ஜோதிடம் எனும் தெய்வீக சாஸ்திரம்


widgeo.net

வியாழன், 2 மார்ச், 2017

காமாட்சி விளக்கு..

விளக்குகளில் காமாட்சி விளக்கு புனிதமானது. இது எல்லா வீடுகளிலும் இருக்க வேண்டிய விளக்கு. பூஜைக்கு முன் பூவும், பொட்டும் வைத்து மங்கலத்துடன் தீபம் ஏற்றி, தினமும் வழிபடத்தக்கது. பல குடும்பங்களில் பரம்பரை பரம்பரையாக காமாட்சியம்மன் விளக்குகளை பொன் போலப் போற்றிப் பாதுகாத்து வைத்துள்ளனர்.
சிலர் தம் முன்னோர்கள் ஏற்றிய காமாட்சியம்மன் விளக்குச் சுடர் தொடர்ந்து, நிலைத்து, எரியும்படி கவனித்துக் கொள் கின்றனர். புதுமனை புகும் போதும், மணமக்கள் மணப்பந்தலை வலம் வரும்போதும், எல்லா இருள்களையும் நீக்கியபடி, அருள் ஒளியை அனைவருக்கும் அருளியபடி முன்னால், பக்தியுடன் ஏந்திச் செல்லப்படும் விளக்கும் காமாட்சி அம்மன்திருவிளக்கே.
புதுப்பெண் புகுந்த வீட்டுக்கு வரும்போது, "நிறைநாழி'' எனப்படும் படியில் நெல் வைத்து அதன் மீது காமாட்சி அம்மன் விளக்கு வைத்து அதில் மீது தீபம் ஏற்றப்படும். பெண்ணுக்கு சீர் வரிசைகளை தரும்போது காமாட்சி அம்மன் விளக்கும், இரண்டு குத்து விளக்குகளும் அவசியம் வழங்கப்பட வேண்டும். விளக்குகள் தமிழர் வாழ்வில் ஓர் அங்கம்.
மங்கலப் பொருட்களில் இந்த காமாட்சி விளக்கும் ஒன்று.
குத்து விளக்கு :
குத்துவிளக்கும், காமாட்சியம்மன் விளக்கை போலப் புனிதமானது. செங்குத்தாக நிமிர்ந்து நேராக நிற்கும் விளக்கு (குத்து-நேர்) என்பதால் குத்துவிளக்கு என்ற பெயர் ஏற்பட்டது. இந்த விளக்கு பூஜையில் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஐந்துமுகக் குத்துவிளக்குகள் இரண்டு பூஜை அறையில் சுடர் விட்டு பிரகாசிக்குமானால் அங்கே மங்கலம் பொங்கும் என்பது ஐதீகம். ஓர் அங்குலம் முதல், பல அடிகள் உயரமுள்ள குத்து விளக்குகள், மிக அழகிய கலை நுட்பங்களுடன் கிடைக்கின்றன.
உச்சியில் அன்னம் வீற்றிருக்கும் குத்து விளக்குகளில் சில வழிபாட்டுக் குரியவையாகவும் ,சில அலங்காரத்திற்கு உரியவையாகவும் விளங்குகின்றன.
பாவை விளக்கு :
ஒரு பெண் அகல் விளக்கை ஏந்திக் கொண்டிருப்பது போல் இருப்பது பாவை விளக்கு எனப்படுகிறது. இந்த வகை விளக்குகளை கடவுளின் முன் ஒளிதரும் விளக்காக பயன்படுத்தலாம் .
தீபங்கள் பதினாறு :
தூபம், தீபம் புஷ்பதீபம் (பூ விளக்கு), நாத தீபம், புருஷா மிருகதீபம், கஜதீபம், ருயாஜத (குதிரை) தீபம், வியாக்ர (புலி) தீபம், ஹம்ஸ் (அன்னம்) தீபம், கும்ப (குடம்) தீபம், குக்குட (கோழி) தீபம், விருக்ஷ தீபம், கூர்மா (ஆமை) தீபம், நட்சத்திர தீபம், மேருதீபம், கற்பூர தீபம் என தீபங்கள் 16 வகைப்படும்.
தூக்கு விளக்குகள் ஒன்பது :
1. வாடா விளக்கு
2. ஓதிமத்தூக்கு விளக்கு
3. தூண்டாமணி விளக்கு
4. ஓதிம நந்தா விளக்கு
5. கூண்டு விளக்கு
6. புறா விளக்கு
7. நந்தா விளக்கு
8. சங்கிலித் தூக்கு விளக்கு
9. கிளித்தூக்கு விளக்கு.
பூஜைவிளக்குகள் ஒன்பது :
சர்வராட்சததீபம், சபூத தீபம், பிசாஜ தீபம், கின்னர தீபம், கிம்புரு தீபம், கணநாயக தீபம், வித்யாகர தீபம், கந்தர்வ தீபம், பிராக தீபம் ஆகியவை 9 வகை பூஜை விளக்குகளாக வழக்கத்தில் உள்ளன. சரவிளக்கு, நிலை விளக்கு, கிளித்தட்டு விளக்கு ஆகியன கோவில் விளக்குகளின் மூன்று வகைகளாகும்.
கைவிளக்குகள் ஏழு :
கஜலட்சுமி விளக்கு, திருமால் விளக்கு, தாமரை விளக்கு, சிலுவை விளக்கு, சம்மனசு விளக்கு, கணபதி விளக்கு, கைவக் விளக்கு ஆகியவை கை விளக்குகளாகும்.
நால்வகை திக்பாலர் தீபங்கள் :
ஈசான தீபம், இந்திர தீபம், வருண தீபம், யம தீபம்.
அஷ்டகஜ தீபங்கள் எட்டு :
ஐராவத தீபம், புண்டரீக தீபம், குமுத தீபம், ஜனதீபம், புஷ்பகந்த தீபம், சர்வ பவும தீபம், சுப்ரதீபம், பித்ர தீபம்.

