ஜோதிடம் எனும் தெய்வீக சாஸ்திரம்


widgeo.net

வியாழன், 26 ஜூலை, 2018

ஆன்மீக பாதையில்...

ஆன்மீக பாதையில் தாய் தந்தை குரு கடவுள்.
=========================================

பாரம்பரிய வேத ஜோதிட ஆராய்ச்சி பதிவு
**************************************************

ஹரே ராம்
வணக்கம்,
லக்கினம் முதற்கொண்டு பலன் ஆராய்வதனை போன்று சற்று ராசிப்படியும் பலன்களை ஆராய்வது அவசியமாகும். திருமணத்திற்கு மட்டும் ராசிப்படி பலாபலன் அறிவது போன்று ஒவ்வொன்றிற்கும் ராசிப்படி கிரக ஆதிபத்தியம், தொடர்புகள் எடுத்து பலன் அறியபடவேண்டும். ஒரு ஜாதகத்தில் லக்கினமும் ராசியும் ஒன்றாக இணைத்துவைத்து பலன் அறியப்பட வேண்டியவை ஆகும். ராசி, லக்கினம் இவை இரண்டுமே ஒளிக்கிரகங்களால் வருவிக்கப்பட்டது. இதனை நாம் இப்படி அணுகலாம்,

லக்கினம் - சூரியனால் ஆட்கொள்ளப்படுவது - தந்தை.
ராசி - சந்திரனால் ஆட்கொள்ளப்படுவது - தாய்.

ஒரு ஜாதகத்தினை நுணுக்கமாக பார்த்தோமேயானால் எல்லா வகையிலும் ஜாதகரை ஆள்வது சூரியனும் சந்திரனும் ஆகும். இதனால்தான் சூரியனுக்கு கேந்திரத்தில் அல்லது திரிகோணத்தில் சந்திரன் இருப்பது மிகவும் சிறந்த அமைப்பாக சொல்லப்படுகிறது. குறைந்தபட்சம் இந்த இருவரில் ஒருவரையும் ராசி அல்லது லக்கினத்தையும் ஆதிபத்திய சுபம் கொண்ட குருபகவான் பார்த்துவிட்டால் அதுவே முதல்தர யோகமாகும். இந்த வாழ்க்கையினை ஆன்மீகவியலில் செலுத்தி பேறு பெற உதவுபவர் கேது...  இங்கு ஒரு பிரச்சினை வரும். மேற்கூறிய கிரகங்களுடன் கேதுபகவான் கேந்திரத்தில் அல்லது திரிகோணத்தில் அமைந்துவிட்டால்; மறு கேந்திரத்தில் அல்லது 3,11ல் ராகு அமர்ந்து மாயை எனும் மோகத்தில் ஜாதகரை மூழ்கடித்து விடுவார். மாயையை விடுத்து ஆன்மீகவழி செல்லவது மிக மிக மிக கடினமானதொன்றாகும். அனைத்து கிரகங்களையும் விட வலிமை வாய்ந்தவரும் தனக்கு கேந்திரத்தில், திரிகோணத்தில் இருக்கும் கிரகங்களை பாதிப்பவரும் தான் இருக்கும் வீட்டிற்கு 3, 11ம் இடங்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவருமான ராகுவிற்கு இந்த தடை ஒன்றும் பெரிதல்லவே... இதற்கு ஒரு வழிதான் உள்ளது. மேலே உள்ள யோகத்தில் சுபகிரகங்களான குரு, சந்திரன் சம்பந்தப்படுவதால் இவர்களை தவிர்த்து வேறு ஏதாவது ஒரு முழு சுப கிரகம் முழுமையாக ராகுவால் பீடிக்கப்பட்டிருக்க வேண்டும். இங்கு 'பீடிக்கப்பட்டிருக்க வேண்டும்' என்ற சொல்லானது ராகுவுடன் 3பாகை 20கலையில் இணைந்திருக்கவேண்டும் என்று அர்த்தமாகிறது. புதன் ராகுவுடன் இணைவது இதற்கு போதுமானது அல்ல. ஏனினின் தனித்த புதனே சுபர். மீதியாக சுபக்கிரகத்தில் இருப்பவர் சுக்கிரன். ஆகவே சின்றின்பகாரகனான அவரையே நாம் ஒதுக்கவேண்டிய நிலையில் உள்ளோம். சொகுசுவாழ்க்கை, பெண், திருமணம், இல்லறதொடர்புகள் மூலமான கர்மாக்களை ஜாதகர் முழுமையாக அறுத்த பின்னரே அவர் மேற்கொண்டு பயணிக்க முடியும் என்பது ஆன்மீகத்தின் மூலமாக ஜோதிடத்தில் நிறுவக்கூடிய ஒரு உண்மையாகும். ராகு அமருமிடம் அவரது ஏனைய அமைப்புக்கள் என்று ஆராச்சி நீளும்... ராகுவின் இயல்பான "நீளுதல்" என்பதை தவிர்த்து; கேதுவின் இயல்பான "சுருக்குதல்" என்பவற்றை பிரயோகித்து நானும் எனது ஆராய்ச்சி பதிவினை இத்துடன் நிறுத்துகிறேன். பதிவில் மீதமாக இருக்கும் சுபரான புதனிற்கு வேலை கொடுத்து பதிவு தொடர்பாக நல் சிந்தனைகளை வளர்த்து ஆன்மீக வழியில் மேற்கொண்டு முன்னேறுவோமாக...

ஹரிராம் தேஜஸ்,
பாரம்பரிய வாக்கிய ஜோதிடர்

பிற்குறிப்பு :-  எனது இந்த Blogsite முறையாக பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஆகவே இங்கு வெளிவரும் எனது பதிவுகளை copy  செய்து எடுத்து வேறு இடங்களில் பதியும் திருட்டுதனம் புரிவோர் கண்டுபிடிக்கப்பட்டு சட்டரீதியான தண்டனைக்கு உட்படுத்தப்படுவர்.

வெள்ளி, 1 ஜூன், 2018

நவாம்சம் ஏன்? எதற்கு?
















சிவசிவ
வணக்கம் நண்பர்களே,

ஜோதிட சாஸ்திரம் - ஆம் ஜோதிடம் ஒரு சாஸ்திரம் ஆகும். இது எமது புனித சதுர்வேதத்தின் கண் ஆகும். சரி சாஸ்திரம் என்றால் என்ன? இறை கடாட்ச்சத்துடன் முன்னோர்களால் இது இப்படித்தான் என எழுதிவைக்கப்பட்டவை, முறையான கிரந்தங்களை கொண்டவை, தூய்மையானவை இதன் முழு விளக்கத்தினை சாஸ்திரமறிந்த பண்டிதர்களிடமோ அந்தணங்களிடமோ கேட்டு அறிந்து கொள்ளுங்கள். பொதுவாக ஜோதிடனை "சாத்திரியார்" என்று கிராமபுறங்களில் அழைப்பர். சாஸ்திர தர்மத்தினை கெடுப்போர் நீதிநெறிக்கு முரண்பட்டோர் ஆவார். ஆச்சார்யத்தினை மீறுவோர் விஷமிகள் ஆவர். ஜோதிட சாஸ்திரத்தில் ஆராச்சி என்றபேரில் சாஸ்திரத்தினை கொல்லும் கயவர்களை களை எடுக்க வேண்டும். நாம் செய்யாவிடினும் கட்டு போட்டுஇருக்கும் சாஸ்திர தர்மம் இதனை செய்யும்.

