ஜோதிடம் எனும் தெய்வீக சாஸ்திரம்


widgeo.net

புதன், 18 ஏப்ரல், 2018

பாவத்பாவம் என்றால் என்ன?

எனது Facebbok Page இல் வாசகர் ஒருவரது கேள்வி :- ஜோதிஷ ஆசானிடம் ஒரு கேள்வி.
லக்னம் நான் என்றால் என் மனைவிக்கு ஏழாவது பாவம்
என் குழந்தை யின் பாவம் ஐந்து. என் மனைவி என் குழந்தைக்கு தாய் எனும்போது
ஐந்துக்கு. ஏழாம் பாவம் மூன்று என்றால் தாய்க்கு நான்காம் பாவம் என்று சொல்வது ஏன்?
மேலும்.......
என் தந்தை க்கு. ஒன்பதாம் பாவம். என் அம்மா என் தந்தக்கு மனைவிதானே... அப்படியானால். ஒன்பதுக்கு. ஏழாவது பாவம். மூன்று தானே.....
பிறகு ஏன்.... தாய்க்கு நான்காம் பாவம்....
எனது பதில் :- வணக்கம்,
ஒரு பாவத்திற்கு இன்னொரு பாவம் எடுத்து கணிப்பது பாவத்பாவ முறையாகும். பாரம்பரிய ஜோதிடத்தை ரிஷிகள் தெளிவாக வகுத்துள்ளனர். ஆனால் தற்போது ஜோதிடம் திரிபுபடுத்தப்பட்டு தவறான வகையில் ஜோதிடம் பரப்புரை செய்யப்படுகிறது. அந்த வகையில் மூலநூல்களில் உங்களின் கேள்விக்கு ஏற்ற விளக்கத்தினை மந்த்ரேஸ்வரர் அருளிய பலதீபிகையில் பாவத் பாவம் பற்றி தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி ஜாதகரிற்கும் குறித்த உறவுகளிற்குமான தொடர்பை ஸ்தானங்களை வைத்து அறிய வேண்டும். அதாவது தாய் என்றால் 4ம் ஸ்தானம். நம் சொத்து என்றால் 4ம் ஸ்தானம். ஆனால் பாவத் பாவ அடிப்படையில் ஜாதகபலன் அறிய வேண்டும் என்றால் உயிர்க்காரகத்துவத்திற்கு காரகனை (முதன்மையாக கொண்டு) முதற்கொண்டும் பொருள்காரகத்திற்கு ஸ்தானத்தை முதற்கொண்டும் பலன் அறிய வேண்டும். உதாரணமாக காலையில் பிறந்த ஒருவரின் தந்தையின் உடல்நலகோளாறு பற்றியறிய சூரியனிலிருந்து 6ம் இடத்தை பரிசீலிக்க வேண்டும். ஆனால் 99%மான ஜோதிடர்கள் ஒன்பதிற்கு ஆறாமிடத்தை ஆராய்கின்றனர். இது தவறானது. இப்படி தவறாக பார்ப்பதால்தான் தந்தையின்(9) மனைவி(7) ஸ்தானம் 4 என வராமல் ஏன் 3 என வருகிறது என்று குழம்பிக்கொள்கின்றனர். பாரம்பரிய ஜோதிடத்தை பொறுத்தவரை மூலநூல்களில் சொல்லப்பட்ட விதிமுறைகளை முழுமையாக அறிந்திருக்க வேண்டும். நுனிப்புல் மேய்ந்துவிட்டு பாரம்பரிய ஜோதிடத்தை பலர் தவறான வகையில் கொண்டுசெல்வது கண்டிக்கதக்கது.  இக்கருத்தை ஜோதிடர்கள் மற்றும் ஜோதிட ஆர்வலர்கள் மத்தியில் இந்த பதிவு செல்லட்டும்...
 பதிவு புரிந்திருந்தால் கமெண்டில் இந்த கேள்விக்கான பதிலை கூறுங்கள்
கேள்வி :- பகலில் பிறந்த ஒருவரின் தாயின் சொத்தில் உள்ள எதிர்ப்புக்களை குறிக்கும் பாவம் எது?

இதற்கான விடையினை பார்த்தோமேயானால் 
பாவத்பாவத்தினை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று பலதீபிகை வழிகாட்டுகிறது என்று மேலே கூறியிருந்தேன். அந்த விதிகளின்படி;
ஜாதகரிற்கும் அவரது தாய்க்குமான நிலையினை பற்றியறிய மட்டுமே நான்காமிடத்தை அறிய வேண்டும். ஆனால் ஜாதகரது ஜாதகம் மூலமாக தாயினை பற்றியறிய வேண்டுமாயின் பாவத்பாவம் மூலமாகவே அறிய முடியும். அந்தவகையில் தாய்(உயிர்காரகத்துவம்) பற்றி அறிய மகன் ஜாதகத்தில் சுக்கிரன் நிற்கும் இடத்தை லக்கினமாக கொள்ள வேண்டும். தற்போது இதனை தாயின் ஜாதகபலனிற்காக மட்டும் பயன்படுத்த வேண்டும். பகலில் பிறந்தவர்க்கு மாத்ருகாரகன் சுக்கிரன்; இரவில் பிறந்தோர்க்கு மாத்ருகாரகன் சந்திரன். ஆகவே சுக்கிரன் முதற்கொண்டு பலனறிய பாரம்பரிய வேத ஜோதிட சாஸ்திரம் வலியுறுத்துகிறது... அதன்படி சுக்கிரன் இருக்கும் பாவத்தை லக்கினமாக கொண்டால் அதிலிருந்து நான்காம்பாவம் தாயின் சொத்துக்களை குறிக்கும். சொத்து என்பது பொருள் காரகத்துவம் என்பதால் அந்த சொத்துதொடர்பான விரிவான பலன்களை அறிய அதனை (சுக்கிரனிலிருந்து நான்காம் இடத்தை) லக்கினமாக கொண்டு பலன்அறிய வேண்டும் என்பது பாவத்பாவ விதி. ஆகவே சுக்கிரனிலிருந்து(₫) நான்காம்(¤) இடத்திற்கு ஆறாமிடமானது(~) #முறையே தாயின்(₫) சொத்துக்களிலுள்ள(¤) பிரச்சனை/வழக்குகளை(~) குறிக்கும். இதனை சுக்கிரனிலிருந்து எண்ணிப்பார்த்தால் அது ஒன்பதாம் பாவமாக அமையும்... இதுவே பாவத்பாவத்தை சரியாக பயன்படுத்தும் முறை ஆகும்...


GHT

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

0 கருத்துகள்:

 

Copyright @ 2018 வேத ஜோதிடம்.