புதன், 1 பிப்ரவரி, 2017

நவகிரக சாந்திகள்

உங்கள் ஜனன ஜாதகத்தில் எந்தக் கிரகம் தீய பலன்களைத் தருகிறது
என குறிப்பிடபட்டுள்ளதோ அந்த கிரகங்களை சாந்தி செய்வதற்குரிய பரிகாரங்கள்:
ஜோதிட விதிகளின்படி ஒவ்வொரு ராசிக்கும்,லக்னத்திற்கும் உரிய சுப,அசுப கிரகங்கள் விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இதனை உங்கள் ஜாதகத்துடன் சரி பார்த்துகொள்ளவும்.உங்கள் ஜனன ஜாதகத்தில் ராசி மற்றும் லக்னத்திற்கு உரிய அசுப(தீய) கிரகங்களுக்கு கீழே கொடுக்கபட்டுள்ள கிரக விபரங்களின்படி பரிகாரம் செய்து கொள்ளவும்.
தீய பலன்களைத் தரும் கிரகத்தின் தசை,புத்தி நடைபெறும் சமயங்களிலும் தீய கிரகங்களுக்குரிய நாட்களிலும் இந்த பரிகாரங்களை செய்து அசுப கிரகங்களினால் ஏற்படும் தீய விளைவுகளை தவிர்த்து கொள்ளவும்.
இயற்கையான சுபகிரகங்கள்
குரு, சுக்கிரன், தீய கிரகங்களுடன் சேராத புதன், வளர்பிறைச் சந்திரன்.
இயற்கையான அசுபகிரகங்கள்
சூரியன், செவ்வாய், சனி, இராகு, கேது, தீய கிரகங்களுடன் சேர்ந்த புதன், தேய்பிறைச் சந்திரன்.
ஒவ்வொருவரின் ஜென்ம லக்னத்திற்கு ஏற்ப கிரகங்களின் சுப, அசுபத் தன்மை மாறுபடுகிறது.
மேஷம் லக்னம்
சுப கிரகங்கள் சூரியன், குரு
தீய கிரகங்கள் புதன், சனி
ரிஷபம் லக்னம்
சுப கிரகங்கள் சூரியன், புதன், சனி
தீய கிரகங்கள் சந்திரன், குரு, சுக்கிரன்
மிதுனம் லக்னம்
சுப கிரகங்கள் குரு, சுக்கிரன், சனி
தீய கிரகங்கள் சூரியன், செவ்வாய், குரு
கடக லக்னம்
சுப கிரகங்கள் செவ்வாய், குரு
தீய கிரகங்கள் புதன், சுக்கிரன்
சிம்ம லக்னம்
சுப கிரகங்கள் சூரியன், சுக்கிரன் செவ்வாய்
தீய கிரகங்கள் புதன், சுக்கிரன்
கன்னி லக்னம்
சுப கிரகங்கள் புதன், சுக்கிரன்
தீய கிரகங்கள் சந்திரன், குரு, செவ்வாய்
துலா லக்னம்
சுப கிரகங்கள் புதன், சுக்கிரன்,சனி
தீய கிரகங்கள் சூரியன், செவ்வாய், குரு
விருச்சிக லக்னம்
சுப கிரகங்கள் சூரியன், சந்திரன்,குரு
தீய கிரகங்கள் செவ்வாய்,புதன், சுக்கிரன்
தனுசு லக்னம்
சுப கிரகங்கள் சூரியன், செவ்வாய், புதன்
தீய கிரகங்கள் சுக்கிரன்
மகர லக்னம்
சுப கிரகங்கள் செவ்வாய்,புதன்,
சுக்கிரன்
தீய கிரகங்கள் சந்திரன், குரு
கும்ப லக்னம்
சுப கிரகங்கள் சுக்கிரன், புதன், சனி
தீய கிரகங்கள் சந்திரன்,செவ்வாய் ,குரு
மீன லக்னம்
சுப கிரகங்கள் சந்திரன், செவ்வாய்
தீய கிரகங்கள் சூரியன்,சுக்கிரன், சனி,புதன்


1.சூரியன்-
சனிக்கிழமை அன்று 7 வகையான தானியங்களை ஊற வைத்து ஞாயிற்றுக்கிழமை அன்று காலை அவற்றைப் பொடி செய்து எறும்புகளுக்குப் போடவும்.இதை 7 ஞாயிற்றுக்கிழமை செய்து வர சூரியனால் உண்டாகும் கெடுபலன்கள் குறையும்.
2.சந்திரன் - 
 வளர்பிறை திங்கள் கிழமை அன்று வீட்டு முற்றத்தில் நெருப்பு மூட்டி அதில் கொஞ்சம் பழைய வெல்லத்தைப் போட்டு விடவும்.சந்திரனால் உண்டாகும் கெடுபலன்கள் குறையும்.
3.செவ்வாய் -
 தேய்பிறை செவ்வாய்க்கிழமை அன்று புதிதாக ஸ்வீட் வாங்கிப் பிச்சைக்காரர்களுக்குத் தானம் செய்ய செவ்வாய்க் கிரகத்தின் கெடுபலன்கள் குறையும்.
4.புதன் -
பூஜை அறையில் ஒரு செம்பில் கங்கா ஜலம் வைத்திருந்தால் புதன் கிரகத்தின் கெடுபலன்கள் குறையும்.
5.குரு .-
வியாழக்கிழமை தோறும் குங்குமப்பூவை மெழுகுப் பதமாக அரைத்து குங்குமம் கலந்து நெற்றியில் திலகம் இட்டு வர குருகிரகத்தினால் உண்டான கெடுபலன்கள் குறையும்.
6.சுக்கிரன்  -
சிறிய வெண்ணிறப் பட்டுத் துணியில் வாசனை உள்ள மலர் வைத்து முடிந்து அதை ஓடும் நீரில் விட்டு விட சுக்கிரனால் உண்டான கெடுபலன்கள் குறையும்.
7.சனி கிரகம்-
 ஒரு வெற்றிடத்தில் அல்லது வீட்டுப் பின்புற முற்றத்தில் கறுப்புத் துணியில் கருப்பு எள் வைத்து முடிந்து நெருப்பில் போட்டு எரிக்கச் சனிகிரகத்தினால் உண்டான கெடுபலன்கள் குறையும்.
8.கேது -
இரண்டு போர்வைகள் வேறு வேறு நிறத்தில் வாங்கிப் பிச்சைக்காரர்கள் அல்லது ஏழை முதியவர்களுக்குத் தானமாக வழங்க கேது கிரகத்தால் உண்டான கெடுபலன்கள் குறையும்.

9.ராகு  -
பாம்பாட்டிகளிடம் இருந்து ஒரு பாம்பை விலைக்கு வாங்கிக் அவற்றைக் காட்டில் கொண்டுபோய் விட ராகு கிரகத்தால் உண்டான கெடுபலன்கள் குறையும்.இதை நாகபஞ்சமி (ஆவணி மாதம் வளர்பிறை பஞ்சமி ) அன்று செய்யவும்.

ஞாயிறு, 22 ஜனவரி, 2017

வீட்டில் விளக்கேற்று...

நாம் வீட்டிலும், கோவிலிலும் ஏன் விளகேற்றுகிறோம்!
விளக்கு எரிந்த வீடு வீணாகிப் போகாது' என்று ஒரு பழமொழி உள்ளது.
எதற்கு என்று தெரியுமா??
சுடருக்கு தன்னை சுற்றி உள்ள தேவையற்ற கதிர்களை (நெகட்டிவ் எனர்ஜியை) ஈர்க்கும் ஷக்தி குண்டு! அவ்வா