ராசியில் எப்படி இருந்தாலும் நவாம்சத்தில் உள்ள கிரகபலமே இறுதியானது என்பதெல்லாம் மிகவும் தவறான கருத்து. சிலர்  ஜாதகத்தில் ராசியில் சூரியன் மேஷத்தில் உச்சமாக இருப்பார். அவர் பரணி 3 ல் இருப்பதால் நவாம்சத்தில் துலாமில் இருப்பார். உடனே உங்களுக்கு சூரியன் ராசியில் உச்சமாக இருந்தாலும் அம்சத்தில் நீச்சமாகிவிட்டார். எனவே சூரியன் நீச்ச பலத்தையே கணக்கில் கொள்ளனும் என்பர். அவர்கள் என்ன கணக்கு போடப்போகிறார்கள் என்று தெரியவில்லை. வெறும் வாய்வார்த்தையில் “கணக்கு” என்பதுடன் சரி போலும்...

இங்கு கணக்கு என்பது ஷட்பல கணக்கு ஆகும். இதனை பழைய காலத்தில் 2-3 நாட்கள் ஒக்காந்து இருந்து கணிப்பர். இப்ப வாயில கணக்கு என்பதோட சரி 😠

என்ன முன்னுரை இப்படி உள்ளதே என சிந்தித்தது போதும். பதிவுக்குள் போகலாமா???

நவாம்சத்தில் கிரக பலம் அறிய வேண்டும் என்று ஜோதிடத்தில் எங்கும் கூறப்படவில்லை. (ஒருவேளை உங்களிடம் உரிய ஆதாரம் இருந்தால் காண்பிக்கலாம்.) கிரகங்களின் பலத்தை அறிய அதன் ஆறுவகை பலத்தில் ஒரு பிரிவாக வரும் வர்க்க சக்கரங்களில் கிரகங்கள் நின்ற பலனை எடுப்பர். அவ் ஆறுவகை பலத்தில் ஸ்தான பலம் என்ற பிரதான வகுப்பில் 5 உப வகுப்புகள் உள்ளன. அந்த ஐந்து உப வகுப்புக்களில் ஒன்றுதான் சப்தவர்க்க பலம். இந்த சப்தவர்க்கபலத்தில்தான் நவாம்சத்தில் குறித்த கிரகத்தின் பலம் எடுக்கப்படுகிறது. இந்த சப்தவர்க்க பலத்தில் ராசி, ஹோரா, திரேக்காணம், சப்தாம்சம், நவாம்சம், துவாதசாம்சம், திரிம்சாம்சம் என்பவற்றில் குறித்த கிரகம் நிற்கும் அடிப்படையில் பலம் கணித்து அதனை அக்கிரகத்தின் சப்தவர்க்க பலத்தில் கொண்டுவருவர். அதைவிடுத்து ராசியில் எப்படி இருந்தாலும் அம்சத்தில் உள்ள கிரக பலனை எடுப்பது முற்றிலும் தவறு. இது பற்றி கேட்டால் “எனக்கு அனுபவத்தில் சரியாக வருகிறது” என்று கூறி ஜோதிடர்கள் தப்பித்துவிடுகின்றனர் என்பது #கசப்பான_உண்மை. ஆனால் குழப்பவாதிகள் என்ன செய்கிறார்கள் என்றால், ராசிசக்கரத்தில், ஒரு ராசியில் இருக்கும் கிரகம், அம்சத்தில் வேறு ஒரு ராசியில் இருக்க, சம்பந்தப்பட்ட கிரகம், அம்சத்தில் நீசமாகிவிட்டது என்று தேவையில்லாத ஒரு கணக்கிட்டு, நீசத்திற்குரிய பலன் சொல்வது மிகப்பெரும் வேடிக்கை. அத்துடன், கல்வி, தொழில், திருமணம், சொத்துடைமை, போன்ற எல்லா பலனுக்கும் இந்த அம்ச சக்கரத்தை மட்டுமே பயன்படுத்துகின்றனர். அதுவும் மேற்கண்ட முறையில் உச்ச, நீசம் வேறு கணக்கிடுகிறனர். இது மிகப்பெரும் தவறாகும்.

ஒவ்வொன்றாக பார்ப்போம்... மாற்றம் ஒன்றே மாறாதது. இது அனைவருக்கும் ஒப்புக்கொள்வது. ஜோதிட சாஸ்திரமும் காலதேச வர்த்தமானம் அறிந்து பலன் உரை என ஆரம்பத்திலேயே அறிவுறுத்துகிறது. ஜாதக அலங்காரப்பிரகாரம் ஒரு கிரகம் உச்சமானால் தலைவன், ....... நான்கு கிரகம் உச்சமானால் சக்கரவர்த்தி என...  பொருந்தும் என கேட்பீர்களாயின்; இதற்கு விதிவிலக்குகள் ஏராளம் ஏராளம். முதலில் அவைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அடுத்து உச்சபங்க ஒரு விடயம் உள்ளது.... இதுகூட மூலநூல் கருத்துத்தான்.  இப்போது யார் வேண்டுமானாலும் சக்கரவர்த்தி ஆகலாமே... ஏன் ஜோதிடத்திலே சக்கரவர்த்திகள்? பலர் உலாவிக்கொண்டுள்ளனரே... தலைவன் என்றால் எத்தனையோ தலைவன் இருக்கலாம். ஏன் ஒரு முகநூல் குழுவிற்கு தலைவனாககூட இருக்கலாமே... என்ன இது சிறுபிள்ளைத்தனமான பேச்சு என நினைக்காதீர்கள். குதர்க்கமாக வாதிடுபவர்களுக்கு மீண்டும் ஒருமுறை மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை இங்கு நினைவுபடுத்துகிறேன்.
ஆம்... மூலநூல் கருத்துக்களை காலத்திற்கேற்ப பயன்படுத்த வேண்டும் என்பது நான் கூறி ஏற்கனவே ஜோதிட துறையில் இருப்பவர்களிற்கு தெரிய வேண்டியதில்லையே... அரசயோகம் என்றால் அது கவுன்சிலர் முதற்கொண்டு MLA, MP, EL MINISTER, CM, PMஎன அரச அதிகாரம் கொண்டு விரிவடையும். அடுத்து யோகபங்க கான்சப்ட். இதனை ஜோதிடத்தில் எத்தனைபேர் அறிந்து வைத்துள்ளீர்கள்? பிருகத் ஜாதகப்படி உள்ள யோகபடலத்தை பாருங்கள். அடுத்து ஆமேடம் எருது சுறா... என்றுவிட்டு அணைக்கு இந்த அமைப்பு உள்ளது அனால் நற்பலன் இல்லை என்றால்; ஜோதிடர்கள் இதனை மட்டுமா தூக்கிவைத்தா பலன் கூறுவது? ஜோதிடம் ஒரு மஹா சமுத்திரம்.

ஜோதிட ஆராய்ச்சியாளராக இருப்பது சிறந்ததே... அதற்குமுன் அவர் ஜோதிடராகஅல்லவா இருக்க வேண்டும்...

