ஜோதிடம் எனும் தெய்வீக சாஸ்திரம்


widgeo.net

வியாழன், 7 ஜூலை, 2016

சற்சந்தான பாக்கியம்.

குழந்தை எப்போது பிறக்கும் என்ற கேள்விக்கு சுக்கிரனையும் உப புத்திர காரகனான பாவிக்க வேண்டும். ஏனெனின் கருத்தரித்து முதலாவது மாதத்தினை சுக்கிரன் எடுத்து நடத்துகின்றார். ஆகவே சுக்கிரன் நன்றாக இருந்தால் தான் குழந்தை தங்கும். இதனை வேறு விதமாகவும் கூறலாம். அதாவது  சுக்கில சுரோணித அதிபத்தி வலுவடைந்தால் தான் சுக்கில சுரோணித வீரியம் இருக்கும். கரு கட்டும் என்று...ஆகவே சுக்கிர தசை புக்தி அந்தரங்களில் குழந்தைப்பேறு கிட்டும் என்று.
இரண்டாவது மாதம் கருக்கட்டிய சிசுவை செவ்வாய் பொறுப்பேற்று காப்பாற்றுகின்றார்.
மூன்றாவது மாதம் கருக்கட்டிய சிசுவின்மீது ஆதிக்கம் செலுத்துபவர் குருபகவான். இக்காலத்திலேயே சிசுவின் உடருறுப்புக்கள் விருத்தியாகின்றன...
நான்காவது மாதம் சூரியனும் ஐந்தாவது மாதம் சந்திரனும் பொறுப்பேற்றுக்கொள்கின்றனர். இக்காலத்திலேயே நுகர்ச்சி இயல்புகளை சந்திரன் கொடுக்கின்றார்..
ஆறாவது மாதம் சனிபகவான் பொறுப்பேற்று வளர்க்கின்றார்.
ஏழாவது மாதம் புதன் பொறுப்பெடுக்கின்றார். இக்காலத்தில் நமது புராணங்கள், இதிகாசங்கள், நல்ல நீதி கதைகள் படிக்க வேண்டும். குழந்தையின் அறிவு வளரும்.
ஏழாவது மாதம் புதன் பொறுப்பெடுக்கின்றார்.
எட்டாவது மாதம் குழந்தை எந்த லக்கினத்தில் பிறக்க வேண்டும் என்று இறைவன் முடிவு செய்வது இக்காலத்திலேயே...
ஒன்பதாவது மாதம் மறுபடியும் சந்திரன் பொறுப்பெடுக்கின்றார். இக்காலத்தில் பூ முடிச்சு குலதெய்வ வழிபாடு கடடாயம் செய்யப்பட வேண்டும்.
10வது மாதத்தினை எடுத்து நடத்துபவர்கள் குருவும் சுக்கிரனும் ஆவர். இயற்கை சுபர்களான குருவும் சுக்கிரனும் குழந்தை  சுப காரியத்தினை எடுத்து செய்கின்றனர். இவர்களில் சுக்கிரன் வலுவாக இருந்தால் விரைவாகவே குழந்தை பிறந்து விடும். குரு பலமாக இருந்தால் முழுதாக (10 மாதம் தங்கியிருந்தே குழந்தை பிறக்கும்.)

GHT

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

0 கருத்துகள்:

 

Copyright @ 2018 வேத ஜோதிடம்.