று ஈர்க்கும் போது! நம்மை சுற்றி பொசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கும் நம் சுற்று புறம் தெளிவாகவும் பலத்தோடும் காணப்படும்!
இரண்டு நாள் வீட்டில் விளக்கேற்றாமல் இருந்தாலே அது புரியும் ஏதோ வீடே மாயணம் போல் தோன்றும் எல்லாருமே சோர்வாய் இருப்பார்கள்! இதுவே விளகேற்றுவதன் தத்துவம்!
நம் உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களில் மூலாதாரமும் ஸ்வாதிஷ்டானமும் நல்லெண்ணெய் விளக்கு ஏற்றுவதால் தூய்மையடைகிறது.
அதே போல் மணிபூரகம், அனாஹதம் இரண்டும் நெய்விளக்கு ஏற்ற, தூய்மையடைந்து நற்பலனை அடைகின்றன. நம் உடலில் இருக்கும் நாடிகளில் சூரிய நாடி, சந்திர நாடி, சுஷம்னா நாடி ஆகியவை மிக முக்கியமாகக் கருதப்படுகின்றன. சூரிய நாடி, நல்ல சக்தியையும் வெப்பத்தையும் தருகிறது. சந்திர நாடி, குளுமையைத் தருகிறது.
சுஷம்னா நாடி, அந்தப் பரம்பொருளுடன் சம்பந்தப்பட்டு, ஆன்மீகப் பாதையை வகுக்கிறது.
நல்லெண்ணெய் விளக்கு ஏற்ற சூரிய நாடி, சுறுசுறுப்பு அடைகிறது. நெய்விளக்கு, சுஷம்னா நாடியைத் தூண்டிவிட உதவுகிறது. பொதுவாகவே நெய் தீபம், சகலவித சுகங்களையும் வீட்டிற்கு நலனையும் தருகிறது.
திருவிளக்கை எப்போது வேண்டுமானாலும் ஏற்றலாம். இதற்கு தடையேதும் இல்லை. ஆனால், பொதுவாக மாலை 6.30க்கு ஏற்றுவதே நமது மரபு. இதை கருக்கல் நேரம் என்பர்.
சூரியன் மறைந்ததும் சில விஷ சக்திகள் சுற்றுச்சூழலில் பரவி வீட்டிற்குள்ளும் வர வாய்ப்பிருக்கிறது. ஒளியின் முன் அந்த விஷ சக்திகள் அடிபட்டு போகும். எனவே அந்நேரத்தில் விளக்கேற்றுகிறோம் என்பது அறிவியல் உண்மை.
ஒரு நாளிதழில் வெளிவந்த நிகழ்வு என் மனதில் ஆழமாக பதிந்து விட்டது....
அமெரிக்காவில் இருக்கும் தன் மகனின் வீட்டுக்கு சென்றிருக்கும் ஒரு தாய் சாயந்திரங்களில் தன் மகனும், மகளும் தாமதமாக வீடு சேர்வதை பார்க்கிறார். இருவரும் வேலைக்குச் செல்பவர்கள். ஒரு நாள் மகன் முன்னதாகவும், ஒரு நாள் மருமகள் முன்னதாகவும் வருவார்கள். அவர்களுக்கு இன்னும் குழந்தை இல்லை.
இருவரையும் ஒரு சேர பார்க்க முடிவதில்லை அந்த தாய்க்கு. ஒரு்வர் வருவதற்குள் மற்றொருவர் தூங்கியே போயிருப்பார். ஒரு நாள் மகனை அழைத்து தாமதமாக வரும் காரணம் கேட்க
“உனக்கு இதெல்லாம் புரியாதம்மா. எங்கள் இருவருக்கும் பயங்கர ஸ்ட்ரெஸ்!!! இருவரும் கவுன்சிலிங் போய் வருகிறோம். ஒரு மணி நேரத்துக்கு அந்த டாக்டருக்கு கொடுக்கும் தொகை அதிகம். மிகச் சிறந்த மருத்துவர் அவர். எல்லாம் சரியாகி விடும்” என்று சொல்ல நாளை அந்த மருத்துவரை பார்க்க போகவேண்டாமென்றும் சீ்க்கிரம் வீட்டுக்கு வரவேண்டுமென்றும் தாயார் சொல்கிறார்.
அடுத்த நாள் மாலை வீட்டுக்குள் நுழைந்த மகன், மருமகள் இருவரின் மூக்கையும் சுகந்த மணம் துளைக்கிறது.
கைகால் கழுவி, உடை மாற்றி பூஜை அறைக்கு வருமாறு சொல்ல அங்கே செல்கின்றனர் இருவரும்.
மணம் வீசும் மலர்களின் வாசம்...
அழகான தீப ஒளி நிறைந்த அந்த அறையில் சற்று நேரம் அமரச் சொல்கிறார். தாமாகவே கண் மூடி அந்தச் சூழலின்
இன்பத்தை அனுபவிக்கின்றனர் இருவரும்.
கண் திறந்த போது கவுன்சிலிங்கில் கிடைக்காத அமைதி கிடைத்ததாகச் சொல்ல... தாயார் மகிழ்ந்தார்......

குறிப்பு:
********
மெழுகுவர்த்தி ஏற்றக் கூடாது. இதன் புகை உடல் நலத்தை கெடுக்கும் ! ஆஸ்துமா, மார்புபுத்துநோய் இவைகளுக்கு மெழுகுவத்திதான் தாய் ! மண்ணெண்ணை விளக்கும் வேண்டாம்....
வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால்
அவர்களை தினசரி விளக்கேற்றும்படி கேட்டுக்கொள்ளவேண்டும்.
இப்படி செய்தால் அவர்களின் முகப் பொலிவு பன்மடங்கு
 கூடும்’ பலருக்கும் பயனுள்ள உபயோகமான
தகவல் என்பதால், அதை இங்கு தனி பதிவாக
தந்திருக்கிறேன். மேலும் விளக்கேற்றுவதற்கு
எந்தெந்த எண்ணைகளை பயன்படுத்தலாம்,
எதை பயன்படுத்தக்கூடாது,
என்ன திரிகளுக்கு என்ன பலன், எந்த நேரத்தில்
எந்த திசையில் ஏற்றவேண்டும்,போன்ற
தகவல்களையும் மேலும் விளக்கேற்றுவது
குறித்த வேறு பல தகவல்களையும் திரட்டி
எனக்கு தெரிந்த தகவல்களையும் சேர்த்து
தந்திருக்கிறேன். நிச்சயம் பயனுள்ளதாக
இருக்கும் என்று நம்புகிறேன்.
பெண் குழந்தைகள் விளக்கேற்றுவதால்
அவர்களின் முகப்பொலிவு கூடும்
நம் வீட்டிலுள்ள பெண் குழந்தைகளை
அவர்களது தாய்மார்கள் தினமும் விளக்கு
ஏற்றும்படி பணிக்க வேண்டும்.
இதில் அவர்களின் இறை பணி மட்டுமில்லாமல்
அவர்களின் தேஜசும் (அதாவது
முகபொலிவும்) கூடுகிறது.
இதை சோதிக்க விரும்பினால், தாய்மார்கள் தங்கள் பெண்ணை ஒரு குறிப்பிட்ட
தினத்திலிருந்து விளக்கு ஏற்றும்படி
சொல்லுங்கள். அன்று தங்கள் பெண்ணிடம்
அவளது முக பொலிவை முகம் பார்க்கும்
கண்ணாடியில் பார்க்க சொல்லுங்கள். நீங்களும்
பாருங்கள். அன்றைய தேதியை கண்ணாடியின்
மூலையில் குறித்து வையுங்கள்.
சரியாக 30 நாட்கள் (இதில் வயது வந்த பெண்களின் இயற்கையான உபாதை நாட்களை
கணக்கில் கொள்ளாதீர்கள்) கழித்து, மீண்டும்
உங்கள் பெண்ணை கண்ணாடியில் அவளது
முகபொலிவினை பார்க்க சொல்லுங்கள்.
நீங்களும் பாருங்கள். மீண்டும் 45 வது நாள்
இதேபோல் பாருங்கள். நிச்சயமாக ஒரு
மாற்றத்தை உங்களால், உங்கள் பெண்ணால்
உணர முடியும். அதுமட்டுமின்றி
பெற்றோர்களின் ஆதரவும் அரவணைப்பும்
வியப்பூட்டும் வகையில் கூடும்