நவாம்சம் திருமண வாழ்க்கைக்குரிய பலன் மட்டுமே சொல்லும். தசாம்சம் தொழிலுக்குரிய பலன் மட்டுமே சொல்லும். ராசி சக்கரத்தில் களத்திர ஸ்தானத்தை வைத்து பலன் சொல்வதை விட நவாம்சத்தை கொண்டு சொன்னால் திருமன வாழ்க்கை பற்றிய துல்லிய பலன் சொல்லமுடியும். அதுபோல், ராசி சக்கரத்தில் கர்மஸ்தானத்தை வைத்து தொழில், பணி பற்றி பலன் சொல்வதை விட தசாம்சத்தை கொண்டு துல்லியமாக சொல்ல முடியும். இப்படி பலன் காண முனையும் போது இந்த சக்கரங்களில் எந்த கிரகம் எந்த ஸ்தானத்தில் இருக்கிறது. அது உச்சமா? நீசமா? என்று கணக்கிட்டு பலன் காண வேண்டும். ஆனால் அதை விடுத்து தொட்டதெற்கெல்லாம் நவாம்சத்தை மட்டும் வைத்துகொண்டு, அதில் உச்ச, நீசம் பார்த்து பலன் சொல்வது அறிவுடைமையாகாது.  ராசி சக்கரத்தை போல் உச்ச, நீசம் பார்த்து அம்சத்தில் பலன் சொல்லலாம் என்றால், ராசி சக்கரம் எதற்கு? ராசிசக்கரத்திற்கு சமமாக அம்ச சக்கரத்தை உச்ச நீசத்திற்கு பயன்படுத்தி பலன் பார்ப்பதாக இருந்தால், அஸ்தங்கம். வக்கிரம் ஆகியவற்றிற்கும் அம்ச சக்கரப்படி பலன் பார்ப்பீகளா? யோகங்கள், நீச்சபங்கம், அஸ்தங்கம், பரிவர்த்தனை, தசாபுக்தி, ராசிச்சந்தி என கூறிக்கொண்டே போகலாம் இவை எல்லாம் ராசிச்சக்கரத்தில் மட்டுமே உள்ளது. இவை நவாம்சசக்கரத்திலோ அல்லது வேறு எந்த வர்க்க சக்கரங்களிலோ இல்லை. ஏனென்றால் அவைகள் எல்லாம் துணைச்சக்கரங்கள்.அவற்றை பயன்படுத்தும் முறைகள் சாஸ்திரத்தில் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது. பிரதான சக்கரம் ராசிச்சக்கரமே...

ஒரே லக்கினத்தில் ஏறத்தாழ ஒரே நேரத்தில் பிறந்தவர்க்கு ராசிக்கட்டம் ஒரேபோல இருக்கும். ஆனால் பலன் வேறுபடுகிறது... இதன் காரணம் நவாம்சமே என்பவர்களிற்காக சில வரிகள்... சரி கூறுங்கள் ஒரே லக்கினத்தில் ஏறத்தாழ ஒரே நேரத்தில் பிறந்தவர்க்கு நவாம்சம் மட்டுமா மாறுகிறது? ஏனைய வர்க்க சக்கரங்கள் மாறவில்லையா? ஏன் அவைகூட காரணமாக இருக்கலாமே... கிரக சாரம் மாறுவது காரணமாக இருக்கலாமே... ஷட்பலம் மாறுபடுவது காரணமாக இருக்கலாமே... இதனை உங்கள் ஆய்வில் எடுத்துக்கொள்ளவில்லையா? ராசியில் ஒரேபோல இருந்தாலும் 16 வர்க்க சக்கரங்களில் கிரகங்கள் மாறுகின்றன. இதனால் பலன் மாறுகிறது, பலம் மாறுகிறது. அதாவது ஏற்கனவே கூறியதுபோல வர்க்கபலத்தின் அடிப்படையில். ராசியில் ஒரு கிரகம் என்ன பலம் பெற்றிருந்தாலும் அம்சத்தில் அது பெற்ற பலமே இறுதியானது என்பது மிகப்பெரிய தவறு. நவாம்சத்தின் மூலம் ஒரு கிரகம் பெற்ற சாரம், கிரக அஸ்தங்கம், இணைவின் நெருக்கம், திருமண வாழ்க்கை பற்றிய விரிவான பலன் மட்டுமே அறிய முடியும். வர்க்கோத்தமம் நவாம்சத்தில் மட்டும் பார்க்கபடுவதில்லை. மொத்தம் எத்தனை வர்க்கங்களின் அது ஒரே இடத்தில் உள்ளதென அறிந்து அதன் சுபத்தினை நிர்ணயம் செய்ய வேண்டும். ஆனால் தற்கால ஜோதிடர்கள் ராசியிலும் அம்சத்திலும் மட்டும் ஒரு கிரகம் ஒரே இடத்தில் இருந்தால் அது அபரிமிதமான பலன்களை செய்யும் என்று வாய்கூசாமல் சொல்கின்றனர். நவீன? நவநாகரீக? ஜோதிடர்கள் அடிக்கடி சொல்வதுபோல இதுவொன்றும் ஆராய்ச்சியோ ஆய்வோ அல்ல... இது #சாஸ்திரம்...

வர்க்க சக்கரங்களை எதற்கு எப்படி பயன்படுத்தவேண்டும் என்ற அறிவு ஜோதிடர்களிடம் இருக்க வேண்டும்.(வர்க்க சக்கரங்களில் ஒன்றான தசாம்ச சக்கத்தினை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று ஒரு பதிவு ஏற்கனவே செய்திருந்தேன். மக்களிடையே அது அதிக வரவேற்பினையும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.) அது இல்லாமல் நவாம்சத்தினை கண்டவுடன் தெரிந்தது தெரியாதது என அனைத்தையும் அதில்வைத்தே வாந்தியெடுத்து விடுவது பல ஜோதிடர்களிற்கு வழக்கமாகிவிட்டது. ஜோதிட சாஸ்திரத்தை ஓரளவுக்கேனும் அறிய வேண்டும். அதற்கு மூலநூல்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்...

மூல நூல்கள் பலவற்றிலும் பொத்தாம் பொதுவாக சொல்லி விட்டு சென்று விட்டார்கள். இந்த இந்த லக்னங்களுக்கு இது இது பொருந்தும் என்று சொல்லாமல் எல்லா லக்னத்துக்கும் பொத்தாம் பொதுவாக சொல்லி விட்டு சென்றதால் பல நேரங்களில் இந்த விதிகள் பலருக்கும் பொருந்துவதில்லை என்பவர்களிற்கும் மூலநூல் கருத்துக்களிற்கு அவ்வளவு முக்கியத்துவம் இல்லை என்பவர்களும்  முடியும் என்றால், தொடர்ந்து வாசியுங்கள் அடுத்த பந்தியில்....

மூலநூல்களில் தேர்ச்சி பெற முடியாதவர்களும் முறையாக ஜோதிட சாஸ்திரம் கற்காமல் ஜோதிடத்தினால் வந்தவர்களும் பேசும் ஒருவகை தாழ்வு மனப்பாங்கான கூற்றுக்கள் இவை. அதாவது "எட்டாக்கனி புளிக்கும்" என்பதுபோல வைத்துக்கொள்ளுகளேன்... மூலநூல்களில் பொத்தம்பொதுவாக கூறப்படவில்லை. ஒவ்வொன்றும் மிகவும் நுணுக்கமாக கூறப்பட்டுள்ளது. மூலநூல்களை ரசித்து சுவைத்து ஆழமாக படித்தால் இது தெரியவரும். ஜோதிடத்திற்கு லாயக்கற்றவர்களாலும், அதனை புரிந்துகொள்ளும் திறன் இல்லாதவர்களாலும், அறிவுத்திறன் குறைந்தவர்களாலும் மூலநூல்களின் ஆழமான கருத்துக்களை புரிய வாய்ப்பில்லைதான்... இவ்வாறு எல்லாம் எதிர்காலத்தில் பேசுவார்கள் என்றுதான் அக்காலத்தில் ஒருவருக்கு ஜோதிடனாகும் தகுதி உள்ளதா என பரிசீலித்ததே தம் சிஷ்யனாக (மாணவனாக) கொள்வார்கள். ஆனால் இப்போது??? நான் கூறியா உங்களுக்கு தெரிய வேண்டும்??? பாரம்பரிய ஜோதிடத்தில் அடிநாதம் மூலநூல்களே... பாரம்பரிய ஜோதிடத்தில் இருந்தே ஏனைய ஜோதிட முறைகள் பிறந்தன, விரிவடைந்தன. பாரம்பரிய மூல நூல்கள் உதவியுடன் சில புதிய கருத்துக்களையும் புகுத்தியே k.p.முறை தோற்றுவிக்கப்பட்டது. இல்லையென்றால் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களைத்தான் கேட்க வேண்டும்...

