ஜோதிடம் எனும் தெய்வீக சாஸ்திரம்


widgeo.net

திங்கள், 28 மார்ச், 2016

செவ்வாய் தோஷம்

லக்னத்திற்கு அல்லது சந்திரனுக்கு 2, 4, 7, 8, 12ம் இடங்களில்செவ்வாய் அமர்ந்தால் அது செவ்வாய் தோஷம் ஆகும். அத்துடன் சுக்கிரனுக்கு 2, 4, 7, 8 12ல் இருந்தாலும் செவ்வாய்தோஷம்தான் என்று சிலர் சொல்கின்றனர். லக்கினத்திற்கு மட்டும் செவ்வாய் தோஷம் அது முழு தோஷம் என்றும், சந்திரனுக்கு மட்டும் இருந்தால் அது அரைபங்கு தோஷம் என்றும் இரண்டுக்கும் இருந்தால் கடுமையான தோஷம் என்றும் ஒரு சில ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
இன்னும் சில ஜோதிடர்கள் லக்கினப்படி உள்ள பரிகார செவ்வாயை சந்திரனுக்கு உள்ள சுத்த செவ்வாயை பொருத்தலாம் என்றும் கூறுகின்றனர்.
லக்னத்திற்கு அல்லது சந்திரனுக்கு 2, 4, 7, 8, 12ம் இடங்களில்செவ்வாய் அமர்ந்தாலும் கீழுள்ள நிலைகளில் செவ்வாய்இருந்தால் செவ்வாய் தோஷம் இல்லை.
1. மேற்படி 2, 4, 7, 8, 12 மிடங்கள் செவ்வாயின் ஆட்சி வீடாகிய மேஷம், விருச்சிகம் நீச்ச வீடாகிய கடகம், உச்ச வீடாகிய மகரம் ஆகிய ராசிகளாக இருந்து அங்கே செவ்வாய் இருந்தால் தோஷம் இல்லை.
2. குருவின் வீடுகளிலோ, குருவுடன் இணைந்தோ, குருவின் பார்வையைப் பெற்றிருந்தாலோ தோஷம் இல்லை.
3. சுக்கிரனின் வீடுகளான ரிஷபம், துலாமில் இருந்தாலும் தோஷம் இல்லை.
4. சுக்கிரனுக்கு நான்கு, ஏழு, பத்து ஆகிய கேந்திரங்களில்செவ்வாய் இருந்தாலும் தோஷம் இல்லை.
5. மேற்கண்ட வீடுகளில் செவ்வாய் சந்திரனுடனோ, புதனுடனோ அல்லது இருவரும் சேர்ந்து இணைந்திருந்தாலோ தோஷம் இல்லை.
6. ராகு, கேதுக்களுடன் செவ்வாய் நெருக்கமாக இணைந்து பலவீனம் பெற்றிருந்தால் தோஷம் இல்லை.
7. மேஷம் விருச்சிகம் கடகம் சிம்மம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் எங்கிருந்தாலும் தோஷம் இல்லை
8. சிம்மத்தில் செவ்வாய் இருந்தால் தோஷம் இல்லை.
9. செவ்வாய் சனியுடன் இணைந்தால் தோஷம் இல்லை
10. அஸ்தமன செவ்வாய்க்கு தோஷம் இல்லை.
11. செவ்வாய் பரிவர்த்தனை பெற்றிருந்தால் தோஷம் இல்லை.
12. மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தோர் இற்கு தோஷமில்லை