விளக்கேற்றவேண்டிய நேரம்
************************
விடியற்காலையில் சூரியன் உதயமாவதற்குச்
சற்று முன்னதாக `பிரம்ம முகூர்த்தம்’
என்கின்ற இரவின் விடியலாகத் திகழும்
அருணம், என்கின்ற அருணோதய காலத்தில்
விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் எல்லாவித
யோகத்தையும் பெறலாம்.
அதேபோல்
மாலையில் சூரியன் மறைவதற்குச் சற்று
முன்னதாக, பிரதோஷ காலம் என்கிற
உன்னதமான காலத்தில் விளக்கு தீபம் ஏற்றி
வழிபட்டால், குடும்பத்தில் செல்வம் பெருகும்.
சந்தோஷம் நிலவும், வேலை தேடுவோருக்கு
நல்ல வேலை கிடைக்கும். புத்திர பாக்கியம்
உண்டாகும். மனதுக்கு ஏற்ற வரன் அமையும்.
மற்றும் எல்லாவிதமான யோக பாக்கியங்களும்
பெறலாம்.

பொதுவான விதிமுறைகள்
*********************************************
1. விளக்கில் எண்ணெய் விட்டு எத்தனை
திரிகளைப் போட்டிருந்தாலும் அத்தனையும்
ஏற்றிட வேண்டும். குறைந்த பட்சம் இரண்டு
திரிகளாவது ஏற்ற வேண்டும்.
2. பூஜை தொடங்கும் முன் வீட்டில் சுமங்கலி
குத்துவிளக்கை ஏற்றி விட்டு வணங்கிய பிறகு
பூஜை செய்தால் நிச்சயம் பலன் உண்டு.
3. விளக்கு தீபம் ஏற்றும்போது முதலில்
விளக்கில் நெய் அல்லது எண்ணெய்
ஆகியவற்றை ஊற்றிய பிறகே பஞ்சு திரியிட்டு
தீபம் ஏற்ற வேண்டும். அப்படி முறையாக
ஏற்றிய தீபம் வீட்டில் உள்ள இருளை
அகற்றுவதோடு, வீட்டில் உள்ளோர்
அனைவரின் மன இருளையும் அகற்றி,
தெளிவான சிந்தனையைத் தூண்டி, சிறந்த
முறையில் செயாலாற்ற வைத்து, நிலையான
அமைதியைத் தரும்.
4. இரண்டு திரி சேர்த்து முறுக்கி ஏற்றுவது
நலம்.
5. ஒரு திரி ஏற்றும் போது கிழக்கு திசை
நோக்கி ஏற்றவும்
நாம் ஏற்றும் திரியை பொறுத்து அதற்கு
உண்டான பலன்களை அடையலாம்.
6. தீபத்தை பூவின் காம்பினால் அணைக்கவும்.
வாயினால் ஊதக்கூடாது. கல்கண்டை
கொண்டு தீபத்தை அமர்த்தவேண்டும்.
7. தீபம் வெறும் விளக்கு அல்ல, நம் வாழ்வின்
கலங்கரை விளக்கு. மங்களம் தங்கவும் இன்பம்
பெருகவும் தீபம் ஏற்றுவோம். தீபமேற்றி
என்றும் இறைவெளிச்சத்தில் இன்பம்
காண்போம்

எந்தெந்த எண்ணைகளில் விளக்கேற்றினால் என்னென்ன பலன்கள் ?
********************************************************************************************************************
நெய் ஊற்றி தீபம் ஏற்றினால் சகலவித
சந்தோஷமும் இல்லத்தில் நிறைந்திருக்கும்.
நல்லெண்ணை எனப்படும் எள் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றிட, குடும்பத்தை ஆட்டிப்
படைக்கும் எல்லாப் பீடைகளும் தொலைந்து போகும்.
விளக்கெண்ணை ஊற்றி தீபம் ஏற்றுபவர்களுக்கு புகழ் அபிவிருத்தியாகும் வேப்ப எண்ணெய்,
நெய், இலுப்பை எண்ணெய் மூன்றும் கலந்து
தீபம் ஏற்றினால் செல்வம் பெருகும். நெய், விளக்கெண்ணை, வேப்ப எண்ணெய், தேங்காய்
எண்ணெய் கலந்து தீபம் ஏற்றி அம்மனை
வணங்கினால் தேவியின் அருள் கிட்டும். கிரக தோஷங்கள் விலகி சுகம் பெற சுத்தமான பசு
நெய்யினால் தீபம் ஏற்ற வேண்டும்.
கணவன்-மனைவி உறவு நலம் பெறவும் வேப்ப எண்ணெய் தீபம் உகந்தது. அவரவர்கள்
தங்கள் குல தெய்வத்தின் முழு அருளையும்
பெறவழி செய்வது ஆமணக்கு எண்ணெய் தீபம்.
எள் எண்ணெய் (நல்லெண்ணை) தீபம் என்றுமே
ஆண்டவனுக்கு உகந்தது. நவக்கிரகங்களை
திருப்தி செய்யவும் ஏற்றது. மனதில் தெளிவும், உறுதியும் ஏற்பட வேண்டுவோர்
வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய்மூன்றையும் கலந்து தீபம் ஏற்ற
வேண்டும். மந்திரசித்தி பெற வேண்டுவோர்
விளக்கெண்ணை, இலுப்பை எண்ணெய், நெய்,
நல்லெண்ணை, தேங்காய் எண்ணெய் ஆகிய
ஐந்து எண்ணெய்களையும் கலந்து விளக்கேற்ற வேண்டும்.
கணபதிக்கு தேங்காய் எண்ணெய் உகந்ததாகும்.
முருகனுக்கு நெய் தீபம் உபயோகப்படுத்துவ
து நல்லது.
நாராயணனுக்கு நல்லெண்ணெய்
ஏற்றதாகும்.
மகாலட்சுமிக்கு நெய்
உபயோகப்படுத்தலாம்.
சர்வ தேவதைகளுக்கு
நல்லெண்ணெய் உகந்தது.
குலதெய்வத்திற்கு
இலுப்பை எண்ணெய், நெய் மற்றும்
நல்லெண்ணெய் இவை மூன்றும்
உபயோகிக்கலாம்.
கடலை எண்ணெய், கடுகு
எண்ணெய், பாமாயில் போன்றவைகளைக்
கொண்டு ஒரு போதும் விளக்கேற்றவே
கூடாது. திசைகள் கிழக்கு-இந்தத் திசையில்
தீபம் ஏற்றி வழிபட்டால் துன்பம் ஒழியும்.
வீட்டில் உள்ள பீடைகள் அகலும். மேற்கு-இந்தத் திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் கடன்
தொல்லை, சனிபீடை, கிரகதோஷம்
பங்களிப்பதை இவை நீங்கும்.
வடக்கு-இந்தத்
திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் செல்வமும்,
மங்கலமும் பெருகும்.
தெற்கு-இந்தத்
திசையில் தீபம் ஏற்றக்கூடாது.

