைந்திருப்பின் அவர்கள் தீர்க்க ஆயுளுடன், புத்தியின் துணைகொண்டு எதிரிகளை வென்றெடுக்கும் ஆற்றல் பொருந்தியவர்களாகவும் இருப்பார்களாம்.


மோவாய்

  • சிறிய குறுகிய மோவாயை உடையவர்கள் பொறாமை கொண்டவர்களாகவும் எண்ணத்தில் சுத்தம் இல்லாதவர்களாகவும் இருப்பபார்களாம்.
  • சதுரமான முகவாய்கட்டு அமையப் பெற்றவர்கள் துணிச்சலான மிக்க வலிமையுடையவர்களாக இருப்பார்களாம்.
  • சதைப்பிடித்தமுள்ள மோவாயையுடையவர்கள் செல்வந்தவர்கள் இருப்பார்களாம்.
  • ஒட்டிப்போன முகவாய்கட்டையுடையவர்கள் பொறாமை குணமுடையவர்களாக இருப்பார்களாம்.

கைகள் - விரல்கள் - உள்ளங்கை
  • கைகள் தடித்தும் சதைப்பிடிப்போடும், முழங்கால் வரை நீண்டு இருந்தால் அவர்கள் அரசர்களாக ஆவார்களாம்.
  • கட்டையான மயிர் முளைத்த கைகளையுடையவர்கள் தரித்திரகளாக இருப்பார்களாம்.
  • மணிக்கட்டில் உண்டான ரேகை நடுவிரலோடு கலந்தாக அமைந்திருப்பவர்கள்ஏராளமான நிலத்துக்குச் சொந்தக்காரர்களாக இருப்பார்களாம்.
  • கையில் இருக்கின்ற ரேகைகள் சிவப்பு நிறமாக இருந்தால் உடம்புக்குச் சிறப்பையும், அதே நேரத்தில் ரேகைகள் கருமையாக இருந்தால் நோய்க்கான அறிகுறி என்றும் அறிந்து கொள்ளவேண்டுமாம்.
  • குழியான உள்ளங்கையும், மிக நெருக்கமான விரல்கள் இருந்தால் ஏராளமான பொருள்களுக்கு சொந்தகாரனாக இருப்பானாம்.
  • ஒரு கயிறு அல்லது நூலை எடுத்து ஐந்து விரல்களையும் அளந்து அந்தக் கயிற்றை முழங்கையில் இருந்து நடுவிரல் வரை அளந்து பார்க்க வேண்டும். அது துல்லியமாய் நடுவிரல் நுனியில் வந்து முடிவடைந்தால் அவன் நூறாண்டுக்கு மேல் வாழ்வானாம்.
  • அந்த நூலானது நடுவிரலில் நுனியை விட ஒரு கோடு தாழ்ந்து நின்றால் அவன் நல்ல புத்திரர்களையும் சிறந்த செல்வத்தையும் கொண்டவனாக இருப்பானாம்.
  • கைவிரல்கள் கூர்மையாக இருந்தால் அவன் ரகசிய சாஸ்திரங்களை கற்றறிந்தவனாக இருப்பானாம்.
  • விரலின் நுனிப்பகுதி மெத்தமாயும் பருத்தும் இருந்தால் அவன் திருடனாக இருப்பானாம்.
  • விரல்களைப் பார்த்த மாத்திரத்தில் புலியின் விரல்களைப் போன்ற விரல்களைக் கொண்டவர்கள் மிகுந்த பலசாலிகளாக இருப்பார்களாம்.

நகங்கள்
  • விகாரமாகவும் நிறமற்ற நகங்களைக் கொண்டவர்கள் எப்போதும் மற்றவர்களிடத்தில் அடிமைத்தொழில் செய்வார்களாம். கரடுமுரடான உடைந்த நகங்களையுடையவர்கள் ஏழையாக இருப்பார்களாம்.
  • பெருவிரல் நகத்தின் மேல் பாகத்தில் கோதுமை போன்ற அடையாளத்தை உடையவர்கள் பெரும் செல்வந்தராக இருப்பார்களாம்.அகண்ட நகங்களையுடையவர்கள் கூச்சமுடையவர்களாகவும், பயந்த சுபாவம் உடையவர்களாகவும் இருப்பார்களாம்.
  • நகங்களின் முனைப்பாகத்தில் வெள்ளைப் புள்ளியிருந்தால் அவர்கள் கண்ணியமுடையவர்களாகவும் நுண்ணிய சிந்தனை உடையவர்களாகவும் இருப்பார்களாம்.
  • நகங்களின் ஆரம்பத்தில் சிவப்பு கலந்த பலவித வர்ணமான புள்ளிகள் இருந்தால் அவர்கள் அதிக கோபமுடையவர்களாகவும், சண்டை கோழிகளாய் இருப்பார்களாம்.
  • நகங்களில் முனையில் கருப்பு நிறமிருந்தால் அவர்கள் விவசாயிகளாக இருப்பார்களாம்.கோணலான நகங்களையுடையவர்கள் மோசக்காரர்களாக இருப்பார்களாம்.சிறியதாகவும், உருண்டை வடிவமாகவும் உள்ள நகங்களை உடையவர்கள் பிடிவாதக்காரர்களாக இருப்பார்களாம்.