எனது பதிவு பலர் நெஞ்சங்களை கலங்கடிக்கக்கூடும். உண்மையை கூறுவது தர்மமே... அதே சமயம் ஜோதிடத்தினை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் வளைத்தால் அதனை பார்த்துக்கொண்டிருக்க முடியாது. இதுவும் ஒரு கசப்பான உண்மையே... இது கசக்கத்தான் செய்யும். ஜோதிடராகவேண்டும் என்றால் அதற்கான தகுதியை வளர்த்துக்கொள்ளுங்கள். உங்களை நீங்களும் ஏமாற்றி மக்களையும் ஏமாற்ற வேண்டாம். இவ்வாறு நான் சற்று கடினமாக எழுதக்கூடாது என்றே நினைத்தேன்... ஆனால் பலர் கருத்திற்கு பதில்தரவேண்டியுள்ளதே... ஆகவே இதனை யாரும் தவறாக பாராமல் பதிவிலுள்ள உண்மையினை பாருங்கள்...

நன்றி.
பாரம்பரிய வேத ஜோதிடர்,
ஹரிராம் தேஜஸ்.

(விருப்பம் உள்ளவர்கள் எனது பக்கத்திற்கு சென்று எனது பக்கத்தை லைக் செய்துவிட்டு; பாரம்பரிய ஜோதிட மூலநூலான “பிருகத் ஜாதகம்” தொடர்பதிவாக பிரசுரித்து வருகிறேன். கொஞ்சம் சாஸ்திரம் படித்து தெரிந்து கொள்ளுங்கள். பிடித்திருந்தால் எனது பக்கத்தில் "see first" எனும் தெரிவைக்கொடுத்து உடனுக்குடன் எனது ஜோதிட பதிவுகளை பெற்றுக்கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள். சாஸ்திரம் அறிந்த ஜோதிடராக இருங்கள். அதுதான் உங்களுக்கும் நல்லது... ஜோதிடத்திற்கும் நல்லது... -  facebook.com/astrologerhariram )

செவ்வாய், 8 மே, 2018

அஸ்தங்க(த)மும் வக்(கி)ரமும்

வணக்கம் நண்பர்களே,
ஏற்கனவே நான் எழுதிய “கிரக வக்(கி)ரம்” மற்றும் “அஸ்தங்க(த)ம்” என்ற இரு பதிவுகளை தொகுத்து இந்த பதிவை வெளியிடுகிறேன். எனது வழமையான பதிவுகள் போல இதுவும் சுத்த பாரம்பரிய ஜோதிட பதிவு....

சில சமயங்களில் கிரகங்கள் தாம் செல்லும் பாதையிலிருந்து பின்னோக்கி வருவதுபோல தோற்றமளிக்கும். இதனைத்தான் "வக்கிர நிலை "என அழைக்கிறோம். கிரகங்கள் தம் பாதையில் முன்னோக்கிதான் சென்றுகொண்டிருக்கும் அவை ஒருபோதும் பின்னோக்கி வருவதில்லை. இது ஒரு மாயத்தோற்றம்.

எப்படி பூமியின் சுழற்சியினால் சூரியன் உதிப்பதும் ,மறைவதும்போல காட்சியளிக்கிறதோ அதுபோலவே வக்கிரகதியும் ஆகும்... வக்கிரம் பெறும்பொழுது அக்கிரகங்களுக்கு பலம் அதிகம் உண்டாகிறது. இதன் ஷட்பலப்படி கூற வேண்டும் என்றால் சேஷ்ட பலம் மூலமாக பலம் பெறுகிறது... இவை தம்காரக பலனை அதிகமாக செய்யும். ஆதிபத்ய பலனை குறைத்துவிடும். இதனால் பொதுவாக 6, 8, 12ம் அதிபதிகள் வக்கிரம் பெறுவது சிறப்பென உரைத்திடுவர் சில ஜோதிட பெருந்தகைகள்... ராகு கேதுக்கள் எப்போதும் பின்நோக்கி நகரும் கிரகங்கள் ஆகும். அவற்றிற்கு வக்ர கதி மட்டுமே உண்டு. அவற்றிற்கு நேர்கதி கிடையாது. ஆதலால்தான் வக்கிர குணம் கொண்டதாகவும் உக்ரமான கிரகங்களாகவும் அவை உள்ளன. சூரியன் மற்றும் சந்திர கிரகங்களுக்கு வக்ர கதியே கிடையாது. குரு, செவ்வாய், சனி ஆகிய கிரகங்களுக்கு ஐந்தாமிடத்தில் சூரியன் வரும்பொழுது வக்ரகதி ஏற்படுகிறது. ஏழில் வரும்போது அதிவக்ரமும் ஒன்பதாமிடத்தில் வரும்போது வக்ரகதி முடிவடைந்து நேர்கதி ஏற்படுகிறது. இதனைப்பற்றி விரிவாகவும் மற்றும் விளக்கமாகவும் பின்வருமாறு பார்ப்போம்.

1) சூரியனோடு கிரகங்கள் இணைந்திருப்பது அஸ்தங்க கதி.

2) அஸ்தங்க கதியிலிருந்து விலகி வருவது உதயகதி.

3) சூரியனுக்கு 2ல் கிரகங்கள் இருப்பது சீக்கிரகதி.

4) சூரியனுக்கு 3ல் கிரகங்கள் இருப்பது சமகதி.

5) சூரியனுக்கு 4ல் கிரகங்கள் இருப்பது மந்தகதி.

6) சூரியனுக்கு 5, 6ல் கிரகங்கள் வரும்போது வக்கிரகதி

7) சூரியனுக்கு 7, 8ல் கிரகங்கள் வரும்போது அதிவக்கிரகதி.

8) சூரியனுக்கு 9, 10ல் வரும்போது வக்கிரநிவர்த்தி கதி.

9) சூரியனுக்கு 11ல் கிரகங்கள் வரும்போது சீக்கிரகதி.

10) சூரியனுக்கு 12 ல் கிரகங்கள் வரும்போது அதிசீக்கிரகதி உண்டாகிறது.

அஸ்தங்கம் என்பது கிரகங்கள் சூரியனுடன் ஒரு ராசியில் இணைகின்றபோது ஒரு குறிப்பிட்ட பாகையில் நெருங்கி செல்லும்போது அக்கிரகம் தனது காரக மற்றும் ஸ்தான பலன்களை இழந்து நிற்கும். இதனை தான் நாம் "அஸ்தங்க(த)ம்" என்கிறோம். அதனை மேற்கொண்டு பார்ப்போம்...

1. செவ்வாய் சூரியனிடமிருந்து முன்பின்னாக 17 பாகைக்குள் அஸ்தங்கம் அடைகிறது.