என்னென்ன திரிகள் பயன்படுத்தலாம்?
*****************************************************************

தாமரைப்பூத்தண்டின் திரி: தாமரைப்
பூத்தண்டின் உள்பகுதியில் காணப்படும்
வெண்மை கலந்த பகுதியும், தண்டுப்
பகுதியின் உட்கூடும் நன்கு வெயிலில் காய
வைத்து அதிலிருந்து உருவாக்கப்பட்ட திரியை
விளக்கு வழிபாட்டிற்காக பயன்படுத்தினால்
முன்வினைக் கர்ம பாபங்கள் நீங்கும். பிறவித்
தளை நீங்கி மறுபிறப்பற்ற வாழ்வு நிலைத்து
நின்று வழிபடுவோர் வாழ்வை வளப்படுத்தும்.
பஞ்சுத்திரி : பொதுவாக பருத்தியினால்
திரித்து எடுக்கப்படுகின்ற திரி
விளக்குகளுக்கு தீபத்திரியாக
பயன்படுத்தப்படுகிறது.
பெரும்பான்மையானோர்
பருத்திப் பஞ்சினைத்தான் திரியாக
பயன்படுத்துகின்றனர். இது தெய்வ குற்றம்,
பிதுர்களால் ஏற்பட்ட சாபம், வம்சாவழிப்
பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படுத்திக்
கொடுக்கக்கூடியது. எனவே இந்த திரியால்
விளக்கேற்றுவது மிகுந்த பயன்தரும். நல்ல
பலன்களை பஞ்சுத்திரி ஏற்படுத்தும்.
வெள்ளைத்துணி திரி : வெள்ளைத் துணியாக
எடுத்து, அதைத் திரியாகத் திரித்து
பயன்படுத்துவதால் பலவித உத்தமமான
பலன்களை பெற முடியும். அதிலும்
வெள்ளைத் துணியை பன்னீரில் நனைய
வைத்து, பின் அதைக் காய வைத்து திரியாக
திரித்து வைத்துக் கொண்டு பயன்படுத்துவது
மேலும் பலன் தரக்கூடியதாகும்.
சிவப்பு வர்ணத் துணி திரி : சிவப்பு
துணியிலிருந்து திரிக்கப்பட்ட திரியானது விளக்கெரிக்க தீப தரிசன வழிபாடு செய்ய
பயன்படுத்தப்பட்டால் திருமண தடை நீங்கும்
மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பிறக்கும்
பேறு உண்டாகும். மஞ்சள் துணியாலான திரி :
இத்துணியாலான திரிக்கு தனி மகத்துவம்
உண்டு. எதிலும் வெற்றி பெற விரும்பும்
அன்பர்கள் பயன்படுத்த வேண்டிய திரி இது.
தேவியின் பூரண அருள் நமக்கு கிடைக்க இந்த
திரி பயன்படுத்தப்படுகின்றது. மனிதனுக்கு
ஏற்படும் வியாதிகள் தீரவும், செய்வினைகள்
நீங்கவும், காற்று சேட்டைகள் நீங்கி நலம்
பெறவும், எதிரி பயம் நீங்கவும். தம்பதிகள்
ஒற்றுமை ஓங்கவும் இது மிகவும் பயன்படும்
திரி எனலாம்.
வாழைத்தண்டின் நாரினால் ஆன திரி : வாழைத்தண்டினை நன்கு காயவைத்து
அடித்து பஞ்சு போலக்கி பின்பு அதனை
திரியாக எடுத்து விளக்கெரிக்க
பயன்படுத்தலாம். இது முன்னோர்களால்
ஏற்பட்ட சாபம், தெய்வ காரியங்களில் ஏற்பட்ட
பிரச்சினைகளுக்கு தீர்வு மற்றும் மனசாந்தி,
குடும்ப அமைதி, குழந்தைப்பேறு
ஆகியவற்றை ஏற்படுத்தி தரக்கூடியது.
வெள்ளெருக்கந்திரி : வெள்ளெருக்கம்
பட்டையை ஊறவைத்து பிறகு காயவைத்து
அடித்து நாராக மாற்றித் திரியாகத் திரித்து
விளக்கிற்கு பயன்படுத்தினால்
செல்வச்செழிப்பு உண்டாகும். துர் ஆவிகளால்
பாதிக்கப்பட்டவர்களை அத்துன்பத்திலிருந்து
காப்பாற்றும் பிள்ளைகளின் நல்வாழ்வு
நீடிக்கும்.

விளக்கேற்றும்போது சொல்ல வேண்டிய
ஸ்லோகம் கீடா: பதங்கா:மசகாச்ச
வ்ருக்ஷõ:ஜலே ஸ்தலே யே நிவஸந்தி ஜீவா:!
த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்ம பாஜாபவந்தி
நித்யம் ச்வபசா ஹி விப்ரா:!!

பொருள்:
புழுக்களோ, பறவைகளோ அல்லது
கொசுவோ, நம் மாதிரி உயிருள்ள ஜீவனில்லை
என்று நினைக்கப்படுகிற மரமோ, தண்ணீரிலும்
பூமியிலும் எத்தனை வகையான
ஜீவராசிகளோ, உயர்ஜாதி மனிதனோ, தாழ்ந்த
குலத்தினனோ யாரானாலும் சரி…இந்த
தீபத்தைப் பார்த்துவிட்டால் அந்த ஜீவனுடைய
சகல பாவங்களும் நிவர்த்தியாகட்டும்.
இன்னொரு பிறவி எடுக்காமல் பரமானந்த
வடிவான அந்த இறைவனுடன் கலக்கட்டும்.
‘விளக்கினை ஏற்றி வெளியை
அறிமின்விளக்கினின் முன்னே வேதனை
மாறும்விளக்கை விளக்கும் விளக்கு
உடையார்கள்விளக்கில் விளங்கும் விளக்காவர்
தாமே!