மார்பு 

  • சந்திரனுடைய பிறையை போல் எடுப்பான மார்பை உடையவர்ன் வசீகரிப்பவனாய் இருப்பானாம்.அத்தனை எடுப்பான மார்பு இல்லாது இருப்பவன் எடுத்ததெல்லாம் வெற்றி பெருமாம்.
  • உன்னதமாகவும் ,சதை பிடிப்போடும், சுருக்கமோ,அதிர்வோ இல்லாத மார்பை உடையவர்கள் அரசாள்வார்களாம்.மேலும் அவர்கள் நரம்பு மயமான சதைபிடிப்புள்ள பலமான மயிர்கள் கீழ்நோக்கி அமையப் பெற்றவர்களாக இருப்பார்களாம்.
  • தட்டையான சமமான மார்பினை உடையவன் தனவந்தனாக இருப்பானான். இலந்தைப் பழத்தைப் போல மார்பை உடையவன் அதிக சக்தியுடைய்வனாக இருப்பானாம். சமமில்லாத மார்பினை உடையவர்கள் தரித்திரர்களாகவும்,ஆயுதங்களால் கொல்லப் படுபவர்களாகவும் இருப்பார்களாம்.

தொப்புள்

  • தொப்புள் பெரியதாக இருப்பவன் தாம்பத்ய உறவில் அதிக நாட்டமுடையவனாக இருப்பானாம்.மீனை போன்ற தொப்புள் உடையவர்கள் நிம்மதியும், மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்க்கை வாழ்வார்களாம்.
  • தாழ்ந்த தொப்புள் உடையவன் அகால மரணமடைவான் .ஒரு பக்க மடிப்பு இருக்குமானால் நீண்ட ஆயுளை உடையவன். இரு மடிப்புகள் காணப்பட்டால் பெரும் செல்வந்தர்களாகவும், எப்போதும் மன நிறைவோடும் காணப்படுவார்கள்.
  • தொப்புளில் காணப்படும் ஒற்றை மடிப்பு நடுவில் அமையாமல் பிறிதொரு பக்கத்தில் அமைந்திருந்தால் நீண்ட காலம் நலமாக வாழ்வார்கள்.
  • தாமரை உள்ளிருக்கும் விதையின் மேல் தோலை போலிருந்தால் அவன் அரசனாவான்.மூன்று மடிப்புகள் இருந்தால் மற்றவர்களுக்கு வழிக்காட்டும் ஆசானாக வருவான்.
  • விரிவாகவும் உன்னதமாகவும் தொப்புள் ஏழைகளுக்குண்டு, உன்னதமான தொப்புளை உடையவர்கள் அற்ப ஆயுளை உடையாவர்கள்.
  • தொப்புளில் இருக்கும் மடிப்பு நேராயிருக்குமாயின் அவன் மகிழ்ச்சி அடைவான். மடிப்பு விலகியிருக்குமாயின் அவன் பெண்களுக்கு பிரோஜனமற்றவனாக இருப்பான். தாம்பத்திய சுகம் அனுபவிக்க லாயிக்கற்றவன்.

முதுகு 

  • மயிர் முளைக்கப் பெற்ற முதுகையுடையவன் சிற்றின்ப பிரியனாக இருப்பான். ஆமையின் முதுகை போல் இருந்தால் அரசனாவான்.
  • குதிரையின் முதுகை போல் இருப்பின் பெண்ணாசை அதிகமாயிருக்கும். முடி இல்லாமல் பளிங்கு போன்ற வழுவழுப்பான முதுகையுடையவர்கள் சுகவாசியாக இருப்பார்கள்.