2. புதன் - 13 பாகை

3. வியாழன் - 11 பாகை

4. சுக்கிரன் - 9 பாகை

5. சனி - 15 பாகை

அஸ்தங்கம் பெற்ற கிரகம் பலமிழந்தாக கொள்ளப்படும். அது தம் இயல்பை சூரியனிடம் இழந்துவிடும். அக்கிரகத்தின் பலனை சூரியனே தரக்கடமைப்பட்டவராவார். அஸ்தங்கம் பெற்ற கிரகம் பரிவர்த்தனை பெற்றால் அஸ்தங்க தோஷ நிவர்த்தியுண்டு என ஜோதிட மூலநூல்கள் கூறுகின்றன. இவைதவிர நாம் வேறு சில நுணுக்கங்களையும் அறிய வேண்டும். புதன், சுக்கிரன் ஆகிய கிரகங்கள் மட்டும் அஸ்தங்கம் அடையும்போது அவை தனது சொந்த காரகத்துவங்களை இழப்பதில்லை. இவை சூரியனுக்கு முன், பின் என இருந்தபடியே இரு வகையான அஸ்தங்கம் அடைகிறது. முன்புறமாக அஸ்தங்கம் அடையும்போது சுய காரகத்துவ பலனை இழக்காது. ஆனால் ஸ்தானதிபத்திய பலனை இழக்கிறது. கிரகங்களில் சுக்கிரன், புதன் ஆகிய இரு கிரகங்களும் சூரியனின் உள்வட்ட பாதையில் சுற்றி வரும் கிரகங்கள் ஆகும். இவ்விரு கிரகங்கள் மட்டுமே அஸ்தமனம் அடையும்போதே வக்கிரமும் அடைகிறது. இக்கிரகஙகள் அஸ்தங்கம் மற்றும் வக்கிரம் ஆகிய இரண்டையும் தனித்தனியாகவும், அல்லது இரண்டும் இணைந்தும் நடக்கிறது. இவ்விரு கிரகங்கள் மட்டும் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் வருவதால் இந்த சிறப்பை அடைகிறது. ஆனால் மற்ற கிரகங்கள் அனைத்தும் அஸ்தங்கம் மற்றும் வக்ரகதி இரண்டையும் ஒரே நேரத்தில் அடைவது கிடையாது. செவ்வாய், குரு, சனி ஆகிய மூன்று கிரகங்களும் சூரியனை மையப்பொருளாக கொண்டு பூமியின் வட்ட பாதைக்கு அடுத்தாற்போல வெளிவட்ட பாதை அமைத்துக் கொண்டு சுற்றி வருகிறது.இக்கிரகங்கள் பூமிக்கும் சூரியனுக்கும் இடையே வருவதில்லை.

சந்திரனுக்கு அஸ்தங்க தோஷமில்லை. சந்திரனும் பூமியை சுற்றி வருவதால் பதினைந்து தினத்திற்கு ஒரு முறை பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் வந்து வளர்பிறை மற்றும் தேய்பிறை உண்டாகிறது. சந்திரன் சூரியனோடு ஒரேராசியில் இணையும்போது அமாவாசை எனும் சிறப்பை அடைகிறார்.

புதனும் சுக்கிரனும் சூரியனுடையே சுற்றுவதால் புவிக்கும் சூரியனுக்கு இடையில் 13 பாகைக்குள்ளே வரின் புதனுக்கும், 8பாகைக்குள் வரின் சுக்கிரனுக்கும் வக்ரகதி உண்டாகிறது.

நீங்கள் பஞ்சாங்கத்தில் பார்த்தீர்களேயானால் தாரா கிரகங்கள் ஐந்தும் கிழக்கில் உதயமாகி மேற்கில் அஸ்தங்கம் ஆகிறது. ஆனால் புதன்,சுக்கிரன் மட்டுமே வக்கிரஅஸ்தங்கம் எனும் சிறப்பு நிலையில் மேற்கில் உதயமாகி கிழக்கில் அஸ்தங்கம் அடைகிறது. புதன் அல்லது சுக்கிரன் மேற்கே உதயமென்று வந்தால் அவை வக்ராஸ்தமனத்தில் உள்ளனர் என்று பஞ்சாங்கத்தினை பார்த்தவுடன் அறிந்துகொள்ள வேண்டும்.

உதயகதி என்பது அஸ்தங்கத்தில் இருக்கும் கிரகமானது அஸ்தங்கம் எல்லையை விட்டு விலகுவதை "உதயகதி" என்கிறோம்.

வக்ரம் அடைந்த நிலையில் கிரகங்களின் பலனில் ஏற்படும் மாற்றங்களாவன : -

1) உச்சம் அடைந்த நிலையில் ஒரு கிரகம் வக்கிரம் அடைந்திருந்தால் அக்கிரகம் உச்ச பலனை தராமல் நீச பலனை கொடுக்கிறது.

2) பாவ கிரகங்கள் உச்சம் அடைந்து வக்கிரம் அடையுமானால் அவர்களின் தசையில் அசுப பலனை தருகிறது.

3) ஒரு கிரகம் வக்கிரம் அடைந்த நிலையில் அக்கிரகம் உச்சம் அடைந்த கிரகங்களால் பார்க்கப்பட்டால் அக்கிரகம் வக்ரபலன் நீங்கி உச்ச பலனை தந்துவிடுகிறது.

4) வக்கிரம் பெற்ற கிரகம் இருக்கும் வீட்டின் அதிபதி உச்சம் பெற்றால் நல்லபலன் கிடைக்கிறது.

6) வக்கிரம் பெற்ற கிரகம் பரிவர்த்தனை பெற்றால் அதன் வக்கிர இயல்பு நீங்கும்.

கிரகங்களின் வக்கிரகதி காலம்
===========================

குருபகவான் - மூன்று மாதத்திற்கு அதிகமாகவும்,
சனிபகவான் - நான்கு முதல் ஐந்து மாதங்கள் வரை
செவ்வாய்பகவான் - இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சுமாராக இரண்டு மாதகாலம்
சுக்கிரபகவான் - ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ஐம்பது நாட்கள்

மேற்கண்ட காலங்களில் கிரகங்கள் வக்கிரநிலை அடைகிறது.
இதில் செவ்வாய்பகவான் மட்டும் சிலநேரங்களில் நான்கு அல்லது ஐந்து மாதங்கள் ஆனாலும் ஒரே இடத்தில் அசைவற்று நிற்பதுபோல தோற்றமளிக்கும். எனவே செவ்வாய் கிரகத்திற்கு மட்டும் "ஸ்தம்பனகதி "என்ற சிறப்பு பெயரும் உண்டு. பதிவு குழப்பத்தை ஏற்படுத்துகிறது என்றால் இன்னொரு முறை ஆறுதலாக படியுங்கள்... வழமைபோல பதிவுடன் சம்பந்தப்பட்ட ஜோதிட கேள்விகளை கேளுங்கள். உங்கள் ஜாதக கேள்விகளை அல்ல... தகுதியான வினாக்களுக்கு விடை தருவேன்... மேலும் எனது பதிவுகளில் கேள்வி எழுப்பியவர்களிற்கு; தகுதியான கேள்விகளிற்கு நான் பதில் கொடுப்பேன். அதில் இதர ஜோதிடர்களோ அல்லது ஜோதிடம் அறிந்தவர்களோ பதில் அளிக்க வேண்டாம் என்று ஒரு வேண்டுகோளையும் முன்வைக்கிறேன்...