வியாழன், 19 ஜனவரி, 2017

தைமாத தானதர்மமும் தர்பணமும்

ஒரு வருடத்தில் 12 அமாவாசை வந்தாலும் தை அமாவாசை சிறப்பு மிக்கதொன்று...
ஆயுள் காரகன் சனியின் மகரத்தில் சூரியன் பிரவேசிக்கும் காலத்தில் ஜோதி மகரஜோதி என்பது நம் அனைவருக்கும் தெரிந்தது..  மகர ராசியில் சந்திரனும் சூரியனுடன்  இணையும் சிறப்பான நாளே தைஅமாவாசை. இக்காலத்தில் நாம் ஆற்றும் புண்ணிய பலன்கள் தீராத நம் பிரச்சினைகள், நோய்நொடி, வம்பு வழக்குகளை தீர்த்து வைக்குமென நமது சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த தை மாதத்தில் வேறென்ன புண்ணியகாரியங்களெல்லாம் செய்யலாம்? சந்திரனின் அம்சமான வெல்லமும் பச்சரிசியும் தேன் ,நெய்யுடன் மாவிளக்கு இடுவது சிறப்பான பலனை தரும். அன்னதானம் செய்வதும் சுமங்கலிகளின் ஆசி பெறுவது  சிறப்பான புண்ணிய பலனை தரும். இந்த தைஅமாவாசை கடலில் தீர்த்தமாட முடிந்தால் சென்று தீர்த்தமாடி வாருங்கள். ருணரோகங்கள் தீரும்.

தை அமாவாசை அன்று பித்ருகளுக்கு தர்பணம் கொடுத்தால், ஸ்ரீ மகாவிஷ்ணு, சிவபெருமான் மற்றும் பித்ருக்களின் அருளாசிகளுடன் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும். குழந்தைகளை வளர்த்த பெற்றோர், அவர்களின் காலம் முடிந்து  இறைவனடி சென்ற பிறகு, அவர்களுக்கு திதி தருவது, பிண்டம் தருவது, வழிபாடு செய்து வருவது போன்ற அவர்களுக்குரிய மரியாதையை சரியாக தந்தாக வேண்டும். அதைதான் பித்ரு கடன் என்கிறது சாஸ்திரம். இந்த கடனை அடைக்காத பிள்ளைகளின் வாழ்க்கை கலங்கும். இதனால் பித்ரு கடன் பட்ட பிள்ளைகளின் நெஞ்சமும் ஏதாவது ஒரு விஷயத்தில் கலங்கும்படி ஆகும். அதனால் கண்டிப்பாக பித்ரு கடனை நிறைவேற்ற வேண்டும். அப்படி செய்தால்தான் நன்மைகள் வரும் என்று சிவபெருமானே ஸ்ரீஇராமரிடம் கூறி இருக்கிறார்.
தை அமாவாசை அன்று பித்ருக்கள் பூலோகம் செல்ல யமதர்மராஜர், அனுமதி தருவார். அதனால் யம காவலர்கள், பித்ருக்களை அழைத்துக்கொண்டு சூரியன் இருக்கும் இடத்திற்கு வருவார்கள். அங்கிருந்து சூரியனின் வாகனத்தில் பூலோகத்திற்கு பித்ருக்களை அழைத்து வருவார்கள்.

பித்ருக்களை  அவரவர் இல்லத்திற்கு செல்ல அனுமதிப்பார்கள் யமதர்மராஜாவின் காவலர்கள். அப்போது பித்ருக்கள், தங்கள் பிள்ளைகளையும் உறவினர்களையும் பார்க்க மிகுந்த பாசத்துடனும், பசியோடும் வருவார்கள். அதனால், தை அமாவாசை அன்று பித்ருக்களுக்கு நிச்சயம் தர்பணம் தர வேண்டும். நாம் தரும் பிண்டமும், தண்ணீரும்தான் அவர்களுக்கு உணவு.  தை அமாவாசை நேரம் முடிந்த உடனே, யம தேவரின் காவலர்கள் மீண்டும் பித்ருக்களை அழைத்துக்கொண்டு யமலோகம் செல்வர். பித்ருக்களின் சாபம்பட்ட குடும்பத்தில்தான் துர் சம்பவங்கள் நடக்கும். தெய்வம் கூட கருனை காட்டாது – உதவி செய்யாது என்கிறது கருட புராணம். நாம் தரும் பிண்டம்தான் ஆத்ம ரூபமாக உள்ள முன்னோர்களின் பசியை தீர்க்கும் உணவாகும்.

விசேஷமான தை அமாவாசையில் பித்ருக்களின் பசியை போக்கி அவர்களின் ஆசியையும், இறைவனின் அருளையும் பெற்று சுபிக்ஷங்களை தடையின்றி பெறுவோம்.!

"தர்மம் தலைகாக்கும். தானம் விதிமாற்றும் "

வெள்ளி, 18 நவம்பர், 2016

அக்னிஹோத்ரமும் ஆத்மகாரகனும்...

எனது வாசகர்களிற்கும்; எனது blog இனை பின்தொடர்பவர்களிற்கும் எனது இந்நேர வணக்கம். இந்த பதிவானது ஜோதிடம் , ஆன்மிகம், மருத்துவம், பொதுவாழ்க்கை நெறிமுறை என்பவற்றை உள்ளடக்கியதாக அமைகிறது...

எனது வழமையான பதிவுகள் போல அல்லாது இது ஒரு கூறும் பதிவாக அமைகிறது... எழுதுவது பெரிதல்ல... அதனை படிப்பதும் பெரிதல்ல... அதன்படி வாழ்க்கையில் நடப்பதே பெரிய விடயம்.. எனவே இந்த பதிவு சிறிதென்றாலும் இதனை கருத்தூன்றி படியுங்கள்... பல கோணங்களில் சிந்தியுங்கள்... அதன்படி எமது இந்து சமய சாஸ்திரங்களை மதிக்கும் உத்தமசீலர்களாக வாழுங்கள். எமது சாஸ்திரங்களில் கூறப்பட்டவாறு நடவுங்கள்... அதுவே எனக்கு போதும்... அதுவே எனது வெற்றி என்று கூறிக்கொண்டு பதிவினுள் நகர்வோம்...

எமது இந்து சமய சாஸ்திரங்களில் சொல்லப்படாத விடயங்கள் என்று எதுவுமில்லை. சூரிய ஒளியும் காற்றும் நிறைந்த இடத்தில் லஷ்மிவாசம் செய்வாள் என்பது ஐதீகம். அதுவே உண்மையும் கூட. இங்கு நான் விஞ்ஞானத்தினை காரணம்காட்டி உண்மை என கூறவிரும்பவில்லை. அனுபவத்தினை காரணம் காட்டி உண்மை என கூறுகிறேன்.. இதுபற்றி மிக சுருக்கமான விளக்கத்தினை பார்ப்போம்...