திங்கள், 28 மார்ச், 2016

செவ்வாய் தோஷம்

லக்னத்திற்கு அல்லது சந்திரனுக்கு 2, 4, 7, 8, 12ம் இடங்களில்செவ்வாய் அமர்ந்தால் அது செவ்வாய் தோஷம் ஆகும். அத்துடன் சுக்கிரனுக்கு 2, 4, 7, 8 12ல் இருந்தாலும் செவ்வாய்தோஷம்தான் என்று சிலர் சொல்கின்றனர். லக்கினத்திற்கு மட்டும் செவ்வாய் தோஷம் அது முழு தோஷம் என்றும், சந்திரனுக்கு மட்டும் இருந்தால் அது அரைபங்கு தோஷம் என்றும் இரண்டுக்கும் இருந்தால் கடுமையான தோஷம் என்றும் ஒரு சில ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
இன்னும் சில ஜோதிடர்கள் லக்கினப்படி உள்ள பரிகார செவ்வாயை சந்திரனுக்கு உள்ள சுத்த செவ்வாயை பொருத்தலாம் என்றும் கூறுகின்றனர்.
லக்னத்திற்கு அல்லது சந்திரனுக்கு 2, 4, 7, 8, 12ம் இடங்களில்செவ்வாய் அமர்ந்தாலும் கீழுள்ள நிலைகளில் செவ்வாய்இருந்தால் செவ்வாய் தோஷம் இல்லை.
1. மேற்படி 2, 4, 7, 8, 12 மிடங்கள் செவ்வாயின் ஆட்சி வீடாகிய மேஷம், விருச்சிகம் நீச்ச வீடாகிய கடகம், உச்ச வீடாகிய மகரம் ஆகிய ராசிகளாக இருந்து அங்கே செவ்வாய் இருந்தால் தோஷம் இல்லை.
2. குருவின் வீடுகளிலோ, குருவுடன் இணைந்தோ, குருவின் பார்வையைப் பெற்றிருந்தாலோ தோஷம் இல்லை.
3. சுக்கிரனின் வீடுகளான ரிஷபம், துலாமில் இருந்தாலும் தோஷம் இல்லை.
4. சுக்கிரனுக்கு நான்கு, ஏழு, பத்து ஆகிய கேந்திரங்களில்செவ்வாய் இருந்தாலும் தோஷம் இல்லை.
5. மேற்கண்ட வீடுகளில் செவ்வாய் சந்திரனுடனோ, புதனுடனோ அல்லது இருவரும் சேர்ந்து இணைந்திருந்தாலோ தோஷம் இல்லை.
6. ராகு, கேதுக்களுடன் செவ்வாய் நெருக்கமாக இணைந்து பலவீனம் பெற்றிருந்தால் தோஷம் இல்லை.
7. மேஷம் விருச்சிகம் கடகம் சிம்மம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் எங்கிருந்தாலும் தோஷம் இல்லை
8. சிம்மத்தில் செவ்வாய் இருந்தால் தோஷம் இல்லை.
9. செவ்வாய் சனியுடன் இணைந்தால் தோஷம் இல்லை
10. அஸ்தமன செவ்வாய்க்கு தோஷம் இல்லை.
11. செவ்வாய் பரிவர்த்தனை பெற்றிருந்தால் தோஷம் இல்லை.
12. மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தோர் இற்கு தோஷமில்லை

மணமக்கள் இருவரில் ஒருவருக்கு செவ்வாய் தோஷம் இருந்து, மற்றவருக்கு இல்லாவிட்டால் செவ்வாய் தோஷம் இல்லாதவர் மரணம் அடைவார், என்பது பெரும்பாலான ஜோதிடர்களின் கருத்தாக இருக்கிறது. இந்தக் கருத்து தவறானது. வாழ்க்கைதுணை மரணம் அடைய வேண்டும் என்றால் அதற்கு பல விதிகள் பொருந்தியிருக்க கணவனின் ஜாதகத்தில் அவரது ஆயுள் ஸ்தானமும் பார்க்கப்பட வேண்டும். மிக அரிதாகவே இதுபோன்ற அமைப்பில் கணவனின் ஆயுளை செவ்வாய்பாதிக்கிறார். அனுபவத்தில் பெரும்பாலும் கணவனுக்கும் மனைவிக்கும் பிரிவினை மட்டுமே வருகிறது. செவ்வாய்குற்றத்தை மட்டும் வைத்து கூறுவது முட்டாள்தனமான செயல். செவ்வாயின் பார்வை வலு முறையே 7, 8 , 4 என்ற வகையில் அமையும். அதாவது தனது 4ம் பார்வையை விட தனது 8ம் பார்வை மூலம் அதிகமான பலனை தருவார். செவ்வாய்வீரியத்தைக் குறிக்கும் கிரகம். பொதுவாக செவ்வாய்வலுப்பெற்றவர்கள் தாம்பத்திய உறவில் சற்று அதிகமான ஆர்வம் உள்ளவர்களாக இருப்பார்கள். அதற்கேற்ற உடல் தகுதியும் அவர்களுக்கு இருக்கும். மேலும் முரட்டுத்தனமான உறவில் ஆர்வமும் ஈடுபாடும் இவர்களுக்கு இருக்கும். சில நிலைகளில் இயற்கைக்கு மாறான உறவிலும் வேட்கை கொண்டவர்களாக இவர்கள் இருப்பார்கள். செவ்வாய் தோஷம் உள்ளோருக்கு செவ்வாய் தோஷம் இருக்கும் ஜாதகமே பார்க்கப்பட்டு திருமணம் நடத்தப்படுகிறது.