மணமக்கள் இருவரில் ஒருவருக்கு செவ்வாய் தோஷம் இருந்து, மற்றவருக்கு இல்லாவிட்டால் செவ்வாய் தோஷம் இல்லாதவர் மரணம் அடைவார், என்பது பெரும்பாலான ஜோதிடர்களின் கருத்தாக இருக்கிறது. இந்தக் கருத்து தவறானது. வாழ்க்கைதுணை மரணம் அடைய வேண்டும் என்றால் அதற்கு பல விதிகள் பொருந்தியிருக்க கணவனின் ஜாதகத்தில் அவரது ஆயுள் ஸ்தானமும் பார்க்கப்பட வேண்டும். மிக அரிதாகவே இதுபோன்ற அமைப்பில் கணவனின் ஆயுளை செவ்வாய்பாதிக்கிறார். அனுபவத்தில் பெரும்பாலும் கணவனுக்கும் மனைவிக்கும் பிரிவினை மட்டுமே வருகிறது. செவ்வாய்குற்றத்தை மட்டும் வைத்து கூறுவது முட்டாள்தனமான செயல். செவ்வாயின் பார்வை வலு முறையே 7, 8 , 4 என்ற வகையில் அமையும். அதாவது தனது 4ம் பார்வையை விட தனது 8ம் பார்வை மூலம் அதிகமான பலனை தருவார். செவ்வாய்வீரியத்தைக் குறிக்கும் கிரகம். பொதுவாக செவ்வாய்வலுப்பெற்றவர்கள் தாம்பத்திய உறவில் சற்று அதிகமான ஆர்வம் உள்ளவர்களாக இருப்பார்கள். அதற்கேற்ற உடல் தகுதியும் அவர்களுக்கு இருக்கும். மேலும் முரட்டுத்தனமான உறவில் ஆர்வமும் ஈடுபாடும் இவர்களுக்கு இருக்கும். சில நிலைகளில் இயற்கைக்கு மாறான உறவிலும் வேட்கை கொண்டவர்களாக இவர்கள் இருப்பார்கள். செவ்வாய் தோஷம் உள்ளோருக்கு செவ்வாய் தோஷம் இருக்கும் ஜாதகமே பார்க்கப்பட்டு திருமணம் நடத்தப்படுகிறது.

புதன், 25 நவம்பர், 2015

ராசிக்கல்

ராசிப்படி மேற்கண்ட கிரகங்களுக்கான கற்களை ஒருவர் அணிவதாக வைத்துக் கொண்டால், தனக்கு கெடுதல் செய்யும் அஷ்டமாதிபதியை ராசிநாதனாக கொண்டவர் ராசிப்படி கல் அணியலாமா?

உதாரணமாக விருச்சிக லக்னம் மிதுனராசியில் பிறந்தவர் மரகதப் பச்சையை மோதிரமாகக் கொள்ளலாமா? கன்னி லக்னம் மேஷராசியில் பிறந்த ஒருவர் பவளத்தை அணியலாமா?

ராசிப்படி ஒருவர் ராசிக்கல் அணிவது முற்றிலும் தவறு.ராசிநாதன் அவரது லக்னப்படி பாதகாதிபதியாகவோ, ஜாதகருக்கு லக்னப்படி தீமை செய்யும் பகைக்கிரகமாகவோ இருந்தால் கற்கள் அணிந்தவுடன் கெடுதல்கள் நடக்கும். சிலர் இந்த மோதிரம் போட்டதிலிருந்து எனக்கு தலை வலிக்கிறது. அன்றே வண்டியிலிருந்து கீழே விழுந்துவிட்டேன் என்று சொல்லுவது இதனால்தான்.

ஒருவரின் பிறந்த ஜாதகம் ஒரு முழுமையான ஜோதிடரால் தீர்க்கமாக ஆராயப்பட்டு லக்னமோ, லக்னாதிபதியோ பலவீனம் அடைந்திருந்தால் லக்னாதிபதியை வலுவாக்கும் விதமாக அந்தக் கிரகத்தின் வலுவைக் கூட்டும் விதமாக லக்னாதிபதியின் ரத்தினத்தை வாழ்நாள் முழுவதும் வலது கை மோதிர விரலில் அணிய வேண்டும்.