பிரபஞ்ச சக்தியினை பெற சிறிது நேரம் செய்ய வேண்டிய சிறிய இலகுவான வேள்வியே 'அக்னிஹோத்ரம்' எனும் சாஸ்திர சொல்லினால் குறிகாட்டப்படுகின்றது. அக்னிஹோத்ரா சூழ்நிலை என்பது நமது வீட்டில் நம்மை சுற்றி உள்ள வெற்று வெளியில் உள்ள அதிர்வலைகளைக் கட்டுப்படுத்தி தூய்மை ஆக்கும். அது நம்முடைய நரம்பு மண்டலங்களை ஒழுங்குபடுத்தும். நம் வீட்டில் வைத்துள்ள செடிகொடிகளும் கூட அக்னிஹோத்ரா சூழ்நிலையில் நன்கு வளரும். நமது வீட்டில் அமைதி நிலைக்கும். மனம் மகிழ்ச்சியாக இருக்கும். தினமும் நான் செய்து முடித்த அக்னிஹோத்ரா சாம்பல் மிகவும் புனிதமானது. தெய்வீகத்தன்மை நிறைந்தது. நெற்றியில் நீறு போல் இட்டுக் கொள்ள அஷ்டஐஸ்வர்யமும் கிட்டும். வெற்றி நமைத் தொடர்ந்து வரும். கேட்டது கிடைக்கும். நினைத்தது நடக்கும். ஆன்மீக எழுச்சி உண்டாகும். அதன் சாம்பலை செடிகளுக்கு உரமாக இட்டால் செடிகளில் அபரித வளர்ச்சியைக் காணலாம். இது கண்கூடு. இது ஒரு புனித சுய அனுபவமும் கூட. சொன்னாலும் படித்தாலும் கேட்டாலும் கூடப் புரியாதது. செய்து அனுபவித்துப் பார்த்தால் மட்டுமே உள்ளம் உயர்நிலை அடையும். இது நிச்சயம். அக்னிஹோத்ரா புதிதல்ல. இது பற்றி நான்கு வேதங்களிலும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே கூறப்பட்டு உள்ளது. இந்த சொல்லினை இன்றைய மனிதர்களிடம் கேட்டால் "அப்படினா என்ன?" என்றுதான் கேட்பார்கள். ஒரு உதாரணம் வேண்டும் என்றால் எமது பாட்டன், பூட்டன் காலத்தில் அவர்கள் செய்த சமையல் முறையே ஒரு மிகச்சிறப்பான அக்னிஹோத்ரம் ஆக இருந்தது. எமது முன்னோர்கள் சமையலையில் நேரடி சூரிய ஒளி விழுமாறு அமைத்திருந்தனர். சூரிய ஒளி என்பதைவிட; ஆத்தமாகாரகனின் கதிர்கள் நாம் உண்ணும் உணவில் விழுவதால்; எமது உடலிற்கு ஏற்கக்கூடிய எளிய ஆனால் சக்திவாய்ந்த உணவாக அவை அமைந்திருந்தன. அத்துடன் அவை நுண்ணங்கி தொற்றற்ற உணவுவகைகளாகவும் இயற்கையான பாரம்பரிய உணவுகளாகவும் அமைந்திருந்தன... மண் சட்டிகளில் உணவு சமைத்தனர். செப்பு பாத்திரங்களில் நீர் அருந்தினர். ஜோதிடப்படி புதனின் கெடுபலன்கள் குறைக்கவும் மருத்துவப்படி சீரான இரத்த ஓட்டம், தாது பொருட்களை இலகுவாகவும் பெற்றனர். அந்த நீரும் தூய்மையானதாக இருந்தது. உணவு ஆரோக்கியமானதாக இருந்தது. அவர்கள் உணவு சமைத்த பின் முதலாவதாக அடுப்பிற்கும் பின்னர் கோமாதாவிற்கும் படைப்பர். பிறகே ஏனையவர்கள் உண்ணுவர். சாஸ்திரங்களை மதித்தனர். அதன்படி நடந்தனர். அவர்களின் இந்த தவவாழ்வே அவர்களையும் அவர்கள் சந்ததியினையும் தழைக்க செய்தது. அனால் இந்தக்காலத்தில் "அறிவியல், விஞ்ஞானம், நாவிற்கு சுவை, fast food எனும் துரித உணவுகள், நேரமின்மை, இறைவழிபாடு அற்றநிலை, அலுமினிய/ஈய பாத்திரத்தில் உணவு சமைத்தல், முறையற்ற/ சமையலறை என ஏராளமான விடயங்கள்" எம்மை நரகத்தை நோக்கி தள்ளுகின்றன என்றால் அது மிகையாகாது... ஆகவே பொதுநலமாக சிந்தியுங்கள்... செயற்படுங்கள்... ஓம் நமசிவாய... வாழ்க வளமுடன்...

ஆதங்கத்தோடும் அறிவுரைகளோடும் இவன்; பாரம்பரிய தெய்வீக ஜோதிடர் ஹரிராம்தேஜஸ்.. hariram1by9@gmail.com

சனி, 12 நவம்பர், 2016

மருத்துவ ஜோதிடம்

மனிதர்களின் உடல்நலம் சித்தமருத்துவப்படி வாதம், பித்தம், கபம் என்ற மூன்றின் நிலையைப் பொறுத்தே அமைகிறது. இதில் ஒன்று தன் அளவிற்கு அதிகமானாலும், குறைந்தாலும் நோய் வந்துவிடும். இதனை ஜோதிட ரீதியில் அணுகுவது இந்த பதிவின் நோக்கமாகும்...
கப நாடி:- உடல் கூற்றில் உறுப்பு மூலத்தையும், அதாவது டிஷ்யூவைக் குறிக்கும். அவற்றில் இருக்கும் திரவத்தை சரிசமமாக இருக்கும் நிலையை கட்டுப்படுத்தும். பொதுவாக அனைத்து டிஷ்யூக்களையும் குறிக்கும்.
கபம் அதிகமானால் கப தோஷம் ஏற்படும். தடித்த குட்டையான உருவமைப்புடையவராகவும் இருப்பார்கள். சுரப்பிகள் அதிகமான சுரக்கும் நிலையும், சளித் தொல்லையும் ஏற்படும். நீர் அதிகமாக வெளியேறும் நிலையும் வீக்கமும் ஏற்படும்.
வாத நாடி:- தொண்டையின் செயல்பாடு; நுரையீரல்; இரத்த ஓட்டத்தின் நிலை, மூட்டுகளின் செயல்பாடு, நரம்புகளின் தன்மை, இயக்கம் ; செரிமானம் இவற்றிற்கும் பொறுப்பாகும்.
வாதம் அதிகமானால் வாத தோஷம் ஏற்பட்டால் டிஷ்யூ மெதுவாக பாதிக்கப்படும். எந்தவியாதியானாலும் அவை நீடித்து நிலைத்திருக்கும் நிலை ஏற்படும். உடலின் பகுதிக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தில் குறைபாடும் ஏற்படும். இதனால் உடலின் பகுதி இயங்காத நிலையும் படிப்படியாக உருவாகும். உடல் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படும்
பித்த நாடி:- உணவில் ஏற்படும் மாறுதலுக்கு அதாவது ஜீரணமாகும் நிலைக்கு காரணமாகும். உடலுக்கு சக்தியை கிரகித்துக்கொடுக்கும் செயலை செய்து வரும். பித்தம் அதிகமானால் பித்த தோஷம் ஏற்படும். செயல்பாட்டில் கட்டுப்பாடில்லாத நிலையை ஏற்படுத்தும். உடலில் வீக்கமும், இரத்த கசிவும் ஏற்படும்.