புதன், 25 நவம்பர், 2015

ராசிக்கல்

ராசிப்படி மேற்கண்ட கிரகங்களுக்கான கற்களை ஒருவர் அணிவதாக வைத்துக் கொண்டால், தனக்கு கெடுதல் செய்யும் அஷ்டமாதிபதியை ராசிநாதனாக கொண்டவர் ராசிப்படி கல் அணியலாமா?

உதாரணமாக விருச்சிக லக்னம் மிதுனராசியில் பிறந்தவர் மரகதப் பச்சையை மோதிரமாகக் கொள்ளலாமா? கன்னி லக்னம் மேஷராசியில் பிறந்த ஒருவர் பவளத்தை அணியலாமா?

ராசிப்படி ஒருவர் ராசிக்கல் அணிவது முற்றிலும் தவறு.ராசிநாதன் அவரது லக்னப்படி பாதகாதிபதியாகவோ, ஜாதகருக்கு லக்னப்படி தீமை செய்யும் பகைக்கிரகமாகவோ இருந்தால் கற்கள் அணிந்தவுடன் கெடுதல்கள் நடக்கும். சிலர் இந்த மோதிரம் போட்டதிலிருந்து எனக்கு தலை வலிக்கிறது. அன்றே வண்டியிலிருந்து கீழே விழுந்துவிட்டேன் என்று சொல்லுவது இதனால்தான்.

ஒருவரின் பிறந்த ஜாதகம் ஒரு முழுமையான ஜோதிடரால் தீர்க்கமாக ஆராயப்பட்டு லக்னமோ, லக்னாதிபதியோ பலவீனம் அடைந்திருந்தால் லக்னாதிபதியை வலுவாக்கும் விதமாக அந்தக் கிரகத்தின் வலுவைக் கூட்டும் விதமாக லக்னாதிபதியின் ரத்தினத்தை வாழ்நாள் முழுவதும் வலது கை மோதிர விரலில் அணிய வேண்டும்.

லக்னாதிபதிக்கு ஆறு, எட்டு என மறு ஆதிபத்தியம் இருந்தால் லக்னாதிபதி இருக்கும் இடம், மற்றும் அவரது மூலத்திரிகோணாதிபத்தியம் ஆகியவற்றை வைத்து முடிவெடுக்க வேண்டும்

ஒருவருக்கு நன்மை தரும் கிரகம் பலவீனம் அடைந்து (5,9 போன்ற யோகாதிபதிகள்) அவர்களுடைய தசையும் நடக்குமானால் அந்தக்கிரகத்தின் நன்மைகளைக் கூட்டிக் கொள்ள அந்தக் கிரகத்திற்குரிய ரத்தினத்தை வலதுகை ஆட்காட்டி விரலில் அணியலாம்.

தீமை தரும் கிரகத்தின் ராசிக்கல்லை எந்தக் காரணம் கொண்டும் அணியக்கூடாது. ராசிக்கல் என்பது ஒரு கிரகத்தின் வலிமையை அதிகப்படுத்துவதற்காக மட்டுமே. கெடுதல் செய்ய விதிக்கப்பட்ட கிரகக் கல்லை அணிந்தால் அந்தக் கிரகத்தின் வலிமை அதிகமாகி இன்னும் அதிகமான தீமைகளைச் செய்யும். கல்லை அணிவதால் கெட்டகிரகம் நன்மை செய்யும் என்பது தவறு.

அதேபோல நவரத்னங்கள் ஒன்பதுதான். ஆனால் அவற்றுள் ஏராளமான வகைகள் உள்ளன. உதாரணமாக புஷ்பராகத்தில் பத்மபுஷ்பராகம், நீலத்தில் இந்திர நீலம் என நிறைய வகைகள் உண்டு. ஒரு தேர்ந்த முழுமையான ஜோதிடரால் மட்டுமே இவர் நீலம் அணியலாமா அல்லது இந்திரநீலம் வேண்டுமா என துல்லியமாக கணிக்க முடியும்.