லக்னாதிபதிக்கு ஆறு, எட்டு என மறு ஆதிபத்தியம் இருந்தால் லக்னாதிபதி இருக்கும் இடம், மற்றும் அவரது மூலத்திரிகோணாதிபத்தியம் ஆகியவற்றை வைத்து முடிவெடுக்க வேண்டும்

ஒருவருக்கு நன்மை தரும் கிரகம் பலவீனம் அடைந்து (5,9 போன்ற யோகாதிபதிகள்) அவர்களுடைய தசையும் நடக்குமானால் அந்தக்கிரகத்தின் நன்மைகளைக் கூட்டிக் கொள்ள அந்தக் கிரகத்திற்குரிய ரத்தினத்தை வலதுகை ஆட்காட்டி விரலில் அணியலாம்.

தீமை தரும் கிரகத்தின் ராசிக்கல்லை எந்தக் காரணம் கொண்டும் அணியக்கூடாது. ராசிக்கல் என்பது ஒரு கிரகத்தின் வலிமையை அதிகப்படுத்துவதற்காக மட்டுமே. கெடுதல் செய்ய விதிக்கப்பட்ட கிரகக் கல்லை அணிந்தால் அந்தக் கிரகத்தின் வலிமை அதிகமாகி இன்னும் அதிகமான தீமைகளைச் செய்யும். கல்லை அணிவதால் கெட்டகிரகம் நன்மை செய்யும் என்பது தவறு.

அதேபோல நவரத்னங்கள் ஒன்பதுதான். ஆனால் அவற்றுள் ஏராளமான வகைகள் உள்ளன. உதாரணமாக புஷ்பராகத்தில் பத்மபுஷ்பராகம், நீலத்தில் இந்திர நீலம் என நிறைய வகைகள் உண்டு. ஒரு தேர்ந்த முழுமையான ஜோதிடரால் மட்டுமே இவர் நீலம் அணியலாமா அல்லது இந்திரநீலம் வேண்டுமா என துல்லியமாக கணிக்க முடியும்.

6,8க்குடையவர்களின் ராசிக்கல்லை கண்ணெடுத்தும் பார்க்கக் கூடாது. பாதகாதிபதியின் ராசிக்கல்லும் அப்படியே... (பாதகாதிபதி ராசிநாதனாக வந்தாலும்அணியக் கூடாது)

ராகுகேதுக்களின் தசை நடக்கும் போது அவர்கள் இருந்த ராசியின் அதிபதி லக்னசுபராகி அவர் வலிமை குறைந்திருந்தால், அந்த ராகு,கேதுக்கள் இருக்கும் ராசிக்கு அதிபதியின் கல்லை அணியலாம்.

ராகு,கேதுக்கள் 3,11ல் இருந்தால் மட்டுமே அவர்களின் ராசிக்கற்களை இடது கையில் அணியலாம். அல்லது அவர்கள் லக்ன சுபரின் வேறு வீட்டில் இருந்தால் அணியலாம். உதாரணமாக மிதுன லக்னத்திற்கு 12ல் ரிஷபத்தில் ராகு இருந்தால் கோமேதகம் அணியலாம்.

கேந்திராதிபத்திய தோஷம் பெற்ற அதாவது கேந்திரத்தில் ஆட்சி உச்சம் பெற்ற குருவும், புதனும் எந்த பாபர் பார்வையும், சேர்க்கையும் இல்லாமல் தனித்து இருக்கும் நிலையில் அவர்களின் ரத்தினங்களை அணியக் கூடாது. (லக்னம் கேந்திரத்திற்கும், திரிகோணத்திற்கும் பொதுவானது. லக்னத்தில் இவர்கள் இருந்தால் தோஷம் இல்லை.)