கிரகதத்துவ நாடி
---------------------------
சூரியன் நெருப்பு பித்தம்
சந்திரன் நீர் வாதம், கபம்
செவ்வாய் நெருப்பு பித்தம்
புதன் நிலம் வாதம், பித்தம், கபம்
வியாழன் ஆகாயம் கபம்
சுக்கிரன் நீர் வாதம், கபம்
சனி காற்று வாதம்
இராகு காற்று வாதம்
கேது நெருப்பு பித்தம்

இராசிகள் குறிப்பிடும் உடலின் பாகங்கள்.
----------------------------------------------------------------
1 மேஷம் .. தலை மற்றும் மூளையைக் குறிக்கும்.
2. ரிஷபம் .. முகம், பேச்சு, உள்நாக்கு, தொண்டைப் பகுதியைக் குறிக்கும்.
3. மிதுனம் .. கழுத்து, தோள் பட்டை, கைகள்.
4 கடகம் .. மார்புப் பகுதி, பெண்களுக்கு மார்பகம்.
5 சிம்மம் .. இருதயம், நாபி மலை நரம்புகளின் தொகுப்பு.
6 கன்னி .. வயிற்றின் மேல் பகுதி முதல் தொப்புள் வரை.
7. துலாம்... அடிவயிற்றுப் பகுதி முதல் இடுப்பு வரை.
8 விருச்சிகம் .. வெளிப்புற பிறப்புறுப்புக்கள்.
9 தனுசு .. தொடைப் பகுதி.
10 மகரம் .. முழங்கால் மூட்டுப் பகுதி.
11 கும்பம் .. கால் பகுதி, அதன் தொடர்புடைய பகுதி
12 மீனம் .. பாதம் அதன் தொடர்புடைய பகுதி.


நெருப்பு இராசிகளான மேஷம், சிம்மம், தனுசு இவை மூன்றும் பித்தத்தைக் குறிக்கும். நில ராசிகளான ரிஷபம், கன்னி, மகரம் இம்முன்றும் வாதத்தை குறிக்கும். காற்று ராசிகளான மிதுனம், துலாம், கும்பம் இவை மூன்றும் கலந்த நாடி குறிக்கும். நீர் ராசிகளான கடகம், விருச்சிகம், மீனம் இவை மூன்றும் கபத்தைக் குறிக்கும்.
நெருப்பு இராசி .. மேஷம் சிம்மம் தனுசு; கிரகம்: சூரியன் செவ்வாய், கேது
நில ராசி .. ரிஷபம், கன்னி, மகரம்; கிரகம்: சனி, ராகு, சந்திரன், சுக்கிரன்
காற்று இராசி .. மிதுனம், துலாம், கும்பம் ; கிரகம்: புதன்
நீர் ராசி .. கடகம், விருச்சிகம், மீனம்; கிரகம்: சந்திரன், சுக்கிரன், குரு
மேலே குறிப்பிட்ட இராசிகளில் மேற்குறிப்பிட்ட கிரஹங்கள் இருந்தாலும், பார்த்தாலும் லக்கனத்திற்கு 6, 8, 12ஆம் பாவ அதிபதிகள் சம்பந்தப்பட்டாலும் அப்பகுதிகளைக் குறிப்பிடும் உறுப்புகளில் உடலின் பாகத்தில் வியாதிகள் ஏற்படும். உதாரணமாக, மேஷ ராசி தலைப்பகுதியைக் குறிக்கும். இதில் செவ்வாய், சூரியன் இருந்தாலும் பார்த்தாலும் பித்தத்தினால் பாதிப்பிற்க்கு உள்ளாவர்.

நவகிரகங்களும் உடல் தொடர்பும்..
------------------------------------------------------
சூரியன் - இதயம், எலும்பு, கண், பல், முதுகுதண்டு.
சந்திரன் - உடல் சக்தி, மனது, இரத்த ஓட்டம். 
செய்வாய் - இரத்த வீரியம், தசைகள், எலும்பு மஜ்ஜைகள், எலும்பு மூட்டுகள், பல், தைராய்டு.
புதன் - நரம்பு மண்டலம், புத்தி, தோல், தசைநார்கள்.
குரு - மூளை, மண்ணீரல், உயிரணுக்கள், உயிர்வாயு செயற்திறன், கொழுப்பு.
சுக்கிரன் - கர்ப்பபை, கணையம், சிறுநீரகம், இனவிருத்தி ஹார்மோன்கள். 
சனி - தோல், நரம்பு, கழிவு பொருட்கள், கால் சம்பந்தப்பட்டவை, மலட்டுத்தன்மை.
ராகு - நுரையீரல், மலட்டுத்தன்மை, நோயை விகாரபடுத்துவது.
கேது - இரைப்பையில் உள்ள அமிலம், மலட்டுத்தன்மை, நோயை மறைப்பது.


பிற்கால நூலான பலதீபிகையில் கிரகங்களுக்கான நோய்களைக் கீழ்க்கண்டவாறு காண முடிகிறது.

சூரியன்  - பித்தம், உஷ்ணம், சுரம், தேக எரிச்சல், சயம், இருதய ரோகம், கண்ணோய், தோல் எலும்புகளில் வரும் நோய்கள், அக்னி, ஆயுதம், விஷம் முதலியவற்றால் ஆபத்து
சந்திரன் - தூக்கமின்மை, சளி, குளிர்காய்ச்சல், இரத்தத்தில் ஏற்படும் வியாதிகள், மனநோய்
செவ்வாய் - தாகம், ரத்தரோகம், கோபம், பித்தம், குஷ்டம், தலைவலி
புதன் - காரணம் தெரியாத பயம், கண்வலி, கழுத்து, மூக்கில் வரும் நோய்கள், தோல் நோய்கள்
குரு - மயக்கம், கபம், காது நோய்
சுக்கிரன் - வாதம், சிறுநீரக நோய்கள், பால்வினை நோய்கள்

சனி - வாதம், கால், வயிறு இவைகளில் நோய், மாரடைப்பு, மயக்கம்

சூரியன் வலுவாக அமைந்த ஜாதகத்தினர் கட்டுமஸ்தான உடலமைப்பையும் நல்ல நோய் எதிர்ப்பு சக்தியையும் கொண்டிருப்பர். உடலின் கட்டமைப்புக்கு காரணகர்த்தா எனில் அது சூரியனுக்கும் லக்னத்திற்கும் உள்ள தொடர்புர்தான்.
ஜாதகத்தில் ஆறாமிடம் வியாதியை குறிப்பிடுகிறது. நோயின் வேதனையை எட்டாம் பாவமும் மருத்துவமனை செல்வதை பனிரெண்டாம் பாவமும் நோயிலிருந்து விடுபடுவதை ஐந்தாம் பாவமும் குறிப்பிடுகிறது.
கிரகங்களில் செவ்வாய் அறுவை சிகிச்சையை குறிப்பிடுகிறது. ஆனால் சனியே பிணி காரகன் என அழைக்கப்படுகிறது. 
நோய் பற்றிய ஜாதகரின் கேள்விக்கு பிரசன்னம் போடும்போது செவ்வாய், சூரியன், குரு மூவரும் பலமாய் இருந்தால் சாதகமான பலன் உண்டு.

 

Copyright @ 2018 வேத ஜோதிடம்.