நன்றி,
பாரம்பரிய வாக்கிய ஜோதிடர்,
ஹரிராம் தேஜஸ்

புதன், 18 ஏப்ரல், 2018

அரைகுறை ஜோதிடர் ஆயுளுக்கும் ஆபத்து

இந்த சிறு ஆதங்க பதிவை இப்படி ஆரம்பிப்போம்,
தமிழ் இலக்கணத்தில் உள்ள அகர, மகர, லகரத்தினையே இதற்கு எடுத்துக்கொண்டோமேயானால் ஒருவர் அகரஎழுத்துக்களை மகரமாக கொள்ளவேண்டும் என்றும் மகர எழுத்துக்களை லகரமாக கொள்ள வேண்டும் என்றும் சொன்னால் அந்த பித்தனை என்ன செய்ய வேண்டும்? அகர எழுத்துக்கள் என்பன இவைதான் மகர எழுத்துக்கள் என்பன இவைதான் லகர எழுத்துக்கள் என்பன இவைதான் என்று சான்றுகாட்ட ஆதாரமாக பழம்பெரும் தமிழ் இலக்கண நூல்களை காட்டினால் அவை இடைச்செருகல் அதனால் ஏற்க முடியாது என்றும் சங்ககாலம்(கி.மு 300 தொடக்கம் கி.பி 300), சங்கமருவியகாலத்தில்(கி.பி 300 - 700வரை) வாழந்த தமிழ் பண்டிதர்களிடமும் புலவர்களிடமும் சென்றுதான் கேட்டறிய வேண்டும் என்று கூறினால் எப்படி இருக்கும்? இது போன்ற (#௯௯௯௯)களை தமிழர்கள் கல்லால்அடித்தே கொல்லவேண்டாமா? 
உங்கள் அனைவருக்கும் புரியும் வகையில் இன்னுமொரு உதாரணம் கூறவேண்டும் என்றால் நாம் யாரும் கடவுளே நேரடியாக கண்டதில்லை என்பதற்காக உங்களுக்கு விருப்பமான ஒரு கடவுளை(எனக்கு சிவன்) அவரெல்லாம் கடவுளே இல்லை. பேய்களும்பிசாசுக்களும்தான் கடவுள் என்று ஒருவன்கூறுகிறான். புராணஇதிகாசங்களை காட்டி புரியவைக்கமுயன்றாலும் அதெல்லாம் இடைச்செருகல் நம்பமுடியாது வேண்டுமென்றால் சம்பந்தரையோ அப்பரையோ கொண்டுவந்து அவர்சொன்னால் பிறகு யோசிப்போம் எனும் (#௯௯௯௯)களை என்ன செய்ய வேண்டும் என்று இறைபக்தர்களான நீங்களே தீர்மானியுங்கள். இதுபோன்ற கீழ்த்தரமான கயவர்கள் மகாபுனிதமான ஜோதிடசாஸ்திரத்திலேயே; கறையான் போல இருந்துகொண்டு அதனையே அரித்து தம் வயிறுவளர்க்கின்றனர். பாரம்பரிய வேதஜோதிடமென்பது மூலநூலினை ஆதாரமாக கொண்டது. அதில் ஞானம் பெறாது, அதனை ஆதாரமாக்கி பேச திராணியில்லாதவன்எல்லாம் தான் பாரம்பரிய ஜோதிடர்என சொல்வதைவிட தற்கொலை செய்துகொள்வது சிறந்தது என்று நான் எண்ணுகிறேன். மேற்கூடிய இரு உதாரணங்களிலும் மேற்கோள் காட்டியவாறு பேசிய ஒருவனை ஒரு ஜோதிடனாக; நான் நடாத்தும் "ஜோதிட கேள்வி பதில்எனும் பெயருடைய முகநூல் குழுவிலிருந்து எட்டிஉதைந்துவிட்டேன். இந்த பதிவை வாசிக்கும் போதே ஒருசில அரைகுறை பாரம்பரிய ஜோதிடர்க்கு புரியும் இனி தங்கள் பருப்பு இங்கு வேகாது என... அவர்கள் யாருக்கும் சொல்லாமல் குழுவிலிருந்து நடையைகட்டிவிடுங்கள். மற்றைய ஜோதிட முறைகளை பற்றி எனக்கு பிரச்சனையில்லை. ஆனால் இந்த குழுவில் எந்தவொரு பாரம்பரிய ஜோதிட பதிவு இட்டாலும் பதிவாளர் தமது பதிவை மூலநூல் ஏதாவது ஒன்றை தமது பதிவிற்கு ஆதாரமாக/ சான்றாக காட்ட வேண்டும். முடியாதவர்கள், அரைகுறை பாரம்பரிய ஜோதிடர்கள் பதிவிடவோ கருத்திடவோ வேண்டாம்! முதலில் பாரம்பரிய ஜோதிடத்தினை முறையாக பயிலுங்கள். இதற்கு 3-5 வருடங்கள் வரை கட்டாயம் எடுக்கும். பாரம்பரிய வேத ஜோதிடத்தில் நான்று வகுப்பு சென்றவுடன் தன்னை ஜோதிடனாக எண்ணுபவனைவிட அப்படி ஒரு எண்ணத்தினை தனது சுயலாபத்துக்காக ஏற்படுத்தும் அந்த ஆசிரியனே மிகக் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவன் என்பதில் எனக்கு எந்தவொரு மறுப்பும் இல்லை.
சில இடங்களில் (#௯௯௯௯) இவ்வாறு குறிப்பிட்டு இருந்தேன். உங்கள் பாணியில் உங்கள் வழக்கில் அதற்கு ஒரு சொல்சேர்த்து படியுங்கள். அப்போதுதான் பதிவு சுவாரஸ்யமாக இருக்கும்... எனது ஆதங்கமும் ஆவேசமும் சாதாரண மக்களுக்கு புரிய வாய்ப்பில்லை என்றாலும் நீங்கள் பாரம்பரிய ஜோதிடத்தினை உயிராக கொண்ட ஜோதிடராக அல்லது ஜோதிட மாணவனாக இருந்தால் உங்களுக்கு கட்டாயம் புரியும்...

பாவத்பாவம் என்றால் என்ன?

எனது Facebbok Page இல் வாசகர் ஒருவரது கேள்வி :- ஜோதிஷ ஆசானிடம் ஒரு கேள்வி.
லக்னம் நான் என்றால் என் மனைவிக்கு ஏழாவது பாவம்
என் குழந்தை யின் பாவம் ஐந்து. என் மனைவி என் குழந்தைக்கு தாய் எனும்போது
ஐந்துக்கு. ஏழாம் பாவம் மூன்று என்றால் தாய்க்கு நான்காம் பாவம் என்று சொல்வது ஏன்?
மேலும்.......
என் தந்தை க்கு. ஒன்பதாம் பாவம். என் அம்மா என் தந்தக்கு மனைவிதானே... அப்படியானால். ஒன்பதுக்கு. ஏழாவது பாவம். மூன்று தானே.....
பிறகு ஏன்.... தாய்க்கு நான்காம் பாவம்....
எனது பதில் :- வணக்கம்,
ஒரு பாவத்திற்கு இன்னொரு பாவம் எடுத்து கணிப்பது பாவத்பாவ முறையாகும். பாரம்பரிய ஜோதிடத்தை ரிஷிகள் தெளிவாக வகுத்துள்ளனர். ஆனால் தற்போது ஜோதிடம் திரிபுபடுத்தப்பட்டு தவறான வகையில் ஜோதிடம் பரப்புரை செய்யப்படுகிறது. அந்த வகையில் மூலநூல்களில் உங்களின் கேள்விக்கு ஏற்ற விளக்கத்தினை மந்த்ரேஸ்வரர் அருளிய பலதீபிகையில் பாவத் பாவம் பற்றி தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி ஜாதகரிற்கும் குறித்த உறவுகளிற்குமான தொடர்பை ஸ்தானங்களை வைத்து அறிய வேண்டும். அதாவது தாய் என்றால் 4ம் ஸ்தானம். நம் சொத்து என்றால் 4ம் ஸ்தானம். ஆனால் பாவத் பாவ அடிப்படையில் ஜாதகபலன் அறிய வேண்டும் என்றால் உயிர்க்காரகத்துவத்திற்கு காரகனை (முதன்மையாக கொண்டு) முதற்கொண்டும் பொருள்காரகத்திற்கு ஸ்தானத்தை முதற்கொண்டும் பலன் அறிய வேண்டும். உதாரணமாக காலையில் பிறந்த ஒருவரின் தந்தையின் உடல்நலகோளாறு பற்றியறிய சூரியனிலிருந்து 6ம் இடத்தை பரிசீலிக்க வேண்டும். ஆனால் 99%மான ஜோதிடர்கள் ஒன்பதிற்கு ஆறாமிடத்தை ஆராய்கின்றனர். இது தவறானது. இப்படி தவறாக பார்ப்பதால்தான் தந்தையின்(9) மனைவி(7) ஸ்தானம் 4 என வராமல் ஏன் 3 என வருகிறது என்று குழம்பிக்கொள்கின்றனர். பாரம்பரிய ஜோதிடத்தை பொறுத்தவரை மூலநூல்களில் சொல்லப்பட்ட விதிமுறைகளை முழுமையாக அறிந்திருக்க வேண்டும். நுனிப்புல் மேய்ந்துவிட்டு பாரம்பரிய ஜோதிடத்தை பலர் தவறான வகையில் கொண்டுசெல்வது கண்டிக்கதக்கது.  இக்கருத்தை ஜோதிடர்கள் மற்றும் ஜோதிட ஆர்வலர்கள் மத்தியில் இந்த பதிவு செல்லட்டும்...
 பதிவு புரிந்திருந்தால் கமெண்டில் இந்த கேள்விக்கான பதிலை கூறுங்கள்
கேள்வி :- பகலில் பிறந்த ஒருவரின் தாயின் சொத்தில் உள்ள எதிர்ப்புக்களை குறிக்கும் பாவம் எது?