மிதுன, கன்னி, ரிஷபம், துலாம், மகரம், கும்பம்லக்னக்காரர்கள் ராசிக்கல்லை வெள்ளியில் அணிய வேண்டும். கடக லக்னக்காரர்கள் ராசிக்கல்லை பஞ்சலோகத்தில் அணியலாம். தனுசு, மீனம், மேஷம், விருச்சிகம், சிம்ம லக்னக்காரர்கள் பஞ்சலோகம் மற்றும் தங்கத்தில் அணியலாம்.
சில அனுபவமற்ற ஜோதிடர்கள் ஒரே மோதிரத்தில் ராகுவிற்குரிய கோமேதகம் மற்றும் கேதுவிற்குரிய வைடூரியத்தையும் சேர்த்து அணியச் சொல்கிறார்கள். இது முற்றிலும் தவறு.

ராகுவும் கேதுவும் வடதுருவம் தென்துருவம் போன்றவை. ஒன்றுக்கொன்று 180 டிகிரியில் நேர்எதிராகச் சுற்றி வருபவை. ராகுகேதுக்களில் ஒன்று நன்மை தரும் அமைப்பில் இருந்தால் இன்னொன்று அதற்கு எதிரான நிலையில் இருக்கும். ஒரு ஜாதகத்தில் ராகுவோ அல்லது கேதுவோதான் தோஷம் தரும். இரண்டும் சேர்ந்து அல்ல. இணையவே முடியாத இரு துருவங்களை அருகருகே வைத்து இணைத்து ஒரே மோதிரத்தில் அணிவது மகாதோஷம்.

இவை எல்லாவற்றையும் விட முக்கியமான ஒன்று இருக்கிறது.

ரத்தினங்களை கடையில் வாங்கி அப்படியே அணியக் கூடாது.

அவைகளை அணியப் போகிறவரின் பெயர், ராசி, நட்சத்திரப்படியும் என்ன நோக்கத்திற்காக அவர் அணியப் போகிறாரோ அதன்படியும் உச்சாடனம் செய்து உருவேற்றிய பின்பே அது மோதிரமாக அணியப்பட வேண்டும். குறைந்தது ஒரு லட்சத்து எட்டு முறை உச்சாடனம் செய்வது நல்லது.

சூரியனுக்குமாணிக்கம்
சந்திரனுக்குமுத்து
செவ்வாய்க்குபவளம்
புதனுக்குமரகதம்
குருவிற்குபுஷ்பராகம்
சுக்கிரனுக்குவைரம்
சனிக்குநீலம்
ராகுவிற்குகோமேதகம்
கேதுவிற்கு
வைடூரியம்

செவ்வாய், 20 அக்டோபர், 2015

யோகங்கள்

யோகம் என்பது சூரியனதும் சந்திரனதும் இருப்பை நட்ச்சத்திரத்தினதுசார்பாக கணித்து அதன் விளைவினது தன்மையினை பொதுவாக விளக்கும்செயல்முறையாகும்

சந்திரனதும் சூரியனது ஸ்புடத்தினை அல்லதுஅகலாங்கினை கூட்டி அந்த தொகை 360 இலும் அதிகமாக வருமாயின்

அதனை 360 பாகயில் இருந்து கழித்து வரும் தொகையினை ஒரு நட்சத்திரத்தினது பாகைஅளவினால்(13°20' அல்லது 800')வகுத்தால் வேண்டும்வகுக்கும் தொகையில் வரும்தசமங்களை விடுத்து முழுஎண்ணுடன் 1 ஐக் கூட்ட வ்ரும் தொகைக்கான எண்ணைகீழ்வரும் அட்டவணையில் பார்ப்பதன் மூலம் எந்த யோகம் என அறியலாஅல்லதுசுலபமாக பஞ்சாங்கம் ஒன்றில் பார்த்துக் கொள்ளலாம்.  