6,8க்குடையவர்களின் ராசிக்கல்லை கண்ணெடுத்தும் பார்க்கக் கூடாது. பாதகாதிபதியின் ராசிக்கல்லும் அப்படியே... (பாதகாதிபதி ராசிநாதனாக வந்தாலும்அணியக் கூடாது)

ராகுகேதுக்களின் தசை நடக்கும் போது அவர்கள் இருந்த ராசியின் அதிபதி லக்னசுபராகி அவர் வலிமை குறைந்திருந்தால், அந்த ராகு,கேதுக்கள் இருக்கும் ராசிக்கு அதிபதியின் கல்லை அணியலாம்.

ராகு,கேதுக்கள் 3,11ல் இருந்தால் மட்டுமே அவர்களின் ராசிக்கற்களை இடது கையில் அணியலாம். அல்லது அவர்கள் லக்ன சுபரின் வேறு வீட்டில் இருந்தால் அணியலாம். உதாரணமாக மிதுன லக்னத்திற்கு 12ல் ரிஷபத்தில் ராகு இருந்தால் கோமேதகம் அணியலாம்.

கேந்திராதிபத்திய தோஷம் பெற்ற அதாவது கேந்திரத்தில் ஆட்சி உச்சம் பெற்ற குருவும், புதனும் எந்த பாபர் பார்வையும், சேர்க்கையும் இல்லாமல் தனித்து இருக்கும் நிலையில் அவர்களின் ரத்தினங்களை அணியக் கூடாது. (லக்னம் கேந்திரத்திற்கும், திரிகோணத்திற்கும் பொதுவானது. லக்னத்தில் இவர்கள் இருந்தால் தோஷம் இல்லை.)

மிதுன, கன்னி, ரிஷபம், துலாம், மகரம், கும்பம்லக்னக்காரர்கள் ராசிக்கல்லை வெள்ளியில் அணிய வேண்டும். கடக லக்னக்காரர்கள் ராசிக்கல்லை பஞ்சலோகத்தில் அணியலாம். தனுசு, மீனம், மேஷம், விருச்சிகம், சிம்ம லக்னக்காரர்கள் பஞ்சலோகம் மற்றும் தங்கத்தில் அணியலாம்.
சில அனுபவமற்ற ஜோதிடர்கள் ஒரே மோதிரத்தில் ராகுவிற்குரிய கோமேதகம் மற்றும் கேதுவிற்குரிய வைடூரியத்தையும் சேர்த்து அணியச் சொல்கிறார்கள். இது முற்றிலும் தவறு.

ராகுவும் கேதுவும் வடதுருவம் தென்துருவம் போன்றவை. ஒன்றுக்கொன்று 180 டிகிரியில் நேர்எதிராகச் சுற்றி வருபவை. ராகுகேதுக்களில் ஒன்று நன்மை தரும் அமைப்பில் இருந்தால் இன்னொன்று அதற்கு எதிரான நிலையில் இருக்கும். ஒரு ஜாதகத்தில் ராகுவோ அல்லது கேதுவோதான் தோஷம் தரும். இரண்டும் சேர்ந்து அல்ல. இணையவே முடியாத இரு துருவங்களை அருகருகே வைத்து இணைத்து ஒரே மோதிரத்தில் அணிவது மகாதோஷம்.

இவை எல்லாவற்றையும் விட முக்கியமான ஒன்று இருக்கிறது.

ரத்தினங்களை கடையில் வாங்கி அப்படியே அணியக் கூடாது.

அவைகளை அணியப் போகிறவரின் பெயர், ராசி, நட்சத்திரப்படியும் என்ன நோக்கத்திற்காக அவர் அணியப் போகிறாரோ அதன்படியும் உச்சாடனம் செய்து உருவேற்றிய பின்பே அது மோதிரமாக அணியப்பட வேண்டும். குறைந்தது ஒரு லட்சத்து எட்டு முறை உச்சாடனம் செய்வது நல்லது.

சூரியனுக்குமாணிக்கம்
சந்திரனுக்குமுத்து
செவ்வாய்க்குபவளம்
புதனுக்குமரகதம்
குருவிற்குபுஷ்பராகம்
சுக்கிரனுக்குவைரம்
சனிக்குநீலம்
ராகுவிற்குகோமேதகம்
கேதுவிற்கு
வைடூரியம்

 

Copyright @ 2018 வேத ஜோதிடம்.