இதற்கான விடையினை பார்த்தோமேயானால் 
பாவத்பாவத்தினை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று பலதீபிகை வழிகாட்டுகிறது என்று மேலே கூறியிருந்தேன். அந்த விதிகளின்படி;
ஜாதகரிற்கும் அவரது தாய்க்குமான நிலையினை பற்றியறிய மட்டுமே நான்காமிடத்தை அறிய வேண்டும். ஆனால் ஜாதகரது ஜாதகம் மூலமாக தாயினை பற்றியறிய வேண்டுமாயின் பாவத்பாவம் மூலமாகவே அறிய முடியும். அந்தவகையில் தாய்(உயிர்காரகத்துவம்) பற்றி அறிய மகன் ஜாதகத்தில் சுக்கிரன் நிற்கும் இடத்தை லக்கினமாக கொள்ள வேண்டும். தற்போது இதனை தாயின் ஜாதகபலனிற்காக மட்டும் பயன்படுத்த வேண்டும். பகலில் பிறந்தவர்க்கு மாத்ருகாரகன் சுக்கிரன்; இரவில் பிறந்தோர்க்கு மாத்ருகாரகன் சந்திரன். ஆகவே சுக்கிரன் முதற்கொண்டு பலனறிய பாரம்பரிய வேத ஜோதிட சாஸ்திரம் வலியுறுத்துகிறது... அதன்படி சுக்கிரன் இருக்கும் பாவத்தை லக்கினமாக கொண்டால் அதிலிருந்து நான்காம்பாவம் தாயின் சொத்துக்களை குறிக்கும். சொத்து என்பது பொருள் காரகத்துவம் என்பதால் அந்த சொத்துதொடர்பான விரிவான பலன்களை அறிய அதனை (சுக்கிரனிலிருந்து நான்காம் இடத்தை) லக்கினமாக கொண்டு பலன்அறிய வேண்டும் என்பது பாவத்பாவ விதி. ஆகவே சுக்கிரனிலிருந்து(₫) நான்காம்(¤) இடத்திற்கு ஆறாமிடமானது(~) #முறையே தாயின்(₫) சொத்துக்களிலுள்ள(¤) பிரச்சனை/வழக்குகளை(~) குறிக்கும். இதனை சுக்கிரனிலிருந்து எண்ணிப்பார்த்தால் அது ஒன்பதாம் பாவமாக அமையும்... இதுவே பாவத்பாவத்தை சரியாக பயன்படுத்தும் முறை ஆகும்...


வராஹ மிஹிரரின் பிருஹத் ஜாதகம்

வணக்கம்,

இது "வராஹ மிஹிரரின் பிருஹத் ஜாதகம்" எனும் தொடரின் அறிமுக பதிவு...

ஜோதிடத்தில் கிரகங்களாக ஒன்பது கிரகங்களே உள்ளன. அவை சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு கேது ஆகும்.ஆனாலும் ஜோதிடத்தில் 7 கிரகங்களின் ஆளுமைக்கு உட்பட்ட ராசிகளை நம் முன்னோர்கள் அடையாளம் கண்டனர். ஜோதிட மேதை வராஹமிஹரர் தனது பிருஹத் ஜாதகம் என்ற வடமொழி நூலில் இந்த 7 கிரகங்களைப் பற்றியே எழுதியுள்ளார். அவர் ராகு கேது பற்றி ஒரு வரிகூட பேசவில்லை. அவர் இந்த 7 கிரகங்களுக்கே தனது கிரந்தம் முழுவதிலும் முக்கியத்துவம் கொடுத்துள்ளார். அவரின் பிருஹத் ஜாதகம் என்ற நூலையே ஜோதிட வல்லுனர்கள் மூல நூலாக/ஆதார நூலாக (ரெஃப்ரன்ஸ்) பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அவருக்கு முன்பும், அவருக்கு பின்பும் எழுதப்பட்ட பல கிரந்தங்களில் இராகு, கேதுக்களைப் பற்றி கூறப்பட்டுள்ளது. தமிழிலும் அதற்கான சான்றுகள் உள்ளன. சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சைவ சமய 63 நாயன்மார்களில், முக்கியமான நால்வரில் ஒருவரான திருஞான சம்பந்தர் தனது கோளறு பதிகத்தில், இராகு கேதுக்களைப் பற்றியும் பாடியுள்ளார்.

சில நூற்றாண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோவையும் சேர்த்து ஒரு சிலர் இதற்கும் ஜாதகத்தில் இடம் கொடுத்து பலன் சொல்லி வருகின்றனர். உங்களிற்கு ஒன்று தெரியும் உத்திரகாலாம்ருதத்தினை எழுதிய காளிதாசர் கிரகங்களின் ஒளிக்கு ஏற்ப அவற்றிற்கு இந்து லக்கினஎண் கொடுத்தார். இதன்படி முழு அசுபராகவும் சூரியனிலிருந்து மிகத்தொலைவில் அமைந்து ஒளி பிரதிபலிப்பு திறன் மிககுறைவாக உள்ள சனிக்கு அவர் கொடுத்த எண் ஒன்று... இதற்கும் கீழே (அதவாது சூரியனிலிருந்து சனிக்கும் தொலைவாக) உள்ள கிரகங்களால் குறிப்பிடத்தக்க பலன் கிடைக்கப்போவதில்லை என்பதை எந்தவொரு வானியல்சாதனமும் இல்லாமல் தம் ஞானதிருஷ்டியால் ஜோதிடத்தினை படைத்த ஞானிகளிற்கு தெரியாதா என்ன? யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோவையும் கணக்கில் எடுப்பவர்கள் பேசாமல் மேலை நாட்டு ஜோதிட முறையில் பயணிப்பதே சிறந்தது. ஏற்கனவே சமுத்திரமாக பரந்திருக்கும் பாரம்பரிய ஜோதிடத்தில் காரைக்காண முடியாதவர்கள் யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோவையும் தமது படகில் போட்டுகொண்டு நடுக்கடலில் மூழ்கிவிடவேண்டியதுதான்... ஏற்கனவே பாரம்பரிய வேத ஜோதிடத்தின் ஆழத்தை அளவிடமுடியாதோர் அதன் தனித்தன்மையினையும் சிறப்பையும் கெடுக்கும் வண்ணம் முகநூலில் ஆயிரம் பதிவுகள் இடுகின்றனர். இதுவா பாரம்பரிய ஜோதிடம் என குழம்பியிருக்கும் ஜோதிட ஆர்வலர்களிற்கு ராகு கேது நீங்கலாக 7 கிரகங்கள், பராசரர் கூறிய 32 வகையான தசாமுறைக்கும் (இந்த 32வகையான தசாபுக்தியில் ஒன்றுதான் நாம் பயன்படுத்தும் நட்சத்திர தசா எனும் விம்சோத்தரி தசா முறை) புதிதான தசாபுத்தி பகுப்பினையும் உடைய பிருஹத் ஜாதக மூலநூலின் முழு அத்தியாயங்களையும் சுலோகங்களையும் தரும் "வராஹ மிஹிரரின் பிருஹத் ஜாதகம்" எனும் தொடரின் அறிமுகமாக இதனை எடுத்துக்கொண்டு அடுத்து வராகமிஹிரரின் ஜோதிட கணிப்பு திறமையை காண்போம்...