எண்
பெயர்
பொருள்
1
விஷ்கம்பம்
தாங்கும் தூண்
2
பிரீதி
அன்பு/ஆதரவு
3
ஆயுஷ்மான்
நீண்ட ஆயுள்
4
சௌபாக்யம்
அதிஷ்டமுள்ள மனைவி
5
சோபனம்
பிரகாசம்
6
அதிகண்டம்
பெரும் ஆபத்து
7
சுகர்மம்
கடவுளுடன் ஒன்று பட்ட செய்கை
8
திருதி
உறுதி
9
சூலம்
சிவனின் அழித்தலுக்கான ஆயுதம்
10
கண்டம்
ஆபத்து
11
விருத்தி
வளர்ச்சி
12
துருவம்
நிலையானது
13
வியாகாதம்
பெருங் காற்று
14
ஹர்ஷ்ணம்
ஆனந்தமான
15
வஜ்ரம்
வைரம்
16
ஸித்தி
சித்தியடைந்த
17
வியதீபாதம்
மோசமான பின்னடைவு
18
வரீயான்
தலைமை
19
பரீகம்
தடை
20
சிவம்
தூய்மை /சிவன்
21
ஸித்தம்
பூர்த்தியான
22
சாத்தியம்
நடைபெறக்கூடிய
23
சுபம்
சுபம்
24
சுப்பிரம்
வெண்மை
25
பிராம்மம்
தூய அறிவும் தூய்மையும்
26
ஜந்திரம்
இறைவர்களின் தலைவன்
 27
வைதிருதி
கடவுளர்களின் வகுப்பு


இதனை ஒரு உதாரண கணிதம் மூலம் விளங்கிக்கொள்ளலாம்
  • சூரியன் 23°50'இல் மகரத்திலும் சந்திரன் 17°20' இல் துலாவிலும் நிற்பதாக கொள்க
  • சூரியனது ஸ்புடம் 23°50' + 9 x 30° = 293°50', 
  • சந்திரனது ஸ்புடம் 17°20' + 6x 30° = 197°20'. 
  • மொத்தம் 293°50' + 197°20' = 491°10'. 
  • மேற்கூறிய விதிப்படி 360 ஐக்கழித்தால் 131°10, 
  • இதனை கலைகளிற்கு மாற்றினால் 131 x 60 + 10 = 7870'. 
  • மேற்குறிப்பிட்ட விதிப்படி ஒரு நட்சத்திரத்தின் அளவால் வகுத்தால் 9.8375 வரும்
  • தசமதானத்தை விடுத்து முழு எண்ணை எடுத்தோமானால் 9. அதனுடன்ஒன்றைக் கூட்டினால் 10. 
  • ஆக யோகம் கண்ட யோகமாகும்

வியாழன், 17 செப்டம்பர், 2015

கார்த்திகை தீப வரலாறு மற்றும் நாம் அறிந்திடாத அறிவியல் பின்னணி

கார்த்திகை தீப வரலாறு


karthikai deepamஆதி நடம் ஆடுமலை அன்றிருவர் தேடுமலை
சோதிமதி ஆடரவம் சூடுமலை -நீதி
தழைக்குமலை ஞானத் தபோதனரை
வாவென்றழைக்கு மலை அண்ணாமலை
- குரு நமச்சிவாயர்

   இந்து மதத்தில் மும்மூர்த்திகள் எனப்படுபவர்கள் பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வர் ஆவார்கள். படைத்தல், காத்தல், அழித்தல் என்பது முறையே இவர்களுடைய பொறுப்பாகும். இவர்களில் மகேஸ்வர் எனப்படும் சிவனாருக்கு இந்தியா முழுவதிலும் கோவில்கள் உள்ளன. இந்த உலகமானது நீர், நிலம், நெருப்பு, வாயு, ஆகாயம் எனும் ஐந்து பூதங்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

         இதனை அடிப்படையாகக் கொண்டு, சிவ வழிபாட்டில், இந்த ஐந்து பூதங்களையும் முன்னிறுத்தி, தனித்தனியாக ஐந்து இடங்களில் உள்ள கோவில்களில் ஐம்பூதங்களுக்கான வழிபாடு நடக்கிறது. இந்த ஐந்து சிவதலங்களையும் பஞ்சபூதங்கள் என்று அழைக்கிறார்கள். பஞ்ச என்றால் ஐந்து (5) என்று பொருள்படும்.