நாம் அனைவரும் அறிந்த விக்கிரமாதித்த மன்னன் தன் நாட்டை சீரும் சிறப்புமாக ஆண்டு வந்தார். அவருக்கு ஒரு மகன். அவனை உயிருக்கு உயிராக வளர்த்து வந்தார். ஒருநாள் தன் மகனின் வருங்காலம் பற்றி அறிய ஆவல் கொண்ட விக்கிரமாதித்தன், ஜோதிடர் ஒருவரை அழைத்திருந்தார். அவரிடம் தன் மகன் ஜாதகத்தை கொடுத்து அவன் எதிர்காலம் அறிய சொன்னார்.   ஜாதகத்தை கணித்த ஜோதிடர், அதிர்ச்சி அடைந்தார். மௌனமாக இருந்தார். உடனே அரசர் ஜோதிடரை பார்த்து என்னவென்று கேட்டார்.  அதற்கு ஜோதிடர்,  “விக்கிரமாதித்தா… உன் மகன் வராகத்தினால்(பன்றி) இன்னும் சில தினங்களில் தாக்கப்பட்டு இறப்பான்". என்று கூறினார்.  விக்கிரமாதித்தன் தாளாத துயரம் கொண்டார். வேதனையால் துவண்டார். “அய்யோ என் மகன் என்னை விட்டு போய் விடுவானா?“ என்று கலங்கினார். “இதற்கு என்ன பரிகாரம்?“ என்று ஜோதிடரை கேட்டார்.  ஜோதிடர், “இதற்கு பரிகாரம் இல்லை. இது ஆண்டவன் எழுதிய விதி.“ என்று கூறி விட்டார். உடனே விக்கிரமாதித்தன், ஜோதிடர் கூறியதை பொய்யாக்க வேண்டும் என்று ஆண்டவனிடம் பிராத்தனை செய்து கொண்டார். தனது நாட்டினை சூழவுள்ள அனைத்து இடங்களில்  பன்றிகளை கொன்று குவித்தான். ஜோதிடர் கூறிய தினம் வந்தது. அன்று விக்கிரமாதித்தனால் சாப்பிடக் கூட முடியாமல் மனதில் மரண பயம் எழுந்தது. அதனால் தன் மகனை வெளியே எங்கும் அனுப்பாமல் தன் அரண்மனையில் பத்திரமாக பாதுகாப்பாக ஒரு அறையில் தங்க வைத்தார். தன் மகனை சுற்றி பாதுகாவலர்களை அமைத்தார். “யாரையும் என் அனுமதியில்லாமல் என் மகன் அறைக்குள் அனுமதிக்ககூடாது." என்று கட்டளையிட்டார். ஒரு ஈ கூட தன் மகனை நெருங்க விடாத அளவில் பாதுகாப்பாக வைத்திருந்தார்.  அன்று ஒரு வினாடி, ஒரு யுகம் போல் இருந்தது. இந்த ஒரு நாள் பாதகம் இல்லாமல் போனால் போதும் என்ற மன ஓட்டத்திலேயே இருந்தார் மன்னர் விக்கிரமாதித்தன்.   அடிக்கடி தன் மகனை சென்று கவனித்து வந்தார். சேவகனும் இளவரசனை அவ்வப்போது பார்த்து  கொண்டு விக்கிரமாதித்தனுக்கு தகவல் சொல்லி கொண்டு இருந்தார்.  சூரியன் அஸ்தனமாகும் நேரம்.  “அப்பாடி…. எப்படியோ பாதி பொழுது சென்றுவிட்டது. இன்னும் சில மணி நேரத்தில் விடிந்து விடும். இதுவரை வராத யமன் இனி வரவா போகிறான்.? என் நகரத்துக்கு, அதுவும் அரண்மனைக்குள் எப்படி ஒரு மிருகம் வரும்.? என்ற மகிழ்ச்சியால், “என் மகனை பார்த்து விட்டுவா" என்று சேவகனிடம் கட்டளையிட்டார் மன்னர் விக்கிரமாதித்தன்.

சேவகன் சென்று பார்த்தான். அலறினான்.  எது நடக்கக் கூடாது என்று நினைத்தார்களோ அது நடந்தே விட்டது.  இளவரசனை கண்ட காட்சியை பார்த்து மனம் பதறி,  “மன்னா…..“ என்று கதறி கொண்டே ஒடி வந்தான் சேவகன்.  விக்கிரமாதித்தனை பார்த்து கதறி அழுதான். சேவகனின் கதறலை கண்ட விக்கிரமாதித்தன், ஏதோ விபரீதம் என்று உணர்ந்தாரே தவிர ஒன்றும் விளங்கவில்லை. பதறி அடித்து கொண்டு தன் மகன் இருக்கும் அறைக்கு ஒடினார். அங்கே தன் மகனை கண்ட விக்கிரமாதித்தன், அதிர்ச்சியில் அசையாமல் சிலையாக நின்றார்.  விக்கிரமாதித்தனின் மகன் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தான்.  எல்லோரும் மன்னரை சமாதானம் செய்தார்கள். அவரது மகனின் அறையில் மாட்டியிருந்த பன்றியின் உலோக சிலை இளவரசன்மீது வீழ்ந்து அவன் உடலை துளைத்திருந்தது.  சில நிமிடம் கழித்து அரசர் சுயநினைவுக்கு வந்தார். உடனே ஜோதிடரை அழைத்து வரச் சொன்னார்.. ஜோதிடர் கூறியது உண்மைதான் என்று விக்கிரமாதித்தன் உணர்ந்தார். அந்த ஜோதிடர்தான் “மிகிரர்". இந்த சம்பவத்தைச் சரியாகக் கணித்ததாலேயே மிஹிரருக்கு, "வராஹ மிஹிரர்"எனப் பெயர் வந்தது. இதைத் தவிர்த்திருக்க முடியாதா? எனக் கேட்டஅரசனுக்கு , மிஹிரரின் பதில்
என்ன தெரியுமா? "ஜோதிடர்களால், கணித்து சொல்ல முடியும். ஆனால் ஒரு நல்ல யோகியால்
நடக்க இருப்பதையும் மாற்ற முடியும் அதுவும் இறைவன் அனுமத்தித்தால் என்பதாகும்... மிஹிரர் ஜோதிட உலகின் மகாமேதை என போற்றப்படுபவர். அப்பேற்பட்ட ஜோதிட மாமேதை எழுதிய பாரம்பரிய ஜோதிட மூலநூலான "பிருகத் ஜாதகம்" அத்தியாயம் ஒன்றினை எனது முகநூல் பக்க பதிவில் தொடர்ந்து காண்போம்.

"வராஹ மிஹிரரின் பிருஹத் ஜாதகம்" எனும் இத்தொடர் முழுமையாக முடிக்க எவ்வளவு காலம் சென்றாலும் என்னுடன் தொடர்ந்து முகநூல் வழியில் பயணியுங்கள்...
எனது முகநூல் பக்கம் -  facebook.com/astrologerhariram

 

Copyright @ 2018 வேத ஜோதிடம்.