          பூதம் என்றால் பொருள் அல்லது சக்தி என்பதாகும். பஞ்ச பூதங்கள் என்றால், ஐந்து மூலசக்திகள் அல்லது ஐந்து அடிப்படை மூலாதாரங்களை குறிப்பதாகும். இவற்றில் ஒன்று குறைந்தாலும் உயிரினங்கள் வாழ முடியாது. ஆகவே அவற்றை இறைவனுக்கு இணையாக மதித்தனர் நம் முன்னோர்கள்.
ஆகவே முத்தொழில் முதல்வனான சிவனுடைய தலத்தில் அந்த ஐம்பூதங்களையும் வணங்கி வழிபட்டனர். இந்த தத்துவத்தின் அடிப்படையில் பஞ்ச பூதங்கள் ஒளி பெற்றுச் சிறப்படைய வேண்டும் என்பதற்கு ஐந்து முகவிளக்கும், தீபாராதனைகளும் காட்டப்படுகிறது. பஞ்ச பூதங்களை பற்றித் தெளிவாகவும் நுட்பமாகவும் உணர்ந்த நமது பெரியோர்கள் ஒவ்வொரு பூதத்தின் பெயராலும் ஒரு தலத்தை ஏற்படுத்தி உள்ளனர்.

அவை பஞ்சபூதத் தலங்கள் எனப்படும். அவை வருமாறு:-
          
           1. நிலம்- காஞ்சீபுரம், திருவாரூர்.
           2. நீர்- திருவானைக் காவல்
           3. நெருப்பு- திருவண்ணாமலை
   4.வாயு- திருக்காளகஸ்தி (ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது).
      5. ஆகாயம்- சிதம்பரம் இந்த பஞ்சபூத தலங்களில் நெருப்புத் தலமான திருவண்ணாமலை மற்ற தலங்களை விட பல சிறப்புகளையும், தனித்துவங்களையும் கொண்டது.

kd-two
      சம்பந்தர், அப்பர், மாணிக்கவாசகர் ஆகியோரது பாடல் பெற்ற தலமாகும். நினைத்தாலே முக்தி தரும் தலம். சிவமும் சக்தியும் ஒன்றே என்பதை உணர்த்துவதற்காக அர்த்தநாரீஸ்வரராக வடிவம் எடுத்ததும், சிவராத்திரி விழா உருவானதுமான பெருமையை உடைய தலம் திருவண்ணாமலை. சிவன் கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால், பிரம்மன் இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார்.

            இந்நாளிலேயே தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. மலையில் தீபம் ஏற்றப்பட்டதும் மக்கள், ``அண்ணாமலையானுக்கு அரோகரா'' என விண்அதிர முழக்கமிடுவார்கள். ``இந்த உடம்பு நான் என்னும் எண்ணத்தை அழித்து, மனதை ஆன்மாவில் அழித்து, உன்முகத்தால் அத்வைத ஜோதியைக் காண்பது தான் தரிசனம் ஆகும்'' என ரமண மகரிஷிகள் குறிப்பிடுகிறார்.
தீப தரிசனம் பிறவிப் பிணியை அறுக்க வல்லது என்பது ஐதீகம். கார்த்திகை தீபத்திருநாள் மிகவும் தொன்மை வாய்ந்த திருநாள். இத்திருநாள் தமிழர்களால் பல்லாயிரம் ஆண்டுகளாக கொண்டாடப்படுகிறது. கி.மு.2500 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் இலக்கியங்களிலும் மற்றும் சங்க கால இலக்கியங்களிலும் கார்த்திகை தீபத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.

   இத்தீபத்திருநாள், திருவண்ணாமலையில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுவதால், இதை திருவண்ணாமலைத் தீபம் என்றும் அழைப்பார்கள். சிவபெருமான் ஒளி மயமாகக் காட்சியளித்ததை நினைவு கூரும் வகையில், தீபத்தினத்தன்று திருவண்ணாமலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும்.

  இத்திருநாள், முருகக்கடவுள் அவதரித்த தினமாகவும் கொண்டாடப்படுகிறது. பெரும்பாலானோர் காலை முதல் விரதமிருந்து, மாலை பூஜை முடிந்தபின்னர், அகல் விளக்கேற்றி வரிசையாக வாசல் தொடங்கி வீடு முழுவதும் வைப்பார்கள். இது தான் தீபா திருவிழாவின் முக்கிய நிகழ்வாகும்.


கார்த்திகை தீப அறிவியல் பின்னணி
        
        கார்த்திகை தீபம், தமிழகத்தில் கொண்டாடப்படும் முக்கிய விழாக்களில் ஒன்று. கார்த்திகை மாதம் பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த நாளில் இந்த விழா கொண்டாடப் படுகிறது.


jothi
         தமிழ்நாட்டில் கார்மேகம் சோணைமழை பொழியும் மாதம் கார்த்திகை மாதம். கார் என்றும், கார்த்திகை என்றும் வழங்கப்படும் காந்தள் பூ மிகுதியாக மலரும் காலம் கார்த்திகை மாதம். கார்த்திகை எனப்படும் விண்மீன் கூட்டம் கீழ்வானில் மாலையில் தோன்றும் மாதம் கார்த்திகை மாதம்.
    
         நமது சங்க இலக்கியங்களில் இதை பற்றிய குரிப்புகள் காணபடுகின்றன. தமிழகத்தில் பழைமையான விழாக்களில் இதுவும் ஒன்று என்பதில் எந்த ஓர் ஐயமும் இல்லை. இந்த விழாவை பற்றி நம் மதங்களில் சொல்லபடுகின்ற கருத்துக்கள் நீங்கள் அறிந்தவையே.
       
         ஆனால், இந்த விழாவின் பின்னணியில் ஓர் அறிவியல் உண்மை ஒளிந்து இருப்பது நம்மில் பலர் அறியாத ஒன்று. இன்று நம் நாட்டில் பரவி வரும் டெங்கு போன்ற நோய்களில் இருந்து நம்மை காப்பதற்கு நம் முன்னோர்கள் நமக்கு கொடுத்த ஒரு அருமருந்து.
            
          தமிழகத்தில் மழை காலம் முடிந்த நிலையில் கொசு மற்றும் இன்ன பிற நுண்ணுயிர்கள்  பெரிதும் பரவும் இந்த கார்த்திகை மாதத்தில நம்மை காத்து கொள்வதற்கு இந்த தீப திருநாள் வழி வகை செய்கிறது. கார்த்திகை தீபத்தில் பயன் படுத்த படும் நல்லெண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் பருத்தித் திரியில் எரியும் போது அதில் இருந்து வரும் நெடியானது கொசு மற்றும் பிற நுண்ணுயிர்களின் வளர்ச்சியை முற்றிலும் அழிக்கிறது.
           
           நம் குடும்பத்தை பற்றி பெரிதும் அக்கறை படும் நாம், பிற வேலைகளை காரணம் காட்டியும், leave கிடைக்கவில்லை என்று சாக்கு சொல்லியும் இந்த விழாவை தவிர்க்கலாமா ?
 
     இந்த உண்மை அறியாமல், "பழைய வழக்கம் நமக்கு எதற்கு, சாஸ்திரத்துக்கு ரெண்டு விளக்கு ஏற்றுவோம்" என்று இல்லாமல் இல்லம் நிறைய விளக்கு ஏற்றி நம்மை காத்து கொள்வோம்.

 

Copyright @ 2018 வேத ஜோதிடம்.